Showing posts with label மிக்ஸர். Show all posts
Showing posts with label மிக்ஸர். Show all posts

Tuesday, January 20, 2015

மொறு மொறு மிக்ஸர் - 27

Posted by பால கணேஷ் Tuesday, January 20, 2015
சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. ஓரிரண்டு தினங்கள் தவிர, தினம் ஒரு முறை விசிட் அடிக்கும் படி அமைந்தது எனக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் எனக்குப் பிடித்த புத்தகங்களையும் வாங்கிக் குவித்ததில் மனதிற்கு மிக நிறைவானதொரு பு.கண்காட்சியாக அமைந்தது இந்த வருடம்.

இந்த ஆண்டு சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் விற்றதாக என் கணிப்பில் தெரிகிறது. முத்து-லயன் காமிக்ஸ் ஸ்டாலில் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வருகிறதென்று தெரிந்ததும் சிறுவயது நினைவுகள் உந்த, மறுபடி படிக்கும் (பார்க்கும்?) ஆவல் மீதூற, முதல் தினமே போய் விசாரிக்க, வந்த புத்தகம் அனைத்தும் விற்று விட்டது என்றார்கள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மறுதினம் போய்ப் பிடித்து விட்டேன். பௌன்ஸர் என்கிற அற்புதமான புதிய காமிக்ஸ் புதுவருடத்தில் வெளியிட்டும் கூட இந்த ஆண்டு காமிக்ஸ் ஸ்டாலில் அதிகம் புத்தகங்கள் விற்றது மாயாவிதான் என்கிறார் எடிட்டர் எஸ்.விஜயன். இ.கை.மாயாவிதான் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்!

இதைத் தவிரவும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறை படக் கதை புத்தகங்களாக ஒரு ஸ்டாலில் பார்த்தேன். இவை போன்ற புத்தகங்களை நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்ததையும் கவனித்தேன். இத்தகைய புத்தகங்கள் விற்பனையாவதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் வளர்ந்து பின்னாளில் இலக்கியத்துக்கு வருவார்கள் - தமிழ்வாணனில் ஆரம்பித்த நான் லா.ச.ரா.வையும் படிப்பதைப் போல..! இது ஒரு நல்ல விஷயமாக மகிழ்வு தந்தது!

என் கண்ணில்பட்ட மற்றொரு பரபரப்பான விற்பனைப் புத்தகம் ‘மாதொருபாகன்’. ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் அதை எடுத்து பில் போட நின்றதை டிஸ்கவரி ஸ்டாலிலும், மற்ற இரு ஸ்டாலிலும் காண நேர்ந்தது.  ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், சர்ச்சையின் மகத்துவம் புத்தக விற்பனையை எகிற வைப்பதே என்பது நிதர்சனம். ‘ஹும்... சரிதாயணத்தைக் கூட யாரை விட்டாவது எரிக்கச் சொல்லியிருக்கலாம்டா’ என்றது  மனஸ். ஹி... ஹி... ஹி...

பாரதி புத்தகலாயத்தில்... ச்சே... பாரதி புத்தகாலயத்தில் சத்யஜித் ரேயின் ‘பெலூடா’ கதைகள் மொத்தத்தையும் தனித்தனி புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த இந்த ஆண்டின் பொக்கிஷம்! நோ.. நோ.. ஃபலூடா இல்லீங்க.. பெலூடா. ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான கேரக்டராக அதைப் படைத்து அசத்தலாக துப்பறியும் கதைகள் எழுதியிருக்காரு சத்யஜித் ரே. சிறுவர்களுக்கான கதைகள்னு போட்டிருந்தாலும் கூட எல்லா வயதுக்காரர்களும் சுவாரஸ்யமாப் படிக்கற மாதிரி ஆபாசமில்லாத, சஸ்பென்ஸை மெயின்டைன் பண்ற சூப்பரான கதைகள் ஒவ்வொண்ணும்.

கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப் வெச்சா லாபம்னு இங்க மாறிருவாங்களோன்னு தோணிச்சு எனக்கு. ஹி... ஹி... ஹி...

--------------------------------------------------------------

டிசம்பர் மாத இறுதியில் நம்ம கோவை ஆவி இயக்கிய ‘காதல் போயின் காதல்’ குறும்படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட திரைக்கதைய ஆவி அனுப்பி வெச்சப்ப, நல்லா இருக்கறதாப் பட்டாலும்கூட கதாநாயகி பாத்திரத்துல ஒரு உறுத்தல் இருந்தது எனக்கு. ஆவியின் கதாநாயகி ஒரு Down to Earth கேரக்டர். நிஜவாழ்க்கைல அவளை மாதிரி ஒருத்திய நான் சந்திச்சிருந்தாலும்கூட நிழல்ல அப்படிக் காட்டாம வேறவிதமா பெட்டரா காட்டினா நல்லாருக்கும்னு தோணிச்சு. ஆவிகிட்ட என் கருத்தைச் சொன்னேன். அந்தக் கதையோட பெரும்பகுதி ஒரு காபி ஷாப்ல நடக்கற மாதிரி எழுதியிருந்தாரு ஆவி.

“காபி ஷாப்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டா பத்தாயிரம் ரூபா கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. “அவ்வளவா..? ஒரு நாளைக்கு அது அதிகம்பா..”ன்னேன். “நீங்க வேற... ஒரு மணி நேரத்துக்கு அந்த ரேட் கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. தலை சுத்தி மயக்கமே வந்துருச்சு எனக்கு. அப்பறமென்ன... ஆவி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்க்ரீன் ப்ளேல எறக்கி, கதைக் களத்தையும் நாயகி பாத்திரத்தையும்  மாத்தி மோல்ட் பண்ணி வேற ஒரு திரைக்கதை அனுப்பினாரு. படிச்சதுமே இது நிச்சயம் ரசிக்கப்படும்ங்கறது புரிஞ்சிருச்சு. ஆவிக்கு வாழ்த்து சொன்னேன். அவரும், நாங்களும் விரும்பியபடி அந்தப் படைப்பு வந்திருக்கறது கூடுதல் மகிழ்ச்சி.



படத்துக்கு நாயகன், நாயகி தேட ஆவி பட்ட பாட்டை தனிக் கட்டுரையாவே எழுதலாம். (மே..பி... ஆவி எழுதுவாரு பின்னால...) பதிவர் திருவிழா சமயத்துல சீனுவை க்ளோஸப், மிட் ஷாட்னு பல ஆங்கிள்ல பாத்துட்டு, ‘கண்டேன் கதாநாயகனை’ன்னு குதிச்சாரு ஆவி. முதலில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த சீனுப்பயலை ஆவி பேசிப் பேசி, துப்பாக்கியை நீட்டாத குறையாய் மிரட்டி தன் குறும்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். இப்போ என்னடான்னா... முதல் (குறும்)படம் வர்றதுக்கு முன்னாலயே ‘ஷைனிங் ஸ்டார்’னு பட்டமும் நிறைய ரசிகர் பட்டாளத்தையும் சேத்துக்கிட்டான் அம்ம பய... 

நாயகியா நடிக்க பலரை யோசிச்சும், முயற்சிச்சும் யாரும் செட்டாகாம ஏதேதோ காரணங்களால தள்ளிப் போனதால கொஞ்சம் வெக்ஸானாரு ஆவி. இப்படிப்பட்ட நிலையில நம்ம பதிவர் சிஸ்டர் கீதாரங்கன், கதாநாயகியைத் தந்தாங்க. மதுவந்தி! கீதாவின் உறவான இந்தப் பொண்ணு நாட்டியமும் தெரிஞ்சவளா இருந்தது கூடுதல் ப்ளஸ். முழு உற்சாகத்தோட உருவாக்கத்துக்கு ஒத்துழைப்புத் தந்து, நாங்க எதிர்பாராத பர்பாமென்ஸ்ம் தந்து அசத்திருச்சு பொண்ணு. 

அதே மாதிரி இந்த ப்ராஜக்ட்ல அசத்தின இன்னும் மூணு பேரு 1) மாஸ்டர் ரக்ஷித்! நிஜ ஸ்கூல்பையனான இவன் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா சொல்றதை அப்படியே கிரகிச்சுக்கிட்டு சூப்பரான பெர்பாமன்ஸ் தந்து அசத்தினான். 2) துளசிதரன்! கதையில ஒரு கேரக்டருக்காக இவர் உருமாறி வந்ததைப் பாத்ததும் அசந்து போனேன். சின்ன கேரக்டர்னாலும் (படமே சின்னதுதானடா..!) அசத்தியிருக்காரு மனுஷன். 3) கீதா ரங்கன்! ஆவிக்கு துணை இயக்குனரா செயல்பட்டு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து செஞ்சு... என்னத்தச் சொல்ல... ஆவி சொல்லுவாரு மீதிய...!

ஷூட்டிங்குக்கு பர்மிஷன் வாங்கலைன்னு போலீஸ்காரங்க சத்தாய்ச்சதையும், சரியான லைட்டிங் தராம மிஸ்டர் சூரியபகவான் படுத்தினதையும் மீறி, மொத்தமாப் பாக்கறப்ப ரிசல்ட் நல்லா, திருப்திகரமா வந்திருக்குது. இன்னும் சில மேம்படுத்தற வேலைகள் பாக்கி இருக்கறதால பிப்ரவரி 14ல டிரெய்லரும், அந்த மாத இறுதியில வெளியிடவும் ப்ளான் பண்ணிருக்காரு ஆவி. பாத்துட்டு வாழ்த்துங்க அவரை.

--------------------------------------------------------------

‘டெக்கமரான்’ங்கற இத்தாலியப் படம் பார்த்தேன் சமீபத்துல. கதைய விரிவாச் சொல்லப் போறதில்ல. ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துக்க விருப்பம். கன்னியாஸ்திரீ மடத்துல செவிட்டு ஊமைன்னு பொய் சொல்லி தோட்டக்காரனா வேலைக்குச் சேர்றான் ஒருத்தன். அவனை அங்கருக்கற கன்னியா(?)ஸ்திரீகள் கையாளறாங்க. இது மதர் சுபீரியருக்குத் தெரியவர, அவங்க தன்னையும் கையாளச் சொல்ல... வெறுப்புல அவன் பேச, அவன் பேசக்கூடியவன்ங்கறது தெரியவர... உடனே வேகமா ஓடி... சர்ச் மேலருக்கற கண்டாமணிய அடிச்சு, எல்லாரையும் கூட்டி... (நீங்க நினைக்கற மாதிரி இல்ல...) ஜீசஸின் கருணையால இவனுக்குப் பேசவும் கேக்கவும் வந்துருச்சுன்னு எல்லார்கிட்டயும் அனவுன்ஸ் பண்றாங்க... ஹா.. ஹா... ஹா..! இந்துமத சாமியார்களை மோசமான காமாதூரர்களா காட்டினதைப் பல படங்கள்ல பாத்திருக்கேன். (நிஜத்துலயும் சிலர் அதைவிடக் கேவலப்பட்டாச்சு சமீப வருஷங்கள்ல)

ஆனா.. கிறிஸ்டியானிட்டிய இவ்வளவு போல்டா விமர்சிக்கற இப்படியொரு படத்தை இப்பதான் பாக்கறேன். அவங்க மதகுருமார்கள் எப்படி விட்டு வெச்சாங்கன்னு தெரியல. வொண்டர்..! ஆங்... நானும் பாத்தாகணுமே படத்தைன்னு அடம் பிடிக்கற ஆசாமிகள் ‘நீ குழாய்’ல தேடவும். கிடைக்கிறது. ‘விசேஷமான’ காட்சிகள்  படத்தில் ஆங்காங்கு கதைக்குத் தேவை(!)யென்பதால் வருவதால் நீங்கள் நல்லவராயின் பார்க்காமல் தவிர்க்கும் படியும், வல்லவராயின் தனிமையில் பார்க்கும் படியும் கோரப்படுகிறீர்கள். (இதனாலயே முதல்ல பாக்க ஓடிருவாங்களோ... -மைண்ட் வாய்ஸ். ஹி... ஹி... ஹி...)

--------------------------------------------------------------

டியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை.  சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்!
-‘அபிதா’ நாவலில் லா.ச.ராமாமிர்தம்.

டைசியில் எல்லாப் பணமும் செலவழிந்து போய் செல்லாத ரூபாய்தான் மிஞ்சிற்று. அப்பொழுதுதான் செல்லாத ரூபாயாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது ஏன்று தோன்றிற்று. தெருவில் காய்கறிக்காரி போனால் நாலரையணாவுக்குக் கறிகாய் வாங்குகிறது. செல்லாத ரூபாயைக் கொடுத்து, “நாலரையணா எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடு” என்கிறது. அவள், “செல்லாது, வேறு கொடுங்கள்” என்று திருப்பி விடுவாள். “வேறு ரூபாயில்லையே, நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளேன்” என்கிறது. “சரி, அப்படித்தான் கொடுங்கள்” என்று போய் விடுவாள். ரூபாயில்லாமல் கடன் கொடு என்றால் கொஞ்சம் அவமானமாகத் தோன்றும். ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு கடன் சொன்னால் அதில் ஒரு கௌரவம் இல்லையோ...? அதே மாதிரி அந்த ஒற்றை ரூபாயைக் காட்டியே பத்து ரூபாய்க்குச் சாமான்கள் கடனாய் வாங்கி விட்டோம். அந்த ரூபாய் இல்லாவிட்டால் முடியுமா..? கடன் வாங்கினாலும் அவ்வளவு கண்ணியமாய்ச் செய்திருக்க முடியுமா..?
-‘செல்லாத ரூபாய்’ சிறுகதையில் எஸ்.வி.வி.

....புதிய புத்தகங்களைப் படிப்பதை விட இப்படிப் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. புதுவரவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன். என் ராசிக்கு நல்ல பலன்தான். இனி இந்த வருஷம் தொடர்ந்து இங்க செயல்படறதுன்னு முடிவும் பண்ணிட்டேன். உங்க ராசிக்கு.... ஹி... ஹி... ஹி....

Thursday, August 7, 2014

மொறு மொறு மிக்ஸர் - 26

Posted by பால கணேஷ் Thursday, August 07, 2014
ண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம்.  “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக் கூட பொறுமையில்லாம வேன்லயே வெச்சு வெளுக்கப் போறாங்களா?”என்றேன் நான். பார்க்கினுள் சென்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த சமயம்... அந்த போலீஸ் வேனிலிருந்து மெகாபோன் வைத்து பேசுவது மாதிரி சத்தம் கேட்க, பொதுஜனங்கள் நிறையப் பேர் வேனின் அருகில் சென்று நிற்பதையும் பார்க்க முடிந்தது. வாசலுக்கு வந்தோம்.


அட.. வேனின் பின்புறத்தில் ஒரு ஸ்கிரீன் கட்டி, ப்ரொஜக்டர் வைத்து படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொலை மற்றும் கொள்ளைக் கேஸ் ஹிஸ்டரிகள் மூன்றை குறும்படமாக எடுத்து, எப்படியெல்லாம் குற்றவாளிகளுக்கு நம் இயல்பான பேச்சின் மூலம் க்ளூ கொடுக்கிறோம், எப்படியெல்லாம் தனியே இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே நடிகர் நாஸர் தலைகாட்டி அட்வைஸிக் கொண்டிருந்தார்.

டாகுமெண்ட் படம்தானே என்று ஏனோதானோ என்று எடுக்காமல் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பார்ப்பது போன்ற உணர்வு வரும்படி சிரத்தையாக எடுத்திருந்தார்கள் குறும்படத்தை. ஒரு பெண் போலீஸ் அதிகாரி படத்தைப் பற்றிய கருத்தை எழுதித் தரும்படி லெட்ஜர் ஒன்றை நீட்டினார். நானும் சீனுவும் எங்கள் கருத்தைப் பதிந்தோம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லப்படும் வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக மக்களுடன் நெருங்கி வந்து காவல்துறை செய்திருக்கும் இந்த ஏற்பாடு எங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

====================================================

“நான் இன்று கதை சொல்ல வரவில்லை. தமிழில் உள்ள சிறுகதை இலக்கியத்தைப் பற்றிச் சொல்லத்தான் வந்திருக்கிறேன். அதற்கு பூர்வ பீடிகையாக சிறுகதை என்றால் என்ன என்பதைச் சிறிது கவனித்துக் கொள்வோம். சிறுகதையின் முக்கிய அம்சம், அதில் ஒரேயொரு சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்தச் சம்பவத்தை வெறும் வளர்த்தல் இல்லாமல், வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக் கொண்டு போனால் அது நாலு வரியாக இருந்தாலும் சிறுகதை தான்; நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்....”

-ஆனந்த விகடன் 1939ம் ஆண்டு இதழில் இப்படிச் சொல்பவர் கல்கி அவர்கள்.

====================================================

ரம்ப தினங்களில் பக்கங்களை ப்ளாக் எடுத்து ஓட்டி புத்தகம் தயாராகும். பின்னாளில் ஈயத்தில் எழுத்துக்களைக் கோர்த்து கம்போஸ் செய்து அச்சாகின. அதன்பின் கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்து, அதை வெட்டி ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பும் நிலை. இப்யோதைய நவீன கம்ப்யூட்டர்களினால் வெட்டி ஒட்டுகிற வேலை இல்லாமல் மொத்தப் பக்கங்களும் கம்ப்யூட்டரிலேயே வடிவநைத்து ப்ரிண்டிங்கிற்கு அனுப்பிவிட முடிகிறது. இத்தனை முன்னேறிய நிலையில் புத்தகங்கள் தயாராகி நம்மை வந்தடைந்து கொண்டிருக்க இதன் அடுத்த பரிணாமம் ஒன்றும் தற்போது அரங்கேறியுள்ளது.

புத்தகத்தைத் தயாரித்து அதை அச்சிடாமல் ஈபுக் என்ற பெயரில் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் படிக்கும் விதமாக எளிய கட்டணத்தில் வழங்குவது என்ற முறைதான் அது. பேப்பர் மிச்சம், அச்சிடும் செலவு மிச்சம் என்பதால் பெரிய பெரிய புத்தகமாக இருந்தாலும் குறைந்த விலையில் தரமுடியும் இந்த முறையில். அப்படி அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய ‘தட்பம் தவிர்’ என்ற க்ரைம் நாவலை சமீபத்தில் வாங்கி (மொபைலிலேயே) படித்தேன். கொலை, விசாரணை, மர்மம், அடுத்த கொலை என்று விறுவிறுப்பாகக் கொண்டு சென்று ஏமாற்றாத முடிவுடன் அமைந்த அந்தக் கதையை ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். இங்கே க்ளிக்கி நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் அரவிந்த் சச்சிதானந்தம். இதைப் படிச்சதும் நாமளும் இப்படி ஈ புத்தகம் தயாரிச்சு வெளியிட்டா என்னன்னு ஆசை வந்துடுச்சு. முதாலாவதா சீனு வைத்த காதல் கடிதப் போட்டிக்கு வந்த சுவாரஸ்ய கடிதங்களைத் தொகுத்து பளிச்சென்று கலர் ஈ புத்தகமாக வெளியிடலாம் என்று எனக்கு ஆசை. சீனுவும். அப்பாதுரை ஸாரும் பச்சைக்கொடி காட்டினால் தயாராகிடும்.

====================================================

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் இருக்கிறது அழுகாச்சி கடை. அங்கே போனால் நீங்கள் உங்கள் பிரச்னைகளை நினைத்து உங்கள் இஷ்டத்துக்கு கத்திக் கதறி அழுதுவிட்டு வரலாம். கையில் கிடைத்ததை தூக்கிப் போட்டு உடைத்து உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அழுகாச்சி கடைகளைக் கண்டுபிடித்தவர் லுவோ ஜன் என்பவர். இப்போது இந்த ஐடியா சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்காங்கே ஓரிரு அழுகாச்சி கடைகள் இதேபோல் வந்து விட்டன. லுவோ ஜன் அழுகாச்சி கடை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது நல்ல காசு. (அதனால அவர் மட்டும் அழுகாச்சி இல்லாம சிரிச்சுட்டிருப்பாரு போலருக்கு....)

-ப்ரஸன்னா எழுதிய ‘பணமே ஜெயம்’ நூலிலிருந்து...

Monday, May 5, 2014

மொறு மொறு மிக்ஸர் - 25

Posted by பால கணேஷ் Monday, May 05, 2014
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை 
முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ''கோழி இன்னும் சாகலையாப்பா?''

ன்னடத் திரையுலகின் இளம் நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘உலிதவரு கண்டந்தே (Ulidavaru Kandante)  -- என்றால் ‘மற்றவர் பார்வையில்’ என்று பொருள் என்று கன்னடம் தெரிந்த நண்பர் பிரபுகிருஷ்ணா சொன்னார். சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் அந்தப் படம் புரியவில்லை, என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை என்றெல்லாம் புகார்கள் எழுந்ததால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக படத்தின் மொத்த்த் திரைக் கதையையும் பி.டி.எப் பைலாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். பட்ம் தியேட்டர்கள்ல ஓடிட்டிருக்கும் போதே முழுத் திரைக் கதையையும் வெளியிட்ட இவங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. இங்கே க்ளிக்கினால் கன்னடத்திலும், இங்கே க்ளிக்கினால் ஆங்கிலத்திலும் டவுன்லோடு செய்து படிக்கலாம். எனக்குக் கூடத்தான் நிறைய தமிழ்ப் படங்கள் புரிவதில்லை. அதாவது...  ஏன் எடுக்கிறார்கள் என்றே புரிவதில்லை. ஹி.... ஹி... ஹி...!
=======================================================================================
ரு கல்யாணத்தில் திரு,கிரேசி மோகனும் திரு ஏ.ஆர்.எஸ்ஸும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்டதில்....

ஏ.ஆர்,எஸ்: “மோகன்! ஒரு நாள் வீட்டுக்கு வாயேன். பழய போட்டொவெல்லாம் காட்டறேன்! எம்ஜிஆர் வித் தொப்பிவித்தவுட் தொப்பி...”

கிரேசி: “நீங்க எங்க வீட்டுக்கு வாங்க! நானும் நிறைய போட்டோ வித்தவுட் எம்ஜிஆர் - காட்டறேன்..”
=======================================================================================
ந்தசாமிப்பிள்ளை ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை நிமிர்த்தி கூரையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தார். “என்ன பிள்ளைவாள்... என்ன அவ்வளவு அபாரமாய் யோசிக்கிறீர்?” என்றார் முதலியார். “பொழுது விடிந்தால் கவலைப்படுவதற்கே நேரம் போதவில்லையே... பலவிதத் தொல்லை...” என்றார் பிள்ளை. “அது என்னய்யா அப்படிப்பட்ட தொல்லை? எழுந்து வாருங்காணும்... இப்படிக் காற்றாட வெளியில் போய்விட்டு வரலாம்...” என்றார் முதலியார். “ஓய்! என்னுடைய கசலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரக் கூடியதல்ல...” என்றார் பிள்ளை. “பூ! அப்படிப்பட்ட கவலை என்னென்ன சொல்லும். ஒரேயடியாகக் குறைக்க வழி சொல்கிறேன்...” -முதலியார். பிள்ளை ஆரம்பித்தார், “ஸார்! பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை. சாமான் வாங்கிப் போடணும். குறைந்தது பத்து ரூபாயாவது ஆகும். என் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு நூல் புடவையாவது வாங்க ஆறு ரூபாய் வேண்டும்... கை மாற்றுக் கடனைத் திருப்ப 5 ரூபாய் தேவை. பால் பாக்கி எட்டு ரூபாய்..! பார்த்தீரா...? ஒன்றா, இரண்டா கவலைப்படுவதற்கு..?”. முதலியார்,“இவ்வளவுதானே..? இவ்வளவு காரியங்களைச் செய்வதற்கு இருபத்தொன்பது ரூபாய் வேண்டும் இல்லையா..?” என்றார். “ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.
--26.3,1939 விகடனில் ‘சாவி’ எழுதிய சின்னஞ்சிறு கதை
=======================================================================================
ரிரண்டு பதிவுகளுக்கு முன்னர் நான் ட்ரிபிள் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன். இதொன்றும் மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு பெரிய சாதனை இல்லைதான். என்றாலும் இதுவரை என்ன எழுதியிருக்கிறோம் என்ற போன வாரம் ஒருநாள் ‘பொழுதுபோகாத பொம்முவாக இருந்தபோது பெரும்பாலான பகிர்வுகளை மறுவாசிப்பு செய்தேன். எந்த ஒரு பகிர்வும் ‘இதை ஏன் எழுதினோம்?என்று வருத்தப்பட வைக்கவில்லை என்கிற மகிழ்வும், சிலவற்றை இப்போது படிக்கையில் நாம் தானா எழுதியது?என்ற வியப்பும் என்னுள் எழுந்த்து.

இந்த இரண்டுக்கும் காரணமானவர் நீங்கள். எல்லாப் புகழும் உங்களுக்கே. உங்களனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து மகிழ்வான நன்றி!

(20ம் நூற்றாண்டு நரி என்கிற ஆங்கிலப்பட நிறுவனத்தின் லோகோ எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் 200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)

Monday, March 3, 2014

மொறு மொறு மிக்ஸர் - 24

Posted by பால கணேஷ் Monday, March 03, 2014
‘‘அப்போது எனக்கு 17 வயது. பம்பாயில் ஹெமு அதிகாரி நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். முகாமின் மற்ற விவரங்களைக் கவனித்துக் கொண்டவர் தாராபூர். கடும் வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்குப் பயிறசி நடக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. இடையில் ஓய்வும் கிடையாது. முதல் நாள் பயிற்சி முடிந்து பகல் உணவுக்கு உட்கார்ந்தோம். இரண்டு சப்பாத்திகளும், கொஞ்சம் காய்கறிகளும் பரிமாறினார்கள். எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட, சாப்பிட மறுத்தேன். 

நான் வடக்கில் இருந்து வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். வேகமாகப் பந்து வீசுகிறேன். பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அதுமாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்! தாராபூர் என்னிடம் சீறிக்கொண்டு வந்தார். ‘நாங்கள் தரும் சாப்பாடு உனக்குப் பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். ‘இல்லை சார். நான் வேகமாகப் பந்து வீசுபவன். எனக்கு நிறையச் சாப்பாடு வேண்டும்' என்றேன். தாராபூர் ஏளனமாகச் சிரித்துவிட்டு, கிண்டலாகச் சொன்னார்: ‘இந்தியாவில் ஃபாஸ்ட் பௌலர்களே கிடையாது!'. பொங்கி வந்த கண்ணீரை நான் அடக்கிக் கொண்டேன். இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு வேகப்பந்து வீச்சாளராகத் திகழ வேண்டும் என்று உறுதி கொண்டேன். நன்றி தாராபூர்! அன்று எனக்கு நீங்கள் மிகப்பெரிய சேவை செய்தீர்கள்!"

--- இப்படித் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனான கபில்தேவ் நிகாஞ்ச். அடைந்த அவமானத்தை முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்ட இவரின் மன உறுதியை நாமும் கைக்கொள்ள ஆசைப்படுவோமாக!

=================================================

நாம் பார்க்கும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு என்று ஒன்று இருககிறது (தானே?). கலாசசாரத்துக்கு ஒவ்வாத, ஆபாசக் காட்சிகள் வந்தால் ‘ஏ’ என்கிற சர்டிபிகேட் தரப்படுவதன் மூலம் ‘‘அலர்ட் ஆகிக்கங்கப்பா" என்கிறார்கள். அசைவம் சாப்பிடாதவர் நீங்கள் எனில், நீங்கள் வாங்குகிற ஆயில் முதல் பிஸ்கட் பாக்கெட் வரை சுத்த சைவமாக இருந்தால் பச்சையில் ஒரு வட்டத்தை அச்சிட்டு, ‘‘அசைவம் கலக்கலைப்பா. சாப்பிடலாம் நீங்க" என்கிறார்கள். இபபடி எலலாத்துலயும் உஷாரா இருந்து வாங்குற நம்மால எளவு... நாம படிக்கிற புத்தகத்துல சூதானமா இருந்து வாங்க முடியலையேப்பு...! தலைப்பையும், அவங்க தர்ற பில்டப்பையும் நம்பி ஏதோ நாலு நல்ல விஷயம் எழுதியிருப்பாங்கன்னு நெனச்சு வாங்கிப் படிச்சோம்னா... ‘சமூகத்துல நடக்காததையா எழுதிட்டோம்'னு ஒரு சாக்குச் சொல்லிட்டு சாங்கோபாங்கமா பாலுறவுகளையும், பெண்களின் உறுப்புகளை அப்பட்டமாக வர்ணித்தும், ஒருபாலின :உறவுகளை விரிவாகவும் எழுதித் தொலைக்கிறான்கள். இந்த மாதிரி புத்தகங்கள்ல அட்டைப்படத்துல ஒரு நீலக்கலர் கத்திரிக்கோலை போடணும்னு யாராச்சும் சட்டம் கொண்டு வந்தீங்கன்னா.... ரெம்பப் பேரு பொழச்சுப்போம் சாமிங்களா...!

=================================================

டாக்டர் காந்தன் ரொம்பவும் நல்லவர் என்று அவ்வூரில் நல்ல பெயர் எடுத்தவர். கொஞ்சம் வயசுதான். முப்பபதுக்குள் இருக்கும். ஜனங்கள் அவரிடம் ரொம்ப மரியாதை வைத்திருந்தனர். அவர் டாகடர் தொழிலை ஆரம்பித்து இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளாகவே அதில் விரக்தியடைந்து, அத்தொழிலை விட்டுவிட்டு இளம் சன்னியாசியைப் போல அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார். அதற்குக் காரணம்... அவரிடம் வைத்தியம் செய்து கொண்ட நோயாளிகள் யாரும் அவருடைய திறமையை மற்றவர்களிடம் சொல்லி விளம்பரப் படுத்தாமலேயே பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

--- ‘மாயமாய் மறையும் மந்திர மனிதன்' மர்மநாவலில் சிரஞ்சீவி. (நோ.. நோ... நீங்க நினைக்கிற தெலுங்கு நடிகரில்லை. பழைய தமிழ் எழுத்தாளர் இவர்!)

=================================================

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது ‘புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது' ‘மது அருந்துவது உடல்நலத்தக்குக் கேடானது' என்று திரைப்படங்கள்/தொலைக்காட்சிகளில் அறிவிப்பை திரையில் ஓர் ஓரமாக மின்ன வைக்கிறார்கள் சமீபகாலமாக. அந்நாளைய படங்களில் சிவாஜியோ, சுருளிராஜனோ சிகரெட் பிடித்தால்கூட இப்போது இந்த அறிவிப்பைச் சேர்த்துத்தான் தொ.கா. ஒளிபரப்புகிறது. இந்த சமூக அக்கறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. திரைப்படம்/தொலைக்காட்சி அன்பர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் வேறுசில அறிவிப்புகள்:

* கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்... ‘வன்முறை வெகுஜன நலத்துக்குக் கேடானது!'
 
* சீரியலில் மாமியாரும் மருமகளும் மற்றொரு மருமகளைத் தீர்த்துக்கட்ட திட்டமிடும் சமயங்களில் அல்லது ‘அவளைப் பழிவாங்கி நடுத்தெருவுல நிறுத்தாம விடமாட்டேன்டா' என்று அடித்தொண்டையில் வில்லன்/வில்லி கதாபாத்திரங்கள் அலறுகையில்... ‘சதி செய்தல் குடும்ப நலத்துக்குக் கேடானது!'
 
* ஒரு இளைஞனும், இளைஞியும் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதலித்து ஆடிப் பாடும் காட்சிகளில்... ‘காதலிப்பது பெற்றோர் நலத்துக்கு எதிரானது!'
 
* அடியாட்கள் ஒருவனை வெட்டி ரத்தம் தெறிக்க கசாப்பு போடும் காட்சியில் (அ) கதாநாயகன் வில்லன் கும்பலை கதறக் கதற வெட்டித் தள்ளுகையில்... ‘ரத்தவெறி சிறுவர் நலனுக்கு எதிரானது!'
 
--- இதுமாதிரி இன்னும் வேற ஏதாச்சும் போடலாம்னு உங்களுக்குத் தோணுதா? இக்கட நேனு வெய்ட் சேஸ்தானு! செப்பண்டி!

=================================================

ரு பெரிய கோடீஸ்வரர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் இளையமகன் சந்தேகிக்க, அவன் நண்பன் துப்பறிய முயல, இறந்தவரின் அறைக்கு நேர்கீழே தோட்டத்தில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டெடுக்கிறான். டாக்டர் அவை ஒரு மனித விரலின் எலும்புகள் என்கிறார். சிலபல விசாரணைகளுக்குப் பின், பிறிதொரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் குரு எனப்படும் துறவியின் சமாதியில் தோண்டுகையில் எலும்புக்கூட்டில் ஒரு விரல் இல்லை. கண்டெடுத்த விரல் துண்டுகளை அங்கு ஒட்டிப் பார்க்க கச்சிதமாகப் பொருந்துகிறது. அங்கே மறந்து வைத்துவிட்ட வாட்ச்சை எடுக்க நள்ளிரவில் தன்னந்தனியே செல்லும் துப்பறியும் நண்பனுக்கு முன்வந்து அந்த எலும்புக்கூடு "என் சமாதியை ஏன் தோண்டின?" என்று கேட்க, அதிர்ச்சியில் ரத்தம் கக்கி இறக்கிறார் அவர். தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டு பேய் பலர்முன் தென்பட்டு பயமுறுத்துகிறது.

--- என்னன்னு புரியலையா? ‘ஒரு விரல்'ங்கற த்ரில்லர் திரைப்படத்தோட கதையிலதான் இதெல்லாம் வருது. இரண்டு மணி நேரம் ஓடற இந்தப் படத்துல ரெண்டே பாட்டுதான். நல்ல விறுவிறுப்பான கதையோட்டமும் எதிர்பாராத முடிவும் அசர வெச்சது. இந்த மாதிரிக் கதைகள்ல கடைசியில ‘இவனா குற்றவாளி?’ங்கற ஆச்சரியமும், அவன் செய்த விதத்தை விவரிக்கும்போது ‘அட!’ என்கிற வியப்பும் வந்தால் படத்துக்கு வெற்றி எனலாம். அந்த வகையில் இந்தப் படம் வெற்றிப்படம்தான்! என் சின்ன வயசுல நான் பார்க்கிற திரைப்படங்கள்ல ‘ஒருவிரல் கிருஷ்ணாராவ்’ன்னு டைட்டில்ல பாக்கறப்ப ‘இந்த ஆள் மட்டும் எப்படி ஒரு விரலோட பிறந்தார்?’ன்னு வியந்ததுண்டு.  எங்கம்மா அந்த நபரை திரையில இவர்தான்டான்னு அறிமுகப்படுத்தினப்ப அவர் கைகள்ல அஞ்சு அஞ்சு விரல்கள் இருக்கறதப் பாத்துட்டு வியந்ததும், அம்மா தலையில தட்டி ‘‘ஒரு விரல்ங்கற படத்துல நடிச்சதால அந்தப் பேர்டா’’ன்னு சொன்னதும் இப்ப நினைச்சா சிரிப்பு வருது. அதேமாதிரி வழுக்கை மண்டையோட அவரைப் பார்த்துட்டு, இந்தப் படத்துல (முதல் படம்ங்கறதால) இளமையா தலைமுடியோட பாக்கறப்பவும் சிரிப்புத்தான் வந்தது.

ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டிருந்த இந்தப் படத்தோட டிவிடி சமீபத்திய வேட்டையில கிடைக்கவும் உடனே வாங்கிப் பாத்துட்டேன். தேங்காய் சீனிவாசனுக்கும் இது முதல் படம்ங்கறதும், அவர் மிகமிகமிக இளமையா வர்றதும் எதிர்பாராத ஆச்சரியங்கள். அவரின் கேரக்டரிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது மற்றொரு ஆச்சரியம். த்ரில்லர் பட ரசிகர்களாக நீங்க இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம். (இதவெச்சு ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கலாம். சிஷ்யனைப் பாத்தாவது கத்துக்கடா கணேஷா! --- சிரிக்குது மனஸ்!)

Wednesday, January 29, 2014

மொறு மொறு மிக்ஸர் - 23

Posted by பால கணேஷ் Wednesday, January 29, 2014
து தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி 
இவனையும் துணைக்குப் போகச் சொன்னாங்க.

கடைக்குச் சென்றதும் கிளிப் பிள்ளை மாதிரி பெரியம்மா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள் தங்கை. கடைக்காரர் பொட்டலம் கட்டிக் கொடுத்ததும், இவன் கையிலிருந்த சில்லறையைக் கொடுத்துவிட்டு, ‘‘வாடி, போகலாம்...!" என்றான் தங்கையிடம். அவள் நகராமலே நின்றாள், ‘‘அண்ணா! கடைக்காரன் ஏமாத்தப் பாக்குறான்... என்னன்னு கேளுங்க..." என்றாள். ‘‘என்ன ஏமாத்திட்டாரு...? எதைக் கேக்கணும் நானு?" என்று முழித்தான் இவன். அவள் சொன்னாள்: ‘‘ஐயோ அண்ணா...! பெரியம்மா நூறு தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இவன் மூணுதான் குடுத்திருக்கான். இப்படித்தான் ஏமாளியா எப்பவும் வாங்கிட்டுப் போவியா?" தங்கையின் புத்திசாலித்தனத்(?)தின் முன் அன்று ‘ஙே' ஆகி நின்றான் இவன்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
 

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ன்றொரு நாள் என் வீட்டிலிருந்து மத்யகைலாஷ் வரை பேருந்துப் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தின் பின்வாசலில் ஏறிய எனக்குப் பின்னிருந்து ஏழெட்டு பேர் நெருக்க, கதவின் அருகிலிருந்து உள்ளே போகலாம் என்றால் முடியவில்லை. முன்னால் நின்றிருந்த ஒரவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர் மாதிரி முதுகின் பின்னால் தொங்கவிட்ட பெரிய கறுப்புப் பையின் வார் தோள்பட்டையைச் சுற்றிவர, இரண்டு பேர் நிற்கும் இடத்தை ஆககிரமித்துக் கொண்டிருந்தார். அவரை நசுககிக் கொசண்டு போகலாம் என்றாலோ, அவருக்கு முன் நின்றிருந்த பெண்ணின் உடலின் மேல் நன்ன்ன்றாக உரச வேண்டியிருக்கும், வெறுப்புப் பார்வை அல்லது கோப வசவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ‘‘ஸார்... நீங்க எங்க இறங்கப் போறீங்க?" என்றேன் மெதுவாக. ‘‘கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்" என்றார் அவர். ‘‘இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கே... உங்க தோள்ல இருக்கற பேகைக கழட்டி காலடியில வெச்சா, நான் முன்னால போக முடியும்" என்றேன்.

அவர் முன்புறம் நின்றிருந்த ஒருத்தரைக் கை காட்டி, ‘‘அவர் இதே மாதிரி தோள்ல பேக் மாட்டிட்டுதான் இருக்கார். அவரைக் கேட்டீங்களா? நான்தான் கிடைச்சனா?" என்றார். முட்டாளோடு முரண்பட்டுப் பயனில்லை என, அவனை நசுக்கி முன்னேறி விட்டேன். (நல்லவேளை... அந்தப் பெண் வசவவில்லை... ஹி... ஹி...!) எனக்குப் பின்வந்த நான்கைந்து பேரும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய... அதன்பின் பேகைக் கழற்றி காலடியில் வைத்தார் அந்த நபர். தான் செய்யும் குற்றத்தை ஒருவன் சுட்டிக் காட்டினால், ‘அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல' என்று தன் தப்பை நியாயப்படுத்துவது என்ன நியாயம் எனபதுதான் புரியவில்லை. அவன் கொலையே பண்றான், நான் கையைத் தானே வெட்டறேன் என்று சொல்வது என்ன லாஜிக்? என்னத்தச் சொல்ல...? இப்படியே பழகிட்டாய்ங்கப்பூ...!


 ===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

இனி சில தகவல்கள்:

1) நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த ‘நாலு வரி நோட்டு’ புத்தகங்களை இங்கு க்ளிக் செய்து இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது (0)99001 60925 என்ற எண்ணுக்குத் தொலைபேசி உங்கள் முகவரியைக் கூறி பெற்றுக் கொள்ளலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் கூரியர் செலவும் இலவசம் என்றும், சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவு மட்டும் இலவசம் என்றும் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

2) ஐ பேட் வைத்திருக்கிறீர்களா நீங்கள்? ‘கல்கி' வார இதழின் வாசகரா நீங்கள்? எனில் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. இந்தச் சுட்டியில் க்ளிக் செய்தால் ஐபேடில் படிப்பதற்கு வசதியாக - இலவச பயன்பாடாக - கல்கி வார இதழ் கிடைக்கிறது. படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு ஒரு சல்யூட்!

3) படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம் ஒன்றை நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து துவங்கியிருக்கிறோம். அதில் முதல் பதிவை இன்று வெளியிட்டுள்ளோம். தளத்தின் பெயர் - வாசகர் கூடம்! பிடிச்சிருக்கா? அங்கும் உங்களின் ஆதரவைத் தந்து எங்களை வளர்க்கும்படி பணிவண்புடன் வேண்டிக் கொள்கிறோம் நாங்கள்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

to end with a smile...

hi...hi...hi...!


Saturday, November 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 22

Posted by பால கணேஷ் Saturday, November 23, 2013
னந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே தவிர, எஃபக்ட் ஒண்ணும் தெரியல" என்றேன். ‘‘இந்த முறை அப்படி இல்லிங்க. கண்ணாடியோட பாத்தீங்கன்னா... விளம்பரத்துல சொல்லியிருக்கற மாதிரி அள்ளும்" என்றார். விகடன் வெளியாகி 3டி படங்களை நான் ரசித்த பினனொரு நாளில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘‘இப்ப என்ன நினைக்கறீங்க?’’ என்றார். நான் நினைத்ததைச் சொன்னவுடன், ‘‘பாதகா...!" என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். நான் சொன்னது என்னவாக இருககும்? யூகியுங்க...

==================================

‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.

ஆஸர்கானா நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்க, ஸ்.பை. வந்தார். ‘அம்மா மினி பஸ்'ஸில் சவாரி செய்தே ஆகவேண்டுமென்று பலப்பம் சாப்பிடாத குழந்தையாக சிவா அடம்பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து ஐநது நிமிஷ மினி ட்ரிப் அடித்தோம். மதுரையிலும் கரூரிலும் நான் மினி பஸ் சவாரி செய்ததுண்டு. கசகசவென்று கூட்டம் நிரம்பி வழிய, கன்னாபின்னாவென்று ஏதோ பாட்டைக் கத்தவிட்டுக் கொண்டு, நல்ல அனுபவமாக ஒருநாளும் இருந்திராதது மினி பஸ். சென்னையில் கூட்டமில்லாமல் புதிய பஸ்ஸில் சென்றது வித்தியாசமான நல்ல அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாட்கள் போனால்தான் இந்த பஸ்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன, எப்படி ஓடுகின்றன என்பதை முழுதாக மதிப்பிட முடியும். பார்க்கலாம். வேளச்சேரியில் குருநானக் கல்லூரி தாண்டி சிறிது தூரம் வந்ததும் சிவா குறிப்பிட்ட ‘கோலி’ என்ற பெயர் கொண்ட வடாபாவ் கடை இருந்தது. பனீர் வடாபாவ், சீஸ ஃபிங்கர் வடாபாவ் என்று இரண்டு வெரைட்டி ருசி பார்த்தேன். சிவா இதைப் பற்றி விரிவாக எழுத இருப்பதாக என்னிடம் சொன்னதால் என் ஒருவரி விமர்சனம்: செம்ம டேஸ்ட்! அதன்பின் மூவருமாக ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று ஒரு ரவுண்டு வந்தோம். ஒரு காஃபிக்கு 130 ரூபாயும், கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் கவனித்தது தனியொரு சந்தோஷம். இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!

==================================

‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!

 தீபாவளி மலர்களின் வழக்கம் போல் ஸ்வாமி படங்களுடன் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களும் தந்திருப்பது ரசனை! பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் கதைகளைத் தவிர்த்து, கட்டுரைகளாக வாங்கி வெளியிட்டிருப்பதும் மிக ரசிக்க வைத்தது. சினிமா பற்றி தரப்பட்டிருக்கும் தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும், வாத்தியார் சுஜாதாவின் டாப் சிறுகதையான ‘நகரம்’ வெளியாகியிருப்பதும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆக மொத்தத்தில்... கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு தீபாவளி மலர்!

==================================

ல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!

==================================

நேற்று ‘கிருஷ்ண லீலை' என்ற படம் சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது (பின் பகுதிதான்). குசேலர் கதாபாத்திரத்தை நாகேஷ் செய்திருந்த விதம்...! அரண்மனையில் அலட்சியப்படுத்தும் சேவகர்களின் முன் கிருஷ்ணனே வாசலுககு வந்து அழைத்ததும் காட்டுகிற பந்தா... சேடிகள் கண்ணன் நடக்கும் பாதையில் மலர் இறைக்க, நாகேஷ் மேல் அது பட, அவர் நாணி துள்ளிக் குதிக்கும் அழகு... ஆளுயர மாலையை கண்ணன் போட்டதும் கழுத்து வளைந்து கும்பிடுவதும், ‘‘எத்தனை நேரம் கும்பிடுவாய் குசேலா?’ என கண்ணன் கேட்க, ‘‘கும்பிடலை கண்ணா... நீ போட்ட மாலை நிமிர விடவில்லை’ என்று பன்ச் அடிப்பதும்... கண்ணனின் அன்பில் நனைந்து தனக்கென எதுவம் கேட்காமல் அரண்மனையை விட்டு வெளியே வந்து புலம்புவதும்... எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபாமன்ஸ்! பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு மட்டும் பலர் நடித்திருந்த குசேலர் வேஷத்தை இப்படியொரு காமெடி + சென்டிமென்ட்டுடன் பண்ண நாகேஷால்தான் முடியும். What a legend!

==================================

அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"

Thursday, September 26, 2013

மொறுமொறு மிக்ஸர்-20

Posted by பால கணேஷ் Thursday, September 26, 2013
ன் நண்பனைப் பார்க்க நான் சென்ற சமயம் அவன் வீட்டிலில்லை என்பதால் காத்திருக்¢க நேர்ந்தது. அவன் மனைவி நாலாம் வகுப்புப் படிக்கும் தன் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். அங்கேயிருந்த குமுதத்தைக் கையிலெடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த நான் சும்மாயிராமல் அந்தச் சுட்டி ஒன்றிரண்டு முறை அவள் அம்மாவிடம் சந்தேகம் கேட்டபோது நான் முந்திக் கொண்டு பதில் சொன்னேன். "அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" என்றது அது. "சரிம்மா"வென்று புத்தகத்தைப் புரட்டிய நான், அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் கேட்ட ஏதோ கேள்விக்கு என்னை மறந்து பதிலிறுத்து விட்டேன். சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்த அந்த வாண்டு, "அங்கிளுக்கு எல்லாத்துக்கும் ஆன்ஸர் தெரிஞ்சிருக்கு. ஏன் அங்க்கிள்... 1948ல நம்ம பிரதமரோட பேர் என்ன?"ன்னு கேட்டுச்சு.

"ஹும், ஒரு சிறுகுட்டி நம்மைச் சோதிக்குன்னு" என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு கெத்தாக, "ஜவஹர்லால் நேரும்மா" என்றேன். "தப்புத் தப்பா ஆன்ஸர் சொல்றீங்க..." என்று கை கொட்டிச் சிரித்தது அது. "நான் சரியாத்தாம்மா சொன்னேன்" என்க, அவள் சொன்னாள், "1948லயும் நம்ம பிரதமரோட பேர் மன்மோகன்சிங் தான் அங்க்கிள். அவரு என்ன வருஷத்துக்கு ஒரு பேரா மாத்திக்குவாரு...?" நான் 'ழே'யென்று விழிக்க, நண்பனின் மனைவி வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "அண்ணா... இன்னிக்கு வாரமலர்ல இந்தத் துணுக்கு வந்திருக்கு. நான் படிச்சுட்டு சிரிச்சிட்டிருந்தப்ப, இவ என்னன்னு கேட்டா. விளக்கமா சொன்னேன். இப்ப ப்ராக்டிகலா உங்ககிட்ட டெஸ்ட் பண்ணிட்டா..." அவ்வ்வ்வ்! இன்றையக் குழந்தைகள் ரொம்பத்தான் வெவரமப்பா!

================================================

ண்களில் ஏழு என்கிற எண் மனிதர்களோடு விசித்திரத் தொடர்புடைய ஒரு எண்ணாகும். ஏழு பிறப்பு, ஏழு உலகங்கள், ஏழு ராகங்கள் என்று ஏழுக்குப் பின்னாலே உள்ள விஷயங்கள் ஏன் ஏழோடு நின்றுவிட்டன? அது ஏன் எட்டுப் பிறப்பு என்றோ எட்டு உலகங்கள் என்றோ குறிப்பிடப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் உலகம் என்றால் ஏழு, உருவம் என்றாலும் ஏழு, பிறப்பென்றாலும் ஏழு என்று எழு பிரதானப்படு
த்தப்படுவதன் பின்னாலே சில சித்த சூட்சுமங்கள் உள்ளன.

நம் உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, வெளி, நெருப்பு என்கிற ஐந்துமே நம் உடம்புக்குள்ளேயம் உள்ளது. நம் உடம்பில் மட்டுமல்ல... மிருகங்கள், தாவரங்களிடம் கூட இந்த ஐந்துவிதக் கூறுகள் உண்டு. இந்த ஐந்தும் ஒன்று சேர்ந்து உருவாகின்ற ஒரு விஷயமே நம் உடலாகும். மனிதர்களிடம் மட்டும் இந்த ஐந்து சற்று விரிந்து ஆறு என்ற ஒரு அறிவைப் பெற்று நிமிர்கின்றது. ஆறாகிய அறிவுதான் எண்ணங்களாகிய மனமாக வடிவம் கொள்கிறது. எண்ணங்கள் என்றாலே அது சப்தம்தானே? அதாவது, ஆறாகிய அறிவு ஏழாகிய சப்தமாகிறது. இந்த சப்தம்தான் பாட்டு, பேச்சு, மௌனம் என்று பல வடிவங்களை எடுக்கிறது. மொத்தத்தில் மனிதன் அறியப்படுவது, வளருவது, வாழ்வது என்கிற எல்லாமே அவன் பேசுவதை வைத்துத்தான்.

இதைவைத்தே அவன் அரிய பல உண்மைகளை எட்டுகிறான். ஏழு முதிர்ந்தால் அடுத்தது எட்டு... எட்டி விட்டால் அடுத்துது ஒன்பது! இந்த ஒன்பதுக்கு ஒரு விசி¢த்திரமான தன்மை, இதை எதால் பெருக்கினாலும் இதன் மடங்குகளில் இது மாறவே மாறாது. அவை எல்லாமும் கூட்டுத் தொகை ஒன்பதாகவே முடியும். மாறாத் தன்மை உடையதை நாம் கடவுளாக நினைக்கிறோம். கடவுளே அழியாத, அழிக்க முடியாத சக்தி. ஒன்பதிடமும் அந்தத் தன்மை பொருந்துகிறது. அதனால்தான் ஒன்பது சார்ந்த விஷயங்களை ¨நவ சக்தி¨, ¨நவக்கிரகங்கள்¨, ¨நவநாயக சித்தர்கள்¨ என்கிறோம்.
                                                         -¨சிவரகசியம்¨ நூலில் இந்திரா சௌந்தர்ராஜன்

================================================
 
ரண்டு மாதத்திற்கு முன் என் பழைய கணக்கு என்ற தலைப்பில் என்னுடைய சிறுவயது நினைவுகளை ப்ளாஷ்பேக்கிய போது அதில் நான் முதன் முதலாக வாட்ச் கட்டியது பற்றியும், அது நன்றாகத் தெரிய வேண்டும் என்ற ஆவலில் புகைப்படங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் மூக்கை (வாட்சை?) நுழைத்ததைப் பற்றியும் சொல்லியிருந்தேன். அந்தப் படங்கள் எதுவும் இல்லையா என்று சில நட்புகள் கேட்டிருந்தனர். சமீபத்தில் சித்தி வீட்டிற்குச் சென்று அந்தப் பழைய படங்களைத் தேடி எடுத்து வந்தேன். அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. கிடைக்கிற கேப்ல முகத்தையும்... முக்கியமா கையையும் நீட்டிட்டிருக்கற அந்தச் சிறுவனாவே நான் இருந்திருக்கலாம்... ஹும்!

================================================

* ஒரு மனிதன் விமானத்தில் சாகசங்கள் செய்வதற்காக மேலே பறந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக தரையில் ஒரு வைக்கோல் போர் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு கூரிய கடப்பாரை வைக்கோல் போரிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் கடப்பாரையில் விழவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவன் வைக்கோல்போர் மேலும் விழவில்லை.

* ஒருமுறை எங்களூர் டூரிங் டாக்கீஸில் 'கந்தன் கருணை' படம் பார்க்க என் பாட்டியையும் அழைத்துப் போயிருந்தேன். முருகனாக நடித்த சிவகுமார் கையில் வேலுடன் தோன்றியதும் பாட்டி எழுந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். பின்னாலிருந்து ஒரு குரல், "பாட்டி... அது முருகன் இல்லை, சிவகுமார்! உக்காரு..." என்றது. அதைத் தொடர்ந்து சிலர் சிரிக்கும் சப்தம் கேட்க, எனக்கு அவமானமாக இருந்தது. பாட்டி குரல் வந்த பக்கம் திரும்பி, "எவன்டா அவன்...? சிவகுமாரன் என்றால் முருகன்தான் என்பது தெரியாதவன்..." என்று சத்தமிட... எல்லாப் பக்கமும் கப்சிப்!

* பாரதிதாசன் 'குயில்' ஏடு நடத்திக் கொண்டிருந்த நேரம். முத்துப்பேட்டையில் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தினரிடம், "இந்தப் பக்கமெல்லாம் குயில் கிடைக்குதா?" என்று கேட்டார். முதியவர் ஒருவர் சூள் கொட்டிவிட்டுச் சொன்னார்... "எங்கேங்க கிடைக்குது? இந்தப் பக்கம் இருந்த காட்டையெல்லாம் வெட்டிப்புட்டானுங்களே... குயில் எங்கருந்து கெடைக்கும்?" என்று.

-இவை சுட்ட பழங்கள் பழைய 'குமுதம்' இதழ்களிலிருந்து!

================================================

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன?  காத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. 

================================================

To end with a smile :

"அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க‌ வருவாங்காளா?"  "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?"  "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."​

Monday, July 15, 2013

மொறு‌மொறு மிக்ஸர் - 19

Posted by பால கணேஷ் Monday, July 15, 2013
டந்த ஒரு வாரமாக  இணைய இணைப்பு மூன்று நாட்கள் சொதப்பியதென்றால், கீ போர்ட் ஸ்ட்ரக்காகியதி்ல் எதையும் டைப் செய்ய முடியாமல் பேக்ஸ்பேஸாக விழுந்து இரண்டு நாட்கள் படுத்தியெடுத்ததின் விளைவாக இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. மொபைல் மூலம் ‌முகநூல்தான் எளிதில் படிக்க முடிகிறது; ஒன்றிரண்டு தளங்களைத்தான் படிக்க முடிந்தது. இப்பவும் இணைய இணைப்பு முழுமையா சரியாகலை. இருந்தாலும்... உங்களோட ஒரு வார நிம்மதியைப் பறிக்க இதோ வந்தூட்டேன்.... ஹா... ஹா...!

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=

ந்த ஆண்டு மெகா பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்துப் பேசுவதற்காக நேற்று மாலை வழக்கமான இடமான கே.கே.நகரிலுள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ஸில் நான், மெ.ப.சிவகுமார், கே.ஆர்.பி., பட்டிக்காட்டான் ஜெய், ஆரூர் மூனா செந்தில், அரசன், புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி, செல்வின், ரூபக்ராம் ஆகியோர் சந்தித்தோம். முதலில் நானும் ரூபக் ராமும் ஒரே சமயத்தில் வர, பின்னர் பட்டிக்காட்டானும், ஆரூர் மூனா செந்திலும் வர, நால்வருமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே பார்க் செய்து கொண்டிருந்த எங்கள் வாகனங்களை போலீஸ் வேனில் ஏற்றுவதாக மேலே தகவல்வர, வேகமாக கீழே ஓடினோம். கீழே சில டூவீலர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நானும் பட்டிக்காட்டானும் எங்கள் வாகனங்களின் பேரில் பாய்ந்து நகர்த்திவிட, ரூபக் மற்றும் செந்திலின் வாகனங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன.
டிஸ்கவரியி்ன் ‘சைடில்’
‘நோ பார்க்கிங்’ என்று அறிவிக்கப்படாத இடத்தில் நிறுத்திய வாகனங்களின் பேரில் ஏன் கை வைத்தார்கள்?’ என்ற குழப்பத்துடன் எங்கள் வாகனங்களை தள்ளி பார்க் செய்துவிட்டு நானும் ஜெய்யும் வர, செந்திலும் ரூபக்கும் வேனிலிருந்த போலீஸ்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘நோ பார்க்கிங் போர்டு சைடு ரோடுல வெச்சிருக்கு. நீங்க பாக்கலை’’ என்றார் அந்த போலீஸ்காரர். பட்டிக்காட்டான் அவரிடம் நேராகச் சென்று, ‘‘நாங்கள்ளாம் ப்ளாகர்ஸ் சார்...’’ என்றதும் போலீஸ்காரர் ‘ழே’யென்று விழித்தார். ‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்? பக்கத்துல இருக்கற மூணு பேரும் வேணா கறுப்பா இருக்காங்க. ப்ளாக்கர்ஸ்னு சொல்லலாம்’’ என்று நினைத்தாரோ என்னவோ... பட்டிக்காட்டான் மீண்டும், ‘‘நெட்ல எழுதறவங்க... ரைட்டர்ஸ் சார்...’’ என்றதும் தலையாட்டிக் கொண்டார். பலனெதுவும் இல்லை. செந்தில், ரூபக் வாகனங்களுடன் கைப்பற்றப்பட்ட ஒரு ஸ்கூட்டரை மட்டும் (அதன் ஓனர் பெண்ணானதால்) விட்டுவிட்டார். பெண்ணென்றால் பேயே இரங்கும் எனும்போது ‘மாமா’க்கள் இரங்க மாட்டார்களா என்ன? இவர்களிடம், ‘‘சரி, ஸ்டேஷன்ல வந்து வண்டியை எடுத்துக்கங்க’’ என்று வேகமாக வண்டியை கிளப்பிச் சென்று விட்டார்.

டிஸ்கவரியின் எதிர்புறம்
ரூபக்கும், ஆரூர் மூனாவும், அப்போதுதான் வந்து சேர்ந்த கே.ஆர்.பி.யுடன் காவல் நிலையத்துக்குப் ப‌ோனார்கள். அங்கே வழக்கம் போல ‘கப்பம்’ கட்டிவிட்டு தங்களின் வாகனத்தை மீட்டுக் கொண்டு வெற்றி வீரர்களாகத் திரும்பினர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால்.... டிஸ்கவரி புக் பேலசின் சைடிலும், எதிரிலும் நோ பார்க்கிங் போர்டு வைத்திருந்த இடங்களை இங்குள்ள படங்களில் பாருங்கள்.... ரைட் ராயலாக அங்கே வண்டியை பார்க் செய்திருக்கிறார்கள் பாவிகள்...! இதையெல்லாம் கண்டுக்காத இந்த ‘வசூல் சக்கரவர்த்தி’களுக்கோ அப்பாவிகளான நாங்கள் நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியதுதான் சமூகக் குற்றமாகப் பட்டிருக்கிறது. அட தேவுடா, இக்கடச் சூடுடா!

அதெல்லாம் சரி... பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? அதற்கென தனித் தளம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கே தொடர்ந்து செய்திகள் பகிரப்படும். அதன் லின்க் அனைவரின் பதிவிலும் இருக்கும். சற்றே வெய்ட்டீஸ் ப்ளீஸ்!


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


காலக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூவரும் தேவலோகத்தில் கூடிப் பேசி்க் கொண்டிருந்தபோது தேவலோகவாசி ஒருவர் அவர்களிடம் ‘‘லக்ஷ்மி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம் என்று தேவிகளின் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களே... ஏன், பரமசிவன் கல்யாணம், முருகன் கல்யாணம் என்று அழைப்பதில்லை?’’ என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அப்போது அங்கு வந்த வைகுந்தவாசனான ஸ்ரீநிவாசன் பெருமையாக, ‘‘ஏன்... ஸ்ரீநிவாசன் கல்யாணம் என்று சொல்லி என்னைப் பெருமைப்படுத்துகிறார்களே...’’ என்று கூற, அருகிலிருந்த மகாலக்ஷ்மி இடைமறித்து, ‘‘அதிலும் என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள். உங்கள் திருநாமத்தின் முதல் எழுத்தான ஸ்ரீ என்னைத்தானே குறிக்கிறது!’’ என்று கூறிவிட்டுக் கணவரைப் பெருமையுடன் பார்த்தாளாம்!
-கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கேட்டு ரசித்ததாக (பழைய) விகடனில் வெளியான துணுக்கு.

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


                                              முதல் நாவல் உருவான கதை!

‘‘எ
ன்னுடைய முதல் நாவலான ‘பவானி’யை 1944-ல் எழுதினேன். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த சமயம்... விடுமுறையை வீணாக்காமல் நாலு குயர் வெள்ளைக் காகிதம், பார்க்கர் பவுண்டன்‌  பேனா, இங்க் புட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டின் மாடியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தொடர்ந்து ஏழு நாட்கள் இரவும் பகலும் விடாமல் இந்த நாவலை எழுதி முடித்தேன்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் என்ற சிற்றூரில் நாங்கள் ஏழெட்டு வருடங்கள் இருந்தோம். அங்கே வி்ண்ணாரம்பள்ளி ஜமீன்தாருக்கு என் தந்தை குடும்ப டாக்டராக இருந்தார். இதனால் ஜமீன்தார் குடும்பத்தினருடன் சமமாகப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அனுபவமே ‘பவானி’ நாவலில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சித்தரிப்பதற்கு உதவியது.

காவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் ‌போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
                                                          -நாவலாசிரியை ‘லக்ஷ்மி’  (நன்றி: 12.8.84 ஆ.வி.)


Monday, June 10, 2013

மொறுமொறு மிக்ஸர் - 18

Posted by பால கணேஷ் Monday, June 10, 2013
                                  
                                              மனசையும் நிறைத்த ‘தாய்’ மீல்ஸ்!

ழக்கமாக என் தாய் செய்து தரும் மீல்ஸையே சாப்பிட்டு வந்த எனக்கு நேற்று ‘தாய்’லாந்து மீல்ஸை ருசி பார்க்கும் அனுபவம் கிட்டியது. ‘‘சார்.. ஆழ்வார்பேட்டைல எஸ்.ஐ.ஈ.டி. காலேஜ் எதிர்ல ஒரு ஹோட்டல்ல ‘தாய்லாந்து’ ஃபுட் நல்லாயிருக்காம். ஆரூர் மூனா ஒரு மணிக்கு வர்றதா சொல்லியிருக்காரு. நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?’’ என்று மெ.ப.சிவகுமார் கேட்டபோது, ‘‘ஓ.கே. சிவா’’ என்று சம்மதி்த்தேன். ஆனால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட கேபிள், ‘‘தாய்லாந்து ஃபுடஸ் எல்லாமே ஸ்வீட் அண்ட் ஸோர் பேஸ்டா இருக்கும். விசாரிக்காம போனா ‘ழே’ன்னு முழிக்க வேண்டியிருக்கும். கான்டினென்டல் ஃபுட் பிடிக்காதவங்களுக்கு பிடிக்காது’’ என்றதும் கொஞ்சமென்ன... ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஆரூரார் அங்கேதான் சாப்பிட வேண்டுமென்று ஒற்றைக் காலில் நி்ன்றதால் அங்கேயே போனது நால்வர் அணி. தாய்லாந்துசெட் நான்வெஜ் லன்ச் ஆர்டர் பண்ணினார் ஆரூரார்.

முதலில் ஸ்டார்ட்டராக வெற்றிலை ஒன்றில் கொஞ்சம் கடலை, கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் சாஸ் எல்லாம் போட்டு பீடா மாதிரி ஒன்றைத் தந்தார்கள். என்னடா இது... கடைசில தர்ற பீடாவை முன்னாலயே தர்றாங்களேன்னு பாத்தா, அது பசியைத் தூண்டறதுக்காகன்னாரு கேபிள். சாப்ட்டுப் பாத்தா.. ரொம்பவே நல்லா இருந்தது. அடுத்ததா சூப் வந்தது. சூப். அதுவும் ஏமாற்றவில்லை. நல்ல ருசி! மூன்றாவதாக அவர்கள் தந்தது மாங்காயை மெல்லியதாக நறுக்கி சு‌வை சேர்த்த நூடுல்ஸ் மற்றும் சிக்கன் பீஸஸ்! மாங்காயின் இனிப்பு சுவையுடன் பற்களில் ஒட்டாத க்ரிஸ்பியான சிக்கன் பீஸ்களுடன்.... சூப்பரு்ஙகோ!

அப்புறம் ஒரு நூடுல்ஸ் தந்தார்கள் பாருங்கள்... நான் வாழ்க்கையில் இதுவரை சாப்பிடதிலேயே ரியல் டேஸ்ட் நூடுல்ஸ் இதுதாங்கோ..! எக்ஸ்ட்ரார்டினரி. பின் கொஞ்சம் ரைஸும், சிககன் குருமாவும்! இதுவும் ஏமாற்றாத சுவையில். கடைசியாக டெஸர்ட் கொடுத்தார்கள். தேங்காய்ப் பாலில் பலாச்சுளைகளை சிறிதாக கட் பண்ணி மிதக்கவிட்டு அதற்கு மேல் வெனிலா ஐஸ்க்ரீமை மிதக்க விட்டு.... ரியலி எக்ஸ்ட்ரார்டினரிலி டிவைன்லி டெஸர்ட்!

தாய் செட் லன்ச் ‌நான்வெஜ் ரூ.246ம் வெஜ் லன்ச் ரூ.226ம் என விலைப்பட்டியல் சொல்கிறது. இந்த டைப் தாய் லன்ச் சாதாரணமாக ரூ.700 ஆகுமென்றும், அறிமுகத்துக்காக இந்த விலை என்றும் ஆரூரார் சொன்னார். முகவரி: Sawadika, 21/45, First Floor (Opp. to S.I.E.T. College), K.B.Dasan Road, Alwarpet, Chennai-600 018. ஆழ்வார்பேட்டையில் கே.பி.தாசன் ரோடு எது என்று யோசிக்காதீர்கள். கவிஞர் பாரதிதாசன் ரோடு என்பதைத் தான் அத்தனை லட்சணமாக சுருக்கியிருக்கிறார்கள் அங்குள்ள கடைக்காரர்கள்! (டமில் வாலுக!) அடம்பிடித்து இங்கு எங்களை அழைத்துச் சென்ற (முக்கியமாக பில்லும் கொடுத்த) ஆரூரார் வாழ்வாங்கு வாழட்டும்!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=


                                     துணிச்சலின் மறுபெயர் எம்.ஆர்.ராதா!

‘தூக்குமேடை நாடகத்துக்கு நாட்டுல எவ்வளவு ஆதரவு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது.’’

‘‘பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன்முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?’’

‘‘நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே! அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி வைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துகளிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியா இருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சி கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவுசெய்து டிக்கெட்டைக் கவுண்ட்டர்லே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்கம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான் தயாராயிருப்பேன்.

‘‘நீங்க பார்த்திருப்பீங்களே... நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா? இருக்கவே இருக்காது. எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு? மனுஷனைக் கண்டு பயந்தா? ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லாச் சாமியும் அப்படியிருக்கு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி ‘சாமி’யாவே இருந்துக்கிட்டிருந்தேன்..!’’

‘‘சுவாமிகள் ஏதாவது ‘தப்புத் தண்டா’ செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள். நீங்கள் ‘தப்புத் தண்டா’ செய்தால்....’’

‘‘‘‘நானாக எப்பவுமே எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டேன். எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...’’

‘‘அது உங்கள் ஜாதக விசேஷம் போலருக்கு...’’

‘‘இல்‌லே... நாடக விசேஷம்!’’

-‘எம்.ஆர்.இராதா-வாழ்க்கையும் சிந்தனையும்’ என்ற விந்தன் எழுதிய நூலை சென்னை கே.கே.நகரில் 5D, பொன்னம்பலம் சாலையில் இயங்கி வரும் ‘தோழமை’ பதிப்பகம் ரூ.80 விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. கேள்வி-பதில்களாக எம்.ஆர்.ராதாவுடன் உரையாடியதை அவருடைய வார்த்தைகளிலேயே தொகுத்துத் தந்திருக்கிறார் திரு.விந்தன். படிககப் படிக்க சுவாரஸ்யமாகவும், யார் என்ன சொல்வார்களோ என்ற கவலை எதுவுமின்றி நிஜம் பேசியிருக்கும் எம்.ஆர்.ராதா என்ற துணிச்சல்காரரின் சுயரூபத்தைக் கண்டு பிரமிப்பும் விரிகிறது.  விருப்பமிருப்போர் வாங்கி வாசித்து இந்த அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                             நான் படித்த சில ந(பொ)ன்மொழிகள்:

பெண் என்பவளே என் தாய், என் சகோதரி, என் துணைவியும் அவளே, பெண்ணே என் மகள் என்னும் உணர்வு ஆண்களிடம் வேரூன்றித் தழைத்தால் பெண்ணுக்கு இழிவு நேருமா? நேராதே!

ன்னம்பிக்கை என்பதற்கும், ஆணவம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிக நுண்மையானது. வலிமை குறைந்தவரிடம் ‘நான்’ ‘என்’ என்பவை தன்னம்பிக்கை. அதுவே வலிமை நிறைந்தவரிடம் ஆணவம் என்று பெயர் பெறும்.

டம்பும் ஒரு பாத்திரம்தான். அதில் அன்பு நிரந்தரமாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது பரிமளிக்கும். நாம் அன்பாகத்தான் இருக்கிறோம். ஆனால் அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறிக் கொண்டே இருககிறதல்லவா? அப்படி இல்லாமல் நிலையாக அன்பு செய்ய வேண்டும்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                                           கொஞ்சம் ஹிஹிங்க...!

To end with a smile... இரண்டு ‌ஜோக்குகளைப் படித்து கொஞ்சம் ரிலாக்ஸ்... எப்போதோ எங்கேயோ கேட்ட, நான் ரசித்த ஜோக்குகள்.

1) மிக வேகமாக பாரில் நுழைந்தான் அவன். அங்கிருந்த விற்பனையாளனிடம், ‘‘சண்டை துவங்குவதற்குமுன் எனக்கு சீக்கிரமாக விஸ்கி ஒரு லார்ஜ் கொடு’’ என்றான். விற்பனையாளன் வியப்படன் ஊற்றிக் கொடுத்தான். அவன் மடமடவென்று குடித்துவிட்டு, மீண்டும், ‘‘சண்டை துவங்குவதற்குள் இன்னொரு லார்ஜ் கொடு’’ என்றான். அவன் மறுபடி ஊற்றிக் கொடுக்க, அவசரமாகக் குடித்து வைத்தான். இதே டயலாக்கைச் சொல்லி இப்படி ஐந்து லார்ஜ்கள் குடித்துவிட்டான். ஆறாவது லார்ஜை இதே வசனத்துடன் அவன் கேட்டபோது, விற்பனையாளன் கேட்டான் வியப்புத் தாளாமல்... ‘‘சண்டை துவங்கப் போகிறது என்கிறாயே... எங்கே துவங்கப் போகிறது. யாருக்கும் யாருககும் சண்டை?’’ ஆறாவது லார்ஜை நிதானமாகக் குடி்த்து முடித்த அவன் சொன்னான், ‘‘இங்கேதான் துவங்கப் போகிறது! உனக்கும் எனக்குமிடையில் தான்! நான் இதுவரை குடித்த ஆறு லார்ஜ்களுக்கும் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை!’’

2) அமெரிக்காவுக்கு சுற்றிப் பார்க்கச் சென்ற நம் இந்தியர் ஒருவருக்கு அவசரமாக ‘சுச்சா’ ‌போக வேண்டியிருந்தது. ஆள் நடமாட்டமற்ற தெரு ஒன்றைக் கண்டுபிடித்து, நம்நாட்ட வழக்கப்படி சாலையோரம் ஜிப்பை இறக்கப் போகையில் பின்னால் வந்து நின்ற அமெரிக்க போலீஸ்காரன் அவர் தோளில் தடியால் தட்டினார். ‘‘இங்கேயெல்லாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது மிஸ்டர்! உனக்கு அவசரமெனில் நான் வேறொரு இடம் காட்டுகிறேன். அங்கே போயக் கொள்...’’ என்றான். நம்மவருக்கு ஒரே குஷி! ‘‘சீக்கிரம் இடத்தக் காட்டுப்பா’’ என்றார். அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி அழைத்துச் சென்று ஒரு அழகான கட்டிடத்தைக் காட்டினார். அந்தக் கட்டிடத்திற்கு முன்னால் விசாலமாகப் புல்வெளிகளும், மரங்களும் இருந்தன. ‘‘இங்கே நீ விரும்பியதைச் செய்யலாம்’’ என்றார். நம்ம ஆள் அவசரமாக ஓடி ஒரு மரத்தின் மறைவில் ‘வேலை’யை முடித்துவிட்டு வந்து போலீஸ்காரனிடம், ‘‘சாலையோரம் செய்வதை விடுத்து இவ்வளவு அழகான கட்டிடத்தின் புல்வெளிக்கு ஏன் கூட்டி வந்தாய் என்னை? இது என்ன இடம்?’’ என்று கேட்டார். போலீஸ்காரன் நிதானமாகப் பதில் சொன்னார்... ‘‘இதன் பெயர் இந்தியத் தூதரகம் தம்பி!’’ என்று.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
மைதானத்தில் மேய : சித்திரமேகலை-1
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube