Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்! • டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார்,...

Monday, February 16, 2015

கலகக் கோப்பை கிரிக்கெட்

Posted by பால கணேஷ் Monday, February 16, 2015
முன் குறிப்பு : ‘மின்னல் வரிகள்’ தளத்தின் வழக்கத்துக்கு மாறாக இது சற்றே நீண்ட பகிர்வு. பொறுத்தருள்க. (தவறாமல்) படித்திடுக. கருத்தினை உரைத்திடுக. வாழ்க்கையென்பது மிக வினோதமான ஒரு வஸ்து. நாம் எதிர்பார்த்ததைச் செய்து தொலைக்காது. நாம் சற்றும் எதிர்பாராத விஷயத்தை நிகழ்த்திவிட்டு நம்பைப் பார்த்துச் சிரிக்கும். இதன் வினோதங்களில் ஒன்றுதான் இப்ப நான் சொல்லப் போறது. கிரிக்கெட்ங்கறது ஒரு விளையாட்டு, ஒருத்தன் பந்தை வீசுவான், ஒருத்தன் பேட்டால அடிப்பான்,...

Friday, February 6, 2015

இவனும் ‘இசை’யும்..!!

Posted by பால கணேஷ் Friday, February 06, 2015
ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசை என்றால் இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலில் இவன் இசை ரசனையில் ஈடுபட்டது ஏழு, எட்டு வயதில்தான். இவன் அத்தை வீட்டில் அப்போது ஒரு ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. அதன் சைடில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றி விட்டால் ரெகார்டு சுழன்று அது பாடும். அதை ஒரு நிதானமான வேகத்தில் சுற்றுகிற அளவுக்குத்தான் கைப்பிடியை லயம் பிசகாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே’ என்று பாடும். இவனுக்கு...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube