பி.கே.பி.யும் நானும் - 9
என் பெற்றோருக்கு என்னைவிட 10 வயது மூத்தவரான என் அண்ணனும் நானும் என இரண்டே பிள்ளைகள். எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது அப்பாவை இழந்து விட்டோம். அண்ணன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி, அவருக்குத் திருமணம் ஆகி. இரண்டு குழந்தைகள் பிறந்து... அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். பின்னர் எனது பணி நிமித்தம் பல ஊர்களில் பணி செய்ய வேண்டியிருந்ததால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. என் திருமணம் முடிந்து அம்மாவை என்னுடன் வைத்திருக்க விருப்பம் இருந்தாலும் இயலாத சூழல் இருந்தது.
எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டு. நான் அதிலிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து பி.கே.பி ஸாரிடம் உதவியாளராக இருந்த காலகட்டத்தில் அம்மா என்னுடன் வந்து இருக்க விரும்பியதால் ஊருக்குச சென்று அழைதது வந்தேன். தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, திரைப்பட ஊடகமாக இருந்தாலும் சரி.. அலுவலகப் பணி போல நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. காலையில் போனால் பணி முடிந்து திரும்ப பல சமயங்களில் இரவாகி விடும். நான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதும் தன்னோடு நேரம் செலவிடாததும் அம்மாவுக்கு ஒரு குறையாக இருப்பதை அறிந்தேன். ஆகவே அவரிடமிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர் புரிந்து கொண்டு என்னைப் பணியிலிருந்து விடுவித்தார். கிழக்குப் பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன் நான்.
அங்கே வேலை பார்த்து வந்த காலத்திலும் ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியர் மற்றும் வடிவமைப்புப் பணியை மட்டும் விடாமல் செய்து வந்தேன். அதன் பொருட்டு மாதந்தோறும் சில நாட்கள் ச்ந்திப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஊஞ்சல் இதழ் குமுதம் சைஸ் ஆக மாறி வடிவமைப்பும். அச்சுத் தரமும் நன்கு வந்து கொண்டிருந்த வேளையில் சில நிர்வாகக் காரணங்களால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலையில் சென்ற ஆண்டு பப்ளிஷர் அதை நிறுத்தி விட்டார். பணிக் காரணங்களுக்காக இல்லாவிடடாலும் இன்றளவும் இயன்ற போதெல்லாம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நட்பிற்கு ஏது முடிவு?
எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டு. நான் அதிலிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து பி.கே.பி ஸாரிடம் உதவியாளராக இருந்த காலகட்டத்தில் அம்மா என்னுடன் வந்து இருக்க விரும்பியதால் ஊருக்குச சென்று அழைதது வந்தேன். தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, திரைப்பட ஊடகமாக இருந்தாலும் சரி.. அலுவலகப் பணி போல நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. காலையில் போனால் பணி முடிந்து திரும்ப பல சமயங்களில் இரவாகி விடும். நான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதும் தன்னோடு நேரம் செலவிடாததும் அம்மாவுக்கு ஒரு குறையாக இருப்பதை அறிந்தேன். ஆகவே அவரிடமிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர் புரிந்து கொண்டு என்னைப் பணியிலிருந்து விடுவித்தார். கிழக்குப் பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன் நான்.
அங்கே வேலை பார்த்து வந்த காலத்திலும் ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியர் மற்றும் வடிவமைப்புப் பணியை மட்டும் விடாமல் செய்து வந்தேன். அதன் பொருட்டு மாதந்தோறும் சில நாட்கள் ச்ந்திப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஊஞ்சல் இதழ் குமுதம் சைஸ் ஆக மாறி வடிவமைப்பும். அச்சுத் தரமும் நன்கு வந்து கொண்டிருந்த வேளையில் சில நிர்வாகக் காரணங்களால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலையில் சென்ற ஆண்டு பப்ளிஷர் அதை நிறுத்தி விட்டார். பணிக் காரணங்களுக்காக இல்லாவிடடாலும் இன்றளவும் இயன்ற போதெல்லாம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நட்பிற்கு ஏது முடிவு?
நான் மட்டுமின்றி திரு.பி,கே,பி, அவர்களுடன் பழகிய அனைவருமே ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரிடமிருந்து வரும் புத்தாண்டு வாழ்த்தைத்தான். அவ்வளவு அழகாக, மிக ரசனையுடன் வடிவமைத்து அனுப்புவார் அவர். 2011ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் புகைப்படத்துடனும், நாட்காட்டியுடனும் அவர் வடிவமைத்து அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ஒன்று. அதைப் பற்றி சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு.ரவிபிரகாஷ் அவர்கள் தனியாகப் பதிவே எழுதியிருக்கிறார். இங்கே க்ளிக்கி படிக்கலாம்,
அவருடைய இரண்டு புதல்விகளின் திருமண அழைப்பிதழும் புதுமையாகவே செய்திருந்தார், முதல் மகள் ஸ்வர்ணரம்யாவின் திருமண அழைப்பிதழ் ஒரு டிவிடி தான். சார்லி சாப்ளின். லாரல்ஹார்டி போன்ற நகைச்சுவைப்படங்கள் அடங்கிய சிடியும் அதன் கவரில் அழைப்பிதழுமாக அவர் வடிவமைத்திருந்தது இன்றும் என்னிடம் பாதுகாப்பாக.
இரண்டாவது மகள் ஸ்வர்ண ப்ரியாவின் திருமண அழைப்பிழை சினிமாவின் க்ளாப் போர்டு போல க்ளாம்ப் எல்லாம் அடித்து மிகுந்த ரசனை மற்றும் உழைப்புடன் தயாரித்திருந்தார், இதன் கவரிலும் பெறுபவர்களின் புகைப்படங்கள் அச்சிட்டு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இப்படி எதிலும் ஒரு அழகுணர்ச்சியும், புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்துவதில் ஆர்வமும் மிகுந்த அவருடன் பழகி வருவதை மிகப் பெருமையாக உணர்கிறேன் நான்.
-பி.கே.பி.யும் நானும் நிறைவு பெற,
இ.செள.ராஜனும் நானும் தொடங்குகிறது...
| Tweet | |||||








