Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Friday, October 2, 2015

பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்...

என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங்.

புதுக்கோட்டை நண்பர்கள் முழு மூச்சாகக் களத்துல இறங்கி தனித் தனிக் குழுக்களா அமைச்சுகிட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் பாத்துப் பாத்து திட்டமிட்டுக்கிட்டிருக்கற இந்த நம்முடைய விழாவிற்கான அழைப்பிதழ் இதோ இங்கே உங்களுக்காக....



பிறகென்ன... நம்ம வீட்டுத் திருவிழாவுல நீங்க அனைவரும் தவறாம கலந்துக்கிட்டு அதை என்னென்னிக்கும் நினைவில் நிற்கிற ஒரு நிகழ்வாகச் செய்துவிட வேண்டும் என்று இருகரம் கூப்பி, மகிழ்வுடன் வேண்டிக்கறேனுங்க. விழா அரங்கில் சந்திக்கலாம்.

Wednesday, September 16, 2015

ந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருப்பதையும், அதற்காக முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நண்பர்கள் பரபரக்க வேலை செய்வதையும் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். (நீ தூங்கி வழிஞ்சிட்டு லேட்டா பகிர்ந்தா நாங்க என்னய்யா செய்யறதுன்னு உங்க மை.வா. கேக்குது. ஹி... ஹி....) பதிவர் சந்திப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் அந்த நாளை எதிர்நோக்கி உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றன விநாடிகள். பார்க்கையில் மகிழ்ச்சியும் படபடப்பும் கூடிக் கொண்டே வருகிறது.

புதுக்கோட்டை நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் பலப்பல புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண்கையில் மகிழ்ச்சி கரை உடைக்கிறது. முதலில் குறிப்பிட வேண்டியது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து 20ம் தேதிக்குள் அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு. (விசு ஆவேசம் என்று பதிவில் பார்த்ததும் மிரண்டுதான் போனேன். வேலூர்ல நாம பாத்தப்ப சாந்தமா தானே இருந்தார், ப்ளாக்கர் மீட்னதும்தான் அவர் ஆவேசமாயிட்டாரோ? ஹி.. ஹி... ஹி..)


அப்புறமென்ன... “சிவபெருமான் கிருபை வேண்டும்னா கேக்கப் போறேன்? பணம்தான் ஸார் வேணும். அது பத்தும் செய்யும்னுவாங்க. அது மாத்திரம் என் கைல இருந்துட்டா நான் பதினொண்ணும் செய்வேன்” அப்டின்னு நாகேஷ் சும்மாவா சொன்னார்..? நாம் ஒவ்வொருவரும் நம்மளால முடிஞ்ச நிதிப் பங்களிப்பை செஞ்சு புதுக்கோட்டை நண்பர்களின் கரத்தை வலுப்படுத்திட்டா, அவங்க பன்னெண்டும் செய்வாங்கன்றதுல சந்தேகமில்லை. நிதிஉதவி செய்ய விரும்புவோர் NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320 என்ற வங்கிக் கணக்கில் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

இவை யாவற்றையும் விட முக்கியமானது  நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.  ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-  போட்டிவிவரம் :

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கே விரையவும்.

போட்டியில கலந்துக்கிட்டு அவங்க தர்ற பரிசுக் கேடயம் நிறைய பரிசுத் தொகைய அள்ளணும்னு ஆசை ஆசையா வருது... ஆனா எல்லாம் சீரியஸ் சப்ஜெக்டாச்சே, நமக்கு என்ன தெரியும்னு நெனக்கறப்ப வர்ற ஆசையும் அடங்கிப் போகுது. ஆ... அபிராமி... அபிராமி.. எனக்கில்லை... பரிசு எனக்கில்லைன்னு தருமி மாதிரி புலம்பத் தோணுது. (இருந்தாலும் நானும் எதையாவது கிறுக்கியே ஆகணும்னு வலைச்சித்தர் உத்தரவு போட்டிருக்கார். நாரதர் கலகம் நன்மைல முடியும்பாங்க. இவர் கௌப்பிவிட்டது என்னாவப் போவுதோ..? ஹி... ஹி...) சிறப்பான எழுத்துத் திறமை படைத்த நீங்கள்  இதில் ஆர்வமுடன் கலந்துக்கிட்டு உங்களோட பங்களிப்பைச் செலுத்தி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். இப்பவே அட்வான்ஸா என்னோட நல்வாழ்த்துகள்.

Thursday, October 30, 2014

பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?

Posted by பால கணேஷ் Thursday, October 30, 2014
கடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது.

வெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல ஆலோசனை தரும் பேச்சை அனைவரும் கேட்கணும், கவியரங்கம் நடத்தணும்னு எல்லாம் திட்டமிட்டு புலவர் இராமாநுசம் ஐயா தலைமையில நடத்தினப்ப சில மூத்த பதிவர்கள் தங்களை உரிய மரியாதை(?)யோட அழைக்கலைன்னு பஞ்சாயத்து பண்ணாங்க. எந்த நாட்டாமைங்களும் இங்க இல்லாததால ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுக்கிட்டு ஓஞ்சு போனதுதான் மிச்சம்.

ரெண்டாவது வருஷம் நடத்தினப்ப, விழா ஏற்பாட்டுக் குழுவுல இருந்த ஒருத்தரே அங்க தென்பட்ட சில குறைகளை லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிச்சு, இதெல்லாம் ஒரு விழாவான்னு மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினாரு. அதையும் சகிச்சுக்க வேண்டியதாயிடுச்சு. அப்பவும் பதிவுகள், பின்னூட்டம்னு ஒரே சண்டை, சர்ச்சை மயம்தான்...

இப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.

ப்ளாக் அப்படின்னு ஒண்ணு தமிழ்ல பிரபலமாக ஆரம்பிச்ச காலத்துலருந்து எழுதி, இன்னிக்கு ஆயிரத்துக்கும் மேல பதிவுகள் கண்ட துளசி கோபால் டீச்சர் நம்ம சந்திப்புகளுக்கு தவறாம வந்து ஊக்கம் தர்றாங்க. அதுமாதிரி இவங்களும் வந்து கலந்துக்க வேணாம், ஆலோசனைகள் தர வேணாம்... அட்லீஸ்ட் கல்லெறியாமலாவது இருந்து தொலையலாம்ல....? வேணும்னா எங்களை மாதிரி வெரைட்டியான நிகழ்ச்சிகளோட. பெண்களும் கலந்துக்கற மாதிரி ஒரு நிகழ்வை நீங்க நடத்திக் காட்டிட்டு அப்பறம் வந்து பேசுங்கப்பா நியாயம்.  இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்.

தொட்டுத் தொடரும் பிளாக்கர் பாரம்பரியத்துல வருங்கால ப்ளாக்கர் யாராவது சந்திப்பு நடத்திட்டு என் பேரையும் சீனு பேரையும் சொல்லாட்டி எங்களுக்கு வலிக்குமாம். நானும் சீனுவும் என்ன அவங்கவங்க அப்பன் சொத்தை வித்தா நடத்தினோம் இதை எங்களுக்கு வலிக்கறதுக்கு...? ஊர் கூடி இழுத்த தேர் இது. எங்க பேரே வரலைன்னாலும் நாங்க கவலைப்படப் போறதில்ல.. வருங்காலப் பதிவர்கள் எங்களை மறக்கக் கடவார்களாகுக...

இனி சந்திப்பு நடத்தறதா இருந்தா ரிடயர்மெண்ட்ல இருந்துட்டு இன்னிக்கு திடீர்னு கண்ணு முழிச்சுட்டு குதிக்கற இந்த ப்ளாக்கர்ஸ்க்கு சிலைத் திறப்பு விழாவோ, இல்ல படத் திறப்பு விழாவோ நடத்திட்டு அப்பறம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.  இல்லாட்டி உம்மாச்சி கண்ணக் குத்திடும். என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....

எல்லாருக்கும் பொழப்புக்கு ஒரு தொழில் இருக்கு. குடும்பம் இருக்கு. பகுதி நேரத்துல எழுத வந்த எடத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அசிங்கப்பட்டுக்கிட்டு... தேவையா இதெல்லாம். போங்கய்யா.. போய் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்க....

பி.கு. : கீழ கருத்துப் பெட்டியில ஆதரிக்கறவங்களும், காறித் துப்புறவங்களும்.... கேரி ஆன். நான் எதுக்கும் பதில் சொல்றதா இல்ல. ஏன்னா நான் சொல்ல வேண்டியத மேல சொல்லிட்டேன். இனி தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவேன், நிறையப் பேருக்கு கருத்திடுவேன். பொங்கறவங்க, திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.

Monday, October 20, 2014

தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித்  திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.


தீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மதுரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.



இந்த, நம்முடைய இரண்டாவது தீபஒளித் திருநாளையும் சிறப்பிக்க தவறாமல் வந்துடுங்க மக்களே..!

பி.கு.: சென்ற ஞாயிற்றுக்கிழமை என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் என் நினைவுக்காக பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். தீபாவளி முடிந்ததும் வெளியிடுகிறேன்.

Monday, September 15, 2014

மதுரைக்குப் போகலாம், வாரீகளா...?

Posted by பால கணேஷ் Monday, September 15, 2014
னைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...

1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).

இதுவரை பதிவு செய்து கொள்ளாத நண்பர்கள் கீழ்வரும் இணைப்புகளில் சென்று தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும். 




எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட முடிந்தால்தான் சிறப்பாக வரவேற்பதற்கும் நிகழ்ச்சியைத் திட்டமிடவும் ஏதுவாக இருக்கும். ஆகவே, இதைத் தவறாமல் செய்யவும்.



நேற்று புலவர் இராமாநுசம் ஐயா அவர்களின் வீட்டில் சென்னைப் பதிவர்கள் (சிலர் வர இயலவில்லை) சந்தித்து மதுரை விழாவிற்குச் செல்வது பற்றிப் விவாதிக்கப்பட்டது.  ஒரு பேருந்தை அமர்த்திக் கொண்டு விழா நடப்பதற்கு முதல் நாள் மதுரையில் இருக்கும்படி புறப்படலாம் என்பது திட்டம். கீழ்க்காணும் பதிவர்களின் அனைவரும் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்படுவது தீர்மானமாகி இருக்கிறது.

1) புலவர் இராமாநுசம், 2) மதுமதி, 3) கே.ஆர்.பி.செந்தில், 4) பாலகணேஷ். 5) மெட்ராஸ்பவன் சிவகுமார், 6) வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 7) கவியாழி கண்ணதாசன், 8) இராய செல்லப்பா, 9) சீனு, 10) சரவணன் (ஸ்கூல் பையன்), 11) ஆர்.பி.ஆதித்யா (போலி பன்னிக்குட்டி). 12) அஞ்சாசிங்கம் செல்வின், 13) பிலாசபி பிரபாகரன். 14) சரவணன் (உண்மைத்தமிழன்). 15) வேடியப்பன் (டிஸ்கவரி).

சென்னைப் பதிவர்களில் சிலர் தங்கள் வருகையை உறுதி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளனர். நேற்றைய சந்திப்புக்கு வர இயலாத சிலரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, எண்ணிக்கை நிச்சயம் இன்னும் கூடும். நேற்றைய கூட்டத்திற்கு வராத, சென்னையிலிருந்து எங்களுடன் கிளம்பிவர விருப்பம் உள்ள பதிவர்கள் அனைவரும் bganesh55@gmail.com என்கிற என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  சரியானபடி திட்டமிடுவதற்கு  அது உறுதுணையாக இருக்கும். நன்றி.

Monday, August 26, 2013

பதிவர் திருவிழாவில் சேட்டை!

Posted by பால கணேஷ் Monday, August 26, 2013
பதிவர் திருவிழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாய் நடந்தேறி  வருகின்றன. உணவுப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேடை அலங்காரம், பதிவர்களுக்கான பாட்ஜ் அச்சிடுதல் என பணிகள் முடுக்கி விடப்பட்டு, வரும் ஞாயிற்றுக் கிழமை சந்திப்பிற்கான படபடப்பு  பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.

சென்ற ஆண்டு பதிவர் திருவிழா நடந்த பொழுது ‘தென்றல்’ சசிகலா எழுதிய ‘தென்றலின் கனவு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதை நான் வடிவமைத்திருந்தேன் என்றபோதிலும் அவசரமாக, குறுகிய காலத்திற்குள் செயல்பட்டு அச்சாக்கி கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக எங்கள் மனதிற்கு முழுமையான  திருப்திதரும் வண்ணம் அமையவில்லை. சரி, அடுத்த தொகுப்பினை சசி வெளியிடும்‌போது அதை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று எங்களை நாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டோம்.

இந்த ஆண்டு வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள் நான்கு. அதில் இரண்டு என் கைவண்ணத்தில் வெளிவருகிறது என்பது மகிழ்வான விஷயம் (எனக்கு!). சதீஸ் சங்கவியின் ‘இதழில் எழுதிய கவிதைகள்’ புத்தகத்தை நான் வடிவமைத்திருக்கிறேன். சிற்சில படங்களை மாற்றச் சொன்னதைத் தவிர மற்றபடி முழுமையாக உற்சாகப்படுத்தி நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் சதீஸ் சங்கவி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! அப்புறம்... அண்ணன் சேட்டைக்காரனின் புத்தகத்தை நான் வடிவமைத்து அச்சிட்டு அது பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இங்கே தந்திருக்கிறேன். அவைரும் தவறாது கலந்து கொண்டு உற்சாகப்படுத்தும்படி வேண்டுகிறேன்.


Saturday, August 24, 2013

பதிவர் திருவிழாவில் புத்தக வேட்டை!

Posted by பால கணேஷ் Saturday, August 24, 2013


  • நட்புகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி..! பதிவர் திருவிழாவில்
  • உங்கள் மனம்கவரும் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ...
  • டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக அரங்கு
  • அமையவுள்ளது. அனைத்து முன்னணிப் பதிப்பகங்களின்
  • புத்தகங்களையும் அங்கு வாங்கிப் படித்து மகிழலாம்!
  • வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு!
  • விரும்பும் புத்தகங்களை நீங்கள் அவர்களிடம் தெரிவித்தால்
  • அதையும் உங்களுக்காய் அங்கு வரவழைப்பார்கள்!
  • கீழே தந்துள்ள முகவரியில் தொடர்பு கொள்க.

Thursday, August 22, 2013

பதிவர் திருவிழாவில் ஆவியின் பாடல்!

Posted by பால கணேஷ் Thursday, August 22, 2013

கோவை னந்தராஜா விஜயராகவன் - இவ்வளவு நீளமான பேரைச் சொல்லிக் கூப்பிடறதுக்குள்ள எல்லாத்துக்கும் கொட்டாவி வந்துருமேன்ற நல்லெண்ணத்துல கோவை ஆவின்னு பேரைச் சுருக்கி வெச்சுக்கிட்டு பயணம்-ங்கற தளத்துல எழுதிக்கிட்டிருக்காரு இவரு. பேருக்கேத்தபடி தான் செய்த பயணங்களை சுவையா எழுதுவாரு; புதுசா ரிலீஸாகற படங்களுக்கு சுடச்சுட விமர்சனம் எழுதுவாரு; ‘நாங்களும் இஞ்சினீயர்தான்’ன்னு தன்னோட ப்ளாஷ்பேக்கையும் எழுதுவாரு. இப்படில்லாம் வலது கையாலயும், இடது கையாலயும் பதிவுகள் எழுதிட்டு வர்ற இவரு, இப்ப ரெண்டு கைலயும் ப்ராக்சராகி கட்டுப் போட்டிருக்கற நிலையிலயும், நம்ம பதிவர் சந்திப்புக்காக பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடற மாதிரி ஒரு கோரஸ் பாடலை ரெண்டு கையாலயும் எழுதியும் பாடியும் அனுப்பியிருக்காரு. அவரோட ஆர்வத்துக்கு நாம எல்லாரும் சேர்ந்து பலமா ஒரு ‘ஓ’ போடலாம்... இந்தப் பாட்டு உங்களுக்குப் பிடிச்சிருக்கா, நாம பாடலாமான்ற விவரத்தையும் கொஞ்சம் சொல்லிப் போடுங்க நியாயமாரேஏஏஏஏஏ! 
 

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா
ஆவி, தி பாஸ்!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

சொந்தமில்லை பந்தமில்லை சேர்ந்திருப்போம் - இங்கு
சாதியில்லை சண்டையில்லை சேர்ந்திருப்போம்..
அன்றாட நிகழ்வை எழுதிடுவோம் - சொந்த
சரக்கை அப்பப்போ கடை விரிப்போம்.
மொழி, இனம், மதமிங்கு தேவையில்லை- எல்லோரும்
இந்நாட்டில் மன்னர்களே!

Chorus: பின்னூட்டம் மட்டும் தான் எங்களுக்கு ஊக்கம் தருமே,,!
லாலாலா லல்லாலா லல்லா லாலல்லலலா )

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள்
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம்
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

Chorus: பாராட்டு ஒன்றே தான் நாங்கள் கேட்கும் வரமே..!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா

ஆவியின் அமுதகானத்தைக் கேட்க.....


Wednesday, August 21, 2013

வடம் பிடிக்க வாருங்கள்...!

Posted by பால கணேஷ் Wednesday, August 21, 2013
திவர் திருவிழாவுல அழைப்பிதழ்ல ஒரு கூடுதல் சேர்க்கை. கோவையைச் சேர்ந்த புதிய பெண் பதிவரான யாமிதாஷா தன்னோட புத்தகத்தை வெளியிடறாங்க. அவங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்! அழைப்பிதழ்ல இது சேர்க்கப்பட்டிருக்கு. இங்க க்ளிக்கி அப்டேட்டைப் பாத்துக்கங்க.

து ஓர் ஆலயத்தின் பெருந் தேர்! பிரம்மாண்டமான வடிவத்தில் தூரத்திலிருந்து பார்க்கையிலேயே பிரமிப்பைத் தருகிறது. அந்தத் தேரை ஊரே கூடி இழுக்கிறது. இழுக்கிற கூட்டத்தில் நல்ல உடல் வலிமை பெற்ற இளைஞர்களும், வலிமை குன்றிய நோஞ்சான்களும், ஏன்... முதியவர்களும்கூட உண்டு. அதில் இன்னாரில் பலத்தால்தான் தேர் நகர்ந்தது என்று அறுதியிட்டு பிரித்துக் கூறிவிட முடியுமா என்ன...? அனைவரும் தங்களால் இயன்ற சக்தியை வழங்கியதன் பலன்... அந்தப் பிரம்மாண்டத் தேர் நகர்ந்து ஊரிலுள்ளோர் அனைவருக்கும் இறை தரிசனமும் மகிழ்வும் தருகிறது. அதேபோலத்தான்... நமது வலைப்பதிவர் திருவிழாவும்!

சென்ற ஆகஸ்டில் நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா அனைவர் நினைவிலும் உறைந்திருக்கும். அஃது மிகவும் சிறப்பாக நடந்தேறியது என்று அனைவரும் பாராட்டியதிலும், எவரும் குறை சொல்லாததிலும் மிக்க மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தந்த உற்சாகத்துடன் வரும் செப்டம்பர் 1ல் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. ஒரு தினம் முழுவதும் நம்மை மகிழ்விலாழ்த்தும் இந்த விழாவிற்காக பல மனிதத் தேனீக்கள் பறந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என ஒரு முடிவு நிர்வாகக் குழுவினால் எடுக்கப்பட்டது. அதன் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம். நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.

First Name            : Raja
Last Name            : Sekar
Display Name       : RAJA. S
Account Number   : 30694397853
Branch Code          : 006850
CIF No.                  : 85462623959
IFS Code                : SBIN0006850
MICR Code           : 600002047
Branch                    : SBI Saligramam Branch
Address                  : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093


Contact : 044- 24849775 / தொடர்புக்கு : அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

பணத்தை செலுத்திவிட்டு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும்  tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

விருப்பப்படுபவர்கள் விருப்பப்பட்ட தொகையை மனமுவந்து அளித்தால் அதுவே மகிழ்வுதரும் விஷயம். இதில் நோஞ்சான் யார், பலசாலி யார் என்பது கணக்கிடப்படுவதில்லை... அன்புடன் தரும் பங்களிப்பே பிரதானம்! பதிவர் திருவிழாத் தேரை சிறப்பாக இழுத்து அனைவருக்கும் மகிழ்ச்சிதர உங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்பினால் உடன் செய்து மகிழுங்கள்/மகிழ வையுங்கள். மிக்க நன்றி.


சீனு - எனக்கு நண்பன், சீடன், விமர்சகன் என்று எல்லா நிலையிலும் நெருக்கமானவன். இவனு(ரு)க்கு நகைச்சுவை நன்றாக எழுதவரும் என்கிற என் கணிப்பை பலமுறை வலியுறுத்தியதுண்டு. ஒருசமயம் நகைச்சுவை எழுத்து பற்றி நேரில் விளக்கம் தந்ததும் உண்டு. சீனு எழுதிய இந்தப் பதிவில் மிகச் சிறப்பாக நகைச்சுவை அமைந்திருந்தது. 

இப்போது நீ்ங்கள் படித்து ரசித்த ‌‘மோகினிப்பேயும் சரிதாவும்’ கதையை எழுதியனுப்பி என் தளத்தில் போடச் சொன்னான். தான் எழுதின படைப்பை இன்னொருத்தரை வெளியிடச் சொல்ல எவ்வளவு திடங்கொண்ட மனசு வேணும்...?  அதைச் சற்றே எடிட் செய்து, என் பங்களிப்பாய் சில வரிகள் சேர்த்து பப்ளிஷ் பண்ணியதில்... நான் எழுதியது என்றே நிறைய கமெண்ட்டுகள்! தான் ஒரு கு.மி.சி.ங்கறத நிரூபிச்சுட்டான் அம்ம பய. மகிழ்ச்சியாய் இருக்கிறது! அசத்துடா பையா! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் ஆசியும்!  சீனுதான் என்று சரியாகக் கணித்தவர்கள் அவர்கள் உண்மைகள், ரமணி ஸார், ஸ்ரவாணி ஆகிய மூவரும்! இவர்களுக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு உண்டு. யப்பா மதுரைத் தமிழா... உடனே ஒரு ப்ளைட் பிடிச்சு சென்னை வாங்க! உங்கள நேர்ல பாத்துத்தான் பரிசக் குடுப்பேனாக்கும்! 

Thursday, June 20, 2013

டெஸ்ட் கிரிக்கெட்டும், 20/20யும்!

Posted by பால கணேஷ் Thursday, June 20, 2013
லைப்பதிவை எழுதிவிட்டு நண்பர்கள் யார் கருத்திடுவார்கள் என்று காத்திருந்து, கருத்துக்களுக்கு பதிலளித்து, நாம் எழுதியது ரசிக்கப்படுகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குச் சமமானது. முகநூலிலோ, ஒரு விஷயத்தை அப்லோட் செய்த சில கணங்களிலேயே நண்பர்களால் படிக்கப்பட்டு, விரும்பப்படுகிறதா இல்லையா என்பதையும் கமெண்ட்டையும் பெற்றுவிட முடிகிற வகையில் 20/20 மேட்சுகளைப் போலத் தோன்றுகிறது எனக்கு முகநூல். ஆனாலும் எனக்கு 20/20யைப் பிடிககிற அதே அளவுக்கு டெஸ்ட் மேட்ச்களும் பிடிக்கும் என்பதால் முகநூலில் அப்லோட் செய்த இரு விஷயங்களை இங்கும் பகிர விரும்பியே இந்தப் பதிவு. 

ரிஷபண்ணா வீட்டு மாடியிலிருந்து ஸ்ரீரங்க கோபுர தரிசனம்!œ
கடந்த சனி ஞாயிறு திருச்சி சென்றிருந்தேன். நான் சென்ற வேலையையும் பூர்த்தி செய்து கொண்டு பதிவுலக உறவுகளான ரிஷபன் அண்ணா, வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் கோவை டு தில்லி ஆகியவர்களைச் சந்தித்தேன். சனி இரவு ரிஷபன் அண்ணாவின் இல்லத்தில் தங்கியதில் வயதில் மூத்தவராக இருந்தாலும் சுறுசுறுப்பில் இளையவராகவும், என் ரசனைக்கு ஒத்துச் செல்பவராகவும் இருந்த ரிஷபண்ணாவின் அப்பாவைச் சந்தித்த உரையாடியது மிக மகிழ்வானது. நான் தந்த ‘சரிதாயணம்’ புத்தகத்தில் சாம்பிளுக்கு ஒரு கதையை சுடச்சுட படித்துவிட்டு அவர் பாராட்டியது இன்னும் சந்தோஷம் தந்த விஷயம்.

உபசரித்து அசத்திய வை.கோ.!
மறுதினம் காலை வை.கோ. அவர்களை சந்திக்கச் சென்றோம் நானும் ரிஷபன் அண்ணாவும். வை.கோ. அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி அப்பா ஸாரும், தோழி மஞ்சுவும் நிறையச் சொல்லியிருந்ததால், முதல்நாளே சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸாகப் போகலாம் என்று ரிஷபண்ணாவிடம் சொல்லியிருந்தேன். அப்படிச் சென்றும்கூ;ட விதவிதமான ஸ்னாக்ஸ், குளிர்பானம் என்று தந்து உபசரித்து அசத்தினார் வை.கோ. கூடவே எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து (வெட்கத்தில் என்னை நெளிய வைத்து) என் மீது அவர் கொண்ட மதிப்பையும் அன்பையும் தெற்றென வெளிப்படுத்தினார். ‘‘மறுபடி ஒரு தடவை நிதானமா நிறைய நேரம் இருக்கற மாதிரி வாங்கோ’’ என்ற அவரின் அன்புக்கு நன்றி சொல்ல இன்னும் வார்த்தைகளை நான் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்.

வை.கோ. வீட்டிலிருந்து மலைக்கோட்டை தரிசனம்!
அன்று மாலை என் நண்பர் வெங்கட்டின் துணைவியார் ஆதி வெங்கட் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். புத்தகம் படிப்பதில் நிறைய ஆர்வம் கொண்ட ‌தோழி அவர் என்பது எனக்கு ரொம்ப்ப பிடித்த விஷயம். வெங்கட்டின் தாயாரையும், தந்தையாரையும் அறிமுகம் செய்வித்தார். வெங்கட்டின் அப்பாவும் சுறுசுறுப்பாகவும், பளிச்சென்று பேசி, அன்புடன் பழகுபவராகவும் இருந்தார். எனக்கு அவரை மிகப் பிடித்துப் ‌போனதில் வியப்பில்லை... அவருக்கு என்னைப் பிடித்துப் போனதுதான் வியப்பு! புறப்படுகையில், ‘‘அடுத்த தடவை வந்தா ஒரு நாள் என்கூட தங்கற மாதிரி வரணும்’’ என்று அன்பான உத்தரவாக என்னிடம் அவர் சொன்னது என் பாக்கியம்.

மொத்தத்தில் அங்கிருந்த வார இறுதி நாட்கள் முழுக்க மிக மகிழ்ச்சியுடன் கழிந்து எனக்குள் டன் கணக்கில் புத்துணர்வைத் தந்தது என்பதே நிஜம்! இரவு ரயிலில் வருகையில்தான் என்னுடன் அன்பாய்ப் பழகி உபசரித்த இவர்கள் யாவருக்கும் பதில் மரியாதை ஏதும் செய்யாமல் வந்துவிட்டேன் என்பது மனதுக்கு உறைத்தது. தலையில் கு்ட்டிக் கொண்டேன். அடுத்த முறை அவசியம் ஏதாவது செய்யத்தான் வேணும்!

செவ்வாய்க்கிழமையன்று தோழி மஞ்சுபாஷிணியின் தமிழக வருகையை முன்னிட்டு புலவர் ஐயாவின் வீட்டில் காலை 10 மணிக்கு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பன் கோவை ஆவி சென்னைக்கு வருவதாக திங்களன்று போன் செய்து சொன்னதும் கூடுதல் மகிழ்வானது எனக்கு. அவரையும் அழைத்துச் செல்வதெனத் தீர்மானித்தேன். சொன்னதும் ஆனந்தும் மகிழ்வுடன் சம்மதித்தார். செவ்வாய் ‌காலை நானும் ஆனந்தும் மயிலாப்பூருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு காலை ஒன்பதரைக்கு புலவர் ஐயா வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கையில் சசிகலா போன் செய்து, தான் வந்துவிட்டதாகச் ‌‌சொல்ல, எப்பவும் லேட்டாக வரும தென்றல் இன்று புயலாய் வந்து என்னை முந்தி விட்டதில் மயக்கம் வராத குறை எனக்கு.

இடமிருந்து: சீனு, கண்ணதாசன், கோவை ஆவி, சசி, சேட்டை, புலவர், மதுமதி, மஞ்சு, ரூபக்!
புலவர் ஐயாவின் வீட்டுக்கு அடித்துப் பிடித்‌துச் சென்றால், அங்கே சசியுடன், கண்ணதாசன் வந்திருக்க, மஞ்சுபாஷிணியை அழைத்து வந்திருந்தார் மதுமதி. பதிவர் சந்திப்பு என்றாலே மது இல்லாமல் இருக்காது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த ‘மது’ இல்லாமல் என்னைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு கிடையாது. எல்லாருக்கும் ‘ஹாய்’ ‘ஹாய்’ சொல்லிவிட்டு, ஆனந்தை அறிமுகப்படுத்திவிட்டு உடல்நலக் குறைவினால் ஓய்வில் இருக்கும் சேட்டைக்கார அண்ணாவை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு சூளைமேடு கிளம்பினேன்.

புறப்படுகையில் சமீபத்திய காதல் மன்னன் சீனு போன் செய்து புலவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சீனுவுடன் ரூபக் ராமும் பில்லியனில் உட்கார்ந்து செல்வதைப் பார்த்தபடியே கடந்து சென்று சேட்டையண்ணாவின் வீட்டை அடைந்து அவரை புலவர் வீட்டுக்குக் கடத்தி வந்தேன். சேட்டை மீன்ஸ் கலகலப்பு! அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தமும், உற்சாக ஒலிகளும் இருந்து கொண்டே இருக்கும். அன்றும் அப்படியே! கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் பையன் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு ‘பரோலில்’ வர, அரட்டைக் கச்சேரி களை கட்டியது.

நிற்பவர்கள்: சசி, கண்ணதாசன், அடியேன், ஸ்கூல் பையன், மதுமதி. அமர்‌ந்திருப்பவர்கள்: சேட்டைய்ண்ணா, புலவர், மஞ்சு. கீழே: ரூபக் ராம், சீனு, கோவை ஆவி (எ) ஆனந்த்.
மஞ்சுபாஷிணியின் எழுத்திலும் பின்னூட்டத்திலும் நீங்கள் பார்க்கும் வாஞ்சையும், கனிவும் நேரில் சந்திக்கையில் அதிகமாகவே உணர்வீர்கள். மதிய உணவு நேரத்திற்குப் பின் சீனுவும், ரூபக்கும், ஸ்கூல் பையனும் கிளம்பி விட்டனர். முதல்நாள் நைட் டூட்டி பார்த்துவிட்டு தூககத்தைத் துறந்து நண்பர்களைச் சந்திக்க உற்சாகமாய் வந்திருந்த ரூபக்குக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு! அப்புறமென்ன... மஞ்சு, என் தங்கை ஸாதிகாவைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல, ஸாதிகாவின் வீட்டிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றேன். சசிக்கு பையன்கள் பள்ளிவிட்டு வரும் நேரமாகி விட்டதால் ஸாதிகாவுக்கு ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு ‌கிளம்பிட்டாங்க.

நாங்கள் அனைவரும் ஸாதிகாவின் உபசரிப்பிலும் அன்பிலும் நனைந்தோம். மஞ்சுவை நான், மது, கண்ணதாசன், ஆனந்த் நால்வருமாக உடன் சென்று அண்ணா நகரில் அவங்க தங்கை வீட்டில விட்டுட்டு திரும்புகையில் மணி மாலை ஆறரையைத் தாண்டிவிட்டிருந்தது. மஞ்சு திருநள்ளாறு உட்பட சில இடங்களுக்கு விசிட் அடிச்சுட்டு, பெங்களூரு போவதாகவும் அங்குள்ள நட்புகளை போனில் பேசி அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாங்க. பெங்களூரு ஃப்ரெண்ட்ஸ்...! ப்ளீஸ் நோட் திஸ்!

ஆக மொத்தத்தில் மூன்று முழு தினங்கள் கணிப்பொறியை அண்டாமல், நண்பர்களுடன் உற்சாகமாகப் பழகி, மனம்விட்டுச் சிரித்து மகிழ்ந்ததில் எனக்கு பத்து வயது குறைந்துவிட்ட ஃபீலிங்!  இந்த ரெமோவுக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சுட்டதால நண்பர்கள் எழுதற காதல் கடிதங்களைப் படிக்கறதுக்கு இப்ப இன்னும் ஜாலியா, சுறுசுறுப்பா தயாராயிட்டாராக்கும்...! ஹி... ஹி...!

Sunday, June 16, 2013

ஒரு அவசர அறிவிப்பு

Posted by பால கணேஷ் Sunday, June 16, 2013
னைவருக்கும வணக்கம்...

கம்ப்யூட்டரைத் துறந்து, தொலைபேசியை சற்று மறந்து இரண்டு நாட்கள் ஊர்சுற்றி வரலாம் என்ற உத்தேசத்துடன் திருச்சி வந்து அதிலும் ஸ்ரீரங்கத்தில் சிவபெருமானின் வாகனத்தைப் பெயராகக் கொண்டவரின் இல்லத்தில் இருந்த என்னை காலை தொலைபேசியில் பேசி மீண்டும் வலைப்பக்கம் இழுத்துவந்து சிக்க வைத்து விட்டார் தோழி மஞ்சுபாஷிணி. புலவர் ஐயாவின் வலை இணைப்பில் பழுது. மதுமதியோ ஊரில் இல்லை. கண்ணதாசனும் தொடர்பெல்லைக்கு வெளியே... எனவே இரண்டு தகவல்களைச் சொல்லி. இவற்றை நீங்கள் வலையிலும் முகப்புத்தகத்திலும் பகிருங்களேன் என்றார்.

