Wednesday, September 28, 2011

ம், ரைம், க்ரைம்!

Posted by பால கணேஷ் Wednesday, September 28, 2011
நான் ஊஞ்சல் இதழில் பணியாற்றிய போது சில சிறுகதைகளை எழுதியதுண்டு. எழுதும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்காததால் இப்போ தெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. நான் எழுதிய ஒரு க்ரைம் தடவிய மினி சிறுகதை உங்களுக்காக இங்கே: கொலையின் விலை ...

Monday, September 26, 2011

வர்ணனைக் கடலிலிருந்து சில துளிகள்!

Posted by பால கணேஷ் Monday, September 26, 2011
பார்த்து ரசித்த ஒரு விஷயத்தை நாம் எழுதுவதற்கும், அதே விஷயத்தை சிறந்த எழுத்தாளர் ஒருவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வகையில் நான் படித்து ரசித்த சில ‘மின்னல் வரி’களை இப்போது  உங்கள் பார்வைக்கு பரிமாறியிருக்கிறேன்... ‘அவள் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்’ என்று ஒரு வரியில் நாம் சொல்வதை எழுத்தாளர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்... ‘சர்... சர்...’ என மத்து போகும் திசைகளில் மோரின் துமிகள் வெளியே சிதறுகின்றன. மிதந்து மிதந்து கப்பலாய்...

Saturday, September 24, 2011

புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்..?

Posted by பால கணேஷ் Saturday, September 24, 2011
புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் நேசிப்பவன் நான். அழகப்பா கலைக் கல்லூரியின் நூலகத்தில்தான் எனக்கு சாண்டில்யன், கல்கி, லக்ஷ்மி, தமிழ்வாணன், இன்னும் நிறையத் தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் படிப்பது அதிகமாகி வருகிறதே தவிரக் குறையவில்லை. ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும். என்னை நான் வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்கும் பழக்கம்...

Thursday, September 22, 2011

நகரைத் தேடிய விமானி

Posted by பால கணேஷ் Thursday, September 22, 2011
சரித்திரக் கதைகளிலும் சரி, பழைய சரித்திர திரைப்படங்களிலும் சரி தவறாமல் ஒரு விஷயம் வரும். மன்னன் தன் மந்திரியைப் பார்த்து, ‘‘மந்திரி! மாதம் மும்மாரி பொழிகிறதா?’’ என்று கேட்பார். அவர் ஏன் அப்படிக் கேட்க வேண்டும்? நாட்டில் மழை பொழிந்தால் அவருக்கு மட்டும் தெரியாமல் போய்விடப் போகிறதா... இல்லை மன்னர் ஃபாரின் டூர் எதுவும் போயிருந்தாரா? எதற்கு இப்படி அபத்தமாகக் கேட்பதாக எழுதுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். வசந்த் டி.வி.யில் திரு.டெல்லிகணேஷ் இப்படிச்...

Monday, September 19, 2011

நான் ரசித்த நகைச்சுவைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, September 19, 2011
தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன். செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன்...

Thursday, September 15, 2011

இதுவும் ஒருவித வன்முறைதான்!

Posted by பால கணேஷ் Thursday, September 15, 2011
என்னுடைய அப்பாவின் காலத்தில் இல்லாத பல விஞ்ஞான வசதிகளை இன்று என்னால் அனுபவிக்க முடிகிறது. ‘‘அது சரியான ‌வேகத்தில் வீசப்பட்ட பந்து. அதை அவர் தடுத்து ஆடியிருக்க வேண்டும். பேட்டில் பட்ட பந்தை ஸ்லிப்பில் கேட்சாகி விட்டது’’ -இப்படி காதருகில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு, எங்கோ நடக்கும் கிரிக்கெட்டின் வர்ணனையைக் கேட்டவர் என் அப்பா. எங்கோ நடக்கும் கிரிக்கெட்டை என் வீட்டு ஹாலில் இருந்தே தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி பெற்றிருக்கிறேன் நான். சினிமா பார்க்க தியேட்டருக்கு ஓடியவர் அவர். வீட்டிலேயே டிவிடி வாங்கி போட்டுப் பார்ப்பவன் நான். லேண்ட் லைன் தொலைபேசியை...

Sunday, September 11, 2011

எனக்கு இப்படி! உங்களுக்கு...?

Posted by பால கணேஷ் Sunday, September 11, 2011
அனைவருக்கும் வணக்கம்! இது என்னுடைய முதல் பதிவு. தவழும் குழந்தைக்கு விரல் கொடுத்து நடக்க உதவும் பெரியவர்கள் போல உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். குழந்தை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய நீண்டநாள் சந்தேகம் ஒன்று. `எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து' என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் எது என்று நானும் நினைவு தெரிந்த நாளாய் யோசித்துப் பார்க்கிறேன்... தெரியவில்லை. உங்களுக்கு நினைவு தெரிந்த நாள் எது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை விடுங்கள்... என்னுடைய சிறு வயதில் பண்டிகைகள் வருகிறது என்றாலே ஒரு மாதத்திற்கு...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube