Friday, June 28, 2013

விதிகள் மீறப்படுவதற்கா?

Posted by பால கணேஷ் Friday, June 28, 2013
அமைதியாக, இனிமை நிரம்பிய முகத்தினனாக வாழ வேண்டும் என்று மனம் விரும்பினாலும், நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களால் ஆன இச்சமுதாயம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் என் மனம் சினங்கொண்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. இப்படி பொதுப்படையாகச் சொன்னால் எதுவும் புரியவில்லை அல்லவா? சற்றே உதாரணங்களுடன் விளம்பிட விழைகின்றேன் யான்.சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம். கோயமுத்தூருக்குப் பயணச் சீட்டு பெறுவதற்காக அடுத்தடுத்து அனுமனின்...

Wednesday, June 26, 2013

சரிதாவின் சபதம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 26, 2013
‘‘இதோ பாருங்க... நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது... உடனே உங்க அருமை மாமாவைக் கிளப்பியாகணும். அவ்ளவ்தான்...’’ என்றாள் சரிதா இடுப்பில் கை வைத்தபடி.‘‘வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தா சந்தோஷப்படணும் சரி. இப்ப... உங்கம்மாவோ தம்பியோ வந்தா ரொம்ப நாள் தங்காம தொண்ணூறே நாள்ல கிளம்பிடறாங்க. நான் ஏதாவது சொல்றேனா...? நீ ஏன் என் மாமாவை இப்படி கரிச்சுக கொட்டறே? அவர் ஒருத்தருக்கு எக்ஸ்ட்ராவா சமைக்கறதால என்ன கொறைஞ்சுடப் ‌போறே?’’‘‘சந்தடி சாக்குல...

Monday, June 24, 2013

தமிழ் படிங்க - புன்னகையுடன்!

Posted by பால கணேஷ் Monday, June 24, 2013
எந்த ஒரு மனிதனும் தான் கற்ற மற்ற மொழிகளில் பிழைபட பேசவும் எழுதவும் செய்வானே தவிர, தன் தாய்மொழியைப் பிழையறக் கற்றிருப்பான். தாய்மொழியில் எழுதுவதிலும் பேசுவதிலும் தவறு செய்கிற‌ ஒரே இனம் தமிழனாகத்தான் இருக்கும். அதற்குத் தமிழனை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. மிகத்தொன்மையான தமிழ் மொழியானது, காலப்போக்கில் பிறமொழிச் சொற்களால் கலப்புற்று, ஒவ்வொரு வட்டாரங்களிலும் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித் தனியாகப் பேசும் முறைகளை உண்டாக்கிக் கொள்ள... மதுரைத்...

Saturday, June 22, 2013

பிரபலமாக (குறுக்கு) சுருக்கு வழி!

Posted by பால கணேஷ் Saturday, June 22, 2013
தோழி மஞ்சுபாஷிணியுடனான சந்திப்பு நிகழ்ந்த தினத்தன்று பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வலையுலகில் பிரபலமாவது எப்படி என்பது பற்றிப் பேச்சு வந்தது. ‘‘யாரையாவது திட்டி எழுதினா சீக்கிரம் பிரபலமாய்டலாம்’’ என்று சேட்டையண்ணா சொல்ல, ‘‘ஆமா சீனு. அடேய் கணேஷான்னு ஆரம்பிச்சு ஏதாவது என்னைத் திட்டி நீ எழுதி, நான் காரசாரமா அதுக்கு பதில் தந்தா பரபரப்பு ஏற்படும். நாம சீக்கிரம் பிரபலமாயிடலாம்’’ என்றேன் நான். ‘‘அப்படியா? சரிவருமா?’’ என்றார் சீனு. நான் சொன்னேன்: ‘‘டேய்...

Thursday, June 20, 2013

டெஸ்ட் கிரிக்கெட்டும், 20/20யும்!

Posted by பால கணேஷ் Thursday, June 20, 2013
வலைப்பதிவை எழுதிவிட்டு நண்பர்கள் யார் கருத்திடுவார்கள் என்று காத்திருந்து, கருத்துக்களுக்கு பதிலளித்து, நாம் எழுதியது ரசிக்கப்படுகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குச் சமமானது. முகநூலிலோ, ஒரு விஷயத்தை அப்லோட் செய்த சில கணங்களிலேயே நண்பர்களால் படிக்கப்பட்டு, விரும்பப்படுகிறதா இல்லையா என்பதையும் கமெண்ட்டையும் பெற்றுவிட முடிகிற வகையில் 20/20 மேட்சுகளைப் போலத் தோன்றுகிறது எனக்கு முகநூல். ஆனாலும்...

Sunday, June 16, 2013

ஒரு அவசர அறிவிப்பு

Posted by பால கணேஷ் Sunday, June 16, 2013
அனைவருக்கும வணக்கம்...கம்ப்யூட்டரைத் துறந்து, தொலைபேசியை சற்று மறந்து இரண்டு நாட்கள் ஊர்சுற்றி வரலாம் என்ற உத்தேசத்துடன் திருச்சி வந்து அதிலும் ஸ்ரீரங்கத்தில் சிவபெருமானின் வாகனத்தைப் பெயராகக் கொண்டவரின் இல்லத்தில் இருந்த என்னை காலை தொலைபேசியில் பேசி மீண்டும் வலைப்பக்கம் இழுத்துவந்து சிக்க வைத்து விட்டார் தோழி மஞ்சுபாஷிணி. புலவர் ஐயாவின் வலை இணைப்பில் பழுது. மதுமதியோ ஊரில் இல்லை. கண்ணதாசனும் தொடர்பெல்லைக்கு வெளியே... எனவே இரண்டு தகவல்களைச் சொல்லி. இவற்றை நீங்கள் வலையிலும் முகப்புத்தகத்திலும் பகிருங்களேன் என்றார்.1) இன்று தந்தையர் தினம். மனைவியிடம்...

Monday, June 10, 2013

மொறுமொறு மிக்ஸர் - 18

Posted by பால கணேஷ் Monday, June 10, 2013
                                                                                 மனசையும் நிறைத்த ‘தாய்’ மீல்ஸ்! வழக்கமாக என் தாய் செய்து தரும் மீல்ஸையே சாப்பிட்டு...

Friday, June 7, 2013

காதல்! ஒரு தென்றல் போல... அநேகமாக எல்லார் வாழ்விலும் காதல் அல்லது காதல் போன்றொரு உணர்வு ஒரு முறை கடந்து சென்றிருக்கும் என்பது நி்ச்சயம். அதென்னமோ தெரியவி்ல்லை... காதல் வந்தாலே கூடவே கவிதையும் வந்து விடுகிறது. காதலிக்கிற நபர்கள் ஒன்று கவிதை எழுதுகிறார்கள். அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எதையாவது எழுதி, மற்றவர்களைப் படுத்துகிறார்கள். என் அறை நண்பன் ஒருமுறை காதலி கீழே ‌போட்ட பஸ் டிக்கெட், தவறவிட்ட பைசா எல்லாம் தனக்குப் பொக்கிஷம் என்று எழுதின...

Wednesday, June 5, 2013

தெரியுமா இவரை - 6

Posted by பால கணேஷ் Wednesday, June 05, 2013
வின்ஸ்டன் சர்ச்சில்   சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill)  என்பது அவருடைய நீளமான பெயர். 1874ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னைக்கும், பிரிட்டிஷ்காரரான தந்தைக்கும் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க போன்ற ஐக்கிய நாடுகளின் கூட்டுப் படைக்குத் தளபதியாக இருந்தவர் சர்ச்சில்! ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகளிடமிருந்து உலகைக்...

Monday, June 3, 2013

பதிவர் சந்திப்பு தேவைதானா?

Posted by பால கணேஷ் Monday, June 03, 2013
சனிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்தபோது சீனுவிடமிருந்து போன். ‘‘வாத்யாரே... ‘சினிமா சினிமா’ தளத்துல எழுதற ஹாலிவுட் ராஜ் சென்னைக்கு வந்திருக்காரு. ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். ‘‘ரைட்டு. சந்திக்கலாம். எப்போ, எங்கேன்னு சொல்லு’’ன்னு கேட்டேன். ‘‘புலவர் ஐயா வீட்ல வெச்சு சந்திக்கலாம்னு சிவா சொல்றாரு. நீங்க புலவர் ஐயாகிட்ட கேட்டுட்டு ஓகேயான்னு சொன்னா,சங்கத்து ஆட்கள் எல்லாரையும் வரச் சொல்லிடறேன்’’ என்றார் சீனு. புலவர் ஐயாவுக்கு போன் செய்து...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube