Monday, April 30, 2012

கடுகு சிறுத்தாலும்....

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012
நேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம்....

நான் ‘வாத்தியார்’ ஆயிட்டேன்..!

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012
‘‘என்னது... கணேஷ் ஆசிரியரா?’’ என்னோட 100வது பதிவைப் படிக்க வருகை தந்த அனைவருக்கும் கரம் கூப்பிய நன்றி! எந்தப் பள்ளிக்கூடத்துல எனக்கு வேலை கிடைச்சதுன்னும், என்கிட்டப் படிககிற பிள்ளைங்கல்லாம் பாவம்னும் உங்க மனசுல இந்நேரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்கும். எல்லாத்தையும் ரப்பர் வெச்சு சுத்தமா அழிச்சிடுங்க. நான் ஆசிரியர் (வாத்தியார்) ஆகியிருக்கிறது இந்த வார ‘வலைச்சரம்’ தளத்துக்கு. உஙக எல்லாரோட வாழ்த்துக்களோடயும், ஆதரவோடயும் இந்த வாரத்தை சிறப்பாப்...

Saturday, April 28, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீ்க்கிங்-4

Posted by பால கணேஷ் Saturday, April 28, 2012
1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.   நான் பார்த்த சினிமாக்கள்! படஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ,...

Thursday, April 26, 2012

நடை வண்டிகள் - 14

Posted by பால கணேஷ் Thursday, April 26, 2012
பி.கே.பி.யும், நானும் - 6 பி.கே.பி ஸார் ஒரு PERFECTIONIST. செய்யும் வேலைகளில் 100 சதவீதம் ரிசல்ட்டை எதிர்பார்ப்பார். தாம் செய்யும் வேலைகளிலும் எதிலும் அலட்சியமின்றி அவ்விதமே இருப்பார் அவர். நான் அப்படியான ஆசாமியில்லை. நான் மனதில் வைத்திருந்த டிசைனை என்னால் செயல் வடிவத்தில் கொண்டு வர முடிந்து விட்டாலே திருப்தியாகி விடுவேன். அதில் சின்னச் சின்ன இடறல்கள இருப்பதை பெரிதுபடுத்த மாட்டேன். அதாவது... 80 சதவீதத்திலேயே திருப்தியாகி விடுகிற ஆசாமி. அதற்கு...

Monday, April 23, 2012

பல்லியென ஒல்லியான கில்லி - சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 23, 2012
கொஞ்ச நாளாகவே ஒரே கவலைமயமாக இருந்தாள் சரிதா. சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தபோது அவள் தோழிகள் எல்லோரும் வந்திருக்க, அவர்கள் வீட்டு வாண்டுகள் ‘குண்டு மாமி’ என்று இவளைக் கூப்பிட்டதும், தரையை சரியாக கவனிக்காமல் நடந்து, விரிப்பில் கால் இடறி இவள் தோழியின் மேல் விழுந்து வைக்க... அவள் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு ஒரு வாரமாக இவளை போனில் வறுத்தெடுத்ததும்தான் காரணம். ‘‘என்னங்க... உண்டான போதுகூட நான் இவ்வளவு குண்டானதில்லை. எப்படியாவது உடனே வெயிட்டைக்...

Saturday, April 21, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்! - 3

Posted by பால கணேஷ் Saturday, April 21, 2012
1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். சந்திரப்பா! ஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு...

Wednesday, April 18, 2012

நடை வண்டிகள் - 13

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2012
‌ பி.கே.பி.யும் நானும் - 5 தெரிந்தோ, தெரியாமலோ ஒருத்தன் கோர்ட் படியை மிதிக்க வேண்டி வந்துட்டா, எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்கெல்லாம் ந்ன்றாவே தெரிந்திருக்கும். நிறையச் சொத்து பத்து இருக்கறவர்களுக்கே அதெல்லாம் கரைஞ்சு போயிடும். ‌சொத்து எதுவும் இல்லாத எனக்கு..? அந்தப் பிரச்னையிலருந்து நான் மீண்டு வந்தப்ப, எனக்குள் தப்பித்துவிட்ட நிம்மதி இருந்ததே தவிர, ஃபைனான்ஷியல் லெவலில் கையிருப்பெல்லாம் கரைஞ்சு போய் கிட்டத்தட்ட 0 லெவலில்தான் இருந்தேன். அடுத்த...

Monday, April 16, 2012

உலகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று... யான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094) ‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே... ‘உன்னை...

Saturday, April 14, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்..! - 2

Posted by பால கணேஷ் Saturday, April 14, 2012
1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். ‘அமுதைப் பொழியும் நிலவே’ பாட்டு வந்தா நிறுத்திடுவேன்! ‘‘அமுதைப் பொழியும் நிலவே......

Friday, April 13, 2012

நடை வண்டிகள் - 12

Posted by பால கணேஷ் Friday, April 13, 2012
பி.கே.பி.யும் நானும் - 4 பி.கே.பி. ஸாருடன் இணைந்து ஊஞ்சல் இதழுக்கு வடிவமைப்பாளராக நான் பணி செய்து கொண்டிருந்த காலங்களில் நான் ‘கல்யாணமாலை’ இதழி்ன் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேரும் போது மாதம் ஒரு இதழ் வந்து கொண்டிருந்தது, சில காலத்திலேயே நல்ல வளர்ச்சி பெற்று மாதமிரு முறை இதழாகி, பின் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘ஊஞ்சல்’ ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வரும் இதழாக முதலி்ல துவங்கப்பட்டதாலும், பி.கே.பி....

Tuesday, April 10, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!

Posted by பால கணேஷ் Tuesday, April 10, 2012
தலைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி.... 1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க....

Sunday, April 8, 2012

நான் இருக்கிறேன் அம்மா..!

Posted by பால கணேஷ் Sunday, April 08, 2012
இன்றைக்கு காலையில் அலுவலகத்துக்குப் புறப்படும் போதுகூட எனக்குள் அந்தத் திட்டமில்லை. ஏனோ திடீரென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் அடித்துக் கொண்டது. சந்திராவுக்கு போன் பண்ணிக்கூடச் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டேன். ‌சொன்னால் ‘போக வேண்டாம்’ என்று தடுக்கத்தானே பார்ப்பாள். எங்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்தே தன் மாமியாரை வெறுக்கிறவளாகத்தானே அவள் இருந்து வந்திருக்கிறாள். எனக்குக் கல்யாணமானதும் பேரக் குழந்தையைக் கொஞ்சலாம் என்று எதிர்பார்த்திருந்த...

Friday, April 6, 2012

மொறு மொறு மிக்ஸர் - 6

Posted by பால கணேஷ் Friday, April 06, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்...! நல்லா இருக்கீங்களா? இந்த முறை நான் புதிர் போடப் போறதில்ல. இப்ப நாம ஒரு விளையாட்டு விளையாடப் ‌போறோம். நான் சொல்ற சின்னக் கணக்கை நீங்க அங்க போடுவீங்களாம். அதோட விடைய நான் இங்கருந்தே சொல்வேனாம்... சரியா? ‘‘அவசரம்! வேகமாப் போங்க டிரைவர்!’’ ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கங்க. 1லருந்து 9க்குள்ள ஏதாவது மூணு எண்களை எழுதுங்க. அந்த எண்கள் அதிக மதி்ப்பிலிருந்து குறைந்த மதிப்புக் கொண்ட வரிசையா அமையணும்கறது மட்டும்தான்...

Tuesday, April 3, 2012

நடை வண்டிகள் - 11

Posted by பால கணேஷ் Tuesday, April 03, 2012
பி.கே.பி.யும், நானும் - 3 பி.கே.பி. ஸாரின் திருவான்மியூர் அலுவலகத்துக்கு நான் சென்றபோது, அவரது உதவியாளர்கள் நால்வரையும் எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் ‘ஹாய்’ சொன்ன நான், ‘‘ஸ்ரீனிவாஸ் பிரபுங்கற உங்க பேர் மட்டும் எனக்குப் பரிச்சயம். உங்களோட சிறுகதைத் தொகுதி ஒண்ணை ஜீயே ஸார் ஆபீஸ்ல வேலை பாத்தப்ப படிச்சிருக்கேன்...’’ என்றேன் ஏறக்குறைய என்னுடைய உடல்வாகில் இருந்த அவர்களில் ஒருவரிடம். மகிழ்வுடன் புன்னகைத்தார்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube