குறுகுறு குழந்தைகள் துள்ளி விளையாட...
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!
வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...
ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!
காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!
விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?
மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...
சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...
காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!
கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!
வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...
ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!
காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!
விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?
மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...
சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...
காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!
கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!