Tuesday, February 28, 2012

மனதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக்‌ கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்! வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு...

Sunday, February 26, 2012

கடுகு அவர்களின் சதாபிஷேகம்

Posted by பால கணேஷ் Sunday, February 26, 2012
என்னுடைய நண்பரும், நலம் விரும்பியுமான, அகஸ்தியன், கடுகு ஆகிய பெயர்களில் எழுதி வரும் திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா தம்பதியினரின் சதாபிஷேக விழா நேற்று (25.2.12) நடைபெற்றது. கடுகு அவர்கள் பிரபல பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெற்ற எழுத்தாளர் மட்டுமின்றி வலைத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வரும் உற்சாக இளைஞர். இந்த விழாவில் வலையுலகின் சார்பாக நானும், ஷைலஜா அக்காவும் மகிழ்வுடன் கலந்து கொண்டோம். நூல் வெளியீடு! நானும் இருக்கேன்ல... கண்டுபிடிங்க! நானும்...

Thursday, February 23, 2012

டி.வி.யில் சரிதா!

Posted by பால கணேஷ் Thursday, February 23, 2012
அன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்‌போதே ஆச்சரியம் காத்திருந்தது. அலங்கார பூஷணியாக (பூசணி இல்லங்க...) சிரித்த முகத்துடன் வரவேற்றாள் சரிதா. ‘‘என்னங்க... முகம் கழுவிட்டு வாங்க. பக்கோடாவும், கேரட் அல்வாவும் பண்ணிருக்கேன். தர்றேன்...’’ என்றாள். ‘‘என்ன விசேஷம்? ஊர்ல மாடு கன்னு போட்டுட்டதா உங்கம்மாட்டருந்து லெட்டர் எதுவும் வந்ததா? இல்ல... உங்கண்ணன் மகன் அதிசயமா ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டானா?’’ ‘‘எங்க பக்கத்து மனுஷங்களை வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதே உங்களுக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நான், லோசனி, கல்பனா, பார்வதி எல்லாரும் கயா டிவியில லூஸ்ஷாட்...

Tuesday, February 21, 2012

நடை வண்டிகள் - 5

Posted by பால கணேஷ் Tuesday, February 21, 2012
சுபாவும், நானும் - 2 சுபா எனக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப் போவதாகச் சொன்னதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அது... சுபா எழுதிய சிறுகதைகள் 350க்கும் மேல் எண்ணிக்கையில் இருந்தன. அவற்‌றையெல்லாம் ‌டைப் செய்து, ஸாஃப்ட் காப்பியாக கணிப் பொறியில் சேமித்து வைத்துக கொள்ள விரும்பி, அந்தப் பணியைச் செய்துதர இயலுமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவசரமாக முடிக்க வேண்டிய பணியல்ல என்பதை விளக்கி, அதற்காக ஒரு குறுந்தொகையையும் (இலக்கிய புத்தகம் அல்ல... Small...

Monday, February 20, 2012

புலவர் சா.இராமாநுசம் அவர்களின் ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா நேற்று தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்தது. நான்கு மணிக்கு விழா என்பதால் நான்கு மணிக்குச் சென்றேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றவர் புலவரின் மகள் திருமதி. சித்ரா சீனிவாசன். அவர் என்னை புலவரையாவிடம் அழைத்துச் செல்ல, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் பல சான்றோர்களை எனக்கு அறிமுகம் செய்வித்தார். சற்று நேரத்தில் நண்பர் சென்னைப் பித்தன் வந்து என்னோடு இணைந்து கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்க, விழா துவங்குவதற்குச் சற்று முன் தோழி ஸ்ரவாணி தன்...

Saturday, February 18, 2012

ஓடாத ரயில்! ஒளிரும் மர்மம்!

Posted by பால கணேஷ் Saturday, February 18, 2012
பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில் பயணங்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. கால்களை வசதியாக நீட்டக் கூட முடியாமல், அவசரமாக இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் அடக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன், எந்த நேரம் டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்கிற சன்னமான பீதியுடன் பேருந்துகளில் பயணிப்பது என்னைப் பொறுத்தவரை நரகம். ரயிலில்... அதுவும் பகல் நேர ரயில்களில் பயணிப்பது என்றால் அப்படி ஒரு தனி குஷி எனக்கு! கம்பார்ட்மெண்ட்களை இணைக்கும் பாதை வழியாக பல பெட்டிகள்...

Thursday, February 16, 2012

நடை வண்டிகள் - 4

Posted by பால கணேஷ் Thursday, February 16, 2012
சுபாவும் நானும் - 1 1983 டிசம்பர் மாதம். ஆனந்த விகடனில் ‘சிம்மாசனம்’ என்ற தலைப்பில் வந்திருந்த சிறுகதையைப் படித்த என் சித்தி, என் அம்மாவிடம் அதை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்தில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு பத்திரிகைகள் படிக்காத நான், சித்தி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போனதும் (டீச்சர்ங்க!) விகடனை எடுத்துப் படித்தேன். அந்தச் சிறுகதையின் நடையழகும், கருப்பொருளும் மனதைக் கொள்ளை கொண்டது. எழுதியது யாரென்று பார்த்தேன். சுபா! ‘யாரிந்தப்...

Tuesday, February 14, 2012

பசிப்பிணி என்னும் பாவி

Posted by பால கணேஷ் Tuesday, February 14, 2012
மக்களின் அடிப்படைத் தேவை நிறைவேறினாலே போதும். அவர்கள் வசிக்கும் இடம் பொன்னுலகம். அவர்களுக்கு உணவும், நீரும், உறைவிடமும் தவிர வேறென்ன வேண்டும்? பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா? பசியால் வருந்துபவரின் இரங்கத்தக்க நிலை எப்படி இருக்கும்? மணிமேகலை அதைக் காட்சியாக்குகிறது. குடிச் சிறப்பை நினையான், போற்றி ஒழுகிய ஒழுக்கத்தை மறப்பான், காக்கும் கடமை மறந்து, துணைவி, குழந்தை என்போர் பெருமிதமுறச் செய்ததை மறந்து அவர்களுடன் மற்றவர் வாசலில் நிற்கச் செய்யுமாம்....

Sunday, February 12, 2012

மொறுமொறு மிக்ஸர்-3

Posted by பால கணேஷ் Sunday, February 12, 2012
வணக்கம் நண்பர்களே, ஒரு சேஞ்சுக்காக... Let us begin with a smile... வரைந்தவர் : என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.  சமீபத்தில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதத் துவங்கியிருக்கிறார் தாஸ். ஒருமுறை சென்று பாருங்களேன்... http://pukkoodai.blogspot.in/ ============================================ சமீபத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு...

Friday, February 10, 2012

நடை வண்டிகள் - 3

Posted by பால கணேஷ் Friday, February 10, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 3 கோவை தினமலரிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகிப் போனதும் அங்கே ‘கதை மலர்’ என்று வந்து கொண்டிருந்த வார இணைப்பிதழுக்கு பொறுப்பு கொடுத்தார்கள். அந்த இதழுக்காக ஆர்.கே.வுக்கு போன் செய்து, ‘ரத்தினங்கள் போல ஒன்பது முத்திரைச் சிறுகதைகள் (முன்பே எழுதியதாயினும்) தாருங்கள்’ என்று கேட்டேன். அவருக்கு அப்போது அவகாசமில்லாததால் என்னையே செலக்ட் செய்து ‌போட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார். பின்னர் கோவை சென்று (வழக்கம்போல்) அவரைச் சந்தித்த போது...

Wednesday, February 8, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 08, 2012
தோழி ஸ்ரவாணி தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. தோழி ஷக்திப்ரபா எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். விஷயமறிந்ததும் என் உணர்வுகளை நேர்மையாகச் சொல்வதென்றால் பாராட்டுப் பெற்றதில் நிறைய மகிழ்ச்சி + இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நல்ல விஷயங்களைத் தர வேண்டுமே என்ற பயம். இப்படிக் கலவையான உணர்ச்சிகளில் இருக்கும் நான் என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விருது வழங்கிய ஷக்திப்ரபா...

Sunday, February 5, 2012

நடை வண்டிகள் - 2

Posted by பால கணேஷ் Sunday, February 05, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 2 கோவை தினமலரில் நான் கணிப்பொறிப் பிரிவில் பணியில் சேர்ந்தபோது அங்கு வடிவமைப்புப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த விஜயன் எனக்கு நெருங்கிய நண்பனானான். என்னைவிட வயதில் சிறியவனாய் அவன் இருந்தது எந்த விதத்திலும் நட்புக்குத் தடையாக இருக்கவில்லை. கோவையில் எங்கே சுற்றுவதென்றாலும் அவன் இல்லாமல் தனியே செல்வதில்லை. அத்தனை நெருங்கிய நட்பு எங்களுடையது. கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகியிருந்த நிலையில் நண்பர் ராஜேஷ்குமார் என்னிடம் மூன்று...

Saturday, February 4, 2012

ஆனந்த அதிர்வுகள்

Posted by பால கணேஷ் Saturday, February 04, 2012
‘ராஜேஷ்குமாரும் நானும்’ என்ற தலைப்பில் நான் நடைவண்டிகள் தொடரை ஆரம்பித்திருந்தேன். அனைவரும் ரசித்து, உடனே தொடரச் சொன்னதால் உடனே அடுத்த பகுதியை வெளியிட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் இரண்டு விஷயங்கள் குறுக்கிட்டு, அதை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன். மன்னிக்க. =========================================== ‘‌ராஜேஷ்குமாரும் நானும்’ முதல் பகுதியைப் படித்து விட்டு கோவையிலிருந்து...

Wednesday, February 1, 2012

நடை வண்டிகள் - 1

Posted by பால கணேஷ் Wednesday, February 01, 2012
ராஜேஷ்குமாரும் நானும்! - 1 ராஜேஷ்குமார் அவர்களை ‘க்ரைம் கதை மன்னன்’ என்றுதான் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவர் ‘குமுதம்’ இதழிலும், ‘சாவி’ அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குங்குமம்’ இதழிலும், பின்னர் சாவியிலும் ஏராளமான சிறுகதைகள் எழுதும் போதிலிருந்தே அவரின் ரசிகன் நான். அவர் எழுதிய சிறுகதைகளையெல்லாம் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன். (அவருடனான என் நட்பு இறுகுவதற்கு அவை ஒரு கருவியாக இருந்தது பின்னாட்களில்). அவர் சாவி அவர்கள் நடத்திய ‘மோனா’ வில்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube