Wednesday, September 16, 2015

ந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருப்பதையும், அதற்காக முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நண்பர்கள் பரபரக்க வேலை செய்வதையும் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். (நீ தூங்கி வழிஞ்சிட்டு லேட்டா பகிர்ந்தா நாங்க என்னய்யா செய்யறதுன்னு உங்க மை.வா. கேக்குது. ஹி... ஹி....) பதிவர் சந்திப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் அந்த நாளை எதிர்நோக்கி உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றன விநாடிகள். பார்க்கையில் மகிழ்ச்சியும் படபடப்பும் கூடிக் கொண்டே வருகிறது.

புதுக்கோட்டை நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் பலப்பல புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண்கையில் மகிழ்ச்சி கரை உடைக்கிறது. முதலில் குறிப்பிட வேண்டியது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து 20ம் தேதிக்குள் அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு. (விசு ஆவேசம் என்று பதிவில் பார்த்ததும் மிரண்டுதான் போனேன். வேலூர்ல நாம பாத்தப்ப சாந்தமா தானே இருந்தார், ப்ளாக்கர் மீட்னதும்தான் அவர் ஆவேசமாயிட்டாரோ? ஹி.. ஹி... ஹி..)


அப்புறமென்ன... “சிவபெருமான் கிருபை வேண்டும்னா கேக்கப் போறேன்? பணம்தான் ஸார் வேணும். அது பத்தும் செய்யும்னுவாங்க. அது மாத்திரம் என் கைல இருந்துட்டா நான் பதினொண்ணும் செய்வேன்” அப்டின்னு நாகேஷ் சும்மாவா சொன்னார்..? நாம் ஒவ்வொருவரும் நம்மளால முடிஞ்ச நிதிப் பங்களிப்பை செஞ்சு புதுக்கோட்டை நண்பர்களின் கரத்தை வலுப்படுத்திட்டா, அவங்க பன்னெண்டும் செய்வாங்கன்றதுல சந்தேகமில்லை. நிதிஉதவி செய்ய விரும்புவோர் NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320 என்ற வங்கிக் கணக்கில் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

இவை யாவற்றையும் விட முக்கியமானது  நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.  ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-  போட்டிவிவரம் :

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கே விரையவும்.

போட்டியில கலந்துக்கிட்டு அவங்க தர்ற பரிசுக் கேடயம் நிறைய பரிசுத் தொகைய அள்ளணும்னு ஆசை ஆசையா வருது... ஆனா எல்லாம் சீரியஸ் சப்ஜெக்டாச்சே, நமக்கு என்ன தெரியும்னு நெனக்கறப்ப வர்ற ஆசையும் அடங்கிப் போகுது. ஆ... அபிராமி... அபிராமி.. எனக்கில்லை... பரிசு எனக்கில்லைன்னு தருமி மாதிரி புலம்பத் தோணுது. (இருந்தாலும் நானும் எதையாவது கிறுக்கியே ஆகணும்னு வலைச்சித்தர் உத்தரவு போட்டிருக்கார். நாரதர் கலகம் நன்மைல முடியும்பாங்க. இவர் கௌப்பிவிட்டது என்னாவப் போவுதோ..? ஹி... ஹி...) சிறப்பான எழுத்துத் திறமை படைத்த நீங்கள்  இதில் ஆர்வமுடன் கலந்துக்கிட்டு உங்களோட பங்களிப்பைச் செலுத்தி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். இப்பவே அட்வான்ஸா என்னோட நல்வாழ்த்துகள்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube