ஆனந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே தவிர, எஃபக்ட் ஒண்ணும் தெரியல" என்றேன். ‘‘இந்த முறை அப்படி இல்லிங்க. கண்ணாடியோட பாத்தீங்கன்னா... விளம்பரத்துல சொல்லியிருக்கற மாதிரி அள்ளும்" என்றார். விகடன் வெளியாகி 3டி படங்களை நான் ரசித்த பினனொரு நாளில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘‘இப்ப என்ன நினைக்கறீங்க?’’ என்றார். நான் நினைத்ததைச் சொன்னவுடன், ‘‘பாதகா...!" என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். நான் சொன்னது என்னவாக இருககும்? யூகியுங்க...
==================================
‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.
==================================
‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.
ஆஸர்கானா நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்க, ஸ்.பை. வந்தார். ‘அம்மா மினி பஸ்'ஸில் சவாரி செய்தே ஆகவேண்டுமென்று பலப்பம் சாப்பிடாத குழந்தையாக சிவா அடம்பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து ஐநது நிமிஷ மினி ட்ரிப் அடித்தோம். மதுரையிலும் கரூரிலும் நான் மினி பஸ் சவாரி செய்ததுண்டு. கசகசவென்று கூட்டம் நிரம்பி வழிய, கன்னாபின்னாவென்று ஏதோ பாட்டைக் கத்தவிட்டுக் கொண்டு, நல்ல அனுபவமாக ஒருநாளும் இருந்திராதது மினி பஸ். சென்னையில் கூட்டமில்லாமல் புதிய பஸ்ஸில் சென்றது வித்தியாசமான நல்ல அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாட்கள் போனால்தான் இந்த பஸ்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன, எப்படி ஓடுகின்றன என்பதை முழுதாக மதிப்பிட முடியும். பார்க்கலாம். வேளச்சேரியில் குருநானக் கல்லூரி தாண்டி சிறிது தூரம் வந்ததும் சிவா குறிப்பிட்ட ‘கோலி’ என்ற பெயர் கொண்ட வடாபாவ் கடை இருந்தது. பனீர் வடாபாவ், சீஸ ஃபிங்கர் வடாபாவ் என்று இரண்டு வெரைட்டி ருசி பார்த்தேன். சிவா இதைப் பற்றி விரிவாக எழுத இருப்பதாக என்னிடம் சொன்னதால் என் ஒருவரி விமர்சனம்: செம்ம டேஸ்ட்! அதன்பின் மூவருமாக ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று ஒரு ரவுண்டு வந்தோம். ஒரு காஃபிக்கு 130 ரூபாயும், கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் கவனித்தது தனியொரு சந்தோஷம். இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!
==================================
‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!
==================================
‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!
தீபாவளி மலர்களின் வழக்கம் போல் ஸ்வாமி படங்களுடன் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களும் தந்திருப்பது ரசனை! பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் கதைகளைத் தவிர்த்து, கட்டுரைகளாக வாங்கி வெளியிட்டிருப்பதும் மிக ரசிக்க வைத்தது. சினிமா பற்றி தரப்பட்டிருக்கும் தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும், வாத்தியார் சுஜாதாவின் டாப் சிறுகதையான ‘நகரம்’ வெளியாகியிருப்பதும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆக மொத்தத்தில்... கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு தீபாவளி மலர்!
==================================
நல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!
==================================
==================================
நல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!
==================================
நேற்று ‘கிருஷ்ண லீலை' என்ற படம் சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது (பின் பகுதிதான்). குசேலர் கதாபாத்திரத்தை நாகேஷ் செய்திருந்த விதம்...! அரண்மனையில் அலட்சியப்படுத்தும் சேவகர்களின் முன் கிருஷ்ணனே வாசலுககு வந்து அழைத்ததும் காட்டுகிற பந்தா... சேடிகள் கண்ணன் நடக்கும் பாதையில் மலர் இறைக்க, நாகேஷ் மேல் அது பட, அவர் நாணி துள்ளிக் குதிக்கும் அழகு... ஆளுயர மாலையை கண்ணன் போட்டதும் கழுத்து வளைந்து கும்பிடுவதும், ‘‘எத்தனை நேரம் கும்பிடுவாய் குசேலா?’ என கண்ணன் கேட்க, ‘‘கும்பிடலை கண்ணா... நீ போட்ட மாலை நிமிர விடவில்லை’ என்று பன்ச் அடிப்பதும்... கண்ணனின் அன்பில் நனைந்து தனக்கென எதுவம் கேட்காமல் அரண்மனையை விட்டு வெளியே வந்து புலம்புவதும்... எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபாமன்ஸ்! பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு மட்டும் பலர் நடித்திருந்த குசேலர் வேஷத்தை இப்படியொரு காமெடி + சென்டிமென்ட்டுடன் பண்ண நாகேஷால்தான் முடியும். What a legend!
==================================
அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"
==================================
அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"