Showing posts with label பல்சுவை. Show all posts
Showing posts with label பல்சுவை. Show all posts

Tuesday, January 20, 2015

மொறு மொறு மிக்ஸர் - 27

Posted by பால கணேஷ் Tuesday, January 20, 2015
சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. ஓரிரண்டு தினங்கள் தவிர, தினம் ஒரு முறை விசிட் அடிக்கும் படி அமைந்தது எனக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் எனக்குப் பிடித்த புத்தகங்களையும் வாங்கிக் குவித்ததில் மனதிற்கு மிக நிறைவானதொரு பு.கண்காட்சியாக அமைந்தது இந்த வருடம்.

இந்த ஆண்டு சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் விற்றதாக என் கணிப்பில் தெரிகிறது. முத்து-லயன் காமிக்ஸ் ஸ்டாலில் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வருகிறதென்று தெரிந்ததும் சிறுவயது நினைவுகள் உந்த, மறுபடி படிக்கும் (பார்க்கும்?) ஆவல் மீதூற, முதல் தினமே போய் விசாரிக்க, வந்த புத்தகம் அனைத்தும் விற்று விட்டது என்றார்கள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மறுதினம் போய்ப் பிடித்து விட்டேன். பௌன்ஸர் என்கிற அற்புதமான புதிய காமிக்ஸ் புதுவருடத்தில் வெளியிட்டும் கூட இந்த ஆண்டு காமிக்ஸ் ஸ்டாலில் அதிகம் புத்தகங்கள் விற்றது மாயாவிதான் என்கிறார் எடிட்டர் எஸ்.விஜயன். இ.கை.மாயாவிதான் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்!

இதைத் தவிரவும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறை படக் கதை புத்தகங்களாக ஒரு ஸ்டாலில் பார்த்தேன். இவை போன்ற புத்தகங்களை நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்ததையும் கவனித்தேன். இத்தகைய புத்தகங்கள் விற்பனையாவதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் வளர்ந்து பின்னாளில் இலக்கியத்துக்கு வருவார்கள் - தமிழ்வாணனில் ஆரம்பித்த நான் லா.ச.ரா.வையும் படிப்பதைப் போல..! இது ஒரு நல்ல விஷயமாக மகிழ்வு தந்தது!

என் கண்ணில்பட்ட மற்றொரு பரபரப்பான விற்பனைப் புத்தகம் ‘மாதொருபாகன்’. ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் அதை எடுத்து பில் போட நின்றதை டிஸ்கவரி ஸ்டாலிலும், மற்ற இரு ஸ்டாலிலும் காண நேர்ந்தது.  ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், சர்ச்சையின் மகத்துவம் புத்தக விற்பனையை எகிற வைப்பதே என்பது நிதர்சனம். ‘ஹும்... சரிதாயணத்தைக் கூட யாரை விட்டாவது எரிக்கச் சொல்லியிருக்கலாம்டா’ என்றது  மனஸ். ஹி... ஹி... ஹி...

பாரதி புத்தகலாயத்தில்... ச்சே... பாரதி புத்தகாலயத்தில் சத்யஜித் ரேயின் ‘பெலூடா’ கதைகள் மொத்தத்தையும் தனித்தனி புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த இந்த ஆண்டின் பொக்கிஷம்! நோ.. நோ.. ஃபலூடா இல்லீங்க.. பெலூடா. ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான கேரக்டராக அதைப் படைத்து அசத்தலாக துப்பறியும் கதைகள் எழுதியிருக்காரு சத்யஜித் ரே. சிறுவர்களுக்கான கதைகள்னு போட்டிருந்தாலும் கூட எல்லா வயதுக்காரர்களும் சுவாரஸ்யமாப் படிக்கற மாதிரி ஆபாசமில்லாத, சஸ்பென்ஸை மெயின்டைன் பண்ற சூப்பரான கதைகள் ஒவ்வொண்ணும்.

கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப் வெச்சா லாபம்னு இங்க மாறிருவாங்களோன்னு தோணிச்சு எனக்கு. ஹி... ஹி... ஹி...

--------------------------------------------------------------

டிசம்பர் மாத இறுதியில் நம்ம கோவை ஆவி இயக்கிய ‘காதல் போயின் காதல்’ குறும்படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட திரைக்கதைய ஆவி அனுப்பி வெச்சப்ப, நல்லா இருக்கறதாப் பட்டாலும்கூட கதாநாயகி பாத்திரத்துல ஒரு உறுத்தல் இருந்தது எனக்கு. ஆவியின் கதாநாயகி ஒரு Down to Earth கேரக்டர். நிஜவாழ்க்கைல அவளை மாதிரி ஒருத்திய நான் சந்திச்சிருந்தாலும்கூட நிழல்ல அப்படிக் காட்டாம வேறவிதமா பெட்டரா காட்டினா நல்லாருக்கும்னு தோணிச்சு. ஆவிகிட்ட என் கருத்தைச் சொன்னேன். அந்தக் கதையோட பெரும்பகுதி ஒரு காபி ஷாப்ல நடக்கற மாதிரி எழுதியிருந்தாரு ஆவி.

“காபி ஷாப்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டா பத்தாயிரம் ரூபா கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. “அவ்வளவா..? ஒரு நாளைக்கு அது அதிகம்பா..”ன்னேன். “நீங்க வேற... ஒரு மணி நேரத்துக்கு அந்த ரேட் கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. தலை சுத்தி மயக்கமே வந்துருச்சு எனக்கு. அப்பறமென்ன... ஆவி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்க்ரீன் ப்ளேல எறக்கி, கதைக் களத்தையும் நாயகி பாத்திரத்தையும்  மாத்தி மோல்ட் பண்ணி வேற ஒரு திரைக்கதை அனுப்பினாரு. படிச்சதுமே இது நிச்சயம் ரசிக்கப்படும்ங்கறது புரிஞ்சிருச்சு. ஆவிக்கு வாழ்த்து சொன்னேன். அவரும், நாங்களும் விரும்பியபடி அந்தப் படைப்பு வந்திருக்கறது கூடுதல் மகிழ்ச்சி.



படத்துக்கு நாயகன், நாயகி தேட ஆவி பட்ட பாட்டை தனிக் கட்டுரையாவே எழுதலாம். (மே..பி... ஆவி எழுதுவாரு பின்னால...) பதிவர் திருவிழா சமயத்துல சீனுவை க்ளோஸப், மிட் ஷாட்னு பல ஆங்கிள்ல பாத்துட்டு, ‘கண்டேன் கதாநாயகனை’ன்னு குதிச்சாரு ஆவி. முதலில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த சீனுப்பயலை ஆவி பேசிப் பேசி, துப்பாக்கியை நீட்டாத குறையாய் மிரட்டி தன் குறும்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். இப்போ என்னடான்னா... முதல் (குறும்)படம் வர்றதுக்கு முன்னாலயே ‘ஷைனிங் ஸ்டார்’னு பட்டமும் நிறைய ரசிகர் பட்டாளத்தையும் சேத்துக்கிட்டான் அம்ம பய... 

நாயகியா நடிக்க பலரை யோசிச்சும், முயற்சிச்சும் யாரும் செட்டாகாம ஏதேதோ காரணங்களால தள்ளிப் போனதால கொஞ்சம் வெக்ஸானாரு ஆவி. இப்படிப்பட்ட நிலையில நம்ம பதிவர் சிஸ்டர் கீதாரங்கன், கதாநாயகியைத் தந்தாங்க. மதுவந்தி! கீதாவின் உறவான இந்தப் பொண்ணு நாட்டியமும் தெரிஞ்சவளா இருந்தது கூடுதல் ப்ளஸ். முழு உற்சாகத்தோட உருவாக்கத்துக்கு ஒத்துழைப்புத் தந்து, நாங்க எதிர்பாராத பர்பாமென்ஸ்ம் தந்து அசத்திருச்சு பொண்ணு. 

அதே மாதிரி இந்த ப்ராஜக்ட்ல அசத்தின இன்னும் மூணு பேரு 1) மாஸ்டர் ரக்ஷித்! நிஜ ஸ்கூல்பையனான இவன் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா சொல்றதை அப்படியே கிரகிச்சுக்கிட்டு சூப்பரான பெர்பாமன்ஸ் தந்து அசத்தினான். 2) துளசிதரன்! கதையில ஒரு கேரக்டருக்காக இவர் உருமாறி வந்ததைப் பாத்ததும் அசந்து போனேன். சின்ன கேரக்டர்னாலும் (படமே சின்னதுதானடா..!) அசத்தியிருக்காரு மனுஷன். 3) கீதா ரங்கன்! ஆவிக்கு துணை இயக்குனரா செயல்பட்டு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து செஞ்சு... என்னத்தச் சொல்ல... ஆவி சொல்லுவாரு மீதிய...!

ஷூட்டிங்குக்கு பர்மிஷன் வாங்கலைன்னு போலீஸ்காரங்க சத்தாய்ச்சதையும், சரியான லைட்டிங் தராம மிஸ்டர் சூரியபகவான் படுத்தினதையும் மீறி, மொத்தமாப் பாக்கறப்ப ரிசல்ட் நல்லா, திருப்திகரமா வந்திருக்குது. இன்னும் சில மேம்படுத்தற வேலைகள் பாக்கி இருக்கறதால பிப்ரவரி 14ல டிரெய்லரும், அந்த மாத இறுதியில வெளியிடவும் ப்ளான் பண்ணிருக்காரு ஆவி. பாத்துட்டு வாழ்த்துங்க அவரை.

--------------------------------------------------------------

‘டெக்கமரான்’ங்கற இத்தாலியப் படம் பார்த்தேன் சமீபத்துல. கதைய விரிவாச் சொல்லப் போறதில்ல. ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துக்க விருப்பம். கன்னியாஸ்திரீ மடத்துல செவிட்டு ஊமைன்னு பொய் சொல்லி தோட்டக்காரனா வேலைக்குச் சேர்றான் ஒருத்தன். அவனை அங்கருக்கற கன்னியா(?)ஸ்திரீகள் கையாளறாங்க. இது மதர் சுபீரியருக்குத் தெரியவர, அவங்க தன்னையும் கையாளச் சொல்ல... வெறுப்புல அவன் பேச, அவன் பேசக்கூடியவன்ங்கறது தெரியவர... உடனே வேகமா ஓடி... சர்ச் மேலருக்கற கண்டாமணிய அடிச்சு, எல்லாரையும் கூட்டி... (நீங்க நினைக்கற மாதிரி இல்ல...) ஜீசஸின் கருணையால இவனுக்குப் பேசவும் கேக்கவும் வந்துருச்சுன்னு எல்லார்கிட்டயும் அனவுன்ஸ் பண்றாங்க... ஹா.. ஹா... ஹா..! இந்துமத சாமியார்களை மோசமான காமாதூரர்களா காட்டினதைப் பல படங்கள்ல பாத்திருக்கேன். (நிஜத்துலயும் சிலர் அதைவிடக் கேவலப்பட்டாச்சு சமீப வருஷங்கள்ல)

ஆனா.. கிறிஸ்டியானிட்டிய இவ்வளவு போல்டா விமர்சிக்கற இப்படியொரு படத்தை இப்பதான் பாக்கறேன். அவங்க மதகுருமார்கள் எப்படி விட்டு வெச்சாங்கன்னு தெரியல. வொண்டர்..! ஆங்... நானும் பாத்தாகணுமே படத்தைன்னு அடம் பிடிக்கற ஆசாமிகள் ‘நீ குழாய்’ல தேடவும். கிடைக்கிறது. ‘விசேஷமான’ காட்சிகள்  படத்தில் ஆங்காங்கு கதைக்குத் தேவை(!)யென்பதால் வருவதால் நீங்கள் நல்லவராயின் பார்க்காமல் தவிர்க்கும் படியும், வல்லவராயின் தனிமையில் பார்க்கும் படியும் கோரப்படுகிறீர்கள். (இதனாலயே முதல்ல பாக்க ஓடிருவாங்களோ... -மைண்ட் வாய்ஸ். ஹி... ஹி... ஹி...)

--------------------------------------------------------------

டியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை.  சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்!
-‘அபிதா’ நாவலில் லா.ச.ராமாமிர்தம்.

டைசியில் எல்லாப் பணமும் செலவழிந்து போய் செல்லாத ரூபாய்தான் மிஞ்சிற்று. அப்பொழுதுதான் செல்லாத ரூபாயாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது ஏன்று தோன்றிற்று. தெருவில் காய்கறிக்காரி போனால் நாலரையணாவுக்குக் கறிகாய் வாங்குகிறது. செல்லாத ரூபாயைக் கொடுத்து, “நாலரையணா எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடு” என்கிறது. அவள், “செல்லாது, வேறு கொடுங்கள்” என்று திருப்பி விடுவாள். “வேறு ரூபாயில்லையே, நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளேன்” என்கிறது. “சரி, அப்படித்தான் கொடுங்கள்” என்று போய் விடுவாள். ரூபாயில்லாமல் கடன் கொடு என்றால் கொஞ்சம் அவமானமாகத் தோன்றும். ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு கடன் சொன்னால் அதில் ஒரு கௌரவம் இல்லையோ...? அதே மாதிரி அந்த ஒற்றை ரூபாயைக் காட்டியே பத்து ரூபாய்க்குச் சாமான்கள் கடனாய் வாங்கி விட்டோம். அந்த ரூபாய் இல்லாவிட்டால் முடியுமா..? கடன் வாங்கினாலும் அவ்வளவு கண்ணியமாய்ச் செய்திருக்க முடியுமா..?
-‘செல்லாத ரூபாய்’ சிறுகதையில் எஸ்.வி.வி.

....புதிய புத்தகங்களைப் படிப்பதை விட இப்படிப் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. புதுவரவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன். என் ராசிக்கு நல்ல பலன்தான். இனி இந்த வருஷம் தொடர்ந்து இங்க செயல்படறதுன்னு முடிவும் பண்ணிட்டேன். உங்க ராசிக்கு.... ஹி... ஹி... ஹி....

Tuesday, April 1, 2014

ஏன் இந்த வேகம்...?

Posted by பால கணேஷ் Tuesday, April 01, 2014
சில விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்ல நேர்கையில் சற்றே அயற்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க முடிவதில்லை. நேற்று காலை ஆ.வி.அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஜெமினி ப்ரிட்ஜின் மத்தியப் பகுதியை பஸ் நெருங்குகையில் எதிர் சாரியில் வாகனங்கள் தேங்கி நிற்பதைக் காண முடிந்தது. என்னவெள்று பார்த்தால்... விபத்து! மோட்டார் பைக்கில் அதிவேஏஏஏகமாக வந்த ஒரு ஆசாமி மற்றொரு வாகனத்தை முந்த முயன்று ஸ்கிட் ஆகி விழுந்திருக்கிறான். வாகனம் ஒருபுறம் குப்பையாக விழுந்து கிடக்க, உணர்வற்று கண்கள் செருகிக் கிடந்த அவனை மூன்று பேர் சேர்ந்து துக்கி அருகிலிருந்த ஆட்டோவில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அச்சமயம் ஆட்டோவை நான் பயணித்த பஸ் நெருங்க... ஐயையோ... அந்த ஆசாமியின் முகமெல்லாம் ரத்தத்தில் குளித்திருந்தது. ஜன்னல் ஓரமிருந்து க்ளோஸப்பில் பார்க்க நேர்ந்தது வயிற்றைப் பிசைந்தது.

சென்னை சாலைகளில் பைக்கில் செல்லும் ஆசாமிகள் பெரும்பாலரிடம் இந்த கண்மூடித்தனமான வேகத்தை நான் பார்க்கிறேன். பைக் விற்கும் கம்பெனிகள் ‘எங்க பைக்ல 80 கிமீ வேகம் போகலாம்’ ‘எங்க பைக்ல 90 கி,மீ, வேகம் போகலாம்’னுல்லாம் விளம்பரம் பண்ணி விக்கறானுங்க. இவர்களும் அத்தனை வேகம் நம் நகர நெரிசலில் சாத்தியமா என்பதை கிஞ்சித்தும் நினையாமல் அவசர வேலை என்று சொல்லிக் கொண்டோ... இல்லை, ஒரு த்ரில் கருதியோ... ப்ளைட் ஓட்டுவது போல ஸும் என்று சவுண்டுடன் வளைந்து வளைந்த பலரை ஒவர்டேக் பண்ணி... கடைசியில் இப்படி ரத்தமுகமாகிறார்கள். சற்றே யோசித்துப் பாருங்கள். இப்படி தலைதெறிக்க பைக்கில் செல்வதால் அதிகம் போனால் பத்து நிமிடங்கள் அவனுக்கு மிச்சமாகியிருக்குமா...? இப்போது... ஆஸ்பத்திரிக்கு தெண்டச் செலவு செய்து கொண்டு குறைந்தது ஒரு வாரத்துக்கேனும் தன் வேலைகள் அனைத்தையும் கெடுத்துக் கொண்டு வெற்றாக படுத்திருக்கப் போகிறான்.

என் மூஞ்சூறு வாகனத்தில் செல்கையில் என்ன அவசரம் எனினும் நான் 30 கி..மீ. வேகத்திற்கு மேல் போனதில்லை. (அது 50 கி,மீ, வேகத்திற்கு மேல போக அனுமதிக்காதுன்றது வேற விஷயம். ஹி... ஹி...) இந்த விபத்தை நான் பார்த்தவரையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அடிபட்ட அந்த ஆசாமி தலைக்கவசம் அணிந்திருந்தால் இப்படி ரத்தமுகமமாகி இருக்கமாட்டார் என்பதை அவதானித்தேன். ஆகவே... என் இனிய தமிழ் மக்களே... 1) கண்மூடித்தனமான வேகம் வேண்டாம்... 2) அப்படித்தான்யா போவேன் என்று அடம்பிடித்தீரெனில்... தலைக்கவசத்தை மறக்க வேண்டாம் என்கிற விஷயத்தை மறுமுறையும் வலியுறுத்தி உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

• • • • • • • • • •

நான் எப்போதாவது தொலைக்காட்சிப் பக்கம் பார்வையைத் திருப்பும் ஆசாமி. இன்று எதேச்சையாக ‘ஆதித்யா’ நகைச்சுவைச் சேனல் வைத்தபோது ஒரு நிகழ்ச்சியின் ப்ரோமோ ஓடிக் கொண்டிருந்தது இங்கே நீங்கள் பார்க்கும் படத்தைக் காட்டி நான்கைந்து இளைஞிகளிடம் “இவர் யார் தெரியுமா?” என்று கேட்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ஒரு பெண்குட்டி, “சார்லி சாப்ளின் மாதிரி இருக்காரு?”ங்குது. இன்னொண்றோ... “எங்க தாத்தா மாதிரி இருக்காது” என்கிறது. அனைவரும் கெக்கெக்கே என்று சிரிக்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பேரு ‘தமிழ் பேசுங்க தலைவா’வாம் அடக் கருமாந்தரம் பிடிச்சதுங்களா..!. ப்ள்ளிப் படிப்புல இவரைப் பத்தி எதுவும் படிக்கலையா...? இல்ல... இந்த மாதிரி நிகழ்ச்சில இப்படி கோக்குமாக்காத்தான் பேசணும்னு பேசிக் சிரிக்குதுங்களா? அப்டின்னா கேலி செய்யறதுக்கு தமிழறிஞர்தானா கெடைச்சார்? அஜீத், விஜய்ன்னு எத்தனை நடிகனுங்க இருக்கானுங்க. அவங்களக் காட்டி கேலி பண்ண வேண்டியதுதானே... இந்தக் கழுதைங்களுக்கு அவனுங்களைல்லாம் நல்லாவே தெரிஞ்சிருக்கும்.

இதேமாதிரி கூத்தை இமான் அண்ணாச்சி எனபவர் நடத்தும் இன்னொரு நிகழ்விலும் காணக் கிடைத்தது. ‘இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?’ என்று அவர் கேட்கும் கேள்விக்கு, ’பிரதீபா பாட்டில்’ என்கிறது ஒரு ஜந்து. இன்னொரு ஜந்து அழுத்தம் திருத்தமாக ‘ராஜீவ்காந்தி’ என்கிறது. பிறிதொரு ஜந்துவோ, ‘வி.பி.சிங்’ என்று பதிலிறுத்து பல்லிளிக்கிறது. இந்த பிரகஸ்பதிகள் விட்டால் ஜைல்சிங், ராஜ்நாராயணன் என்று பின்னோக்கிப் போய் மகாத்மா காந்திதான் என்று பதில் சொன்னாலும் சொல்லும்கள் போல...! நிஜமாவே ஜனங்க இவ்வளவு முட்டாள்களா... இல்லை காமிரா முன்னால முட்டாள் மாதிரி நடிக்கறாங்களான்னுதான் எனக்குப் புரியலை. தொலைக்காட்சில முகம் வரணும்கறதுக்காக இப்படிப் பேசறாங்கன்னா... அந்த நிகழ்ச்சியை உங்க உறவு, நட்புகளோட சேர்ந்து பாக்கறப்ப கொஞ்சமாச்சும் மானம், ரோஷம், வெக்கம்... இதுமாதிரியான உணர்ச்சிகள் எட்டிப் பார்க்காதா என்ன? சற்திரபாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “ஒண்ணுமே புரியலே உலகத்துலே...!”

• • • • • • • • • •

கூல்...! இப்போ கொஞ்சம் ஜாலியா விளையாடலாம் நாம. கீழே நான்கு எழுத்தாளர்களோட படைப்புகள்லருந்து சில வரிகள் தந்திருக்கேன். நடையை வைத்து எழுத்தாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம். தெரியலன்னா நாளைக்கு விடையை அப்டேட் பண்ணுவேன். அப்ப பாத்துக்கலாம்.


1) “அவதானா” மைதிலி சமையலறைப் பக்கம் ஜாடையாகப் பார்க்கிறாள். அவளேதான்... அந்தக் கண்ணும், மூக்கும், அச்சில் வார்த்தாற் போன்ற முகமும் யாருக்கு வரும்? அலையலையாய் முதுகில் புரளும் கூந்தலும் அவள் மாயவரம் சந்நிதித் தெரு அபயம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால்... பசுமை படர்ந்த முகமும், நெற்றியில் பளிச்சிடும் குங்குமமும்தான் மைதிலியின் சந்தேகத்திற்குக் காரணம்.

2) நான் உங்களை மாதிரியில்லே சார். இன்னமும் பழைய பஞ்சாங்கம். திணறத் திணற ஜீன்ஸ் எல்லாம் போடுவது கிடையாது. சுத்தமான மல்வேட்டி, கிளாக்ஸோ ஜிப்பா, தோளில் கதர்த்துண்டு (இதையெல்லாம் பார்த்து என் வயசைப் பற்றி சந்தேகப்பட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. யெங் மேன்! இப்பதான் பெண் பார்க்க பூனாவுக்குப் போகிறேனாக்கும்) சிகரெட், சுருட்டு பழக்கமெல்லாம் நோ. அதனால்தான் என் மூச்சு சீராக முழுசாக ஆரோக்கியமாக இருக்கும். ஆல்கஹால் சேர்ந்தது என்கிற ஒரே காரணத்துக்காக என்னதான் இருமல் வந்தாலும் சிரப்பைக்கூட சாப்பிட மாட்டேன். அவ்வளது இது... சுத்தம்!


3) நீரும் நானும் ஐஸ்வர்யா ராயும், கிளிண்டனும், சோனியா காந்தியும் உறவுதான். அதை நிரூபிக்கும் ஆவணங்கள்தான் நம்மிடம் இல்லை. ராஜாக்களுக்கும் அரச குலத்தவர்களுக்கும் ஓரளவு இருக்கிறது. அண்மையில் ராஜராஜசோழரின் வம்சத்தவர் ஒருவர் தஞ்சாவூர் அருகில் எஸ்.டி.டி. பூத் வைத்திருப்பதாகச் செய்தி படித்தேன். இதை நம்ப எனக்குத் தயக்கமே இல்லை. இந்த சிந்தனையை விரிவுபடுத்தினால் மேலும் வினோதங்கள் எழும். நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஒருசில மனிதர்களே இருந்தனர். அவர்களிடமிருந்துதான் உலகின் மக்கள் அனைவரும் கிளைத்தோம். விதிவிலக்கே இல்லை.

4) குறை நிலா மேகத்தை சல்லாத் துணியாகப் போர்த்தியிருந்தது. நட்சத்திரங்கள் முறை வைத்து மின்னிக் கொண்டிருந்தன. சென்னை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் ‘கடலில் வைரங்கள் கொட்டப்பட்டதைப் போல்’ என்று உபமானங்கள் யோசிக்க வைத்தன. சரம் சரமாக விளக்குகள் போட்டு மண்டை மண்டையாக மைக்குகள் கட்டி சுற்றுவட்டாரக் குடியிருப்புகளில் யாரையும் தூங்கவிடாமல் ‘எதிர்க்கட்சி’ நண்பர்களுக்கு மைக்கில் தேர்தல் சவால்கள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாலு  பேர் : 1.அனுராதா ரமணன், 2.ராஜேந்திரகுமார், 3.சுஜாதா, 4.பட்டுக்கோட்டை பிரபாகர்.

Monday, March 3, 2014

மொறு மொறு மிக்ஸர் - 24

Posted by பால கணேஷ் Monday, March 03, 2014
‘‘அப்போது எனக்கு 17 வயது. பம்பாயில் ஹெமு அதிகாரி நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். முகாமின் மற்ற விவரங்களைக் கவனித்துக் கொண்டவர் தாராபூர். கடும் வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்குப் பயிறசி நடக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. இடையில் ஓய்வும் கிடையாது. முதல் நாள் பயிற்சி முடிந்து பகல் உணவுக்கு உட்கார்ந்தோம். இரண்டு சப்பாத்திகளும், கொஞ்சம் காய்கறிகளும் பரிமாறினார்கள். எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட, சாப்பிட மறுத்தேன். 

நான் வடக்கில் இருந்து வருகிறேன். கடுமையாக உழைக்கிறேன். வேகமாகப் பந்து வீசுகிறேன். பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அதுமாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்! தாராபூர் என்னிடம் சீறிக்கொண்டு வந்தார். ‘நாங்கள் தரும் சாப்பாடு உனக்குப் பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். ‘இல்லை சார். நான் வேகமாகப் பந்து வீசுபவன். எனக்கு நிறையச் சாப்பாடு வேண்டும்' என்றேன். தாராபூர் ஏளனமாகச் சிரித்துவிட்டு, கிண்டலாகச் சொன்னார்: ‘இந்தியாவில் ஃபாஸ்ட் பௌலர்களே கிடையாது!'. பொங்கி வந்த கண்ணீரை நான் அடக்கிக் கொண்டேன். இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு வேகப்பந்து வீச்சாளராகத் திகழ வேண்டும் என்று உறுதி கொண்டேன். நன்றி தாராபூர்! அன்று எனக்கு நீங்கள் மிகப்பெரிய சேவை செய்தீர்கள்!"

--- இப்படித் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனான கபில்தேவ் நிகாஞ்ச். அடைந்த அவமானத்தை முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்ட இவரின் மன உறுதியை நாமும் கைக்கொள்ள ஆசைப்படுவோமாக!

=================================================

நாம் பார்க்கும் சினிமாக்களுக்கு சென்சார் போர்டு என்று ஒன்று இருககிறது (தானே?). கலாசசாரத்துக்கு ஒவ்வாத, ஆபாசக் காட்சிகள் வந்தால் ‘ஏ’ என்கிற சர்டிபிகேட் தரப்படுவதன் மூலம் ‘‘அலர்ட் ஆகிக்கங்கப்பா" என்கிறார்கள். அசைவம் சாப்பிடாதவர் நீங்கள் எனில், நீங்கள் வாங்குகிற ஆயில் முதல் பிஸ்கட் பாக்கெட் வரை சுத்த சைவமாக இருந்தால் பச்சையில் ஒரு வட்டத்தை அச்சிட்டு, ‘‘அசைவம் கலக்கலைப்பா. சாப்பிடலாம் நீங்க" என்கிறார்கள். இபபடி எலலாத்துலயும் உஷாரா இருந்து வாங்குற நம்மால எளவு... நாம படிக்கிற புத்தகத்துல சூதானமா இருந்து வாங்க முடியலையேப்பு...! தலைப்பையும், அவங்க தர்ற பில்டப்பையும் நம்பி ஏதோ நாலு நல்ல விஷயம் எழுதியிருப்பாங்கன்னு நெனச்சு வாங்கிப் படிச்சோம்னா... ‘சமூகத்துல நடக்காததையா எழுதிட்டோம்'னு ஒரு சாக்குச் சொல்லிட்டு சாங்கோபாங்கமா பாலுறவுகளையும், பெண்களின் உறுப்புகளை அப்பட்டமாக வர்ணித்தும், ஒருபாலின :உறவுகளை விரிவாகவும் எழுதித் தொலைக்கிறான்கள். இந்த மாதிரி புத்தகங்கள்ல அட்டைப்படத்துல ஒரு நீலக்கலர் கத்திரிக்கோலை போடணும்னு யாராச்சும் சட்டம் கொண்டு வந்தீங்கன்னா.... ரெம்பப் பேரு பொழச்சுப்போம் சாமிங்களா...!

=================================================

டாக்டர் காந்தன் ரொம்பவும் நல்லவர் என்று அவ்வூரில் நல்ல பெயர் எடுத்தவர். கொஞ்சம் வயசுதான். முப்பபதுக்குள் இருக்கும். ஜனங்கள் அவரிடம் ரொம்ப மரியாதை வைத்திருந்தனர். அவர் டாகடர் தொழிலை ஆரம்பித்து இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளாகவே அதில் விரக்தியடைந்து, அத்தொழிலை விட்டுவிட்டு இளம் சன்னியாசியைப் போல அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார். அதற்குக் காரணம்... அவரிடம் வைத்தியம் செய்து கொண்ட நோயாளிகள் யாரும் அவருடைய திறமையை மற்றவர்களிடம் சொல்லி விளம்பரப் படுத்தாமலேயே பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

--- ‘மாயமாய் மறையும் மந்திர மனிதன்' மர்மநாவலில் சிரஞ்சீவி. (நோ.. நோ... நீங்க நினைக்கிற தெலுங்கு நடிகரில்லை. பழைய தமிழ் எழுத்தாளர் இவர்!)

=================================================

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது ‘புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடானது' ‘மது அருந்துவது உடல்நலத்தக்குக் கேடானது' என்று திரைப்படங்கள்/தொலைக்காட்சிகளில் அறிவிப்பை திரையில் ஓர் ஓரமாக மின்ன வைக்கிறார்கள் சமீபகாலமாக. அந்நாளைய படங்களில் சிவாஜியோ, சுருளிராஜனோ சிகரெட் பிடித்தால்கூட இப்போது இந்த அறிவிப்பைச் சேர்த்துத்தான் தொ.கா. ஒளிபரப்புகிறது. இந்த சமூக அக்கறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க. திரைப்படம்/தொலைக்காட்சி அன்பர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் வேறுசில அறிவிப்புகள்:

* கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்... ‘வன்முறை வெகுஜன நலத்துக்குக் கேடானது!'
 
* சீரியலில் மாமியாரும் மருமகளும் மற்றொரு மருமகளைத் தீர்த்துக்கட்ட திட்டமிடும் சமயங்களில் அல்லது ‘அவளைப் பழிவாங்கி நடுத்தெருவுல நிறுத்தாம விடமாட்டேன்டா' என்று அடித்தொண்டையில் வில்லன்/வில்லி கதாபாத்திரங்கள் அலறுகையில்... ‘சதி செய்தல் குடும்ப நலத்துக்குக் கேடானது!'
 
* ஒரு இளைஞனும், இளைஞியும் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதலித்து ஆடிப் பாடும் காட்சிகளில்... ‘காதலிப்பது பெற்றோர் நலத்துக்கு எதிரானது!'
 
* அடியாட்கள் ஒருவனை வெட்டி ரத்தம் தெறிக்க கசாப்பு போடும் காட்சியில் (அ) கதாநாயகன் வில்லன் கும்பலை கதறக் கதற வெட்டித் தள்ளுகையில்... ‘ரத்தவெறி சிறுவர் நலனுக்கு எதிரானது!'
 
--- இதுமாதிரி இன்னும் வேற ஏதாச்சும் போடலாம்னு உங்களுக்குத் தோணுதா? இக்கட நேனு வெய்ட் சேஸ்தானு! செப்பண்டி!

=================================================

ரு பெரிய கோடீஸ்வரர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் இளையமகன் சந்தேகிக்க, அவன் நண்பன் துப்பறிய முயல, இறந்தவரின் அறைக்கு நேர்கீழே தோட்டத்தில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டெடுக்கிறான். டாக்டர் அவை ஒரு மனித விரலின் எலும்புகள் என்கிறார். சிலபல விசாரணைகளுக்குப் பின், பிறிதொரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் குரு எனப்படும் துறவியின் சமாதியில் தோண்டுகையில் எலும்புக்கூட்டில் ஒரு விரல் இல்லை. கண்டெடுத்த விரல் துண்டுகளை அங்கு ஒட்டிப் பார்க்க கச்சிதமாகப் பொருந்துகிறது. அங்கே மறந்து வைத்துவிட்ட வாட்ச்சை எடுக்க நள்ளிரவில் தன்னந்தனியே செல்லும் துப்பறியும் நண்பனுக்கு முன்வந்து அந்த எலும்புக்கூடு "என் சமாதியை ஏன் தோண்டின?" என்று கேட்க, அதிர்ச்சியில் ரத்தம் கக்கி இறக்கிறார் அவர். தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டு பேய் பலர்முன் தென்பட்டு பயமுறுத்துகிறது.

--- என்னன்னு புரியலையா? ‘ஒரு விரல்'ங்கற த்ரில்லர் திரைப்படத்தோட கதையிலதான் இதெல்லாம் வருது. இரண்டு மணி நேரம் ஓடற இந்தப் படத்துல ரெண்டே பாட்டுதான். நல்ல விறுவிறுப்பான கதையோட்டமும் எதிர்பாராத முடிவும் அசர வெச்சது. இந்த மாதிரிக் கதைகள்ல கடைசியில ‘இவனா குற்றவாளி?’ங்கற ஆச்சரியமும், அவன் செய்த விதத்தை விவரிக்கும்போது ‘அட!’ என்கிற வியப்பும் வந்தால் படத்துக்கு வெற்றி எனலாம். அந்த வகையில் இந்தப் படம் வெற்றிப்படம்தான்! என் சின்ன வயசுல நான் பார்க்கிற திரைப்படங்கள்ல ‘ஒருவிரல் கிருஷ்ணாராவ்’ன்னு டைட்டில்ல பாக்கறப்ப ‘இந்த ஆள் மட்டும் எப்படி ஒரு விரலோட பிறந்தார்?’ன்னு வியந்ததுண்டு.  எங்கம்மா அந்த நபரை திரையில இவர்தான்டான்னு அறிமுகப்படுத்தினப்ப அவர் கைகள்ல அஞ்சு அஞ்சு விரல்கள் இருக்கறதப் பாத்துட்டு வியந்ததும், அம்மா தலையில தட்டி ‘‘ஒரு விரல்ங்கற படத்துல நடிச்சதால அந்தப் பேர்டா’’ன்னு சொன்னதும் இப்ப நினைச்சா சிரிப்பு வருது. அதேமாதிரி வழுக்கை மண்டையோட அவரைப் பார்த்துட்டு, இந்தப் படத்துல (முதல் படம்ங்கறதால) இளமையா தலைமுடியோட பாக்கறப்பவும் சிரிப்புத்தான் வந்தது.

ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைப்பட்டுக்கிட்டிருந்த இந்தப் படத்தோட டிவிடி சமீபத்திய வேட்டையில கிடைக்கவும் உடனே வாங்கிப் பாத்துட்டேன். தேங்காய் சீனிவாசனுக்கும் இது முதல் படம்ங்கறதும், அவர் மிகமிகமிக இளமையா வர்றதும் எதிர்பாராத ஆச்சரியங்கள். அவரின் கேரக்டரிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது மற்றொரு ஆச்சரியம். த்ரில்லர் பட ரசிகர்களாக நீங்க இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம். (இதவெச்சு ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கலாம். சிஷ்யனைப் பாத்தாவது கத்துக்கடா கணேஷா! --- சிரிக்குது மனஸ்!)

Thursday, February 13, 2014

மீபத்தில் ‘கரைசேரா அலை' அரசனின் த்ங்கை திருமணத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு பஞ்ச(த்தில் அடிபடாத)பாண்டவர்களாக நான், சீனு, ஸ்.பை., கோவை ஆவி மற்றும் ரூபக் (கார் கொணர்ந்த வள்ளல்) ஆகியோர் குடுமியான் மலை, நார்த்தா மலை, சித்தன்ன வாசல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஸ்தலங்களுக்கு விசிட் அடித்தோம். இவை பற்றிய பய(ண)க்குறிபுகளை சீனு தன் தளத்தில் திடங்கொண்டு விளக்கி வருவதால் இங்கே சில சிப்ஸ்களை மட்டும் நான் தூவுகிறேன்.

* மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை சாப்பிடாததால் நந்திவரத்துக்குச் சற்று முன்னால் ‘காரைக்குடில்' என்ற உணவகத்தின் முன் காரை நிறுத்தினார் ரூபக். உணவகத்தின் வாசலில் அருவி கொட்டுவதைப் போல் அமைத்து, அருவியின் அருகில் குகையின் வாசல் போல அமைத்திருந்தார்கள். உள்ளே போய்ப் பார்த்தால், மரத்தை வெட்டித் தள்ளியபின் அதன் அடிப்பாகம் இருக்குமில்லையா... அதைப் போல சேர்களை அமைத்திருந்தார்கள். கை கழுவ வாஷ் பேஸினுக்குப் போனால்... ஒரு பீப்பாயைக் கவிழ்த்து வைத்து அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி செட்டப். சரிதான்... உடம்பில் இலை தழைகளைச் சுற்றி அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டு ‘ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பக ஜிம்பா' என்றபடி வெயிட்டர் (வெயிட்டி வந்தால் நல்லா இருக்குமேன்னு ஜொள்ளு விட்டது ஒருபக்க மனசு) வருவாரோ என்று எதிர்பார்த்தேன். கையில் கால்குலேடடர் போன்ற வஸ்துவுடன் நாகரீக யுவர்கள்தான் வந்தார்கள்... சரி, நாம் ‘கிவ்'வி வெச்சது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு ஆர்டர் பண்ணினோம். உணவு வகைகள் ஏமாற்றாத நல்ல ருசியில் இருந்தது ஒரு பெரும் ஆறுதல்.

* ‘ரூபக்கின் கார் வலிமையானதா, இல்லை நாங்கள் வலிமையானவர்களா தெரிந்து கொள்கிறோம்’ என்று அஃறிணைகள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன போலிருக்கிறது! திடீரென்று ஒரு பைரவர் ரூபக்கின் காரில் மோதி, ரூபக்கைத் திடுக்கிட வைத்து, ‘உன் கார்தான் பெரிசு, எனக்கு வலிக்குதுப்பா' என்று தன் பாஷையில் கத்தியபடி ஓட்டமெடுத்தார். பிறிதொரு ஏரியாவில் அசால்ட்டாக ஒரு ரிஷபர் குறுக்கிட்டு ரூபக்கின் பொறுமையைச் சோதித்தார். தலைநகரம் தவிர மற்றப் பகுதிகளில் தமிழ்நாடெங்கும் மிருகங்களின் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது போலும்! எதிர்பாராத இந்த நிகழ்வுகளெல்லாம் எங்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது - ரூபக்கைத் தவிர! ஹி... ஹி...!

* பல பத்திரிகைக்காரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ‘இணையத்தில் எழுதுபவர்கள்' என்றால் ஒரு எள்ளல் இருப்பதைக் கவனித்ததுண்டு நான். என்னைப் பொறுத்தவரையில் இணையத்தில் எழுதுகிற ஒருவனாக நான் இருப்பதில் மிகவும் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். ஏனென்றால்... மாமனாகவோ, மச்சானாகவோ இல்லாமல்... இணைய நண்பர்கள் என்பதற்காக எங்களை வரவேற்று, உபசரித்து நட்பைக் கொட்டிய ‘சிவகாசிக்காரன்’ ராம்குமார் போன்றவர்கள் எமக்குக் கிடைப்பது இணையத்தின் வலிமையாலன்றோ...! உண்மையில் சிவகாசிக்காரனை முதன்முறையாகச் சந்திக்கப் போவதால் எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஏனெனில் நண்பர்கள் அனைவருக்கும் அவரின் எழுத்து பரிச்சயமாகியிருக்க, நான் அவரின் எழுத்துக்களில் ‘நாய்' பற்றி எழுதிய ஒரு பதிவு தவிர வேறெதுவும் படித்ததில்லை. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் எனக்குள். ‘‘மின்னல் வரிகள் படிச்சதுண்டா நீங்கள்?" என்று நான் ராம்குமாரிடம் கேட்க, ‘‘எதுவுமே படிசசதில்ல..." என்று பதிலிறுத்து என் வயிற்றில் பாலை வார்த்தார் அவர். ‘நண்பேன்டா' என்று அவரை கை குலுக்கி கட்டிக் கொண்டேன். ஹா... ஹா... ஹா...!

* நார்த்தா மலையை நாங்கள் அடைந்தபோது நடுப்பகல் ஒன்றரை மணி இருக்கும். அந்த படைபடைக்கும் வெயிலில் மலையேற விரும்பவில்லை என்று நானும் ஆவியும் காரிலேயே தங்கிவிட முடிவு செய்ய.. மற்ற மூவரும் மேலே போய்ப் பார்த்து வந்தார்கள். வந்ததும் ‘‘ச்சே...! மிஸ் பண்ணிட்டிங்க நீங்க. அருமையான இடம். வந்திருக்கணும்..." என்றெல்லாம் பசங்க (எங்க வ.எரிச்சலை கிளப்பணும்னே) செம பில்டப் கொடுத்தார்கள். ‘ஹி... ஹி... ஹி... இதுமாதிரி நெறைய பில்டப்பப் பாத்திருக்கோம்ல நாங்க' என்று நானும் ஆவியும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை சீனுவின் பதிவில் படிக்க அவலுடன்... ஸாரி, ஆவலுடன் காத்திருக்கிறேன்!

* கங்கைகொண்ட சோழபுரம் நிறையவே பிரமிப்பைத் தந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்கதாக, சோழர் காலத்தியதாக இருந்த போதிலும் நேற்றுச் செதுக்கியவை போல சிற்பங்கள் அப்படி அழகாக இருக்கின்றன. ஆலயம், கோட்டையைச் சுற்றிலும் அழகாக புல்வெளி வளர்த்திருப்பதால் வெயிலின் கடுமை தெரியவில்லை. நாங்கள் சென்றது முகூர்த்த தினமாக இருந்ததால் கல்யாண ஜோடிகளும், துணையாக வந்த நிறைய ‘அம்மணி’களும் பார்வைக்குக் குளிர்ச்சி தந்தார்கள். ஹி... ஹி...! ஒவ்வொருவரின் காமிராக்களிலும் சலிக்கும் வரை புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளிவிட்டு (அட, கோயிலை, சிற்பங்களைத் தாங்க...) புறப்பட்டோம்.

* வார்த்தைகளை உபயோகிப்பதில் படுசிக்கனத்தைக் கையாளும் ஸ்கூல் பையன்(ர்?) இந்தப் பயணத்தில் கொஞ்சம் பேசியும், என்னை தூங்கும் சமயத்திலும், டைஐஐஐட் குளோசப்பிலும் தன் காமிராவால் சுட்டு, அராஜகனாக அவதாரமெடுத்து அசர வைத்தார். (எலேய்... தப்பித் தவறி எதையும் பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிராத... இங்க கொள்ளைப் பேருக்கு உன்னால ஹார்ட் அட்டாக் வந்துரும்டியோய்...!) மணிரத்னத்தின் பட ஹீரோக்கள் மாதிரி பேசுகிற ரூபக்கிடமும் இப்போது சற்று முன்னேற்றம் - பேசுவதில்! இவையெல்லாம் பயணம் எங்களுக்குத் தந்த அனுகூலங்கள்!

* ஆவி என்றால் மிருகங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. சித்தன்னவாசலில் ஆவியின் மீது பாசம் கொண்டு அவரைத் துரத்தியது ஒரு ஆஞ்சநேயர் அம்சம்! அரியலூரிலோ தனிமையானதொரு தோப்பில் இயற்கையன்னையின் மடியில்(?) அரசன் எங்களுக்கு மதிய விருந்து படைக்க, தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், ஆவியின் முதுகுக்கு வெகு பின்னால், ஏதோ நீண்டநாள் நண்பர் போல நாக்கைத் தொங்கப் போட்டபடி வந்து அமர்ந்தார் ஒரு பைரவர். நாங்கள் அதைக் கவனித்துச் சொல்ல, திரும்பிய ஆவி அத்தனை அருகில் ‘நண்பரை’(!) எதிர்பார்க்காததால் ஜெர்க் ஆனார். ஹா... ஹா... ஹா...!

* புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி, பைபாஸ் ரோடைப் பிடித்த சமயத்தில் அரியலூருக்கு எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற குழப்பம் வந்தது. அப்போது சிவகாசிக்காரன், ‘‘அங்க ரெண்டு பொண்ணுங்க போவுது, அவங்ககிட்ட கேளுங்கப்பா..." என்று தூண்ட, முன் இருக்கையிலிருந்த ஆவி, ஜன்னலின் வெளியே தலைநீட்டி வழி கேட்க, ‘‘தெரியாது" என்ற அந்தப் பெண்களில் ஒருத்தி, ‘‘நமக்கே இங்க ஒரு மண்ணும் தெரியாது. இதுங்க நம்மகிட்டப் போயி வழி கேக்குது பாரு..." என்று தன் தோழியிடம் சொன்னது காருக்குள்ளிருந்த எங்களுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்க, சிவகாசிக்காரரின் திருமுகத்தில் சற்றே அசடு வழிய, படுகுஷி எனக்குள்! மத்தவங்க பல்பு வாங்கினா, நமக்கு எப்பவும் குஷிதானே..! அப்புறம் சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்பட்ட ஒரு ஆட்டோக்காரர் ஆபத்பாந்தவனாக வழிசொல்லி உதவினார்.

மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது இந்தப் பயணம். ஊருக்குத் திரும்பியதுமே ஆவியின் ‘ஆவிப்பா’ வெளியீட்டு விழா நடந்தது. அதைப் பற்றி பின்னர் ஆவி விரிவாக எழுதுவார் (என்று நம்புகிறேன்).

Wednesday, January 29, 2014

மொறு மொறு மிக்ஸர் - 23

Posted by பால கணேஷ் Wednesday, January 29, 2014
து தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி 
இவனையும் துணைக்குப் போகச் சொன்னாங்க.

கடைக்குச் சென்றதும் கிளிப் பிள்ளை மாதிரி பெரியம்மா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள் தங்கை. கடைக்காரர் பொட்டலம் கட்டிக் கொடுத்ததும், இவன் கையிலிருந்த சில்லறையைக் கொடுத்துவிட்டு, ‘‘வாடி, போகலாம்...!" என்றான் தங்கையிடம். அவள் நகராமலே நின்றாள், ‘‘அண்ணா! கடைக்காரன் ஏமாத்தப் பாக்குறான்... என்னன்னு கேளுங்க..." என்றாள். ‘‘என்ன ஏமாத்திட்டாரு...? எதைக் கேக்கணும் நானு?" என்று முழித்தான் இவன். அவள் சொன்னாள்: ‘‘ஐயோ அண்ணா...! பெரியம்மா நூறு தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இவன் மூணுதான் குடுத்திருக்கான். இப்படித்தான் ஏமாளியா எப்பவும் வாங்கிட்டுப் போவியா?" தங்கையின் புத்திசாலித்தனத்(?)தின் முன் அன்று ‘ஙே' ஆகி நின்றான் இவன்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
 

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ன்றொரு நாள் என் வீட்டிலிருந்து மத்யகைலாஷ் வரை பேருந்துப் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தின் பின்வாசலில் ஏறிய எனக்குப் பின்னிருந்து ஏழெட்டு பேர் நெருக்க, கதவின் அருகிலிருந்து உள்ளே போகலாம் என்றால் முடியவில்லை. முன்னால் நின்றிருந்த ஒரவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர் மாதிரி முதுகின் பின்னால் தொங்கவிட்ட பெரிய கறுப்புப் பையின் வார் தோள்பட்டையைச் சுற்றிவர, இரண்டு பேர் நிற்கும் இடத்தை ஆககிரமித்துக் கொண்டிருந்தார். அவரை நசுககிக் கொசண்டு போகலாம் என்றாலோ, அவருக்கு முன் நின்றிருந்த பெண்ணின் உடலின் மேல் நன்ன்ன்றாக உரச வேண்டியிருக்கும், வெறுப்புப் பார்வை அல்லது கோப வசவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ‘‘ஸார்... நீங்க எங்க இறங்கப் போறீங்க?" என்றேன் மெதுவாக. ‘‘கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்" என்றார் அவர். ‘‘இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கே... உங்க தோள்ல இருக்கற பேகைக கழட்டி காலடியில வெச்சா, நான் முன்னால போக முடியும்" என்றேன்.

அவர் முன்புறம் நின்றிருந்த ஒருத்தரைக் கை காட்டி, ‘‘அவர் இதே மாதிரி தோள்ல பேக் மாட்டிட்டுதான் இருக்கார். அவரைக் கேட்டீங்களா? நான்தான் கிடைச்சனா?" என்றார். முட்டாளோடு முரண்பட்டுப் பயனில்லை என, அவனை நசுக்கி முன்னேறி விட்டேன். (நல்லவேளை... அந்தப் பெண் வசவவில்லை... ஹி... ஹி...!) எனக்குப் பின்வந்த நான்கைந்து பேரும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய... அதன்பின் பேகைக் கழற்றி காலடியில் வைத்தார் அந்த நபர். தான் செய்யும் குற்றத்தை ஒருவன் சுட்டிக் காட்டினால், ‘அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல' என்று தன் தப்பை நியாயப்படுத்துவது என்ன நியாயம் எனபதுதான் புரியவில்லை. அவன் கொலையே பண்றான், நான் கையைத் தானே வெட்டறேன் என்று சொல்வது என்ன லாஜிக்? என்னத்தச் சொல்ல...? இப்படியே பழகிட்டாய்ங்கப்பூ...!


 ===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

இனி சில தகவல்கள்:

1) நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த ‘நாலு வரி நோட்டு’ புத்தகங்களை இங்கு க்ளிக் செய்து இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது (0)99001 60925 என்ற எண்ணுக்குத் தொலைபேசி உங்கள் முகவரியைக் கூறி பெற்றுக் கொள்ளலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் கூரியர் செலவும் இலவசம் என்றும், சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவு மட்டும் இலவசம் என்றும் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

2) ஐ பேட் வைத்திருக்கிறீர்களா நீங்கள்? ‘கல்கி' வார இதழின் வாசகரா நீங்கள்? எனில் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. இந்தச் சுட்டியில் க்ளிக் செய்தால் ஐபேடில் படிப்பதற்கு வசதியாக - இலவச பயன்பாடாக - கல்கி வார இதழ் கிடைக்கிறது. படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு ஒரு சல்யூட்!

3) படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம் ஒன்றை நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து துவங்கியிருக்கிறோம். அதில் முதல் பதிவை இன்று வெளியிட்டுள்ளோம். தளத்தின் பெயர் - வாசகர் கூடம்! பிடிச்சிருக்கா? அங்கும் உங்களின் ஆதரவைத் தந்து எங்களை வளர்க்கும்படி பணிவண்புடன் வேண்டிக் கொள்கிறோம் நாங்கள்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

to end with a smile...

hi...hi...hi...!


Wednesday, September 18, 2013

­மீண்­டு ­வந்­த ­மின்­னல்!

Posted by பால கணேஷ் Wednesday, September 18, 2013
­ஹாய் ­எவ்­ரி­ப­டி... உங்­க­ளை­ல்­லாம் ­பாத்­து ­­ரொம்­ப ­நா­ளாச்­சு. எல்­லா­ரும் ­நலந்­தா­னே...!

எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே... அ­தக் ­­கேட்­டாக்­கத் ­தாங்­கா­தம்­மா ­உங்­க ­ம­ன­மே... இன்­டர்­நெட்­டு ­ஒண்­ணை ­நம்­பி ­எங்­க­டை­யத் ­தொ­றந்­து ­வெச்சேன்... போஸ்ட்­டு ­மே­ல ­போஸ்ட்டாப் ­போட்­டு ­உங்­க­ளை­யும் ­அ­றுத்­து ­வந்­தேன்... எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே...

­அப்­ப­டின்­னு ­ஆ­ரம்­பிச்­சு ­ஒ­ரு ­மா­ச­மா ­ஆ­பீஸ்­ல­யும், வீட்­ல­யும், நெட் ­கி­டைக்­கா­ம­யும் ­பட்­ட ­பாட்­டைல்­லாம் ­சொல்­லிக் ­கைப்­புள்­ள ஸ்­­டைல்­ல ­அ­ழ­ணும் ­நா­­னு ­நி­யா­ய­மா. ஆ­னா ­சோ­கக் ­க­தை­யி­ல­யும் ­கூ­ட ­ஹாஸ்­யத்­தை ­எ­திர்­பார்ர்க்­க­ற ­டைப்­பாச்­சு­தே ­நா­ம... அ­த­னா­ல ­அ­தை­யெல்­லாம் ­விட்­டுட்­டு ஸ்ட்­ரெ­யிட்­டா ­மேட்­ட­ருக்­குள்­ள ­வ­ர­லாம். க­டல்­ல ­வி­ழ­ற ­ம­ழைத்­து­ளி­ல ­ஒண்­ணு ­எங்­க ­போ­கு­துன்­னு ­யா­ரு ­தே­டப் ­போ­றாங்­கன்­னு ­எ­னக்­குள்­ள ­ஒ­ரு ­நெ­னப்­பு ­இ­ருந்­திச்­சு. ­ப­ல ­பெ­ரி­ய ­அ­லை­க­ளும், சி­ல ­சி­றி­ய ­அ­லை­க­ளும் ­இந்­த ­ம­ழைத்­து­ளி­யக் ­கா­ணா­ம ­‌­தே­டிப்­ ­பு­டிச்­சு ­வி­சா­ரிச்­சப்­பத்த்­தான் ­என் ­எண்­ணம் ­த­வ­றா­ன­துன்­னு ­பு­ரிஞ்­சிச்­சு. இ­ணை­யத்­து­ல ­நு­ழைஞ்­ச­து­ல ­நா­ம­ளும் ­நி­றை­ய ­ம­­னு­ஷங்­க­ளைச் ­சம்­பா­திச்­சி­ருக்­கோம்­னு ­அ­ள­வில்­லா­த ­சந்­தோ­ஷ­மும் ­எ­ழுந்­துச்­சு.

­அ­து­ல­யும் ­இந்­த ­ஸ்.பை. ஒ­ரு­ப­டி ­மே­ல ­போ­யி... ‘கா­ணா­மல் ­போ­ன ­ப­தி­வர்’ன்னு ­நம்­ம­ளைப் ­பத்­தி ­ஒ­ரு ­ப­தி­வே ­எ­ழு­தி­ன­தப் ­பாத்­த­தும் ­ம­ன­சுக்­குள்­ள ­­‘டர்ர்’­ரா­யி­­ரு­ச்­சு. இ­னி­யும் ­நா­ம ­க­வ­னிக்­கா­ம ­வுட்­டா...கோ­வை ­ஆ­வி, சீ­னு, அ­ர­சன், ரூபக்-­னு ­நம்­ம ­சங்­கத்­து ­உ­றுப்­பி­னர்­கல்­லாம் ­சேர்ந்­து ­பு­து­சா ­வந்ந்­தி­ருக்­க­ற ­இந்து ­பேப்­பர்­ல ­கூ­ட ­வி­ளம்­ப­ரம் ­கு­டுத்­து­டு­வாங்­க­ளோன்­னு ­தோ­ணிச்­சு. (எல்லா ­பய­புள்ள்­­ளைங்­க ­கிட்­ட­யும் ­நம்­ம ­போட்­டோ ­வே­ற ­இ­ருக்­கு­து!) ச­ரி... நாம­ளும் ­ஏதாச்­சும் ப­ழை­ய­ப­டி ­கி­றுக்­க­லா­மேன்­னு ­ரீ ­எண்ட்­ரி ­இப்­ப!

‘கா­ணா­மப் ­போ­ன­’ அப்­ப­டின்­னு ­ப­டிச்­ச­து­மே ­எ­ழுத்­தா­ளர் ­சா­வி ­எ­ழு­தி­ன ­அ­வ­ரோ­ட ­சின்­ன ­வ­ய­சு ­அ­னு­ப­வம் ­ஒண்­ணு ­ப­டிச்­ச­து ­நி­னை­வுக்­கு ­வந்­த­து. ­­எட்­டு ­வ­குப்­பு ­வ­ரை ­த­மி­ழில் ­ப­டித்­த ­அ­வ­ரை ஒன்­ப­தாம் ­வ­குப்­பில் ­இங்­கி­லீஷ் ­மீ­டி­யத்­துக்­கு ­மாற்­றி­ன­தா­ல ­­ப­டிக்­க­ற­து ­கஷ்­ட­மா ­இ­ருக்­க, எக்­ஸாம் ­எ­ழு­தி­னா ­பெ­யி­லா­யி­டு­வோ­மோன்­னு ­ப­யந்­து, அ­வங்­கப்­பா ­எக்ஸாம் ­பீஸ் ­கட்­டக் ­கு­டுத்­த ­ப­ணத்­தை ­எடுத்­து­க்­கிட்­டு ­ஊ­ரை ­விட்­டு ­ஓ­டிட்ட்­டா­ரு.கை­ல ­இ­ருந்­த ­கா­செல்­லாம் ­தீர்­ற ­நிலை­யி­ல ­தி­ருப்­பா­தி­ரி­பு­லி­யூர்­ல ­ப­டிச்­சுட்­டி­ருந்­த ­அ­வ­ரோ­ட ­அத்­தை ­ம­க­னைத் ­தே­டிப் ­போ­யி­ருக்க்­கா­ரு.அ­வன் ­லீ­வு­ல ­சொந்­த ­ஊ­ருக்­குப் ­போ­யிட்­ட­தா­ல, ­கைல­ருந்­த ­கா­சும் ­தீர்ந்­து ­போ­க ­ரெண்­­டு ­நாள் ­கொ­லப்­பட்­டி­னி­யா பா­ட­சா­லைத் ­திண்­ணை­யி­ல ­கெ­டந்­த­வ­ரு, ஒ­ரு ­ஓட்­டல்­கா­ர­ரை ­சி­னே­கம் ­பண்­ணிக்­கிட்­டு ­அவ­ர் ­உ­த­வி­யா­ல ­ஊ­ருக்­கு ­லெட்­டர் ­எ­ழு­திப் ­போட்­ருக்­காரு. ஊர்­ல ­இ­வ­ரக் ­காணா­ம ­த­விச்­சு ­இ­வங்­கப்­பா ­அம்­மா ­கோ­யில் ­கோ­யி­லா ­வேண்­டிட்­டி­ருக்­காங்க. லெட்­ட­ரைப் ­பாத்­த­தும் ­அப்பா ­வந்­து ­­சா­வி­யை ­ம­யி­லாப்­பூ­ருக்­கு ­கூட்டிட்­டுப் ­போ­யிட்ட்­டா­ரு. அங்­க ­அ­வ­ரு ­வேண்­டிக்­கிட்­ட ­மா­தி­ரி ­பி­ரா­ம­ணர்­க­ளுக்­கு ­­முந்­தி­ரிப்­ப­ருப்­பு, பா­ய­சம் ­எல்­லாம் ­வெச்­சு ­அட்­ட­கா­ச­மா ­ஒ­ரு ­வி­ருந்­து ­போட்­ருக்­கா­ரு ­அ­­வ­ரோ­ட ­அப்­பா. வி­ருந்­து­ல ­சாப்­பிட்­டுட்­டு ­பெ­ரி­சா ­ஏப்­பம் ­விட்ட­ ப­டி ­வந்­த ­ஒ­ருத்­த­ரு, ‘‘சாப்­பா­டு ­பி­ர­மா­தம்­­டா... ம­க­ரா­ஜ­னா ­நீ ­அ­டிக்­க­டி ­இப்­ப­டி­க் ­கா­ணா­ம ­போ­யிண்­டி­ரு... எங்­க­ளுக்­கு ­அப்­ப­தான் நல்­ல ­சாப்ப்­பா­டு ­கெ­டைக்­கும்’’ ­அப்­ப­டின்­னா­ராம்...! ஹா... ஹா...! அ­து­மா­தி­ரி ­நான் ­கா­ணா­மப் ­போயி ­தி­ரும்­ப ­வந்­த­துக்­கு ­நம்­ம ஸ்.பை. ச­ர­வ­ணன் ­உங்­க ­எல்­லா­ருக்­கும் ­விருந்­து ­வெக்­காட்­டி­யும் ­அட்­லீஸ்ட் ­எ­னக்­கு ­மட்­டு­மா­வ­து ­மெ­கா ­வி­ருந்­து ­ஒண்­ணு ­வெப்ப்­பா­ருன்­னு ­நெ­னக்­கி­றேன். ஹி... ஹி...!

­நம்­ம ஸ்.பை. தன் ­ப­தி­வு­ல ­எ­ழு­தி­யி­ருந்­த ­ஒ­ரு ­வ­ரி ­எ­னக்­கு ­ரொம்­பப் ­பு­டிச்­ச­து. நான் ­மீண்­டும் ­வ­லைக்­குள்­ள ­வந்­த­தும் ­நண்­பர்­கள் ­அ­னை­வ­ரோ­ட ­ப­தி‌­வு­க­ளை­யும் ­சேத்­து­வெச்­சுப் ­ப­டிச்­சு ­க­ருத்­துப் ­போ­டு­வேன்­னு ­சொல்­லி­யி­ருந்ந்­தா­ரு. அ­து ­ரொம்­பக் ­க­ரெக்ட். ­மத்­த­வங்­க­ளுக்­கு ­க­ருத்­து ­போ­ட­ற­துக்க்­கா­க­வே ­எ­னக்­குன்­னு ­ஒ­ரு ப்­ளாக் ­ஆ­ரம்­பிச்­ச­வன் ­நா­னுங்­க­ற­தா­ல ­அம்­ம ­ப­ய ­நல்­லாப் ­பு­ரிஞ்­சு ­வெச்­சு­ருக்கா­னேன்­னு ­ம­கிழ்­வா ­இ­ருந்ந்­திச்­சு. நா­ளை­ல­ருந்­து ­அ­தைச் ­செய்­ய­ற­து­தான் ­­என்­னோ­ட ­த­லை­யா­ய (­கண்­ணா­ய, கை­யா­ய) ­ப­ணி­ங்­கோ...! ­

****************************************************

அ­வர் ­என் ­நெ­ருங்­கி­ய ­நண்­பர். ‘பூக்­­கூ­டை’ என்­ற ­த­ளத்­தில் ­தன் ­சிந்­த­னை ­ம­லர்­க­ளை ­நி­ரப்­பிட்டி­ருந்தா­ரு. ­(யா­ரெல்ல்­லாம் ‘பூக்க்­கூ­டை’க்­கு ­வி­சிட் ­அ­டிச்சி­ருக்கீங்­க? கை ­தூக்­குங்­க..) ஆ­ரோக்கி­ய­தா­ஸ் ­என்­ப­து ­அ­வர் ­பெ­யர். அ­நி­யா­யத்­துக்­கு ­நல்­ல­வர். ­செப்­டம்­பர் 9ம் ­தே­தி ­செல்­வி. ஜெ­சிந்­தா ­மே­ரி ­கிட்­ட ­வ­ச­மா ­மாட்­டிக்­கிட்­டா­ரு. ­சீ­ரி­யஸ் ­டைப்­பா­ன ­அ­வ­ரை ­கல்­யா­ணத்­­தன்­னிக்­கா­வ­து ­‘சி­ரி’­யஸ் போஸ்­ல ­­போட்­டோ ­எ­டுக்­க­லாம்­னு ­ரொம்­­ப ட்­ரை பண்­ணேன்... க­டை­சி­ல ‘நான் ­அ­லு­து­டு­வேன்’னு ­மி­ரட்ட்­டி­ன­தும் ­கொஞ்­ச­மா ­சி­ரிப்­­பை(?)ச் ­சிந்­த­றா­ரு ­பாரு்ங்­கோ...!



****************************************************

இப்­ப ­நம்­­­மோ­ட... ஐ ­மீன் ­என்­னோ­ட... ச­மீ­பத்த்­தி­ய ­கோ­வை ட்­ரிப்­பு­ல ­எ­டுத்­த ­சி­ல ­­ப­டங்­கள் ­உங்­க ­பார்­வைக்­கு...


Monday, July 15, 2013

மொறு‌மொறு மிக்ஸர் - 19

Posted by பால கணேஷ் Monday, July 15, 2013
டந்த ஒரு வாரமாக  இணைய இணைப்பு மூன்று நாட்கள் சொதப்பியதென்றால், கீ போர்ட் ஸ்ட்ரக்காகியதி்ல் எதையும் டைப் செய்ய முடியாமல் பேக்ஸ்பேஸாக விழுந்து இரண்டு நாட்கள் படுத்தியெடுத்ததின் விளைவாக இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. மொபைல் மூலம் ‌முகநூல்தான் எளிதில் படிக்க முடிகிறது; ஒன்றிரண்டு தளங்களைத்தான் படிக்க முடிந்தது. இப்பவும் இணைய இணைப்பு முழுமையா சரியாகலை. இருந்தாலும்... உங்களோட ஒரு வார நிம்மதியைப் பறிக்க இதோ வந்தூட்டேன்.... ஹா... ஹா...!

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=

ந்த ஆண்டு மெகா பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்துப் பேசுவதற்காக நேற்று மாலை வழக்கமான இடமான கே.கே.நகரிலுள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ஸில் நான், மெ.ப.சிவகுமார், கே.ஆர்.பி., பட்டிக்காட்டான் ஜெய், ஆரூர் மூனா செந்தில், அரசன், புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி, செல்வின், ரூபக்ராம் ஆகியோர் சந்தித்தோம். முதலில் நானும் ரூபக் ராமும் ஒரே சமயத்தில் வர, பின்னர் பட்டிக்காட்டானும், ஆரூர் மூனா செந்திலும் வர, நால்வருமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே பார்க் செய்து கொண்டிருந்த எங்கள் வாகனங்களை போலீஸ் வேனில் ஏற்றுவதாக மேலே தகவல்வர, வேகமாக கீழே ஓடினோம். கீழே சில டூவீலர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நானும் பட்டிக்காட்டானும் எங்கள் வாகனங்களின் பேரில் பாய்ந்து நகர்த்திவிட, ரூபக் மற்றும் செந்திலின் வாகனங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன.
டிஸ்கவரியி்ன் ‘சைடில்’
‘நோ பார்க்கிங்’ என்று அறிவிக்கப்படாத இடத்தில் நிறுத்திய வாகனங்களின் பேரில் ஏன் கை வைத்தார்கள்?’ என்ற குழப்பத்துடன் எங்கள் வாகனங்களை தள்ளி பார்க் செய்துவிட்டு நானும் ஜெய்யும் வர, செந்திலும் ரூபக்கும் வேனிலிருந்த போலீஸ்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘நோ பார்க்கிங் போர்டு சைடு ரோடுல வெச்சிருக்கு. நீங்க பாக்கலை’’ என்றார் அந்த போலீஸ்காரர். பட்டிக்காட்டான் அவரிடம் நேராகச் சென்று, ‘‘நாங்கள்ளாம் ப்ளாகர்ஸ் சார்...’’ என்றதும் போலீஸ்காரர் ‘ழே’யென்று விழித்தார். ‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்? பக்கத்துல இருக்கற மூணு பேரும் வேணா கறுப்பா இருக்காங்க. ப்ளாக்கர்ஸ்னு சொல்லலாம்’’ என்று நினைத்தாரோ என்னவோ... பட்டிக்காட்டான் மீண்டும், ‘‘நெட்ல எழுதறவங்க... ரைட்டர்ஸ் சார்...’’ என்றதும் தலையாட்டிக் கொண்டார். பலனெதுவும் இல்லை. செந்தில், ரூபக் வாகனங்களுடன் கைப்பற்றப்பட்ட ஒரு ஸ்கூட்டரை மட்டும் (அதன் ஓனர் பெண்ணானதால்) விட்டுவிட்டார். பெண்ணென்றால் பேயே இரங்கும் எனும்போது ‘மாமா’க்கள் இரங்க மாட்டார்களா என்ன? இவர்களிடம், ‘‘சரி, ஸ்டேஷன்ல வந்து வண்டியை எடுத்துக்கங்க’’ என்று வேகமாக வண்டியை கிளப்பிச் சென்று விட்டார்.

டிஸ்கவரியின் எதிர்புறம்
ரூபக்கும், ஆரூர் மூனாவும், அப்போதுதான் வந்து சேர்ந்த கே.ஆர்.பி.யுடன் காவல் நிலையத்துக்குப் ப‌ோனார்கள். அங்கே வழக்கம் போல ‘கப்பம்’ கட்டிவிட்டு தங்களின் வாகனத்தை மீட்டுக் கொண்டு வெற்றி வீரர்களாகத் திரும்பினர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால்.... டிஸ்கவரி புக் பேலசின் சைடிலும், எதிரிலும் நோ பார்க்கிங் போர்டு வைத்திருந்த இடங்களை இங்குள்ள படங்களில் பாருங்கள்.... ரைட் ராயலாக அங்கே வண்டியை பார்க் செய்திருக்கிறார்கள் பாவிகள்...! இதையெல்லாம் கண்டுக்காத இந்த ‘வசூல் சக்கரவர்த்தி’களுக்கோ அப்பாவிகளான நாங்கள் நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியதுதான் சமூகக் குற்றமாகப் பட்டிருக்கிறது. அட தேவுடா, இக்கடச் சூடுடா!

அதெல்லாம் சரி... பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? அதற்கென தனித் தளம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கே தொடர்ந்து செய்திகள் பகிரப்படும். அதன் லின்க் அனைவரின் பதிவிலும் இருக்கும். சற்றே வெய்ட்டீஸ் ப்ளீஸ்!


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


காலக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூவரும் தேவலோகத்தில் கூடிப் பேசி்க் கொண்டிருந்தபோது தேவலோகவாசி ஒருவர் அவர்களிடம் ‘‘லக்ஷ்மி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம் என்று தேவிகளின் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களே... ஏன், பரமசிவன் கல்யாணம், முருகன் கல்யாணம் என்று அழைப்பதில்லை?’’ என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அப்போது அங்கு வந்த வைகுந்தவாசனான ஸ்ரீநிவாசன் பெருமையாக, ‘‘ஏன்... ஸ்ரீநிவாசன் கல்யாணம் என்று சொல்லி என்னைப் பெருமைப்படுத்துகிறார்களே...’’ என்று கூற, அருகிலிருந்த மகாலக்ஷ்மி இடைமறித்து, ‘‘அதிலும் என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள். உங்கள் திருநாமத்தின் முதல் எழுத்தான ஸ்ரீ என்னைத்தானே குறிக்கிறது!’’ என்று கூறிவிட்டுக் கணவரைப் பெருமையுடன் பார்த்தாளாம்!
-கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கேட்டு ரசித்ததாக (பழைய) விகடனில் வெளியான துணுக்கு.

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


                                              முதல் நாவல் உருவான கதை!

‘‘எ
ன்னுடைய முதல் நாவலான ‘பவானி’யை 1944-ல் எழுதினேன். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த சமயம்... விடுமுறையை வீணாக்காமல் நாலு குயர் வெள்ளைக் காகிதம், பார்க்கர் பவுண்டன்‌  பேனா, இங்க் புட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டின் மாடியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தொடர்ந்து ஏழு நாட்கள் இரவும் பகலும் விடாமல் இந்த நாவலை எழுதி முடித்தேன்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் என்ற சிற்றூரில் நாங்கள் ஏழெட்டு வருடங்கள் இருந்தோம். அங்கே வி்ண்ணாரம்பள்ளி ஜமீன்தாருக்கு என் தந்தை குடும்ப டாக்டராக இருந்தார். இதனால் ஜமீன்தார் குடும்பத்தினருடன் சமமாகப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அனுபவமே ‘பவானி’ நாவலில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சித்தரிப்பதற்கு உதவியது.

காவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் ‌போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
                                                          -நாவலாசிரியை ‘லக்ஷ்மி’  (நன்றி: 12.8.84 ஆ.வி.)


Saturday, June 22, 2013

பிரபலமாக (குறுக்கு) சுருக்கு வழி!

Posted by பால கணேஷ் Saturday, June 22, 2013
தோழி மஞ்சுபாஷிணியுடனான சந்திப்பு நிகழ்ந்த தினத்தன்று பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வலையுலகில் பிரபலமாவது எப்படி என்பது பற்றிப் பேச்சு வந்தது. ‘‘யாரையாவது திட்டி எழுதினா சீக்கிரம் பிரபலமாய்டலாம்’’ என்று சேட்டையண்ணா சொல்ல, ‘‘ஆமா சீனு. அடேய் கணேஷான்னு ஆரம்பிச்சு ஏதாவது என்னைத் திட்டி நீ எழுதி, நான் காரசாரமா அதுக்கு பதில் தந்தா பரபரப்பு ஏற்படும். நாம சீக்கிரம் பிரபலமாயிடலாம்’’ என்றேன் நான். ‘‘அப்படியா? சரிவருமா?’’ என்றார் சீனு. நான் சொன்னேன்:

‘‘டேய் சீனு...! நான் ஸ்கூல் படிக்கிற பையனா இருந்தப்ப நடிகர் ஜெமினிகணேசனுக்கு கமலஹாசன் வளர்ப்பு மகன் மாதிரி. ரெண்டு பேருக்கும் உள்ள அட்டாச்மெண்ட் எல்லாருக்குமே தெரியும். ஆனா ‘குமுதம்’ பத்திரிகையில ஜெமினி, கமலைத் திட்டி ஒரு கடிதம் எழுத, கமல் அதுக்கு சூடா அடுத்த வாரம் பதில் தர, மறுபடி ஜெமினி எழுத, கமல் திட்ட... இப்படி நாலு வாரங்கள் வந்ததுக்கப்புறம் ரெண்டு பேருமே கட்டிப்பிடிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் குடுத்து, ‘நாங்க விளையாட்டாதான் சண்டை போட்டுக்கிட்டோம். எங்களுக்குள்ள எதுவுமில்‌ல’ன்னாங்க. ஆனா அந்த நாலு வாரமும் பரபரப்பு ஏற்பட்டு, பத்திரிகை நல்லா வித்திச்சு. அதுமாதிரிதான் எனக்கு நீ எவ்வளவு வேண்டியவன்னு எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தொடர்ந்து நாலஞ்சு லெட்டர் காரசாரமா எழுதிக்கிட்டோம்னா நிஜமாவே பதறிடுவாங்க... பரபரப்பு கிளம்பி நீ பிரபலமாகறியோ, இல்லையோ... நான் பிரபலமாய்டுவேன்’’ என்றேன். ‘‘சரி வாத்தியாரே... உடனே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுடறேன்’’ன்னாரு சீனு.

நேத்திக்கு சீனு இதப் பத்தி பதிவு போட்ருக்காரேன்னு ஆர்வமா உள்ள போய்ப் படிச்சா... எதுவும் திட்டாம நகைச்சுவையா எழுதி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரி போங்கு ஆட்டம் ஆடியிருக்குது பயபுள்ள...! தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன போங்கு ஆட்டம் ஆடினாங்கன்னு ஆர்வமா எழும்பற குரல் எனக்கு கேக்கறதால ரெண்டு பாரா செலவழிச்சு அதை முதல்ல சொல்லிடறேன். அப்புறம் இந்தச் சீனுப் பயலப் பத்திப் பேசலாம்.

ம்ம வாத்யார் எம்சியாரு இருககாருங்களே... ‘இதயக்கனி’ படத்துல வில்லன்க கூடாரத்துக்குள்ள ஒரு வெள்ளக்கார துரையா வேசம் போட்டுக்கிட்டு தன் பேரை ‘எம்.ஜி.ரெட்’ன்னு சொல்லிக்கிட்டு வருவாருங்க. "Hai baby, What's your name? Oh, How Sweet!" அப்டின்னு இங்கிலீசுல்லாம் பேசுவாருங்க. போட்ருககற வேசத்த கரெக்டாப் பண்ண வேணாமுங்களா...? ‘சபாஷ் வாத்யாரே’ன்னு நாம மனசுக்குள்ள நெனக்கறப்ப போடுவாரு பாருங்க ஒரு கூடை மண்ணை நம்ம நெனப்புல! ஒரு ஃபிகர் வந்து டான்ஸாட ஆரம்பிச்சதும், ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’’னு நல்ல தமிழ்ல கணீர்க் குரல்ல பாடுவாருங்க. அதுவும் உங்கூட்டுத் தமிழ், எங்கூட்டுத் தமிழ் இல்லீங்கோ... அந்தாதித் தமிழ்ல பாடுவாரு. இந்த வில்லக் கேனையனுங்க உடனே விசயத்தப் புரிஞ்சுக்கிட்டு அவரப் போட்டுத் தள்றத விட்டுப்புட்டு, ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டு அவரு பாடறத ரசிச்சுக்கிட்டிருக்கும்க! என்னத்தச் சொல்ல...!

வரயே தூக்கிச் சாப்ட்டு ஏப்பம் விட்டவருங்க நம்ம சூப்பரு ஸ்டாரு ரசினி! ‘படையப்பா’ங்கற படத்துல ஒரு பார்ட்டியில செந்திலும் மத்தவங்களும் கூல்ட்ரிங்க் கிளாஸ்ல பிராந்திய ஊத்திக் குடிச்சிட்டிருப்பாங்க. தண்ணியடிச்சா நம்ம படையப்பருக்குப் புடிக்காதுங்களே... அதனால! அப்ப நம்ம ரசினி வந்து செந்தில் கைல இருக்கற ட்ரிங்க்கைப் புடுஙகிக் குடிப்பாருங்க. ‘‘ஐயய்யோ... படையப்பா குடிச்சுட்டான்’’னு செந்தில் பதற, ‘‘ஏண்டா குடிச்சா என்ன? கூல்ட்ரிங் தானே?. இதையும் குடிப்பேன், இதையும் குடிப்பேன்’’னு எல்லார் கைல இருக்கறதையும் வாங்கிக் குடிச்சுப் போடுவாருங்க. ஸ்கூல் பையனுக்குக் கூட (பதிவர் இல்லீங்க, நிஜ ஸ்கூல் பையனச் சொல்றேன்) கூல்ட்ரிங்க்குக்கும், பிராந்தி கலந்த ட்ரிங்க்குக்கும் ஸ்மெல், காரம்னு ஆறு வித்தியாசம் தெரியும். நம்ம ரசினி பச்சப் புள்ள மாதிரி இல்லீங்களா... அவருக்கு எதுவுமே தெரியாம அப்புராணியாக் குடிச்சுப்புடுவாருங்க... ஆனா குடிச்சதுக்குப் பொறவு தனக்குள்ள என்ன நடக்குதுங்கறத மட்டும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு பாடுவாரு பாருங்க... ‘‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’’ன்னு...! இப்படி ஒரு அப்பாவிப் புள்ளய உலகமெல்லாம் தேடினாலும் நீங்க பாக்க முடியாதுங்கோ! அர்சூனு, விசயகாந்துன்னு மத்த ஹீரோக்களப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, பல பதிவுகள் தேவைப்படுமுங்கோ!

இப்படில்லாம் ஜனங்களை ஏமாளிங்களா நினைச்சு நம்ம ஹீரோக்கள் ஆடற போங்கு ஆட்டத்தை மாதிரித் தாங்க சீனுவும் எழுதிப்புட்டாரு... சரி, திட்டறதுன்னா எப்படின்னு நம்ம சிஷ்யப்புள்ளைக்குத் தெரியல.. நாம நாலு வார்த்தை ‘நல்லதா’ திட்டிக் காமிச்சுரலாம்னு முடிவு பண்ணிட்டேங்க.  யாரும் என்னைத் தடுக்காதீங்க...! யாரையாச்சும் திட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்க. ஹி... ஹி...!

லேய் சீனு! சரியான கோட்டிக்காரப் பயபுள்ளையா இருக்கியேலேய்! இல்ல, நான் தெரியாமத்தான் கேககுறேன்... இம்புட்டு நாளா பதிவு எழுதிட்டிருக்கியே... ஏதாச்சும் உருப்படியா எழுதினதுண்டாலே நீயி? சவத்து மூதி! கதைய எழுதறேங்க... பயண அனுபத்தை எழுதறேங்க... நாட்டுக்கு ஏதாச்சும் பிரயோஜனம் உண்டாலே? எம்பூட்டு ஏழை சனங்க சோத்துக்கு வழியில்லாம தவிக்குதுங்க... அதுங்களப் பேட்டி எடுத்துப் போட்டியாலே நீயி? பொசகெட்ட பயலே! எம்பூட்டு ஓட்டல்ல புகுந்து கன்னாபின்னான்னு வெட்டறே? எதயாச்சும் பத்தி சனங்களுக்குப் பிரயோசனமா பகிர்ந்துக்கிட்டியாலே நீயி? சரி போவுது களுத...அத விடு... மூணு மூணு வார்த்தையா எழுதி, நாலு நாலு வரியா மடக்கிப் போட்டுப்புட்டு கவிதைன்னு சொல்றாய்ங்களே... அவியளப் போல ஒண்ணாவது எழுதத் துப்பு இருக்காலே உனக்கு? போக்கனங்கெட்ட பயலே! சோறு தண்ணியில்லாம, நேரங்காலம் பாக்காம புதுப்படத்த ரிலீசான நாலு மணி நேரத்துக்குள்ள விமர்சனம் பண்ணத் தெறம இருக்காலேய் உனக்கு?  இதெல்லாம் இல்லாம நீயெல்லாம் பதிவரான்னே தெரியலியே லேய்! அப்புறம் என்னாத்தலேய் பிரபல பதிவராகறது?

ப்பூடிங்க...? பயபுள்ளக்கு இந்தத் திட்டு போதுமா, இல்ல இன்னும் காரம், மணம், குணம் சேத்துக்கலாமா? எலேய் சீனு...! திட்றதுன்னா எப்பூடின்னு இப்ப புரிஞ்சுட்டிருப்ப... என்னதான் கோபமா உன்னியத் திட்டினாலும் நம்ம பயலாச்சேன்னு பாசமும் இருக்கறதால ஒரு அட்வைசும் சொல்றேன், கேட்டுக்கலேய்...! உனக்கு கோபம் வந்து, (இல்லாத) மீசை துடிச்சு, பதிலுக்கு நீ திட்டறதானா என்னை மாதிரி மனுசங்க பேர்ல எழுதறவங்களைத் திட்டு... இல்ல, தெகிரியமில்லேன்னா, ‘‘வாத்யாரே நான் ஆட்டத்துக்கு வரலை’’ன்னு ஜகா வாங்கிட்டு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் மாதிரி உஞ்சோட்டு பசங்களத் திட்டு. அதை வுட்டுட்டு ஓவரா உணர்ச்சிவசப்பட்டு வவ்வாலு, பன்னிக்குட்டின்னு பறவை, பிராணிங்க பேர்ல எழுதற மனுசங்க யாரையும் திட்டிப்புடாத. நானாச்சும் கைப்புள்ள மாதிரி மெல்லமா வயித்துல குத்துவேன். அவிய்ங்க கோவக்கார பயபுள்ளைங்க... ஓங்கிக் குத்தினா ஒம்பது டன் வெயிட் லேய்! குத்தினாங்கன்னு வையி... உனக்கு டாங்க் பர்ஸ்ட்டாயிடும் பாத்துக்கோ...! சூதானமா நடந்துக்க...! வர்ட்டா?

Monday, June 10, 2013

மொறுமொறு மிக்ஸர் - 18

Posted by பால கணேஷ் Monday, June 10, 2013
                                  
                                              மனசையும் நிறைத்த ‘தாய்’ மீல்ஸ்!

ழக்கமாக என் தாய் செய்து தரும் மீல்ஸையே சாப்பிட்டு வந்த எனக்கு நேற்று ‘தாய்’லாந்து மீல்ஸை ருசி பார்க்கும் அனுபவம் கிட்டியது. ‘‘சார்.. ஆழ்வார்பேட்டைல எஸ்.ஐ.ஈ.டி. காலேஜ் எதிர்ல ஒரு ஹோட்டல்ல ‘தாய்லாந்து’ ஃபுட் நல்லாயிருக்காம். ஆரூர் மூனா ஒரு மணிக்கு வர்றதா சொல்லியிருக்காரு. நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?’’ என்று மெ.ப.சிவகுமார் கேட்டபோது, ‘‘ஓ.கே. சிவா’’ என்று சம்மதி்த்தேன். ஆனால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட கேபிள், ‘‘தாய்லாந்து ஃபுடஸ் எல்லாமே ஸ்வீட் அண்ட் ஸோர் பேஸ்டா இருக்கும். விசாரிக்காம போனா ‘ழே’ன்னு முழிக்க வேண்டியிருக்கும். கான்டினென்டல் ஃபுட் பிடிக்காதவங்களுக்கு பிடிக்காது’’ என்றதும் கொஞ்சமென்ன... ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஆரூரார் அங்கேதான் சாப்பிட வேண்டுமென்று ஒற்றைக் காலில் நி்ன்றதால் அங்கேயே போனது நால்வர் அணி. தாய்லாந்துசெட் நான்வெஜ் லன்ச் ஆர்டர் பண்ணினார் ஆரூரார்.

முதலில் ஸ்டார்ட்டராக வெற்றிலை ஒன்றில் கொஞ்சம் கடலை, கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் சாஸ் எல்லாம் போட்டு பீடா மாதிரி ஒன்றைத் தந்தார்கள். என்னடா இது... கடைசில தர்ற பீடாவை முன்னாலயே தர்றாங்களேன்னு பாத்தா, அது பசியைத் தூண்டறதுக்காகன்னாரு கேபிள். சாப்ட்டுப் பாத்தா.. ரொம்பவே நல்லா இருந்தது. அடுத்ததா சூப் வந்தது. சூப். அதுவும் ஏமாற்றவில்லை. நல்ல ருசி! மூன்றாவதாக அவர்கள் தந்தது மாங்காயை மெல்லியதாக நறுக்கி சு‌வை சேர்த்த நூடுல்ஸ் மற்றும் சிக்கன் பீஸஸ்! மாங்காயின் இனிப்பு சுவையுடன் பற்களில் ஒட்டாத க்ரிஸ்பியான சிக்கன் பீஸ்களுடன்.... சூப்பரு்ஙகோ!

அப்புறம் ஒரு நூடுல்ஸ் தந்தார்கள் பாருங்கள்... நான் வாழ்க்கையில் இதுவரை சாப்பிடதிலேயே ரியல் டேஸ்ட் நூடுல்ஸ் இதுதாங்கோ..! எக்ஸ்ட்ரார்டினரி. பின் கொஞ்சம் ரைஸும், சிககன் குருமாவும்! இதுவும் ஏமாற்றாத சுவையில். கடைசியாக டெஸர்ட் கொடுத்தார்கள். தேங்காய்ப் பாலில் பலாச்சுளைகளை சிறிதாக கட் பண்ணி மிதக்கவிட்டு அதற்கு மேல் வெனிலா ஐஸ்க்ரீமை மிதக்க விட்டு.... ரியலி எக்ஸ்ட்ரார்டினரிலி டிவைன்லி டெஸர்ட்!

தாய் செட் லன்ச் ‌நான்வெஜ் ரூ.246ம் வெஜ் லன்ச் ரூ.226ம் என விலைப்பட்டியல் சொல்கிறது. இந்த டைப் தாய் லன்ச் சாதாரணமாக ரூ.700 ஆகுமென்றும், அறிமுகத்துக்காக இந்த விலை என்றும் ஆரூரார் சொன்னார். முகவரி: Sawadika, 21/45, First Floor (Opp. to S.I.E.T. College), K.B.Dasan Road, Alwarpet, Chennai-600 018. ஆழ்வார்பேட்டையில் கே.பி.தாசன் ரோடு எது என்று யோசிக்காதீர்கள். கவிஞர் பாரதிதாசன் ரோடு என்பதைத் தான் அத்தனை லட்சணமாக சுருக்கியிருக்கிறார்கள் அங்குள்ள கடைக்காரர்கள்! (டமில் வாலுக!) அடம்பிடித்து இங்கு எங்களை அழைத்துச் சென்ற (முக்கியமாக பில்லும் கொடுத்த) ஆரூரார் வாழ்வாங்கு வாழட்டும்!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=


                                     துணிச்சலின் மறுபெயர் எம்.ஆர்.ராதா!

‘தூக்குமேடை நாடகத்துக்கு நாட்டுல எவ்வளவு ஆதரவு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது.’’

‘‘பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன்முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?’’

‘‘நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே! அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி வைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துகளிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியா இருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சி கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவுசெய்து டிக்கெட்டைக் கவுண்ட்டர்லே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்கம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான் தயாராயிருப்பேன்.

‘‘நீங்க பார்த்திருப்பீங்களே... நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா? இருக்கவே இருக்காது. எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு? மனுஷனைக் கண்டு பயந்தா? ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லாச் சாமியும் அப்படியிருக்கு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி ‘சாமி’யாவே இருந்துக்கிட்டிருந்தேன்..!’’

‘‘சுவாமிகள் ஏதாவது ‘தப்புத் தண்டா’ செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள். நீங்கள் ‘தப்புத் தண்டா’ செய்தால்....’’

‘‘‘‘நானாக எப்பவுமே எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டேன். எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...’’

‘‘அது உங்கள் ஜாதக விசேஷம் போலருக்கு...’’

‘‘இல்‌லே... நாடக விசேஷம்!’’

-‘எம்.ஆர்.இராதா-வாழ்க்கையும் சிந்தனையும்’ என்ற விந்தன் எழுதிய நூலை சென்னை கே.கே.நகரில் 5D, பொன்னம்பலம் சாலையில் இயங்கி வரும் ‘தோழமை’ பதிப்பகம் ரூ.80 விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. கேள்வி-பதில்களாக எம்.ஆர்.ராதாவுடன் உரையாடியதை அவருடைய வார்த்தைகளிலேயே தொகுத்துத் தந்திருக்கிறார் திரு.விந்தன். படிககப் படிக்க சுவாரஸ்யமாகவும், யார் என்ன சொல்வார்களோ என்ற கவலை எதுவுமின்றி நிஜம் பேசியிருக்கும் எம்.ஆர்.ராதா என்ற துணிச்சல்காரரின் சுயரூபத்தைக் கண்டு பிரமிப்பும் விரிகிறது.  விருப்பமிருப்போர் வாங்கி வாசித்து இந்த அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                             நான் படித்த சில ந(பொ)ன்மொழிகள்:

பெண் என்பவளே என் தாய், என் சகோதரி, என் துணைவியும் அவளே, பெண்ணே என் மகள் என்னும் உணர்வு ஆண்களிடம் வேரூன்றித் தழைத்தால் பெண்ணுக்கு இழிவு நேருமா? நேராதே!

ன்னம்பிக்கை என்பதற்கும், ஆணவம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிக நுண்மையானது. வலிமை குறைந்தவரிடம் ‘நான்’ ‘என்’ என்பவை தன்னம்பிக்கை. அதுவே வலிமை நிறைந்தவரிடம் ஆணவம் என்று பெயர் பெறும்.

டம்பும் ஒரு பாத்திரம்தான். அதில் அன்பு நிரந்தரமாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது பரிமளிக்கும். நாம் அன்பாகத்தான் இருக்கிறோம். ஆனால் அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறிக் கொண்டே இருககிறதல்லவா? அப்படி இல்லாமல் நிலையாக அன்பு செய்ய வேண்டும்.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
                                                           கொஞ்சம் ஹிஹிங்க...!

To end with a smile... இரண்டு ‌ஜோக்குகளைப் படித்து கொஞ்சம் ரிலாக்ஸ்... எப்போதோ எங்கேயோ கேட்ட, நான் ரசித்த ஜோக்குகள்.

1) மிக வேகமாக பாரில் நுழைந்தான் அவன். அங்கிருந்த விற்பனையாளனிடம், ‘‘சண்டை துவங்குவதற்குமுன் எனக்கு சீக்கிரமாக விஸ்கி ஒரு லார்ஜ் கொடு’’ என்றான். விற்பனையாளன் வியப்படன் ஊற்றிக் கொடுத்தான். அவன் மடமடவென்று குடித்துவிட்டு, மீண்டும், ‘‘சண்டை துவங்குவதற்குள் இன்னொரு லார்ஜ் கொடு’’ என்றான். அவன் மறுபடி ஊற்றிக் கொடுக்க, அவசரமாகக் குடித்து வைத்தான். இதே டயலாக்கைச் சொல்லி இப்படி ஐந்து லார்ஜ்கள் குடித்துவிட்டான். ஆறாவது லார்ஜை இதே வசனத்துடன் அவன் கேட்டபோது, விற்பனையாளன் கேட்டான் வியப்புத் தாளாமல்... ‘‘சண்டை துவங்கப் போகிறது என்கிறாயே... எங்கே துவங்கப் போகிறது. யாருக்கும் யாருககும் சண்டை?’’ ஆறாவது லார்ஜை நிதானமாகக் குடி்த்து முடித்த அவன் சொன்னான், ‘‘இங்கேதான் துவங்கப் போகிறது! உனக்கும் எனக்குமிடையில் தான்! நான் இதுவரை குடித்த ஆறு லார்ஜ்களுக்கும் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை!’’

2) அமெரிக்காவுக்கு சுற்றிப் பார்க்கச் சென்ற நம் இந்தியர் ஒருவருக்கு அவசரமாக ‘சுச்சா’ ‌போக வேண்டியிருந்தது. ஆள் நடமாட்டமற்ற தெரு ஒன்றைக் கண்டுபிடித்து, நம்நாட்ட வழக்கப்படி சாலையோரம் ஜிப்பை இறக்கப் போகையில் பின்னால் வந்து நின்ற அமெரிக்க போலீஸ்காரன் அவர் தோளில் தடியால் தட்டினார். ‘‘இங்கேயெல்லாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது மிஸ்டர்! உனக்கு அவசரமெனில் நான் வேறொரு இடம் காட்டுகிறேன். அங்கே போயக் கொள்...’’ என்றான். நம்மவருக்கு ஒரே குஷி! ‘‘சீக்கிரம் இடத்தக் காட்டுப்பா’’ என்றார். அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி அழைத்துச் சென்று ஒரு அழகான கட்டிடத்தைக் காட்டினார். அந்தக் கட்டிடத்திற்கு முன்னால் விசாலமாகப் புல்வெளிகளும், மரங்களும் இருந்தன. ‘‘இங்கே நீ விரும்பியதைச் செய்யலாம்’’ என்றார். நம்ம ஆள் அவசரமாக ஓடி ஒரு மரத்தின் மறைவில் ‘வேலை’யை முடித்துவிட்டு வந்து போலீஸ்காரனிடம், ‘‘சாலையோரம் செய்வதை விடுத்து இவ்வளவு அழகான கட்டிடத்தின் புல்வெளிக்கு ஏன் கூட்டி வந்தாய் என்னை? இது என்ன இடம்?’’ என்று கேட்டார். போலீஸ்காரன் நிதானமாகப் பதில் சொன்னார்... ‘‘இதன் பெயர் இந்தியத் தூதரகம் தம்பி!’’ என்று.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
மைதானத்தில் மேய : சித்திரமேகலை-1

Thursday, May 16, 2013

ஜாலியா கொஞ்சம் அரட்டை!

Posted by பால கணேஷ் Thursday, May 16, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த வாரம், பத்து நாளா கோவை, பெங்களூரு எனறு தொடர்ந்து பயணங்கள் அமைஞ்சதுனாலயும், எங்க ஏரியாவுல மின்சார கேபிள்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணா பல இடங்கள்ல பழுதுபட்டுப் போனதுனால சரியானபடி மின்சார வசதி கிடைக்காம படுத்தி எடுத்ததுனாலயும் வலைப் பக்கம் எட்டிப் பாக்கக் கூட முடியாமப் போச்சு. எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்!

கோயமுத்தூர்ல நான் போன வேலைய முடிச்சுப்போட்டு நண்பர்களைச் சந்திக்கலாமுனு பாத்தா... ஜீவா அண்ணாவும், சரளா அக்காவும் (ஒரு மருவாதிதேன்) ஊர்லஇல்லன்னு சொல்லிப் போட்டாங்க. அடடா...ன்னு ஏமாற்றமடைஞ்ச எனக்கு ‘நான் க‌ோவைலதான் இருக்கேனுங்கோ’ என்று அபயம் தந்தார் ஆவி. (அறியாதவர்களுக்கு: னந்தராஜா விஜயராகவன் என்பதன் சுருக்!) அவரையும் ஜீவன்சுப்புவையும் பாத்துடலாம், ரெண்டு நாள் கோவையில ரிலாக்ஸ்டா சுத்தலாமுன்னு போனேனுங்கோ. ஆனா நாம நெனச்சச மாதிரி எங்கிங்க நடக்குது? கெரவம் ஒரே நாள்ல பொட்டியத் தூக்க வேண்டியதாயிடுச்சுங்கோ! தம்பி ஜீவன்சுப்புவுக்கு போன் பண்ணி நான் வாங்கியிருந்த அப்பாயின்ட்மென்ட்டை கேன்சல் பண்ணி, அடுத்த முறை பாக்கலாம்னுட்டுக் கெளம்பிட்டனுங்கோ! ஆசாமி நம்ம மேல கான்டாகி செம கடுப்புல இருப்பாருன்னு நெனக்கிறேன்!

கோவை ஆவி என்னை ஒரு ஷாப்பிங் மாலுக்குக் கூட்டிட்டுப் போனார். கோயமுத்தூர்ல அவ்வளவு பிரம்மாண்டமா, அழகான ஒரு மாலை நான் எதிர்பார்க்கலை. ஏறத்தாழ ரெண்டு மணி நேரம் நானும், ஆவியும், (உலகசினிமா ரசிகன்) பாஸ்கரன் சாருமா உரையாடினது மறக்க முடியாத அனுபவம். என் பெங்களூரு நண்பன் ஒரு அவசர வேலை இருப்பதாகச் சொல்லி வரச் சொன்னதால கோவையிலயே என்னுடைய ரொம்ப நாள் விருப்பமான ஆன்ட்ராய்ட் மொபைல் (ஸாம்ஸங்) ஒண்ணை பர்ச்சேஸ் பண்ணிட்டு அன்றிரவே பெங்களூர் போனேன்.எங்க சந்திப்பை பத்தி கோவை ஆவி பதிவாவே எழுதிட்டாரு... இங்க க்ளிக் பண்ணினா நீங்க படிக்கலாம்.

பெங்களூர்ல கலாசிபாளையத்திலருந்து கன்டோன்மென்ட் வரைக்கும் போக ஆட்டோ பிடிச்சேன். டிஸ்டன்ஸை மனசுக்குள்ள கணக்குப் பண்ணிட்டே வந்தேன். கிட்டத்தட்ட ‌சென்னை கோயம்பேடுலருந்து மாம்பலம் போற தூரம் இருக்கும். ஆட்டோ டிரைவர் நூறு ரூபாய் கேட்டாரு. பெங்களூரில் போன வேலைய முடிச்சுட்டு தனியார் ஏ.ஸி.பஸ்ல சென்னை கோயம்பேடு வந்து இறங்கினதும் ஆட்டோ டிரைவர்கள் மொய்ச்சுக்கிட்டாங்க. அங்கருந்து மாம்பலம் போறதுக்கு எவ்வளவுன்னு கேட்டதுக்கு 175 ரூபா குடுங்க சார்ன்னு கூசாம கேட்டாங்க. சர்தான் போங்கப்பா, நான் உள்ளூர்க்காரன்தான்னு சொல்லிட்டு ரெண்டு பஸ் மாறி 20 ரூபா செலவுல வீட்டுக்கு வந்தேன். இந்த ஆட்டோவாலாக்களால அல்லவா நாங்கல்லாம் நூறு நூறாச் செலவழிக்காம சிக்கனமா 10, 20 பஸ்சுக்கு செலவழிக்க முடியுது. சிக்கனத்தை ப்ராக்டிக்கலா கத்துத் தர்ற இந்த சென்னை ஆட்டோ டிரைவர்கள் மகராஜன்களாக இப்படியே இருக்கட்டும்!

ரைட்டு, நாமளும் இருக்கோம்னு அட்டென்டன்ஸ் குடுத்துரலாம்னு தானுங்க இப்ப வந்தேன். அதனால நான் எதுவும் எழுதி உங்களை போரடிக்காம, சின்னதா நான் படிச்ச சுவாரஸ்யமான விஷயங்களை இங்க தரலாம்னு இருக்கேன். (வொர்க் லோடுலயும் அலைச்சல்லயும் மண்டை காய்ஞ்சு போய் எதுவும் எழுத வரலைங்கறத எவ்வளவு நாசூக்காச் சொல்ல வேண்டியிருக்கு. அவ்வ்வ்வவ்!)
மனுசப் பய புள்ளங்களுக்கு நாங்க மட்டும் குறைஞ்சவிங்களா?
பெண்கள் நெத்தியில இட்டுக்கற திலகத்தை பொட்டுன்னு சொல்வாங்க. இப்பல்லாம் நெத்தியில எந்தப்பகுதியில் பொட்டு வைக்கணும்கற  கட்டுப்பாடே கிடையாது. அழகுக்கும், நாகரிகத்திற்கும் தக்கபடி நெத்தியில எங்க வேணும்னாலும் பொட்டு வெச்சிக்கறாங்க.சிலர் வெச்சுக்காமயும் திரியறாங்க. ‘அது எங்க இஷ்டம்லேய்... நீ யாரு கேக்க?’ன்னு தான் பதில் வரும் இதப்பத்திப் பேசினா. நாஞ்சொல்ல வர்றது என்னன்னாக்கே... வெவ்வேறான நெற்றி அமைப்பை உடையவங்க அதுக்குத் தக்கன பொட்டுக்களை தேர்ந்தெடுக்கலாம்கறதுதேங்!

* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள்,பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறந்தது போல் அழகாகத் தெரியும். * நெற்றி அகலம் குறைந்தவர்கள்,இரண்டு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும். * சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் சற்றுப் பெரிய வட்ட வடிவிலான பொட்டு வைக்க வேண்டும். * வட்ட வடிவிலான முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறிய,பெரிய, முக்கோணம், வளைவு வடிவம் போன்ற பொட்டுக்களை வைக்கலாம். * ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், மிடி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகுதான்! (ஹி... ஹி...)

மனமிருந்தால் நத்தைக்கூட்டில் மான்கள் வாழலாம்! சிங்கம்கூட பாசத்தோட மானை வளர்க்கலாம்œ›!


கொஞ்சம் பொறுங்க.. நான் ஊத்தறதை கிளாஸ் ரொம்பினதும் நீஙக எடுத்துக் குடிக்கலாம்!




Saturday, April 27, 2013

மொறுமொறு மிக்ஸர் - 17

Posted by பால கணேஷ் Saturday, April 27, 2013
பார்த்தது : ‘‘ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துல ஒரு காட்சி வரும். வில்லன் ஒரு சர்வாதிகாரியான மன்னன். அவரோட அரசவையில வைத்தியரான எம்.ஜி.ஆரை கைது செஞ்சு கொண்டு வருவாங்க. சர்வாதிகாரி, தைரியமாப் பேசற எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘என்னோட அதிகாரம் என்னன்னு உனக்குத் தெரியுமா/’ என்பான். அதற்கு அவர், ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? - அது காலத்தை வென்று நிற்பதற்கு!’ என்று பதிலளிப்பார். என்னைய மாதிரி வாத்தியாருங்க பசங்களுக்கு மணிக்கணக்கா பாடம் சொல்லி சிலப்பதிகாரத்தோட சிறப்பை விளக்க வேண்டியிருக்கும். ஆனா இந்த ரெண்டு வரி வசனத்தால இன்னும் நிறையப் பேரோட மனசுகள்ல சிலப்பதிகாரத்தோட சிறப்பு போய்ச் சேர்ந்தது. அதாங்க சினிமாவோட சக்தி...’’

-தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சேனல் சேனலாகத் தாவி (கொஞ்ச நேரம்) தொலைக்காட்சி பார்த்தபோது ஏதோ ஒரு சானலி்ல முனைவர் கு.ஞானசம்பந்தன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிஜம்தான்! சினிமா என்கிற அந்த மகத்தான மீடியாவின் சக்தியே அலாதிதான், அதை சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாக யாரையும் சொல்லிவிட முடியாது என்கிற எண்ணம் என் மனதிலும் எழுந்தது.

==================================================
 
ரசித்தது :  நமது சக பதிவர் கோவை மு.சரளாதேவி எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து ‘காதலின் சாரல்’ என்ற தலைப்பில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். காதல் சுமந்த கவிதைகள் ரசனைக்குரியவை. அதிலும் சரளாவின் சொக்க வைக்கும் தமிழில் இன்னும் சிறப்பாக ஜொலித்து ரசனை‌க்குத் தீனியாக அமைந்திருக்கின்றன ஒவ்வொரு பக்கங்களும்.

ஸ்பாட் லேமினேஷன் செய்த அழகிய முகப்புடன், ரசனைகூட்டும் படங்கள் வைத்து லேஅவுட செய்யப்பட்டு ஒரே மூச்சில் படிக்கும் உந்துதலை ஏற்படுத்துகிறது புததகம். 64 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை கோயமுத்தூரில் ராஜவீதியில் 20ம் எண்ணில் இருக்கும் விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். கையைக் கடிக்காத வண்ணம் 30 ரூபாய் விலையில் வெளியிட்டிருப்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு. இயன்றவர்கள் வாங்கிப் படித்து ரசியுங்கள்!

==================================================

கேட்டது : சமீபத்தில் பத்திரிகை உலக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் தமிழ்க் கொலை நடப்பது பற்றியும், எழுத்துப் பிழைகள் பற்றியும் ஒரு பாட்டம் புலம்பி, என் சர்வீஸில் நான் பார்த்த மகத்தான பத்திரிகை எழுத்துப் பிழைகளைப் பகிர்ந்து கொண்டேன். ரசித்துச் சிரித்த அவர் பின் சொன்னார்: ‘‘எழுத்துப் பிழையாவது பரவால்ல கணேஷ். சில சமயம் சொல்ல வர்றதை சரியான வார்த்தைகள்ல சொல்லாததால வர்ற பிழை இன்னும் அபாயமானது. ஒரு விஷயம் கேளுங்க... சொன்னா நம்ப மாட்டீங்க...’’ என்று ஆரம்பித்து சொன்னார். அவர் சொன்னதை பெயர்கள் மாற்றிச் சொல்கிறேன் நான்.

அது ஒரு குறிப்பிட்ட ஜாதிச் சங்கத்தினர் நடத்தும் பத்திரிகை. பத்திரிகை உலக அனுபவங்கள் எதுவும் இல்லாத, சங்கத்தின் தலைவர், செயலாளர் போன்றோரே ஆசிரியர்கள், நிருபர்கள் எல்லாம். உதவி ஆசிரியராக இருந்த செயலாளர் ராகவன் சங்க உறுப்பினர் ரங்கசாமி என்பவர் இறந்துவிட்டதாகவும், அவரது பத்தாம் நாள காரியங்கள் ----- தேதி நடைபெறும் என்றும் ஒரு இதழில் அஞ்சலி விளம்பரம் வெளியிட்டிருந்தார். அந்தத் தேதியில் ரங்கசாமியின் வீட்டிற்குச் சென்றவர்கள் அவரை நேரில் கண்டு அதிர்ச்சியானார்கள். இறந்தது தன் மகன் சீனிவாசன் என்று சொல்லி அவர் அழ... பத்திரிகை விளம்பரம் கண்டு அவர் இறந்ததாக எணணி வந்ததாக வந்தவர்கள் அழ... கடைசியில் கோபமான ரங்கசாமி பத்திரிகை அலுவலகம் வந்து உண்மையை விளக்கிச் சென்றார்.

பத்திரிகை ஆசிரியரான சங்கத்தலைவர் நடந்த தவறை விளக்கி ஒரு மறுப்புச் செய்தி வைக்கும்படி உதவி ஆசிரியரான செயலாளரிடம் சொல்ல, அவர் இப்படி மறு விளம்பரம் வெளியிட்டார் அடுத்த இதழில்: ‘‘சென்ற இதழில் திரு.ரங்கசாமி இறந்துவிட்டதாக வந்த செய்தி தவறானது. இறந்தது அவர் மகன் சீனிவாசன் தான். ரங்கசாமி இறக்கவில்லை என்பதை வருத்தத்‌துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ எப்பூடி....!

==================================================

வந்தது : அந்த 7 வயதுச் சிறுவன் கோர்ட் கூண்டில் நின்றிருந்தான். தன் பெற்றோர் தன்னை அடித்து இம்சிப்பதாக அவன் ‌போன் செய்து புகார் தந்ததுதான் வழக்கு. வழக்கை விசாரித்த நீதிபதி, அவன் உறவுகளைப் பறறிக் கேட்டறிந்தபின் சொன்னார்; ‘‘நீ உன் அத்தைகூட இருந்துக்கறியா?’’ பையன் அலறினான். ‘‘ஐயய்யோ...! அத்தை இவங்களை விட அதிகமா அடிப்பாங்க ஸார்...’’ ஜட்ஜ் சற்று யோசித்து விட்டுக் கேட்டார். ‘‘சரி, அப்ப... உன் தாத்தாகிட்ட இருந்துக்கறியா? தீர்‌ப்பெழுதிடட்டுமா?’’ என்று. பையனோ, ‘‘அது வேண்டாம் ஸார்... இவங்களாவது அடிப்பாங்க. தாத்தாவுக்குக் கோபம் வந்துடுச்சுன்னா, நறுக்குன்னு கிள்ளுவார். சமயத்துல ரத்தமே வந்துடும். அவர்கூட இருகக என்னால ஆகாது!’’

நீதிபதி சற்றே கோபமாக, ‘‘என்னதான் வேணுங்கற நீயி?’’ என்று கேட்க, ‘‘யாரு அடிக்காதவங்களோ அவங்களோட இருந்துக்கதான் எனக்கு விருப்பம்’’ என்றான் பையன். சிறிது நேரம் யோசித்த நீதிபதி பின்னர் யாரும் எதிர்பார்க்காத அந்த தீர்ப்பைச் சொன்னார். ‘‘இந்தப் பையனை நல்லதொரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அப்படியொன்றை தேடிக் கண்டுபிடிக்கும் வரை இவனை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணியின் கட்டுப்பாட்‌டில் இருக்க உத்தரவிடுகிறேன். பையன் சொல்கிற மாதிரி ‘அடிக்காதவர்கள்’ அவர்கள் மட்டும்தான்’’ என்று தீர்ப்பளித்தார். எப்பூடி இந்தத் தீர்ப்பு?

-இது எனக்கு ஈமெயிலில் நண்பர் ஸ்ரீனிவாஸ் பிரபு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தது. எழுத்துக் கூட்டிப படித்ததும் குபீரென்று சிரிப்பை வரவழைத்தது என்னிடம். என்னால் இயன்றவரை நன்றாக(?) முழி பெயர்த்திருக்கிறேன்.

==================================================

படித்தது : அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அவசரங்கள் என்னும் சிந்தனையே உதிக்காத உலக உத்தமர்கள் பங்குபெற்ற ஊர்வலம். வெய்யில் அடிக்கிறதா? சரி! போக்குவரத்து முடங்கி விட்டதா? சரி! பின்னால் வரும் வாகனங்கள் ஹாரன் அடிக்கின்றவனா? சரி. எதிர்ப்புற டிராபிக்கும் கெடுகிறதா? சரி. ஆட்டத்தின் ஆதிதாளம் மாறக் கூடாது. அவசரப்பட்டு ஃபரன்ஸ, மோரா என்று முத்தாய்ப்புக்கும் போய்விடக் கூடாது. ஊர்வலம் பிரதான சாலையில் போய்க் கொண்டிருந்தது என்றாலும் இது தன்னிலை மறந்த ஞானகர்ம சன்னியாச யோகத்துக்கான பைபாஸ் சாலைப் பயணம். சாமானியர்களுக்கு அவ்வளவாகப் புரியாது.

 ஏ! மனிதனே! இக வாழ்க்கை அவசரங்களை நினைத்து ஏன் பரிதவித்து்க் கொண்டிருக்கிறாய்? இதோ இறந்து கிடக்கும் இந்த மனிதனைப் பார். இவனை நாங்கள் பரவாழ்க்கைப் பயணத்துக்கு பார்சல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். பயணத்துக்கான பாஸ்போர்ட்டில் இவனுடைய அடையாளம் தமிழன் என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே, பொது வெளியை நாறடிப்பது பிறப்புரிமை ஆகிவிடுகிறது. நின்ற இடத்தில் துப்பி, நடந்தவாக்கில் ஒன்றுக்கடித்து, ஒன்வேயில் வண்டி ஓட்டி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி, லாரியில் பொதுக்கூட்டத்துக்குப் போய், வாங்கிய பிரியாணிப் பொட்டலத்தில் பாதியைச் சாப்பிட்டு விட்டு மீதியை வீதியில் போட்டு, பாக்கெட் குடிநீரை பல்லால் கடித்து இழுத்து, மேலுக்குக் கொஞ்சம் துப்பிக் கொண்டு, மிச்சத்தை உள்ளுக்குத் தள்ளி விட்டு....

அனைத்தையும் சரியாகச் செய்து முடித்து விட்டு அடங்கியிருக்கிறான் இம்மனிதன் இது இறுதிப் பயணம். இறந்தவனைக் கெளரவிப்பது முக்கியம். டிராஃபிக்கை நிறுத்தி, வெடித்தாளும், பூக்களுமாக சாலையை நாறடித்து, ஒலிக்கழிவால் காற்றை நிரப்பி வழியனப்பி வைத்தலே சரியான மரியாதை. நீங்கள் காத்திருக்கலாம், தப்பில்லை!

-சமீபத்தில் படித்து ரசித்தது. எழுதியவர்: பா.ராகவன். புத்தகம்: அன்சைஸ்.

சாலையின் குறுக்கே டிராக்ஃபிக்கை ஸ்தம்பிக்க வைத்துச் செல்லும் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் கடுங்கோபம் எழும். அதே கோபத்தை என்ன அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ரா. எழுத்தில்!

==================================================

சமீபத்திய மின்னல் : வலையுலகுக்குப் புது வரவான ப்ரியா என்கிற தோழி தன் தளத்தில் அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். எனக்கு இவரின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. இன்னும் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டிய நல்ல எழுத்துக்கள் என்பது என் கருத்து. நேரமிருந்தால் இங்கே க்ளிக்கி படித்துப் பாருங்கள்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube