தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா. விளைவாக...
அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... அலுவலகத்திலிருந்து திரும்புகையில் எனக்கு ஒரு முகப்பூச்சுப் பொடி டப்பா வாங்கி வாருங்கள்...’’ என்றாள்.
‘‘சாம்பார் பொடி, மிளகாப் பொடின்னுதானே கேப்ப... அதென்னது புதுசா முகப்பூச்சு்ப் பொடி?’’ என்றேன். ‘‘இதோ பாருங்கள். இதுதான்...’’ என்று அவள் எடுத்துக் காட்டியது அவள் பவுடர் டப்பாவை.
‘‘அடக்கடவுளே... ஃபேஸ் பவுடர் தீர்ந்துடுச்சு, வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே? இதுக்கு ஏன் தமிழ்ப்படுத்திக் கொல்ற?’’ என்றேன் புரியாமல்.
‘‘அதுவா... ஜுபிடர் தொலைக்காட்சியில் ‘கொல்லுங்கம்மா, கொல்லுங்க’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை நடத்துபவரிடம் ஆங்கில வார்த்தை எதுவும் கலக்காமல் தொடர்ந்து மூன்று நிமிடம் தமிழில் உரையாட வேண்டுமாம். அப்படி உரையாடி விட்டால் அளவற்ற பரிசுகள் தருகிறார்கள். நான் அவற்றை அடைவதென முடிவு கட்டி விட்டேன். நிகழச்சிக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆதலால் இப்போதிருந்தே தனித் தமிழில் பேசத் துவங்கி விட்டேன்’’ என்றாள்.
‘‘அடியேய்... முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.
அப்ப ஆரம்பிச்சதுங்க. தொடர்ந்து ஒரு வாரமா இங்கிலீஷ் கலக்காம பேசறேன்னு கொலையாக் கொன்னுட்டிருக்கா. நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.
‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.
‘‘ஐயகோ! கணவனை அப்படி அழைப்பார்கள். நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்ததில்லையா? ’’
‘‘டிவில ஓசில போடறானேன்னு எம்.கே.டி. படம்லாம் பாக்காதன்னா கேக்கறியா? இப்டில்லாம் விபரீதமா கூப்பிட்டுக்கிட்டு... சரி, என்ன விஷயம்னு சொல்லு...’’
‘‘மாலை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் சில பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.’’ என்றாள்.
‘‘பெரிய அங்காடியா? அப்படின்னா?’’ என்று நான் விழிக்க, ‘‘இதைத்தான் இயம்பினேன் நான்’’ என்று அவள் எடுத்துக் காட்டிய கவரில் Big Bazaar என்றிருந்தது. ‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன். அந்தக் கணம் ‘பளிச்’சென்று ஒரு ஐடியா வந்தது. ‘‘சரி, உனக்கெதுக்கு அழகுசாதனப் பொருட்கள்லாம்? அதெல்லாம் சாதாரணப் பெண்களுக்குத்தான்... நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.
‘‘என்ன... நான் அவ்வளவு இளமை(?)யாகவா தெரிகிறேன்!! மிக்க மகிழ்ச்சிங்க...’’ என்றாள் வெட்கமாக. சரியான அர்த்தம் தெரிந்திருந்தால், நான் இந்தப் பதிவு எழுத முழுதாகத் தேறியிருக்க மாட்டேன். (ஹேமா, சசிகலா மாதிரி கவிஞர்கள் யாரும் போட்டுக் குடுத்துராதீங்கப்பா)
ஐஸ் வைத்த கையோடு அடுத்த கோரிக்கையை வைத்தேன். ‘‘சரி, திருவல்லிக்கேணில இந்தப் பதிப்பகத்துக்குப் போயி, ‘கல்கி களஞ்சியம்’னு இவங்க ஒரு புக் போட்டிருக்காங்க. வாங்கிட்டு வந்துடேன் ப்ளீஸ், ஈவ்னிங் நாம நீ சொன்ன மாதிரி பீச்சுக்குப் போகலாம்’’ என்றேன். ‘‘சரிங்க.....’’ என்றாள் பல்லெல்லாம் வாயாக.
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘‘என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?’’ என்றபடி வரவேற்றாள் என் இல்லாள்.
வியப்பாகப் பார்த்தேன். ‘’சரி... குணமாயிட்டியா? ஐமீன்... இங்கிலீஷ் கலந்து சாதாரணமாப் பேச ஆரம்பிச்சுட்டியே...’’ என்றேன்.
‘‘ஆமாங்க. அந்த ப்ரொக்ராம்ல கலந்துக்கற எண்ணத்தையே இன்னிக்கு காலைலயே கை விட்டுட்டேன்...’’ என்றாள். ‘‘நன்று இந்த திடீர் (நல்ல) முடிவுக்கு காரணம் யாதோ?’’ என்றேன்.
‘‘அதுவா... காலைல நீங்க ஆபீஸ் போகும் போது திருவல்லிக்கேணில ஒரு பப்ளிகேஷன் ஆபீஸ் போய் புக் ஒண்ணு வாங்கி வெக்கச் சொன்னீங்கல்லியா... அதுக்காக பஸ் பிடிச்சேன். கண்டக்டர் வந்ததும், டிக்கெட் கேட்டேங்க. அதுக்கு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்...’’
‘‘டிக்கெட்டை கண்டக்டர்ட்டதானே கேட்டாகணும்? அதுக்கு ஏன் திட்டினான்?’’
‘‘ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்- அப்படின்னு கேட்டேன். ‘ஙே’ன்னு முழி்ச்சான். ‘அங்கல்லாம் இந்த பஸ் போகாதும்மா’ அப்படின்னான். ‘இல்லை ஐயா, திருவல்லிக்கேணிக்கு முந்தைய நிறுத்தமே அதுதான்’ன்னேன் நான். ‘ஐய, அது ஐஸ் ஹவுஸ்ம்மா’ன்னான் கண்டக்டர். ‘நான் அதைத்தான் ஐயா தமிழில் இயம்பினேன்’ன்னேன் நான். அவ்வளவுதாங்க... நான்ஸ்டாப்பா கத்த ஆரம்பிச்சுட்டான். ‘புரியற மாதிரி தமிழ்ல(!) கேட்டா இன்னா... நமக்குன்னே வர்றாங்க பாரு’ன்னு ஆரம்பிச்சு அவன் கத்தறான். பஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. எனக்கு ரொம்ப இன்சல்ட்டாப் போச்சு. இந்த வம்பே வேண்டாம்னு நார்மலுக்கு மாறிட்டேன்’’ என்றாள்.
வீட்டுக்குள் என்னிடம் தனித் தமிழ் பேசிக் கொல்லும் இவளை வெளி நபர்களிடம் அனுப்பி வைத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டு சரியாகி விடுவாள் என்று கணித்த என் திட்டத்துக்கு வெற்றி! நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.
‘‘ஆஹா... இல்லாளை வசைபாடுதல் எம்மால் இயலாததன்றோ? அதைச் சாதித்த அந்த நடத்துனர் வாழ்க!’’ என்றேன். அருகில் வந்து வினோதமாகப் பார்த்தாள். ‘‘என்னாச்சுங்க... ஏன் இப்போ இப்படி நீங்க தனித்தமிழ்ல பேசறீங்க? வேணாங்க...’’ என்றாள்.
‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.
சரிதாவின் கண்கள் பிதுங்கின; உதட்டைச் சுழித்தாள் (அழுகையின் ஆரம்பம்!) ‘‘ப்ளீஸ் வேண்டாங்க... நான் டிவில சீரியல் பாத்து அழறது போதாதுன்னு நீங்க வேற அழ வெக்காதீங்க. இனி சீரியலும், சினிமாவும் தவிர வேற எதுவும் பாக்க மாட்டேங்க’’ என்றாள்.
அப்பாடா ஒரு வழியாக டிவி தொல்லையிலிருந்து விடுதலை! ஹி... ஹி... இன்னும் நான் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறேனாக்கும்..!!
அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... அலுவலகத்திலிருந்து திரும்புகையில் எனக்கு ஒரு முகப்பூச்சுப் பொடி டப்பா வாங்கி வாருங்கள்...’’ என்றாள்.
‘‘சாம்பார் பொடி, மிளகாப் பொடின்னுதானே கேப்ப... அதென்னது புதுசா முகப்பூச்சு்ப் பொடி?’’ என்றேன். ‘‘இதோ பாருங்கள். இதுதான்...’’ என்று அவள் எடுத்துக் காட்டியது அவள் பவுடர் டப்பாவை.
‘‘அடக்கடவுளே... ஃபேஸ் பவுடர் தீர்ந்துடுச்சு, வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே? இதுக்கு ஏன் தமிழ்ப்படுத்திக் கொல்ற?’’ என்றேன் புரியாமல்.
‘‘அதுவா... ஜுபிடர் தொலைக்காட்சியில் ‘கொல்லுங்கம்மா, கொல்லுங்க’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை நடத்துபவரிடம் ஆங்கில வார்த்தை எதுவும் கலக்காமல் தொடர்ந்து மூன்று நிமிடம் தமிழில் உரையாட வேண்டுமாம். அப்படி உரையாடி விட்டால் அளவற்ற பரிசுகள் தருகிறார்கள். நான் அவற்றை அடைவதென முடிவு கட்டி விட்டேன். நிகழச்சிக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆதலால் இப்போதிருந்தே தனித் தமிழில் பேசத் துவங்கி விட்டேன்’’ என்றாள்.
‘‘அடியேய்... முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.
அப்ப ஆரம்பிச்சதுங்க. தொடர்ந்து ஒரு வாரமா இங்கிலீஷ் கலக்காம பேசறேன்னு கொலையாக் கொன்னுட்டிருக்கா. நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.
‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.
‘‘ஐயகோ! கணவனை அப்படி அழைப்பார்கள். நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்ததில்லையா? ’’
‘‘டிவில ஓசில போடறானேன்னு எம்.கே.டி. படம்லாம் பாக்காதன்னா கேக்கறியா? இப்டில்லாம் விபரீதமா கூப்பிட்டுக்கிட்டு... சரி, என்ன விஷயம்னு சொல்லு...’’
‘‘மாலை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் சில பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.’’ என்றாள்.
‘‘பெரிய அங்காடியா? அப்படின்னா?’’ என்று நான் விழிக்க, ‘‘இதைத்தான் இயம்பினேன் நான்’’ என்று அவள் எடுத்துக் காட்டிய கவரில் Big Bazaar என்றிருந்தது. ‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன். அந்தக் கணம் ‘பளிச்’சென்று ஒரு ஐடியா வந்தது. ‘‘சரி, உனக்கெதுக்கு அழகுசாதனப் பொருட்கள்லாம்? அதெல்லாம் சாதாரணப் பெண்களுக்குத்தான்... நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.
‘‘என்ன... நான் அவ்வளவு இளமை(?)யாகவா தெரிகிறேன்!! மிக்க மகிழ்ச்சிங்க...’’ என்றாள் வெட்கமாக. சரியான அர்த்தம் தெரிந்திருந்தால், நான் இந்தப் பதிவு எழுத முழுதாகத் தேறியிருக்க மாட்டேன். (ஹேமா, சசிகலா மாதிரி கவிஞர்கள் யாரும் போட்டுக் குடுத்துராதீங்கப்பா)
ஐஸ் வைத்த கையோடு அடுத்த கோரிக்கையை வைத்தேன். ‘‘சரி, திருவல்லிக்கேணில இந்தப் பதிப்பகத்துக்குப் போயி, ‘கல்கி களஞ்சியம்’னு இவங்க ஒரு புக் போட்டிருக்காங்க. வாங்கிட்டு வந்துடேன் ப்ளீஸ், ஈவ்னிங் நாம நீ சொன்ன மாதிரி பீச்சுக்குப் போகலாம்’’ என்றேன். ‘‘சரிங்க.....’’ என்றாள் பல்லெல்லாம் வாயாக.
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘‘என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?’’ என்றபடி வரவேற்றாள் என் இல்லாள்.
வியப்பாகப் பார்த்தேன். ‘’சரி... குணமாயிட்டியா? ஐமீன்... இங்கிலீஷ் கலந்து சாதாரணமாப் பேச ஆரம்பிச்சுட்டியே...’’ என்றேன்.
‘‘ஆமாங்க. அந்த ப்ரொக்ராம்ல கலந்துக்கற எண்ணத்தையே இன்னிக்கு காலைலயே கை விட்டுட்டேன்...’’ என்றாள். ‘‘நன்று இந்த திடீர் (நல்ல) முடிவுக்கு காரணம் யாதோ?’’ என்றேன்.
‘‘அதுவா... காலைல நீங்க ஆபீஸ் போகும் போது திருவல்லிக்கேணில ஒரு பப்ளிகேஷன் ஆபீஸ் போய் புக் ஒண்ணு வாங்கி வெக்கச் சொன்னீங்கல்லியா... அதுக்காக பஸ் பிடிச்சேன். கண்டக்டர் வந்ததும், டிக்கெட் கேட்டேங்க. அதுக்கு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்...’’
‘‘டிக்கெட்டை கண்டக்டர்ட்டதானே கேட்டாகணும்? அதுக்கு ஏன் திட்டினான்?’’
‘‘ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்- அப்படின்னு கேட்டேன். ‘ஙே’ன்னு முழி்ச்சான். ‘அங்கல்லாம் இந்த பஸ் போகாதும்மா’ அப்படின்னான். ‘இல்லை ஐயா, திருவல்லிக்கேணிக்கு முந்தைய நிறுத்தமே அதுதான்’ன்னேன் நான். ‘ஐய, அது ஐஸ் ஹவுஸ்ம்மா’ன்னான் கண்டக்டர். ‘நான் அதைத்தான் ஐயா தமிழில் இயம்பினேன்’ன்னேன் நான். அவ்வளவுதாங்க... நான்ஸ்டாப்பா கத்த ஆரம்பிச்சுட்டான். ‘புரியற மாதிரி தமிழ்ல(!) கேட்டா இன்னா... நமக்குன்னே வர்றாங்க பாரு’ன்னு ஆரம்பிச்சு அவன் கத்தறான். பஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. எனக்கு ரொம்ப இன்சல்ட்டாப் போச்சு. இந்த வம்பே வேண்டாம்னு நார்மலுக்கு மாறிட்டேன்’’ என்றாள்.
வீட்டுக்குள் என்னிடம் தனித் தமிழ் பேசிக் கொல்லும் இவளை வெளி நபர்களிடம் அனுப்பி வைத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டு சரியாகி விடுவாள் என்று கணித்த என் திட்டத்துக்கு வெற்றி! நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.
‘‘ஆஹா... இல்லாளை வசைபாடுதல் எம்மால் இயலாததன்றோ? அதைச் சாதித்த அந்த நடத்துனர் வாழ்க!’’ என்றேன். அருகில் வந்து வினோதமாகப் பார்த்தாள். ‘‘என்னாச்சுங்க... ஏன் இப்போ இப்படி நீங்க தனித்தமிழ்ல பேசறீங்க? வேணாங்க...’’ என்றாள்.
‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.
சரிதாவின் கண்கள் பிதுங்கின; உதட்டைச் சுழித்தாள் (அழுகையின் ஆரம்பம்!) ‘‘ப்ளீஸ் வேண்டாங்க... நான் டிவில சீரியல் பாத்து அழறது போதாதுன்னு நீங்க வேற அழ வெக்காதீங்க. இனி சீரியலும், சினிமாவும் தவிர வேற எதுவும் பாக்க மாட்டேங்க’’ என்றாள்.
அப்பாடா ஒரு வழியாக டிவி தொல்லையிலிருந்து விடுதலை! ஹி... ஹி... இன்னும் நான் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறேனாக்கும்..!!