முன்குறிப்பு : இந்தப் பதிவின் நடுவில் பெண்கள் படிக்கக் கூடாத ஒரு ஜோக்கை வெளியிட்டிருக்கிறேன். தங்கைகள், அக்காக்கள், தோழிகள் எல்லாருக்கும் அதைப் படித்தால் கோபம் வரும் என்பதால் தாண்டிச் சென்றுவிடும்படி வேண்டுகிறேன்.
================================================
ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? யோசியுங்கள்... பிறகு சொல்கிறேன்.
================================================
சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒருசில தெருக்களுக்கு மட்டும் ஒரு தனிப் பெயர் உண்டு. கேட்டால் குபீர் என்று சிரிக்கத் தோன்றும். அப்பகுதியின் பெயர் கொலைகாரன்பேட்டை! நான் பார்த்த வரையில் அந்தப் பகுதியில் கொலை காரர்கள் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை; சாதாரண ஜனங்கள்தான் இருக்கிறார்கள். எதனால் இப்படி ஒரு வினோதப் பெயர் வந்திருக்கக் கூடும்..? பல இடங்களுக்கு எதனால் இப்படிப் பெயர் வந்தது? எப்படி மருவியது என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. இல்லையா...!
==============================================
லண்டனில் வெஸ்ட் எண்ட் தியேட்டரில் நிர்வாணக் காட்சிகள் நிறைந்த ‘ஓ கல்கட்டா!’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடக நிர்வாகிகளுக்குப் புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. நாடகக் கொட்டகையில் சரியான முறையில் கதகதப்பு ஏற்படுத்தும் சாதனம் நிறுவ்பப்டாவிடில், நடிகர்கள் அத்தனை பேரும் உடையணிந்து மேடை மீது தோன்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்!
================================================
ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? யோசியுங்கள்... பிறகு சொல்கிறேன்.
================================================
சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒருசில தெருக்களுக்கு மட்டும் ஒரு தனிப் பெயர் உண்டு. கேட்டால் குபீர் என்று சிரிக்கத் தோன்றும். அப்பகுதியின் பெயர் கொலைகாரன்பேட்டை! நான் பார்த்த வரையில் அந்தப் பகுதியில் கொலை காரர்கள் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை; சாதாரண ஜனங்கள்தான் இருக்கிறார்கள். எதனால் இப்படி ஒரு வினோதப் பெயர் வந்திருக்கக் கூடும்..? பல இடங்களுக்கு எதனால் இப்படிப் பெயர் வந்தது? எப்படி மருவியது என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. இல்லையா...!
==============================================
லண்டனில் வெஸ்ட் எண்ட் தியேட்டரில் நிர்வாணக் காட்சிகள் நிறைந்த ‘ஓ கல்கட்டா!’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடக நிர்வாகிகளுக்குப் புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. நாடகக் கொட்டகையில் சரியான முறையில் கதகதப்பு ஏற்படுத்தும் சாதனம் நிறுவ்பப்டாவிடில், நடிகர்கள் அத்தனை பேரும் உடையணிந்து மேடை மீது தோன்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்!
-25.12.1970 தினமணிகதிரில் வெளிவந்த துணுக்கு!
================================================
இது விளமபர நேரம். 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு விளம்பரம் இது:
================================================
இப்போது ‘பெண்கள் படிக்கக் கூடாத’ அந்த ஜோக்:
டாக்டர் தன் முன்னால் வந்து அமர்ந்த அந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘சொல்லுப்பா... என்ன உன்னோட பிரச்சனை?’’
இளைஞன் சொன்னான்: ‘‘டாக்டர்! எனக்கு நூறு வயசு வரைக்கும் வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க...’’
டாக்டரின் பதில்: ‘‘உடனே கல்யாணம் பண்ணிக்கோ...’’
இளைஞன் முகம் மலர்ந்தவனாய், ‘‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நூறு வயசு வரைக்கும் வாழலாமா டாக்டர்?’’ என்று கேட்க, டாக்டர் சிரிப்புடன் பதிலிறுத்தார், ‘‘இல்லை! இந்த மாதிரி நூறு வயசு வரைக்கும் வாழணுங்கற அபத்தமான ஆசை எல்லாம் வராது!’’ என்று.
‘பெண்கள் படிக்கக் கூடாத ஜோக்’ என்றதும் நான் ஏதோ 18+ ஜோக்கைப் போட்டிருப்பேன் என்று நினைத்து வேகமாகத் தாண்டி வந்தவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்! ஹி... ஹி...
==================================================
சுஜாதா! பன்முக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான இவரது படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு பிரமிப்பு எழும். தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய ‘நில் கவனி தாக்கு’ தொடர்கதைக்கு அதன் ஆறாவது வாரத்தில் இப்படி முன்கதைச் சுருக்கம் கொடுத்திருக்கிறார்:
இதுவரை : இந்த முன்கதை உங்களுக்குப் புரியாது. பேசாமல் சென்ற ஐந்து இதழ்களைப் படித்து விடுங்கள்! நான் தாக்கப்பட்டேன். முதலில் அந்தப் பெண்ணின் கண்களால். பின்பு சில பெயர் தெரியாத ரெளடிகளால். ஒரு விஞ்ஞானியை இழந்தேன். நடேசன் என்னைத் திட்டாமல் விடுவாரா? டெலிபோன் கால் ஒன்றில் ஐம்பது லட்சம் கேட்டார்கள். ‘கால்’ எங்கிருந்து வந்தது என்ற கண்டுபிடித்து அங்கே சென்றால், இந்த வெரோனிக்கா... சே சே, நான் பார்க்கவே இல்லையே! கடமையே கண்ணாக இருந்தேன்.
-எப்பூடி! ரத்தினச் சுருக்கம் என்பதற்கும் மேலாக பிளாட்டினச் சுருக்கமாக இப்படி முன்கதையைத் தர இந்த ஜாம்பவானால் மட்டும்தான் முடியும்! இதே நாவலில் ஒரு காபரே நடனம் நடப்பதை கதாநாயகன் பார்க்கிறான். அதை இப்படி விவரிக்கிறார்:
‘தம்’ என்று ஏதோ அதிர்ந்தது. ‘‘பத்து’’ என்று வழுக்கையின் குரல் ஒலித்தது. வெரோனிக்கா தன் இடது கை வளையல்களைக் கழற்றி விசிறி எறிந்தாள். மீண்டும் லயம். மீண்டும் சுழற்சி. மீண்டும் சிரிப்பு. மீண்டும் ‘தம்’. ‘‘ஒன்பது’’ என்றான் வழுக்கை. வெரோனிக்கா தன் முத்து மாலையைக் கழற்றினாள். மீண்டும் சுழற்சி. மீண்டும் ‘தம்’. ‘‘எட்டு’’ காது வளையங்கள் கழன்றன... ‘தம்’. ‘‘ஏழு’’ கார்டிகனின் ZZZப்! ‘‘ஆறு!’’ ஸ்கர்ட் உதிர்ந்தது. அவள் காஃபி நிற உடல் நீச்சல் உடையில் பளபளத்தது.
‘‘ஐந்து’’
இரண்டு நட்சத்திரங்கள், பூ
‘‘நான்கு’’
ஒரு பூ
ரு பூ
பூ
ப
ட
|
-இப்படி வார்த்தைகளிலேயே படம் பிடித்துக் காட்டும் வித்தை... No chance except One and only Sujatha!
==================================================
புதிரின் விடை மிகவும் ஸிம்பிளானது. ஒரு அறையில் கதவு மூடப்பட்டிருக்க, கதவிடுக்கில் நியூஸ் பேப்பர் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையில் ராஜுவும் அந்த முனையில் லதாவும் இருந்தாலும் கதவு மூடியிருப்பதால் ஒருவரை ஒருவர் தொட இயலவில்லை. அவ்ளவ் தாங்க... ஹி... ஹி...
==================================================
இப்போது... To end with a smile, 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு ஜோக்!
இப்போது ‘பெண்கள் படிக்கக் கூடாத’ அந்த ஜோக்:
டாக்டர் தன் முன்னால் வந்து அமர்ந்த அந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘சொல்லுப்பா... என்ன உன்னோட பிரச்சனை?’’
இளைஞன் சொன்னான்: ‘‘டாக்டர்! எனக்கு நூறு வயசு வரைக்கும் வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க...’’
டாக்டரின் பதில்: ‘‘உடனே கல்யாணம் பண்ணிக்கோ...’’
