Saturday, December 28, 2013

ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்சமைத்ததைத் தானே உண்ணல்அப்படின்னு திருவள்ளுவர்...

Friday, December 20, 2013

மின்னல் திரை : என்றென்றும் புன்னகை

Posted by பால கணேஷ் Friday, December 20, 2013
புத்தகக் கண்காட்சிக்குத் தயாராக வேண்டிய புத்தக வேலைகள் டேபிள்முன் குவிந்து கிடந்தாலும், அவற்றைத் துறந்து தன்னுடன் படம் பார்க்க வரும்படி என்னை கதறக் கதற ஐநாக்ஸுக்கு இழுத்துச் சென்றார் கோவை ஆவி. ‘பிரியாணி’ பார்க்கலாம் என்ற அவரிடம், ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். டைரக்டர் வேற தம்பியை ஓவரா புரொஜக்ட் பண்ணுவாரு... அந்தப் படம் பாக்கற அளவுக்கு அஞ்சாநெஞ்சனில்லை நான்’’ என்று அலறினேன். ‘‘ரைட்டு... ‘என்றென்றும் புன்னகை’...

Wednesday, December 11, 2013

பாட்டுக்(கும்)கொரு புலவன்!

Posted by பால கணேஷ் Wednesday, December 11, 2013
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து...

Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...!  சரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது. ‘‘என்னது....?...

Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...  வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா...

Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
நமப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது,...

Saturday, November 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 22

Posted by பால கணேஷ் Saturday, November 23, 2013
ஆனந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே...

Tuesday, November 12, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 9

Posted by பால கணேஷ் Tuesday, November 12, 2013
                              தொட்டால்... தொடரும்!                                    பட்டுக்கோட்டை பிரபாகர்   வெங்கடேஷ்...

Wednesday, November 6, 2013

துப்பறிய வாங்க...!

Posted by பால கணேஷ் Wednesday, November 06, 2013
இன்று இணையம் நமக்கு மட்டற்ற வசதிகளை வழங்கியிருக்கிறது. இணையதளம் ஒன்றை நமக்கெனத் துவக்கி நமது சிந்தையில் முகிழ்க்கும் கவிதை, கதை, கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி, பல நாடுகளிலிருந்தும் வாசக நட்புகள் அதைப் படித்து உடனுக்குடன் கருத்துச் சொல்லி... பின்னர் அவற்றை புத்தகமாகவும் வெளியிடும் நிலை இன்று சாத்தியம்! என்போன்றோர் கூட ஓரளவு பிரபலமாக இருக்க முடிகிறது! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய வசதி எதுவுமில்லை. ஒரு எழுத்தாளன் பெயர்பெற வேண்டுமானால்...

Friday, November 1, 2013

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, November 01, 2013
தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது...

Monday, October 28, 2013

மார்ஜியானா - காதல் - நான்!

Posted by பால கணேஷ் Monday, October 28, 2013
அது ஒரு மிக இளமைக் காலம். நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அவளும் வேலை செய்தாள். அலுவல் நிமித்தம் நிறையப் பேச வேண்டிய சந்தர்ப்பம். அலுவல் தாண்டியும் பேச வைத்தது. அணிலையும் நேசிக்கும் அவள் உள்ளம் என்னை நேசிக்க வைத்தது; நேசிக்கப்பட்டவனாக்கியது. குடும்பத்தினர் அவளுக்கு வைத்த பெயர் வேறு. நான் வைத்த பெயரான ‘மார்ஜியானா’ என்பது அவளுக்கும் பிடித்தமானதாயிற்று. இப்படிப் பெயரிட்டு அழைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.நீங்க வாத்யார் நடித்த ‘அலிபாபாவும்...

Friday, October 25, 2013

இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.இதுக்கு ஒரு ப்ளாஷ்பேக்...

Monday, October 21, 2013

மொறு மொறு மிக்ஸர் - 21

Posted by பால கணேஷ் Monday, October 21, 2013
நஸ்ரியாதாசனான கோவை ஆவியிடம், ‘‘சென்னைல நாம ‘ராஜாராணி’ படம் சேர்ந்து பாக்கணும்" என்று முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஏற்கனவே கோவையில் இரண்டு முறை பார்த்திருந்தாலும்கூட எனக்காக மூன்றாம் முறை படம் பார்க்கும் தியாகத்தைச் செய்தார் அவர். படத்தைப் பற்றி வலையில் நிறையப் பேர் வலையில் எழுதித் தள்ளி விட்டார்கள். எனவே, பாயாசத்தில் மிதக்கும் முந்திரிகளாக நான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன்.* இரவில் குடித்துவிட்டு வீடு திரும்பும் ஆர்யாவுக்காக...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube