அது தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி
இவனையும் துணைக்குப் போகச் சொன்னாங்க.
கடைக்குச் சென்றதும் கிளிப் பிள்ளை மாதிரி பெரியம்மா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள் தங்கை. கடைக்காரர் பொட்டலம் கட்டிக் கொடுத்ததும், இவன் கையிலிருந்த சில்லறையைக் கொடுத்துவிட்டு, ‘‘வாடி, போகலாம்...!" என்றான் தங்கையிடம். அவள் நகராமலே நின்றாள், ‘‘அண்ணா! கடைக்காரன் ஏமாத்தப் பாக்குறான்... என்னன்னு கேளுங்க..." என்றாள். ‘‘என்ன ஏமாத்திட்டாரு...? எதைக் கேக்கணும் நானு?" என்று முழித்தான் இவன். அவள் சொன்னாள்: ‘‘ஐயோ அண்ணா...! பெரியம்மா நூறு தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இவன் மூணுதான் குடுத்திருக்கான். இப்படித்தான் ஏமாளியா எப்பவும் வாங்கிட்டுப் போவியா?" தங்கையின் புத்திசாலித்தனத்(?)தின் முன் அன்று ‘ஙே' ஆகி நின்றான் இவன்.
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
அன்றொரு நாள் என் வீட்டிலிருந்து மத்யகைலாஷ் வரை பேருந்துப் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தின் பின்வாசலில் ஏறிய எனக்குப் பின்னிருந்து ஏழெட்டு பேர் நெருக்க, கதவின் அருகிலிருந்து உள்ளே போகலாம் என்றால் முடியவில்லை. முன்னால் நின்றிருந்த ஒரவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர் மாதிரி முதுகின் பின்னால் தொங்கவிட்ட பெரிய கறுப்புப் பையின் வார் தோள்பட்டையைச் சுற்றிவர, இரண்டு பேர் நிற்கும் இடத்தை ஆககிரமித்துக் கொண்டிருந்தார். அவரை நசுககிக் கொசண்டு போகலாம் என்றாலோ, அவருக்கு முன் நின்றிருந்த பெண்ணின் உடலின் மேல் நன்ன்ன்றாக உரச வேண்டியிருக்கும், வெறுப்புப் பார்வை அல்லது கோப வசவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ‘‘ஸார்... நீங்க எங்க இறங்கப் போறீங்க?" என்றேன் மெதுவாக. ‘‘கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்" என்றார் அவர். ‘‘இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கே... உங்க தோள்ல இருக்கற பேகைக கழட்டி காலடியில வெச்சா, நான் முன்னால போக முடியும்" என்றேன்.
அவர் முன்புறம் நின்றிருந்த ஒருத்தரைக் கை காட்டி, ‘‘அவர் இதே மாதிரி தோள்ல பேக் மாட்டிட்டுதான் இருக்கார். அவரைக் கேட்டீங்களா? நான்தான் கிடைச்சனா?" என்றார். முட்டாளோடு முரண்பட்டுப் பயனில்லை என, அவனை நசுக்கி முன்னேறி விட்டேன். (நல்லவேளை... அந்தப் பெண் வசவவில்லை... ஹி... ஹி...!) எனக்குப் பின்வந்த நான்கைந்து பேரும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய... அதன்பின் பேகைக் கழற்றி காலடியில் வைத்தார் அந்த நபர். தான் செய்யும் குற்றத்தை ஒருவன் சுட்டிக் காட்டினால், ‘அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல' என்று தன் தப்பை நியாயப்படுத்துவது என்ன நியாயம் எனபதுதான் புரியவில்லை. அவன் கொலையே பண்றான், நான் கையைத் தானே வெட்டறேன் என்று சொல்வது என்ன லாஜிக்? என்னத்தச் சொல்ல...? இப்படியே பழகிட்டாய்ங்கப்பூ...!
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
இனி சில தகவல்கள்:
1) நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த ‘நாலு வரி நோட்டு’ புத்தகங்களை இங்கு க்ளிக் செய்து இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது (0)99001 60925 என்ற எண்ணுக்குத் தொலைபேசி உங்கள் முகவரியைக் கூறி பெற்றுக் கொள்ளலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் கூரியர் செலவும் இலவசம் என்றும், சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவு மட்டும் இலவசம் என்றும் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
2) ஐ பேட் வைத்திருக்கிறீர்களா நீங்கள்? ‘கல்கி' வார இதழின் வாசகரா நீங்கள்? எனில் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. இந்தச் சுட்டியில் க்ளிக் செய்தால் ஐபேடில் படிப்பதற்கு வசதியாக - இலவச பயன்பாடாக - கல்கி வார இதழ் கிடைக்கிறது. படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு ஒரு சல்யூட்!
3) படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம் ஒன்றை நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து துவங்கியிருக்கிறோம். அதில் முதல் பதிவை இன்று வெளியிட்டுள்ளோம். தளத்தின் பெயர் - வாசகர் கூடம்! பிடிச்சிருக்கா? அங்கும் உங்களின் ஆதரவைத் தந்து எங்களை வளர்க்கும்படி பணிவண்புடன் வேண்டிக் கொள்கிறோம் நாங்கள்.
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
கண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===
to end with a smile...
hi...hi...hi...!