இளைஞன் முகம் மலர்ந்தவனாய், ‘‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நூறு வயசு வரைக்கும் வாழலாமா டாக்டர்?’’ என்று கேட்க, டாக்டர் சிரிப்புடன் பதிலிறுத்தார், ‘‘இல்லை! இந்த மாதிரி நூறு வயசு வரைக்கும் வாழணுங்கற அபத்தமான ஆசை எல்லாம் வராது!’’ என்று.
‘பெண்கள் படிக்கக் கூடாத ஜோக்’ என்றதும் நான் ஏதோ 18+ ஜோக்கைப் போட்டிருப்பேன் என்று நினைத்து வேகமாகத் தாண்டி வந்தவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்! ஹி... ஹி...
==================================================
சுஜாதா! பன்முக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான இவரது படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு பிரமிப்பு எழும். தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய ‘நில் கவனி தாக்கு’ தொடர்கதைக்கு அதன் ஆறாவது வாரத்தில் இப்படி முன்கதைச் சுருக்கம் கொடுத்திருக்கிறார்:
இதுவரை : இந்த முன்கதை உங்களுக்குப் புரியாது. பேசாமல் சென்ற ஐந்து இதழ்களைப் படித்து விடுங்கள்! நான் தாக்கப்பட்டேன். முதலில் அந்தப் பெண்ணின் கண்களால். பின்பு சில பெயர் தெரியாத ரெளடிகளால். ஒரு விஞ்ஞானியை இழந்தேன். நடேசன் என்னைத் திட்டாமல் விடுவாரா? டெலிபோன் கால் ஒன்றில் ஐம்பது லட்சம் கேட்டார்கள். ‘கால்’ எங்கிருந்து வந்தது என்ற கண்டுபிடித்து அங்கே சென்றால், இந்த வெரோனிக்கா... சே சே, நான் பார்க்கவே இல்லையே! கடமையே கண்ணாக இருந்தேன்.
-எப்பூடி! ரத்தினச் சுருக்கம் என்பதற்கும் மேலாக பிளாட்டினச் சுருக்கமாக இப்படி முன்கதையைத் தர இந்த ஜாம்பவானால் மட்டும்தான் முடியும்! இதே நாவலில் ஒரு காபரே நடனம் நடப்பதை கதாநாயகன் பார்க்கிறான். அதை இப்படி விவரிக்கிறார்:
‘தம்’ என்று ஏதோ அதிர்ந்தது. ‘‘பத்து’’ என்று வழுக்கையின் குரல் ஒலித்தது. வெரோனிக்கா தன் இடது கை வளையல்களைக் கழற்றி விசிறி எறிந்தாள். மீண்டும் லயம். மீண்டும் சுழற்சி. மீண்டும் சிரிப்பு. மீண்டும் ‘தம்’. ‘‘ஒன்பது’’ என்றான் வழுக்கை. வெரோனிக்கா தன் முத்து மாலையைக் கழற்றினாள். மீண்டும் சுழற்சி. மீண்டும் ‘தம்’. ‘‘எட்டு’’ காது வளையங்கள் கழன்றன... ‘தம்’. ‘‘ஏழு’’ கார்டிகனின் ZZZப்! ‘‘ஆறு!’’ ஸ்கர்ட் உதிர்ந்தது. அவள் காஃபி நிற உடல் நீச்சல் உடையில் பளபளத்தது.
‘‘ஐந்து’’
இரண்டு நட்சத்திரங்கள், பூ
‘‘நான்கு’’
ஒரு பூ
ரு பூ
பூ
ப
ட
|
-இப்படி வார்த்தைகளிலேயே படம் பிடித்துக் காட்டும் வித்தை... No chance except One and only Sujatha!
==================================================
புதிரின் விடை மிகவும் ஸிம்பிளானது. ஒரு அறையில் கதவு மூடப்பட்டிருக்க, கதவிடுக்கில் நியூஸ் பேப்பர் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையில் ராஜுவும் அந்த முனையில் லதாவும் இருந்தாலும் கதவு மூடியிருப்பதால் ஒருவரை ஒருவர் தொட இயலவில்லை. அவ்ளவ் தாங்க... ஹி... ஹி...
==================================================
இப்போது... To end with a smile, 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு ஜோக்!
==================================================
-சுஜாதா 1970லிருந்து 1976 வரையிலான காலகட்டத்தில் தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய தொடர்களை பைண்ட் செய்து வைத்திருந்ததை புரட்டிக் கொண்டிருந்ததில் இத்தனை மேட்டர்களும் தேறின. நல்லாருக்கா..?