“என்னங்க...” என்றபடி அருகில் வந்தாள் என் தர்மபத்தினி. அவளை ஏறிட்டபடி, “சொல்லும்மா யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) என்றேன். அப்படி நான் அழைத்தாலே நான் குஷியான மூடில் இருப்பதை அறிந்து கொள்ளும் அந்தக் கள்ளி, “ஈவினிங் சீக்கிரம் வந்துடுங்க... ஷாப்பிங் போகலாம்” என்று ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தாள். எனக்கு பகீர் என்றது.
நோ... நோ... இதானே வேணாங்கறது... உடனே நான் கஞ்சன் என்றோ, சரிதா வெட்டிச் செலவு செய்பவள் என்றோ கற்பனையை ஓடவிடக் கூடாது சார் / மேடம்! அப்படி எதுவும் இல்லை. பின் ஏன் சரிதா ஷாப்பிங் என்றால் நீ பயப்படுகிறாய் என்றுதானே கேட்கிறீர்கள்? காரணம்... சரிதாவின் வீக்னெஸ்!
அது என்ன வீக்னஸ் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..? உங்கள் மானிட்டரைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... ஒரு கொசுவர்த்திச் சுருள் ஹைஸ்பீடில் சுற்றுவது தெரிகிறதா..? கரெக்ட்... நாம் ஒரு ப்ளாஷ்பேக்கிற்குள் போகிறோம்...
முன்பொரு முறை நாங்கள் ஷாப்பிங் கிளம்பிய ஒரு (அ)சுபதினத்தில்... “என்னங்க... ஜவுளிக்கடைக்குப் போற வழியில ஹோட்டல்ல ஏதாவது கொறிச்சுட்டுப் போலாமா?” என்றாள். அவள் அடிக்கடி ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று தொந்தரவு செய்யும் ரகமல்ல என்பதால் சம்மதித்தேன். ‘உயர்தர உணவகம்’ என்று போர்டிலேயே மிரட்டிய அந்த பெரிய ஹோட்டலின் காம்பவுண்டில் வண்டியை நிறுத்தி உள்ளேறினோம்.
சப்ளையர் கொண்டு வந்த வைத்த மெனு கார்டில் (புக்கில்?) இருந்து ஒரு அயிட்டத்தைத் தேர்ந்தெடுத்தாள் சரிதா. “என்னங்க... இதை ஆர்டர் பண்ணலாமா..?”
அதைப் பார்த்தேன். ஹூக்குவெஜி-ட்ரைமா என்று இருந்தது. “ஐயையோ... பேரைப் பார்த்தாலே உதறுது சரி... எனக்கு பேப்பர் தோசை போதும்...” என்றேன்.
“விட்டா நீங்க பேப்பரையேகூட தின்னுவீங்க... வீட்லதான் எப்பப் பாரு தோசை, இட்லின்னு சாப்பிடறோம்.. இங்கயாவது புது டிபன் ஏதாவது சாப்பிடலாமே... இது என்னப்பா..?” என்று கேட்டாள் சப்ளையரிடம்.
நோ... நோ... இதானே வேணாங்கறது... உடனே நான் கஞ்சன் என்றோ, சரிதா வெட்டிச் செலவு செய்பவள் என்றோ கற்பனையை ஓடவிடக் கூடாது சார் / மேடம்! அப்படி எதுவும் இல்லை. பின் ஏன் சரிதா ஷாப்பிங் என்றால் நீ பயப்படுகிறாய் என்றுதானே கேட்கிறீர்கள்? காரணம்... சரிதாவின் வீக்னெஸ்!
அது என்ன வீக்னஸ் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..? உங்கள் மானிட்டரைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... ஒரு கொசுவர்த்திச் சுருள் ஹைஸ்பீடில் சுற்றுவது தெரிகிறதா..? கரெக்ட்... நாம் ஒரு ப்ளாஷ்பேக்கிற்குள் போகிறோம்...
முன்பொரு முறை நாங்கள் ஷாப்பிங் கிளம்பிய ஒரு (அ)சுபதினத்தில்... “என்னங்க... ஜவுளிக்கடைக்குப் போற வழியில ஹோட்டல்ல ஏதாவது கொறிச்சுட்டுப் போலாமா?” என்றாள். அவள் அடிக்கடி ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று தொந்தரவு செய்யும் ரகமல்ல என்பதால் சம்மதித்தேன். ‘உயர்தர உணவகம்’ என்று போர்டிலேயே மிரட்டிய அந்த பெரிய ஹோட்டலின் காம்பவுண்டில் வண்டியை நிறுத்தி உள்ளேறினோம்.
சப்ளையர் கொண்டு வந்த வைத்த மெனு கார்டில் (புக்கில்?) இருந்து ஒரு அயிட்டத்தைத் தேர்ந்தெடுத்தாள் சரிதா. “என்னங்க... இதை ஆர்டர் பண்ணலாமா..?”
அதைப் பார்த்தேன். ஹூக்குவெஜி-ட்ரைமா என்று இருந்தது. “ஐயையோ... பேரைப் பார்த்தாலே உதறுது சரி... எனக்கு பேப்பர் தோசை போதும்...” என்றேன்.
“விட்டா நீங்க பேப்பரையேகூட தின்னுவீங்க... வீட்லதான் எப்பப் பாரு தோசை, இட்லின்னு சாப்பிடறோம்.. இங்கயாவது புது டிபன் ஏதாவது சாப்பிடலாமே... இது என்னப்பா..?” என்று கேட்டாள் சப்ளையரிடம்.
“நம்ம ஹோட்டல்ல புதுசா அறிமுகப் படுத்தியிருக்கற வெரைட்டி மேடம்...” என்றான் அவன்.
“புது ஐட்டமா? ரெண்டு பிளேட் கொண்டு வா...” என்று உடனே ஆர்டர் செய்தாள்.
“சரி, நீ பாட்டுக்கு ஆர்டர் பண்ணிட்டே... அவன் பாம்பு குடல், தவளை கால்ன்னு எதையாவது கொண்டு வந்துடப் போறான்...”
“புது ஐட்டமா? ரெண்டு பிளேட் கொண்டு வா...” என்று உடனே ஆர்டர் செய்தாள்.
“சரி, நீ பாட்டுக்கு ஆர்டர் பண்ணிட்டே... அவன் பாம்பு குடல், தவளை கால்ன்னு எதையாவது கொண்டு வந்துடப் போறான்...”
“அட சமர்த்தே... இது சைவ ஹோட்டல்! பயப்படாம இருங்க...” என்றாள். இருந்தாலும் அவன் என்னத்தைக் கொண்டுவரப் போகிறானோ என்று உள்ளே சற்று உதறலுடன்தான் காத்திருந்தேன். வெயிட்டர் கொண்டு வந்து வைத்ததைப் பார்த்ததும் சரிதா ‘ஙே’ என்று விழித்தாள். நான் குபீரென்று சிரித்து விட்டேன். காரணம்...
ரத, கஜ, துரக, பதாதிகள் போல ஃபோர்க்குகளும் ஸ்பூன்களும் அணிவகுத்து நிற்க, சுற்றிலும் ஏதேதோ கீரைகளால் பாத்தி கட்டி, கொஞ்சம் ட்ரை ப்ரூட்ஸ் கொஞ்சம் கேரட், வெள்ளரித் துண்டுகள்... இவற்றுக்கிடையில் காட்சி அளித்தது... (வீட்டில் சரிதா அடிக்கடி செய்யும்) ரவை உப்புமா!
“என்னப்பா இது?” என்று வெயிட்டரிடம் (தாமதமாக) கேட்டாள் சரிதா. “இது தாய்லாந்து ஸ்டைல் ஃபுட் மேடம். இந்தியாவுல நாங்கதான் அறிமுகப் படுத்தியிருக்கோம். இந்த அயிட்டம்தான் எங்க ஹோட்டல்ல ஹாட் சேல்” என்றான் பெருமையாக. சங்ககால ரிஷிகள் போல சரிதாவின் பார்வைக்குச் சக்தி இருந்திருந்தால் பஸ்பமாகியிருப்பான்.
ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாசலில் இருந்த பீடா ஸ்டாலில் பீடா வாங்கி இருவரும் போட்டோம். காரில் அவள் பின்சீட்டில் அமர்ந்ததும், கதவைச் சாத்திவிட்டு முன்புறம் வந்து டிரைவிங் சீட்டில் அமர்ந்தேன்.
“என்னங்க... துப்பட்டா...” என்றாள் சரிதா.
“ஹோட்டல் செக்யூரிட்டி திட்டுவான்மா. காம்பவுண்டு தாண்டினதும் ரோட்டோரமா நிறுத்தறேன். ஜன்னலை இறக்கிட்டுத் துப்பு” என்றேன்.
“என்னங்க... துப்பட்டா...” என்றாள் சரிதா.
“ஹோட்டல் செக்யூரிட்டி திட்டுவான்மா. காம்பவுண்டு தாண்டினதும் ரோட்டோரமா நிறுத்தறேன். ஜன்னலை இறக்கிட்டுத் துப்பு” என்றேன்.

“கதவு நாறிப் போயிடும் சரிதா. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாதா? ஏன் உன் புத்தி இப்படிப் போகுது?” சற்றுக் கோபமாகவே கேட்டேன்.
“ஐயோ என் அறிவே... கார்க் கதவுல துப்பட்டா மாட்டிக்கிச்சுன்னு என்னை முழுசாச் சொல்ல விட்டாதானே...” என்றாள். “ஹி... ஹி... ஹி...” என்று அசடு வழிந்தவாறு கதவில் மாட்டியிருந்த அவள் துப்பட்டாவை எடுத்துவிட்டு மீண்டும் கதவைச் சாத்தி காரைக் கிளப்பினேன்.
புடவைக் கடையில்...
நாங்கள் நுழைந்ததும், “வாங்க சார்... வாங்க...” என்று வரவேற்றாள் புடவை கவுண்ட்டரில் இருந்த, நாகேஷ் போல ஒல்லியாக இருந்த பெண். அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். நல்லவேளை... சரிதா பதிலுக்குப் பெருமூச்சு விடவில்லை... விட்டிருந்தால், அவள் கடைக்கு வெளியே பறந்திருப்பாள்!
அந்தப் பெண் சரிதாவிடம், “என்ன வேணும் மேடம்?” என்க, “உன்கிட்ட வந்து இட்லி, சாம்பாரா கேப்பாங்க... அந்த ஸாரியை எடும்மா...” என்று சற்றுக் காரமாகவே பேசி, கை காட்டினாள் என் துணைவி. ‘வாங்க மேடம்’ என்று அவள் வரவேற்காததால் வந்த கோபம்! புடவையை எடுத்தபடி, “ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.
நாங்கள் நுழைந்ததும், “வாங்க சார்... வாங்க...” என்று வரவேற்றாள் புடவை கவுண்ட்டரில் இருந்த, நாகேஷ் போல ஒல்லியாக இருந்த பெண். அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். நல்லவேளை... சரிதா பதிலுக்குப் பெருமூச்சு விடவில்லை... விட்டிருந்தால், அவள் கடைக்கு வெளியே பறந்திருப்பாள்!
அந்தப் பெண் சரிதாவிடம், “என்ன வேணும் மேடம்?” என்க, “உன்கிட்ட வந்து இட்லி, சாம்பாரா கேப்பாங்க... அந்த ஸாரியை எடும்மா...” என்று சற்றுக் காரமாகவே பேசி, கை காட்டினாள் என் துணைவி. ‘வாங்க மேடம்’ என்று அவள் வரவேற்காததால் வந்த கோபம்! புடவையை எடுத்தபடி, “ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.
“ஹன்ஸிகா எங்க புடவை கட்டறா? அப்படியே கட்டி னாலும் அவ புடவை எனக்கு வேணாம்... நான் சொல்றதை மட்டும் எடு...” என்றாள் சரிதா.
அடுத்த நிமிடம் நான் எதற்கு பயந்தேனோ, அது நடந்து விட்டது. “இந்த டிசைன் புதுசா வந்திருக்கு மேடம். நேத்துத் தான் வந்துச்சு” என்றபடி ஒரு புடவையைக் காட்டினாள். உடனே, “ஓக்கே, இது இருக்கட்டும்..” என்றாள் சரிதா.
இதுதாங்க சரிதாவோட வீக்னஸ்! ‘புதுசு’ என்றோ ‘புது மாடல்’ என்றோ யாராவது சொல்லி விட்டால் போதும்... அதை வாங்காவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும். புதிய ஐட்டம் என்று ஒரு (சாமர்த்திய) கடைக்காரர் இவள் தலையில் கட்டிய அம்மிக் கல்லைக் கூட வாங்கிவந்து மிக்ஸியைப் பயன்படுத்தாமல் அதில் சட்னி அரைத்தாள் என்றால் பாருங்களேன்... இப்படி அவள் ‘புதுசு’ என்று வாங்கி, பின்னர் பயன்படுத்தாமல் வீட்டில் கிடக்கும் ஐட்டங்களை வைத்து ரிடையர் மென்ட்டுக்குப் பின் ஒரு கடை வைக்கலாம் என்றிருக்கிறேன்.
அந்த நாகேஷி சரியான சாமர்த்தியக்காரி. சில நிமிடங்களிலேயே சரிதாவின் வீக்னஸைப் புரிந்து கொண்டு அவள் தலையில் ஐந்து புடவைகளைக் கட்டி விட்டாள். கையில் புடவைக்கடை பார்சலையும், அவள் வாங்கிய இதர ‘புது’ ஐட்டங்களையும் சுமந்து வந்ததில் என் முகமே வெளியில் தெரியாதபடி அவைகள் மறைத்திருந்தன. திருப்தியாக ஷாப்பிங் செய்த சந்தோஷத்தில் சரிதா ஒரு சுற்று பெருத்திருந்தாள். என் பேண்ட்டிலிருந்த பர்ஸைப் பார்த்தேன்... அது நான்கு சுற்று இளைத்திருந்தது!
கொசுவர்த்தி ஓவர்! -- இப்ப உங்களுக்குப் புரியுதா... ’ஷாப்பிங் போகணும்’னு சரிதா சொன்னா நான் ஏன் பயப்படறேன்னு...
இதுதாங்க சரிதாவோட வீக்னஸ்! ‘புதுசு’ என்றோ ‘புது மாடல்’ என்றோ யாராவது சொல்லி விட்டால் போதும்... அதை வாங்காவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும். புதிய ஐட்டம் என்று ஒரு (சாமர்த்திய) கடைக்காரர் இவள் தலையில் கட்டிய அம்மிக் கல்லைக் கூட வாங்கிவந்து மிக்ஸியைப் பயன்படுத்தாமல் அதில் சட்னி அரைத்தாள் என்றால் பாருங்களேன்... இப்படி அவள் ‘புதுசு’ என்று வாங்கி, பின்னர் பயன்படுத்தாமல் வீட்டில் கிடக்கும் ஐட்டங்களை வைத்து ரிடையர் மென்ட்டுக்குப் பின் ஒரு கடை வைக்கலாம் என்றிருக்கிறேன்.
அந்த நாகேஷி சரியான சாமர்த்தியக்காரி. சில நிமிடங்களிலேயே சரிதாவின் வீக்னஸைப் புரிந்து கொண்டு அவள் தலையில் ஐந்து புடவைகளைக் கட்டி விட்டாள். கையில் புடவைக்கடை பார்சலையும், அவள் வாங்கிய இதர ‘புது’ ஐட்டங்களையும் சுமந்து வந்ததில் என் முகமே வெளியில் தெரியாதபடி அவைகள் மறைத்திருந்தன. திருப்தியாக ஷாப்பிங் செய்த சந்தோஷத்தில் சரிதா ஒரு சுற்று பெருத்திருந்தாள். என் பேண்ட்டிலிருந்த பர்ஸைப் பார்த்தேன்... அது நான்கு சுற்று இளைத்திருந்தது!
கொசுவர்த்தி ஓவர்! -- இப்ப உங்களுக்குப் புரியுதா... ’ஷாப்பிங் போகணும்’னு சரிதா சொன்னா நான் ஏன் பயப்படறேன்னு...
‘பின்’ குறிப்பு : குத்தினால் வலிக்கும்!
பின்குறிப்பு : நான் ஐந்து நாட்கள் வெளியூர் செல்வதால் நெட் பக்கம் வர இயலாது. (கமெண்ட் மாடரேஷனை எடுத்து விட்டேன்). ஆகவே நண்பர்களின் தளங்களுக்கு வந்து படித்து ரசிப்பதும், கருத்துச் சொல்வதும், உங்கள் கருத்துக்களுக்குப் பதிலளிப்பதும் டிச.1ல்தான். பொறுத்தருளுங்கள் அன்பர்களே...