1) இன்று தந்தையர் தினம். மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும், பல சமயங்களில் குட்டும் வாங்கி. அத்துடன் குடும்ப பாரத்தையும் சுமந்து. குழந்தைகளுக்காகக் கவலைப்பட்டுப் பொருளீட்டும் தந்தையர்களை இன்று வாழ்த்தி அவர்களுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் அளிப்போமாக...

2) 18ம் தேதி... அதாவது வருகிற செவ்வாய்க்கிழமையன்று காலை குவைத் நகரத்தைக் கலக்கிய புயல்... பெட்ரோலை பேரல் பேரலாக அங்கேயே விட்டுவிட்டு தனக்குள் எனர்ஜி பெட்ரோலை நிரப்பி வந்திருக்கும் எரிமலை... திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் சென்னை விஜயத்தை முன்னிட்டு ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. துவங்கும் நேரம்.... காலை பத்து மணியிலிருந்து....  முடியும் நேரம்.... பதிவர்கள் சந்திப்புக்கு முடியற நேரம் சொல்றது சாத்தியமேயில்ல... எல்லாருக்கும டைம் இருக்கற வரை நீளும். மாலை வரை கூட தொடரலாம்.

ரைட்டு... காலைல வந்துடறோம், எங்கன்னு கேக்கறவங்களுக்காக... வரவேண்டிய இடம் நம்ம புலவர் ச.இராமானுசம் ஐயா அவர்களின் இல்லம். முகவரி... பழைய எண்.178.1, புது எண்.14.1, ரங்கராஜபுரம் மெயின் ரோடு, கோடம்பாக்கம். சென்னை 24. புறப்பட்டு வந்து கலந்துக்க விருப்பம் உள்ள நண்பர்கள் 90030 36166 என்ற எண்ணில் பாலகணேஷையோ, 90947 66822 என்ற எண்ணில் புலவர் ஐயாவையோ, 96001 66699 என்ற எண்ணில் கவியாழி கண்ணதாசனையோ, 98941 24021 என்ற எண்ணில் மதுமதியையோ, 95512 53993 என்ற எண்ணில் மஞ்சுபாஷிணியையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிச்சா மகிழ்ச்சின்னு மஞ்சு சொல்லச் சொன்னாங்க. மத்தபடி இவங்க யாரோட போன் நம்பரும் எனக்குத் தெரியாதுப்பா....

நா இங்க திருச்சியில் வசிக்கும் பதிவுலக நண்பர்களை (இதப் படிச்சுட்டு என் வருகையப் புரிஞ்சுட்டு தப்பி ஓடறதுக்கு முன்னால) போய் பார்த்துட்டு நாளைக்கு வந்துடறேன். நாளை மறுதினம் இந்த நிகழ்வை அனைவரும் வந்து கலந்து கொண்டு அசத்துங்கன்னு ரெக்வெஸ்ட் விட்டுக்கறேன். வர்ட்டா... ஸீயூ.

Monday, June 3, 2013

பதிவர் சந்திப்பு தேவைதானா?

Posted by பால கணேஷ் Monday, June 03, 2013
னிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்தபோது சீனுவிடமிருந்து போன். ‘‘வாத்யாரே... ‘சினிமா சினிமா’ தளத்துல எழுதற ஹாலிவுட் ராஜ் சென்னைக்கு வந்திருக்காரு. ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். ‘‘ரைட்டு. சந்திக்கலாம். எப்போ, எங்கேன்னு சொல்லு’’ன்னு கேட்டேன். ‘‘புலவர் ஐயா வீட்ல வெச்சு சந்திக்கலாம்னு சிவா சொல்றாரு. நீங்க புலவர் ஐயாகிட்ட கேட்டுட்டு ஓகேயான்னு சொன்னா,சங்கத்து ஆட்கள் எல்லாரையும் வரச் சொல்லிடறேன்’’ என்றார் சீனு. புலவர் ஐயாவுக்கு போன் செய்து கேட்டால், ‘‘இதுக்கெல்லாம் கேக்கணுமா என்ன? சந்தோஷமா சந்திக்கலாம். ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் நான் வாங்கி ‌வைக்கட்டுமா?’’ என்றார். நோ... நோ...! கற்பனையைக் கண்டபடி பறக்கவிடக் கூடாது. ட்ரிங்ஸ் மீன்ஸ்... பேன்டா, ஸ்நாக்ஸ் மீன்ஸ் சமோசா அண்ட் பிஸ்கட்ஸ்! மீ ரொம்ம்ப்ப நல்லவன்! ஹி... ஹி...!

மற்றவர்களை ஒருங்கிணைத்து வரச்செய்யும் பொறுப்பை சீனுவின் தலையில் (கதறக் கதற) கட்டிவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கினேன். மதியம் சிவாவை பிக்கப் செய்து கொண்டு புலவர் ஐயா வீட்டுக்குச் சென்றோம். சற்று நேரத்தில் இந்த எதிர்பாராத சந்திப்பின் கதாநாயகன் ஹாலிவுட் ராஜ் வந்து சேர்ந்தார். அவருக்கு மிகச்சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும், புதிய ஜீவனை வரவேற்க யு.எஸ்.ஸிலிருந்து பறந்து வந்திருப்பதாகவும் நல்ல செய்தி சொன்னார். பையனுக்கு வியாஸ் என்று (அழகான) பெயர் வைத்திருக்கிறாராம். அவரை வாழ்த்தினோம். 

கொஞ்ச நேரத்துல சீனுவும், ஸ்கூல் பையனும் சேர்ந்து வந்து ‘உள்ளேன் ஐயா’ன்னாங்க. ஸ்கூல்பையன் கேக்கும், சாக்லெட்டும் சாப்ட்டுட்டுதான் வருவேன்னு அடம் பிடிச்சதால கொஞ்சம் லேட்டா வந்ததா அடங்கொண்டு.... ஸாரி, திடங்கொண்டு சீனு சொன்னார். அடுத்ததா வந்து சேர்ந்தார் கவிஞர் மதுமதி. அவரைத் தொடர்ந்து கலகலப்பு தளபதி பட்டிக்ஸ்! பின்னாலேயே அரசன். என்ன வினோதம் பாருங்க... சங்க காலத்துல அரசர்கள்தான் புலவர்களுக்கு இடம் தருவாங்க. இப்ப புலவர் அரசன் உட்பட எங்களுக்கு இடம் தர்றாரு. ஹா...  ஹா...!

இத்த‌னை பேர் இருந்தும் சபை நிறைய‌லையேன்னு மனசுல ஒரு எண்ணம் ஒடினதைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆரூர் மூனா செந்தில் வந்து சபையை நிறைச்சுட்டாரு. அப்பத்தான் எனக்கு நம்ம தல செ.பி. கிட்டருந்து போன் வந்துச்சு. ஒரு ஆட்டோக்காரரை நம்பி ஏறிட்டதாவும், அவன் தன்னை எங்கயோ நார்த் உஸ்மான் ரோடு தாண்டி கடத்திட்டுப் போகப் பாக்குறான்னும் சொன்னாரு. அடையாறு அஜீதன்னா சும்மாவா...? போன்லயே அவருக்கு புலவர் வீட்டுக்கு வர வழி சொல்லிட்டு, எதிர்கொண்டு அழைத்துவர வேண்டியதாயிடுச்சு.

எல்லாரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்‌சு சபை கலகலப்பா நடந்துட்டிருந்தது. பதிவுலக விஷயங்கள்லருந்து சினிமா உலக விஷயம் பேசி, எழுத்தாளர்கள் தலைகள் உருட்டப்பட்டு சுவாரஸ்யமா போயிட்டிருந்தது ஜீன்ஸ், டீஷர்ட் போட்ட நவீன நாரதரான நம்ம பட்டிக்ஸ் கண்ணை அது உறுத்திடுச்சு போலருக்கு. டபார்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு.‘‘போன வருஷம் ஆகஸ்ட்டுல நாம பதிவர் சந்திப்பு நடத்தினோம். இந்த வருஷம் நடத்தறதுக்கு இப்ப இருந்தே கலந்து பேசி ஏற்பாட்டைப் பண்ணினாத்தான் சரியா வரும்.’’ என்றார். ‘‘அவசரப்படாத பட்டிக்ஸ்’’ன்னு நான் மறுக்க நினைக்கறதுக்குள்ள உறுப்பினர்கள் ஆர்வமா பண்ணலாமேன்னு பேச ஆரம்பிச்சதும் என் திருவாயை மூடிக்கிட்டேன். அடுத்த வாரம் இதைப் பத்தி மீட்டிங் வெச்சுக்கலாம்னு பட்டிக்ஸ் சொன்னாரு. அப்புறமென்ன... வழக்கம்‌போல நம்ம எக்ஸ்‌பிரஸ் செ.பி. வீட்டுக்குப் போனதுமே சுடச்சுட தன் தளத்துல ஒரு பதிவு முன்னோட்டமா போட்டுட்டாரு.ஆரூர் மூனா செந்தில் ஆர்வக்கோளாறுல போட்டோஷாப் டிசைன் ஒண்ணைப் பண்ணி முகநூல்ல போட, அதை அரசனும், ஸ்கூல்பையனும் ஷேர் பண்ண... இன்னிக்கு நம்ம சீனு வேற இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்.

ஆனா... எனக்கென்னமோ இந்த வருஷம் பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடந்தறதுல முழுச் சம்மதமில்ல. சென்ற முறை நடத்தினதே ஒரு கல்யாணத்தை நடத்தின மாதிரி ஃபீலிங். கல்யாணத்துக்கு வந்தவங்களை என்னதான் வுயுந்து வுயுந்து கவனிச்சுக்கிட்டாலும் ஒன்றிரண்டு பேருககு சின்னக் குறைகள் இருக்கத்தான் செஞ்சுது. கல்யாணத்துக்கு எனக்கு இன்விடேஷன் அனுப்பலையேன்னும் சிலர் குறைபட்டுக்கிட்டாங்க. தவிர ‘பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடத்தறதால ‌பத்து பைசாவுக்கு பிரயோஜனமுண்டா’ன்னு ஒரு கேள்வியும் வந்துச்சு. இதெல்லாம் சென்றமுறை நடத்தியதில் ஏற்பட்ட நெருடல்கள். 

ஆரூரார் டைரியில்ல!. அவருக்கேத்த பெரிய போன்!
இந்த ஆண்டில் பதிவுலகில் ஏனோ முன்பிருந்த உற்சாகம் குறைந்திருப்பதாக என் உள்ளுணர்வு சொல்கிறது. தவிரவும் நிறையப் பதிவர்கள் இணையதளத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு முகநூலில் மற்றும் ட்விட்டரில் உலாவச் சென்று விட்டார்கள். ஆகவே சென்ற முறை வந்த அளவுக்கு அணிதிரண்டு நம்மவர்கள் வருகை இருக்குமா என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. இன்னொரு முறை இப்படியான உறுத்தல்களைத் தாண்டி ஏன் நடத்த வேண்டும் என்று ஒரு கேள்வியும் அயர்ச்சியும் கூடவே இருக்கிறது ஆனாலும் பட்டிக்ஸ் போட்ட ஒரு விதைக்கு நண்பர்கள் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி விட்டார்கள். அது வளர்ந்து செடியாக, மரமாக வேண்டுமா? இல்லை இப்படியே அதை நிறுத்தி விடலாமா? என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டும் ஒரு பதிவர் திருவிழாவை நடத்தலாமா? நடத்தலாம் எனில் என்ன விதமாய் உருப்படியாய், யாருக்கும் குறைவராத விதமாய் எப்படி அதைச் செய்யலாம்? இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் கருத்துக்களை உரைத்து ஒரு தெளிவும் உற்சாகமும் (எனக்கு) கிடைக்க உதவுங்கள்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube