Friday, May 30, 2014

ஒரு கொலவெறிக் க(வி)தை!

Posted by பால கணேஷ் Friday, May 30, 2014
குறுகுறு குழந்தைகள் துள்ளி விளையாட... விறுவிறுவென முதியோர் நடை பழக... துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ... பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா! வானமது நீலநிறத்தினை யிழந்து அடர் கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே... ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி! குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக் காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்! காதலெனும்...

Wednesday, May 14, 2014

மின்னல் திரை : யாமிருக்க பயமே

Posted by பால கணேஷ் Wednesday, May 14, 2014
நீண்ட நாட்களுக்குப் பிறகு குறை சொல்வதற்கு அதிகமில்லாமல் நிறைவாக வந்திருக்கும் ஒரு தமிழ்ப்படம் ‘யாமிருக்க பயமே’. பொதுவாக ஒரு திகில் படத்தின் இடையில் நகைச்சுவைக் காட்சிகள் வருவது படத்தின் திகிலை நீர்த்துப் போகச் செய்துவிடும். இவ்ர்கள் சற்று மாறுதலாக நகைச்சுவைக் காட்சிகளிலேயே திகிலை வரவழைக்கலாமே என்று முயன்று அதில் வெற்றியும் அடைந்துள்ளார்கள். கதை என்னமோ சிம்பிள்தான். கடன் கதாநாயகனின் கழுத்தை நெறிக்க, தந்தைவழி பூர்வீக சொத்தாக ஒரு பழைய பங்களா...

Monday, May 5, 2014

மொறு மொறு மிக்ஸர் - 25

Posted by பால கணேஷ் Monday, May 05, 2014
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது...

Saturday, May 3, 2014

சுஜாத்...ஆ!

Posted by பால கணேஷ் Saturday, May 03, 2014
தமிழில் சில பிரயோகங்களின் ‘லாஜிக்’ எனக்குப் புரியவில்லை. இலக்கண ஆசிரியர்கள் ஏதாவது காரணம் சொல்லி விளக்கலாம். எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? பார்த்தால் இலக்கணப் புத்தகங்களில் கிடைக்காது என்றே தொன்றுகிறது. ஆனால் ‘உளவன்’ என்கிற வார்த்தை இருந்திருக்கிறது. இழந்து விட்டோம். உளவன் என்றால் SPY. ‘உளவன் இல்லாமல் ஊரழியாது’ என்கிறது குமரேச சதகம். அதை...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube