
அது தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி
இவனையும் துணைக்குப்...