Friday, October 2, 2015

பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்...

என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங்.

புதுக்கோட்டை நண்பர்கள் முழு மூச்சாகக் களத்துல இறங்கி தனித் தனிக் குழுக்களா அமைச்சுகிட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் பாத்துப் பாத்து திட்டமிட்டுக்கிட்டிருக்கற இந்த நம்முடைய விழாவிற்கான அழைப்பிதழ் இதோ இங்கே உங்களுக்காக....



பிறகென்ன... நம்ம வீட்டுத் திருவிழாவுல நீங்க அனைவரும் தவறாம கலந்துக்கிட்டு அதை என்னென்னிக்கும் நினைவில் நிற்கிற ஒரு நிகழ்வாகச் செய்துவிட வேண்டும் என்று இருகரம் கூப்பி, மகிழ்வுடன் வேண்டிக்கறேனுங்க. விழா அரங்கில் சந்திக்கலாம்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube