Friday, March 30, 2012

மொறு மொறு மிக்ஸர் - 5

Posted by பால கணேஷ் Friday, March 30, 2012
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நீங்கள் ‘மின்னல் வரிகள்‘ தளத்தை ஓப்பன் செய்ய, அதில் வேதாளம் தோன்றி இப்படிக் கேட்டது. ‘‘மதிப்புக்குரியவரே... நகைச்சுவை நடிகர் ஜே.பி. சந்திரபாபு படங்களில் பாடி நடிக்கும் போது சொந்தக் குரலில்தான் பாடி நடிப்பார். ஒரே ஒரு படத்தில் மட்டும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, அதற்கு வாயசைத்து நடித்திருக்கிறார். அது எந்தப் படம், எந்தப் பாடல் என்று தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும்...’’ நீங்கள்:...

Wednesday, March 28, 2012

நடை வண்டிகள் - 10

Posted by பால கணேஷ் Wednesday, March 28, 2012
பி.கே.பி.யும் நானும் - 2  காலை பத்து மணிக்கு ‘ஸ்டார் ஜெராக்ஸ்’ திறக்கும் நேரத்திற்கு சரியாக அங்கே போய் விட்டேன். கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் ப்ரிண்ட் அவுட் எடுக்க வந்திருந்ததால் என்னுடைய ப்ரிண்ட் அவுட் கைக்கு வரத் தாமதமாயிற்று. பத்தரை மணிக்கு ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொண்டு பி.கே.பி.யின் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தபோது போன் செய்தார். ‘‘எங்கே இருக்கீங்க?’’ என்று கேட்டார். ‘‘ஆன் த வே ஸார்... அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’...

Sunday, March 25, 2012

சுஜாதா! பதில்களிலும் ராஜா!

Posted by பால கணேஷ் Sunday, March 25, 2012
சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் பிரமிப்புதான் எழும். எல்லா சப்ஜெக்ட்டையும் கையாண்ட இந்த ஆல்ரவுண்டர் ஒரு தீர்க்கதரிசியும் கூட. எம்.எல்.ஏ. கடத்தல் என்கிற விஷயத்தை இவர் ‘பதவிக்காக’ நாவலில் எழுதினார். பின்னாட்களில் நிஜமாகவே தமிழக அரசியலில் அந்தக் கூத்து அரங்கேறியது. மேட்ச் பிக்ஸிங் என்கிற விஷயத்தை ‘கறுப்புக் குதிரை’ கதையில் இவர் எழுதிய சில காலத்தின் பின் பல கிரிக்கெட் பிரபலங்கள் இதில் சிக்கியிருந்தது வெளிப்பட்டு சீரழிந்தார்கள். தவிர, தன் கற்றதும் பெற்றதும்...

Friday, March 23, 2012

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

Posted by பால கணேஷ் Friday, March 23, 2012
இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப்...

Wednesday, March 21, 2012

நடை வண்டிகள் - 9

Posted by பால கணேஷ் Wednesday, March 21, 2012
PKPயும் நானும் - 1 PKP என்று சுருக்கமாக, அன்பாக வாசகர்களால் அழைக்கப்படும் திரு.பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நான் இதுவரையில் ஒரு வாசகர் கடிதம் கூட எழுதியதில்லை. மாத நாவல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில், வித்தியாசமான அவரது வர்ணனை நடையாலும், பரத்-சுசிலா கேரக்டர்களி்ன் வார்ப்பினாலும் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து அவரது எல்லாப் படைப்புகளையும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் ஏனோ சுபாவிற்கும், ராஜேஷ்குமாருக்கும் எழுதியது போல அவருக்கு வாசகர்...

Monday, March 19, 2012

மொறு மொறு மிக்ஸர் - 4

Posted by பால கணேஷ் Monday, March 19, 2012
இம்முறை மிகவும் சுலபமான இரண்டு புதிர்க் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். பதிவின் முடிவில் விடையை வெளியிடப் போவதில்லை. விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஆமோதித்து தோளில் தட்டிக் கொடுக்கிறேன். இல்லையெனில், என் தோளில் நானே தட்டிக் கொண்டு, அடுத்த மிக்ஸரில் விடை தருகிறேன். சரியா? 1) சிவப்பு மாளிகை, வெள்ளை மாளிகை, நீல மாளிகை என்று மூன்று மாளிகைகள் இருக்கின்றன. சிவப்பு மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு இடது புறத்தில் இருக்கிறது. நீல மாளிகை...

Saturday, March 17, 2012

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012
கோடீஸ்வரன் நிகழ்ச்சி அரங்கு, ஒளிவெள்ளம் இல்லாமல் மேடை இருண்டு கிடக்க, பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. “யார் வந்து நிகழ்ச்சியை நடத்தப் போறாங்கன்னே தெரியலையே... சேனல் காரங்க அறிவிக்காம இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டாங்களே...” என்று முணுமுணுவென பேச்சுக்கள்.  இப்போது மேடையில் தொகுப்பாளினி ஒருவர் வர, அவர் மீது ஒளிவட்டம் விழுகிறது, “நம்ம நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கறது யார்ன்னு நீங்க நினைச்சே பாத்திருக்க மாட்டிங்க. வானத்துல ஒரு நெலவு, தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருளில் ஒரு உருவம் நடந்து வந்து ஒற்றை...

துப்பாக்கியில் பூத்த பூ!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012
                டெய்ஸி - 2006 - தென்கொரியத் திரைப்படம் ஒரு கால்வாயின் குறுக்காக மரத்துண்டு போடப்பட்டிருக்கிறது. கையில் பெயிண்டிங் உபகரணங்களுடன் அதைக் கடக்க முயலும் அவள், தடுமாறிக் கீழே விழுகிறாள். தன் பெட்டியை மட்டும் மீட்டு தண்ணீரிலிருந்து வெளியேறிச் செல்கிறாள். அதை சற்று தூரத்திலிருந்து கவனிக்கும் அவன் ஓடிவந்து நீரில் அடித்து வரும் அவளின் பெயிண்டிங் உபகரணங்களை மீட்கிறான்....

Wednesday, March 14, 2012

நடை வண்டிகள் - 8

Posted by பால கணேஷ் Wednesday, March 14, 2012
சுபாவும் நானும் - 5 ‘‘காலையில வீட்டுக்கு வந்துட்டுப் போங்க’’ என்று பாலா ஸார் அழைத்திருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அழைக்கா விட்டாலும் போவதுண்டு) அவர் சொன்னார். ‘‘நாங்க புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். முதல் புத்தகமா ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ங்கற புத்தகத்தைப் பண்ணலாம்னு இருக்கோம். லேஅவுட் நீங்க பண்ணணும். எங்களின் நண்பர் ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கார். இதை தமிழ்ல டைப்படிச்சுக் கொண்டு வாங்க...’’ என்றார்....

Monday, March 12, 2012

கேப்ஸ்யூல் நாவல் 5

Posted by பால கணேஷ் Monday, March 12, 2012
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர்.  இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென...

Saturday, March 10, 2012

‘பல்’லவனோடு ஒரு யுத்தம்!

Posted by பால கணேஷ் Saturday, March 10, 2012
சனிக்கிழமை மாலையில் தான் அந்த அவஸ்தையின் ஆரம்பம். இரவு உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைதூரத்தில் மினுக்கி மறையும் நட்சத்திரம் போல இடது மேற்தாடையில் பளிச்சென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் மீண்டும் ஒரு வலி நட்சத்திரம். எக்ஸ்ட்ராவாக அதிக பேஸ்ட் எடுத்து நன்றாக பிரஷ் செய்து விட்டுப் படுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அதே ஏரியாவில் விட்டு விட்டு வலி தோன்றிய வண்ணம் இருந்தது. உடனே கண்ணில் பட்ட...

Thursday, March 8, 2012

நடை வண்டிகள் - 7

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2012
சுபாவும் நானும் - 4 சுபாவுடன் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே ஒரு வாசகனின் ஆர்வத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன் நான். ‘‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’’ என்று. ‘‘ஒரு டேபிள்ல உக்காந்துககிட்டு அவர் ரெண்டு பக்கம் எழுதிட்டு என்கிட்ட தர, நான் ரெண்டு பக்கம் எழுதிட்டு அவர்கிட்ட தர இப்படியே நா‌வலை எழுதுவோம்னு உங்க மனசுல நினைப்பிருந்தா ரப்பர் போட்டு அழிச்சிடுங்க கணேஷ். நாவலோட தீமும் சம்பவங்களையும் முடிவு பண்ணினதும் எங்கள்ல...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube