Saturday, December 28, 2013

ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.

சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
சமைத்ததைத் தானே உண்ணல்


அப்படின்னு திருவள்ளுவர் சொல்லாத திருக்குறளே ஒண்ணு இருக்குது. அதனால ரொம்பக் கஷ்டமான அந்த சாப்பிடற விஷயத்தை ரொம்ப சிம்பிளாச் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்த முட்டை இருக்குதே முட்டை... அதை பள்ளிப் பருவத்திலயே மார்
க்க்ஷீட்ல (என்னை மாதிரி) நிறையப் பேர் வாங்கியிருப்பீங்க. இந்த முட்டைங்கறது வெள்ளையா, நீள் வட்டமான வடிவத்துல இருக்கும். (என்னா கண்டுபிடிப்பு!) வேகவைத்துத் தரப்பட்ட அதை கையால அழுத்திககூட ரெண்டு சரிபாதியாப் பிரிக்கலாம். பிரிக்கப்பட்ட பாதியின் மேல கொஞ்சம் உப்பும், கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்து (நமக்கிருக்கற) ஒரே வாய்ல திணிச்சுக்கிட்டு மென்னு சாப்பிட்டா... பேஷ், பேஷ்...! ரொம்ப நனனாருக்கும்.

சில பேத்துக்கு வாய்ங்கறது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். ‘பேச ஆரம்பிச்சா நிறுத்தாத ஒரே உயிரினம் எங்கம்மாதான். வாயா அது...? அலிபாபா குகை' அப்படின்னு பக்கத்து வீட்டுப் பையன் சோகமா சொல்வான். அதுமாதிரி வாய் இருக்கறவங்க ஒரு முட்டையை ஒரே வாய்ல திணிச்சு முழுங்கலாம். இல்ல... மாயாபஜார் படத்துல எஸ்.வி.ரங்காராவ் ஒரே சமயத்துல இருபது லட்டுகளை முழுங்குவாரே... அந்த மாதிரி ரெண்டு மூணு முட்டைகளை அட் எ ஸ்ட்ரெஸ் வாய்ல திணிச்சும் சாதனை பண்ணலாம். இதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீவிர் என்பது உங்களுக்கே தெரியும்... ஹி... ஹி...!

அடுத்தது சுடு தண்ணீர்...! இதை ரெண்டு விதமாப் பயன்படுத்தலாம் நீங்க. முதல் வகை... ஒரு டம்ளர்ல எடுத்துக்கிட்டு, கொஞ்சத்தை வாய்க்குள்ள விடணும். அதோட சூடு ரொம்ப அதிகமா இருந்துச்சுன்னா, உங்க நாக்கு வாய்க்குள்ளயே அந்தக் கால டிஸ்கோ டான்ஸ், நடுககால பிரேக் டான்ஸ், இந்தக் கால குத்து டான்ஸ்னு எல்லா டான்ஸையும் ஆடும். அப்புறமா... அதை வாயால ஊதி, அதோ வீரியம் குறைஞ்சுட்டதான்னு ஒரு வாய் உள்ள விட்டு மெதுவாக் குடிககணும். இப்படியே மொத்த டம்ளரையும் குடிச்சுக் காலி பண்ணனுமுங்க. 

நீங்க கல்யாணமானவங்களா இருந்தா... காலையில ‘காபி’ அல்லது ‘டீ’ங்கற பேர்ல இப்படி சுடுதண்ணியைக் குடிச்சுப் பழக்கப்பட்ட அனுபவசாலியா இருப்பீங்க. (நோ... நோ... சரிதா மொபைல் நம்பர் தரமாட்டேன் சிஸ்டர்ஸ்!) ‘சுடு தண்ணியப் போட்டு அதை வாயால ஊதி ஆறவெச்சுக் குடிக்கறதுக்கு... அதை சுடவெக்காமலேயே குடிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே.... என்ன கெரகததுக்கு சுட வெக்கணும்?' அப்படின்னு .ங்க மைண்ட்வாய்ஸ் கத்திச்சுன்னா அது ரொம்ப நியாயமுங்க. பதிவுலக காதல் இளவரசன் ‘தி.கொ.போ.' சீனுகிட்டதான் இதைப் பத்திக் கேக்கணும்.

இங்கதானுங்க சுடுதண்ணியோட ரெண்டாவது பயன்பாடு வருது. அதை ஒரு பக்கெட்டுல எடுத்துக்கிட்டு, உங்கள் பாத்ரூமில் ஆடைகளற்ற நிலையில் நின்று கொண்டு அப்படியே மேலே ஊற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதம் செய்யின்... வடிவேல் போன்ற நிறத்தினராக இருந்தீர்களென்றால் கமல் போன்ற நிறத்தினராகி விடுவது நிச்சயம்! கூடவே அந்த சுடுதண்ணீர் உஙகள் உடலில் ஏற்படுத்தும் உற்சாகத்தின் விளைவக நீங்கள் ஒரு பாத்ரூம் நடனம்கூட ஆடுவீர்கள் என்பதால் இலவசமாக நடனப் பயிற்சி« வேறு கிடைப்பது போனஸ் பயன்பாடு. ஹி... ஹி...! ஏற்கனவே கமல் போன்ற நிறத்தினராக இருப்பீர்களாயின், சுடுதண்ணீருடன் கொஞ்சம் குளிர் நீரை மிக்ஸ் பண்ணி... (மிக்ஸ் பண்ணுறதுங்கறது தமிழ்நாட்ல எல்லாருக்கும் இப்ப அத்துப்படி தானுங்களே...!) அதை மேல ஊத்திக்கிட்டு குளிச்சிரலாம்.

அடுத்த கேட்டகரி தீக்குளிக்கிறது... ஸாரி, டீக்குடிக்கிறது! முதல்ல சுடச்சுடத் தரப்படற டீயை ஒரு டம்ளர்ல எடுத்துக்கணும். வலது கையை தலைக்கு மேலே கொண்டு போயி... டீ டம்ளரை அந்தக் கைல வெச்சுக்கணும். அப்புறம் அதுக்கு நேர்கீழா 90 டிகிரியில இடது கையில இன்னொரு காலி டம்ளரை வெச்சுக்கிட்டு அதிலருந்து டீயை இதக்கு டிரான்ஸ்பர் பண்ணனும். அப்புறம் இடது கைய மேல கொண்டுபோயி... வலது கைய கீழ கொண்டு வந்து மறுபடி டீயை டம்ளர் விட்டு டம்ளர் பாய வெக்கணும். இப்படி நாலஞ்சு தடவை பண்ணினப்புறமா டீ இருக்கற டம்ளரை வாய்ல வெச்சு ‘சுர்'ருன்னு சத்தம் வராம நாசூக்கா உறிஞ்சிக் குடிக்கணும்.

ஆக... சமைத்ததைப் பயன்படுத்தும் கலையை... சாப்பிடும் கலையை இப்ப நீங்க நல்லா தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன். இப்படியான ஒரு அரிய கலையைக் கத்துக் குடுத்ததுக்காக நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா... ஒரு மெயில் அனுப்புங்க. என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். அப்படி இல்லாம விசேசமா ‘ஏதாவது' செய்யணும்னு நினைச்சீங்கன்னா... இந்தப் பதிவை என்னை எழுதுவெச்ச தி.கொ.போ.சீனு, கோவை ஆவி, தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன் அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக! என் சார்பில் இவர்களே பரிசைப் பெற்றுக் கொள்வார்கள்! ஹா... ஹா... ஹா...!

Friday, December 20, 2013

மின்னல் திரை : என்றென்றும் புன்னகை

Posted by பால கணேஷ் Friday, December 20, 2013
புத்தகக் கண்காட்சிக்குத் தயாராக வேண்டிய புத்தக வேலைகள் டேபிள்முன் குவிந்து கிடந்தாலும், அவற்றைத் துறந்து தன்னுடன் படம் பார்க்க வரும்படி என்னை கதறக் கதற ஐநாக்ஸுக்கு இழுத்துச் சென்றார் கோவை ஆவி. ‘பிரியாணி’ பார்க்கலாம் என்ற அவரிடம், ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். டைரக்டர் வேற தம்பியை ஓவரா புரொஜக்ட் பண்ணுவாரு... அந்தப் படம் பாக்கற அளவுக்கு அஞ்சாநெஞ்சனில்லை நான்’’ என்று அலறினேன். ‘‘ரைட்டு... ‘என்றென்றும் புன்னகை’ பாக்கலாம்’’ என்று அந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கினார் அந்த நல்லவர். ஆக... படம் பற்றிய எந்த முன்ஐடியாவும் இல்லாமல் ப்ளெயினாகச் சென்றேன் தியேட்டருக்குள்.

ரொம்ப சிம்பிளான கதைதான். நாசரின் மனைவி அவரைவிட்டு ஓடிப் போக, ‘பெண்களை நம்பக் கூடாது’ என்று நாசர் புலம்புவது அவர் மகனின் மனதில் அழுத்தமாகப் பதிகிறது. பெண்களை வெறுக்கிற ஒருவனாக வளர்ந்து ஜீவாவாகிறார். தான் கல்யாணம் பண்ணப் போவதில்லை என்று தான் கெடுவதுடன் தன் ஆருயிர் நண்பர்களான வினய், சந்தானம் இருவரையும் ‘கல்யாணம் பண்ணிக்கக் கூடாது’ என்று சத்தியம் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள, அவர்களைத் துறக்கிறார். அப்பா நாசரிடம் சிறு வயதிலிருந்தே பேசுவதில்லை (அதற்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு) என்பதால் தனிமை கொல்ல... இச்சமயத்தில் தொழில்ரீதியாக அறிமுகமான த்ரிஷாவுடன் நெருக்கம் அதிகரிக்க... ஜீவா மனம் மாறினாரா இல்லையா என்பதை விளக்குகிறது படம்.

படத்தில் குறிப்பிடத்தக்க ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம். முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. நான் பெயர் குறித்துக் கொள்ள மறந்த சினிமோட்டோகிராபர் ஆண்ட்ரியாவை(கூட) அழகாக, கிளாமராகக் காட்டியிருக்கிறார். நண்பர்கள் கல்யாணம் செய்த வெறுப்பில் தண்ணியடிக்கும் ஜீவாவிடம் த்ரிஷா வந்து பேசுகிற காட்சி ஓவியம் போல கண்களை இழுத்துப் பிடிக்கிறது. அசத்தியிருக்கும் ஒளிப்பதிவுக்கு ஒரு ஷொட்டு!

சந்தானத்தின் நகைச்சுவை நன்றாக வந்திருப்பது பெரிய ஆறுதல். வழக்கமாக கவுண்டர் ஸ்டைலில் பனச் டயலாக்கில் மட்டுமே ஸ்கோர் செய்கிற சந்தானம், குடிக்க மாட்டேன் எனறு மனைவியிடம் ஜம்படித்து விட்டு, மூக்குமுட்டக் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் காட்சியில் பாடி லாங்வேஜிலும் (முதல்முறையாக?) ஸ்கோர் பண்ணியிருக்கிறார். டைரக்டர் இயல்பாக அங்கங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை வெடிகள் நன்றாகவே வெடிக்கின்றன. உதா: ‘‘ஜிமமிங்கறது யாருங்க?’’ ‘‘என் ஃப்ரெண்டு வீட்டு நாய், ஏன்?’’ ‘‘அந்த நாய் கொஞ்சம் முன்னால உங்க செல்லுல கால் பண்ணி பேசிச்சு’’ ‘‘இன்னிக்கு என்னடி டிஃபன் செல்லம்?’’ ‘‘ம்... ஒரு டம்ளர் விஷம்!’’ ‘‘நான் ஆபீஸ்ல இருந்து வர லேட்டாகும். நீ சாப்ட்டுட்டுப் படுத்துடு!’’ ‘‘என்னங்க... எங்கம்மா வீடடு நாய் நேத்து செத்துப் போச்சு. எங்கம்மாவால அதை ஜீரணிக்கவே முடியல...’’ ‘‘உங்கம்மா எதுக்குடி நாயை எல்லாம் சாப்பிடறாங்க?’’

இன்னொரு பெரிய ப்ளஸ் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஆரம்பத்தில் வரும் தோஸ்து பற்றிய பாடலும், ஹரிணி பாடியிருக்கம் ஒரு டூயட்டும் ரம்யமாக ஒலிக்கின்றன. பின்ணனி இசையிலும் அசத்தலாகப் பண்ணியிருக்கிறார் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்!

மைனஸ்கள் என்றால்... ஒரு காட்சியில் கரப்பான்பூச்சி கக்கா போனமாதிரி கலர்ஃபுல் தலையுடன் வரும் விளம்பர ஏஜென்சி நிர்வாகி, ஜீவாவிடம், ‘‘உனக்குத்தான் நடிக்க வரலையே. அப்புறம் ஏன் வீணா ட்ரை பண்றே? விட்டுடு’’ என்கிறார். இதை டைரக்டர் தனக்குச் சொன்னதாக ஜீவா எடுத்துக் கொண்டு விட்டார் போலும்! அதிகம் மெனக்கெடாமல் இயல்பாக(?) நடித்திருக்கிறார். அவரைவிட அவர் நண்பனாக வரும் வினய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அவன் ஹைட்டுக்கு முன்னால போற ஃபிகரை இங்கருந்தே ப்ரண்ட்ல பாத்துருவான்டா -சந்தானம்)

ஆன்ட்ரியா சிலபல காட்சிகளில் தோனறி தனக்குத் தரப்பட்ட க்ளாமர் வேலையை சரிவரச் செய்திருக்கிறார். மூக்கர் நாசர் வழக்கம் போல அருமை! த்ரிஷா...! சாமியில் பார்த்ததுபோலவே இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறார். வெளிநாட்டில் காதல் நெருக்கம் காட்டிய ஜீவா, நண்பனிடம், ‘என்கூட ப்ளைட்ல வந்தவங்க’ என்று சொல்லும் காட்சியில் முகத்தில் அதிர்ச்சியும், கண்ணீரும் காட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும்... அதிவிரைவில் அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு பிரமோஷன்(?) ஆகிவிடும் சாத்தியக்கூறும் தென்படத்தான் செய்கிறது.

பெண்களை வெறுககும் தன் மகனின் மனம் மாறவேண்டும் என்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்கிறார் நாசர். அதற்காகக் கோபப்பட்டு வெறுப்பைக் கொட்டுகிறான் மகன். ‘‘எனக்காக அபபாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வர வேணாம். நான் போறேன்’’ என்று புதுமனைவி சொல்லிவிட்டு என்னமோ ‘கொடுத்த கால்ஷீட் முடிஞ்சிருச்சு, ப்ரொட்யூஸர் பேமெண்ட் தந்துட்டாரு. வரேன்’ என்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் போகிறார். நாசரும் ஒழிஞ்சுது சனியன் என்கிற மாதிரி அதன்பின் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மகனுக்காக மட்டும் ஏங்குகிறாராம். டைரக்டர்வாள்... என்னங்காணும் இது? கல்யாண பந்தத்துக்கு இவ்வளவுதானா ஓய் மரியாதை?

தனக்குப் பிடிக்காத செயலை அப்பா செய்தாலும், நண்பர்கள் செய்தாலும் தூக்கி எறிகிற, ஏறக்குறைய ஹிட்லர் அளவுக்கு வடிவமைக்கப்பட்ட ஜீவாவின் கேரக்டர் மனம் மாறுவதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. பின்பாதியில் படத்தின் வேல்யூவைக் குறைக்கிற விஷயம் இதுதான். அதே மாதிரி நிறையப் படங்கள் பார்த்திருக்கும் நம் அனுபவத்தின் காரணமாக நண்பர்களின் மனமாற்றத்திற்கும், திடீர் திருமணத்திற்கும் பின்னணியில் நாசர் இருப்பாரோ என்பதை யூகிததுவிட முடிவது ஒரு மைனஸ்!

படத்தில் த்ரிஷாவைத் தவிர அத்தனை பேரும் பெரும்பாலான காட்சிகளில் ‘தண்ணி’யடித்துக் கொண்டே இருக்கிறார்கள். விளைவாக... ‘மதுகுடித்தல் உடல்நலத்துக்குக் கேடு’ திரையின் கீழ் ரொம்ப நேரம் கண்ணில் மின்னுகிறது. திரையில் சின்னதாக ஒரு கட்டம் கட்டி (டைரக்டர் ஸ்ரீதர் ஸ்டைலில்) அதில் முகேஷைப் பேச வைத்துவிடுவார்களோ எனறு பயம் வருகிற அளவுக்கு ஆகிவிட்டது...! ஹி... ஹி...!

‘‘டோட்டலா என்னதான்யா சொல்ல வர்றே நீயி? படம் பாக்கலாமா, வேணாமா?’’ என்பவர்களுக்கு:

சின்ன வயசிலிருந்து நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பதும், அவர்கள் தங்களுக்குள்ளும், மற்றவர்¬ளையும் கலாய்க்கும் காட்சிகளை யூத்ஃபுல்லாக அமைத்தும் முதல் பாதி வரை இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் கொண்டு சென்றதற்கும், இரண்டாம் பாதியில் சற்றே சொதப்பினாலும், ‘மோசமான படம்’ என்கிற கேட்டகரிக்குப் போகாதபடி படத்தை முடித்திருக்கும் டைரக்டர் அஹமதுக்கு தாராளமாகத் தரலாம் ஒரு வெலகம் பொக்கே!

பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச சென்றால், நிச்சயம் ரசிக்க வைக்கிற ‘ஒரு தரம் பாக்கலாம்டா’ என்று சொல்ல வைக்கிற நல்லதொரு என்டர்டெய்னர்!

Wednesday, December 11, 2013

பாட்டுக்(கும்)கொரு புலவன்!

Posted by பால கணேஷ் Wednesday, December 11, 2013
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
 
• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.

* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.

• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.

* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.

* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.
• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.

* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.

• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.

* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.

• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.

* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!

• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.

* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.

* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.

* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.

• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!
 
=====================================================
இது ஒரு மறு ஒளிபரப்பு!

=====================================================

Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...! 

ரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது.

‘‘என்னது....? ஆன்ட்டியா? விட்டா பாட்டின்னுவ போலருக்கே...! தோ பாரும்மா... ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லன்னா ஸே மேடம்...!"ன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு கோபமா சொல்றா. அவளானா கொஞ்சமும் அலட்டிக்காம, ‘‘போங்க ஆன்ட்டி! ரொம்ப தமாஷ் நீங்க... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு..."ன்னு உரிமையா சரிதாவோட கன்னத்துல ஒரு தட்டு தட்டிட்டு நகர்றா. அதே கோபத்தோட சரிதா, நம்மாளு பக்கம் திரும்ப... அவன் மெதுவா எஸ்கேப்பாயிடறான். இது மாதிரி சமயங்கள்ல எப்படித் தப்பிக்கறதுன்னு பிள்ளையாண்டானுக்கு அத்துபடியில்லியோ... ஹா... ஹா...!

ஷாட் ரெடின்னுட்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூப்பிடவும் சரிதா போறா. நம்மாளு ஹாயா, ஒரு சேர்ல உக்காந்துண்டு ஷுட்டிங்கை வேடிக்கை பாக்கறான். டைரக்டர், ‘‘ப்ரீத்தி, நீங்க சரிதா மேடத்தப் பாத்து, ‘யாரு ஜெயிக்கறாங்கன்னு பாத்துடலாம்னு" சொல்லி சிரிக்கறீங்க. சரிதா மேடம், நீங்க ப்ரீத்திகிட்ட, ‘யார்கிட்டடி கொக்க
ரிக்கறே?"ன்னு கேட்டு பளார்ன்னு கன்னத்துல அறையறீங்க. புரிஞ்சுதா...?" அப்படின்னு சொல்லிட்டு, ‘‘ரெடி டேக்..."குங்கறார். ப்ரீத்தி அவளோட டயலாக்கைப் பேசி முடிக்கவும், சரிதா ‘‘யாருகிட்டடி கொக்கரைக்கறே?"ன்னு கேட்டுட்டு அவ கன்னத்துல பளார்னு அறையறா.

‘‘கட்... கட்...'ன்னு கத்திட்டு டைரக்டர் வேகமா பக்கத்துல வர்றாரு. ‘‘மேடம்... கொக்கரைக்கறே இல்ல... கொக்கரிக்கறன்னு கேக்கணும். பாத்துப் பண்ணுங்க... ஒன் மோர் ஷாட்" அப்படிங்கறாரு. ‘‘ஸார்..."ன்னு பரிதாபமா குரல் கொடுக்கறா ப்ரீத்தி. ‘‘என்னம்மா?"ன்னு கேக்கற டைரக்டர் கிட்ட, ‘‘இந்த ஆன்ட்டி நடிக்கற இன்ட்ரஸ்ட்ல நிஜமாவே கன்னத்துல அறைஞ்சுட்டாங்க ஸார்..."ன்னு பாவமாச் சொல்றா. ‘‘மேடம்... பாத்துப் பண்ணுங்க..."ன்னு மறுபடி சொல்லிட்டு டைரக்டர் கேமரா பின்னால போய் நின்னுண்டு ‘‘ஸ்டார்ட் கேமரா"ங்கறார்.

இப்போ... மறுபடி அதே மாதிரி ‘‘யார்கிட்டடி கொக்கரைக்கறே?'ன்னு கரெக்டா தப்பாப் பேசிட்டு, திரும்ப அந்தப் பொண்ணை ஒரு ‘பளார்' விடறா சரிதா. ‘‘கட்... கட்..."ன்னு கோவமா கத்தின டைரக்டர் சரிதாட்ட வந்து, ‘‘அரைக்கறது இல்லம்மா... அரிக்குது... அரிக்குது..."ன்னு பலமா கத்தறாரு. ‘‘போங்க ஸார்... அரிக்குதுன்னா சொரிஞ்சுக்கறத விட்டுட்டு என்கிட்ட வந்து சொல்றீங்க?"ன்னு சரிதாவானா வெக்கப்படறா.

அதப் பாத்ததுமே டைரக்டரோட பி.பி. கன்னாபின்னான்னு எகிறிப் போய்டறது போங்கோ... ‘‘அரிக்கறதுன்னு சொல்லலைம்மா. நீங்க பேசவேண்டியது கொக்கரிக்கறதுன்னு. திரும்பத் திரும்ப கொக்கரைக்கறதுன்னே பேசறீங்க. கொக்கைல்லாம் யாரும் அரைக்க முடியாதும்மா... இதான் லாஸ்ட். இந்தத் தடவை நீங்க சரியாப் பேசலைன்னா... நாளைக்கு எடுத்துக்கலாம் இந்த சீனை"ன்னு எரிஞ்சு விழுந்துட்டு, அந்தப் பக்கம் நகர்றாரு.

வேடிக்கை பாத்துண்டு இருககற நம்ம கதாநாயகனுக்கு அந்தப் பொண்ணு ப்ரீத்தியப் பாக்கவே பாவமா இருக்கு. சரிதாட்ட அறை வாங்கினா எப்படி வலிக்கும்னு அனுபவபூர்வமா நேக்கும், உங்களுக்குமா தெரியும்...? அவனுக்கில்ல தெரியும்! அந்தப் பொண்ணை இப்ப ரொம்ப பரிதாபமாப் பாக்கறான். அதைப் பாத்ததுமே சரிதாவோட முகத்துல கோபத்தோட வால்யூம் ஜாஸ்தியாறது. மறுபடி டைரக்டர் டேக் எடுக்க... அவரோட பொறுமையையும், ப்ரீத்தயோட கன்னத்தையும் ரொம்பவே சரிதா சோதிக்க, ஏழாவது டேக்ல சரியாப் பேசிடறா. ‘‘கட்... கட்..."ன்னு குரல் கொடுத்த டைரக்டர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில அட் எ டைம் ஆறு காளைய அடக்கினவர் மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு வந்து நம்ம கதாநாயகன் பக்கத்துல இருக்கற சேர்ல சரியறாரு.

சரிதா பவ்யமா அவர் பக்கத்துல வந்து நின்னுண்டு, ‘‘நாளைக்கு எப்ப, எங்க வரணும் ஸார்?"ன்னு கேக்கறா. அவரானா அவசர அவசரமா, ‘‘அப்புறமா ஃபோன் பண்ணிச் சொல்றேம்மா... இப்ப நீங்க கிளம்புங்கோ"ங்கறார். கார்ல திரும்பி வரும்போது நம்மாளு சரிதாட்ட கேக்கறான்: ‘‘ஏம்மா... சொல்றதை திருப்பிச் சொல்லத் தெரியாத அளவுக்கு நீ மோசமில்லன்னு நேக்கு நன்னாவே தெரியும். அப்புறம் ஏன் அப்படி ஏகப்பட்ட டேக் வாங்கி இழுத்தடிச்சே.?"ன்னு கேக்கவும், சரிதா கோவமா அவனோட கொமட்டுலயே குத்தறா. ‘‘தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு... அவகிட்ட நீங்க வழிஞ்சதே என்னால தாங்க முடியல. பத்தாததுக்கு அவ வேற ஆன்ட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டு ரொம்பத்தான் எரிச்சல் பண்ணிட்டா. இதான் சாக்குன்னு ஷாட்டுல நடிக்கற சாக்குல நல்லா மொத்திட்டேன்..."ன்னுட்டு ஹா... ஹா...ன்னு பலமாச் சிரிக்கறா.

‘‘நல்ல காரியம் பண்ணினே போ... எனக்கென்னவோ அந்த டைரக்டர் மறுபடி உன்னை நடிக்கக் கூப்பிடுவாருன்னு தோணலம்மா..."ன்னு நம்ம கதாநாயகன் சொல்றதுக்கு, ‘‘கூப்பிட்டாம இருக்க முடியாதே... சீரியல் எபிஸோட் உடனே குடுத்தாகணுமாம், டைமில்லைன்னு டைரக்டர் அவர் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேனே..." அப்படின்னு குதூகலமாத்தானே சொல்றா. நம்மாளு அதுக்கு மேல ஆர்க்யூ பண்ணினா வம்புதானே வந்து சேரும்னுட்டு காருக்கு வெளில பராக்குப் பாக்கற மாதிரி திரும்பிக்கறான். ஆனா... விதியோட விளையாட்டப் பாத்தேளோ... அவன் சொன்ன மாதிரியே நடந்துடுத்து.

அந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்ல தான் நடிச்சதை எல்லார்ட்டயும் போன் பண்ணிச் சொல்லிப பீத்திக்கறா சரிதா. அதோட நிக்காம... அந்த எபிஸோட் ப்ராட்காஸ்ட் ஆனப்ப அதை ரிகார்டும் பண்ணி திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கறா. அதை பாக்க வெச்சு நம்ம ஹீரோவையும் சோதிக்கறா. ஆச்சு... ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. சீரியல் கம்பெனிலருந்து போனக் காணலை. அடுத்த வாரம் வரை வெய்ட் பணணிப் பாத்துட்டு சரிதா அந்த டைரக்டருக்கு போன் பண்ணினா... ‘‘ஸார்... மறுபடி எப்ப நடிக்க வரணும்னு சொல்றேன்னேளே..."ன்னு இழுக்க, ‘‘அம்மா தாயி, ஆள விடுஙக... இந்த வாரம் சீரியல்ல வேற ஒரு நடிகைய நடிக்க வெச்சுட்டு அவருக்குப் பதில் இவர்ன்னு உங்க படத்தையும் அவ படத்தையும் காட்டி கதைய நகர்த்திட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல நடிச்சதுக்கு செக் வந்துரும். ரொம்ப தாங்க்ஸ்ம்மா"ங்கறார்.

சொத்தைக் கடலைய மென்னுட்ட மாதிரி ஆயிடறது சரிதாவோட மூஞ்சி! செல்போனைத்தானே அவ கட் பண்ணிட்டு நம்மாளைப் பாக்கவும், எதிர் முனைல என்ன சொல்லியிருப்பாங்கன்னு ஊகிச்சுட்ட அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறான். அதப் பாத்ததும் சரிதா கோவமாயி, முகவாயத் தோள்ல இடிச்சுட்டு உள்ள போறா. இதனால லோகத்துல உள்ளவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல உள்ளவாள்ளாம் சீரியலைப் பாத்து (அழுது) ரசிக்கணுமே தவிர, நடிககணும்னு ஆசைப்படப் படாதுங்கறதுதான். இம்புட்டு நேரம் என்னோட காலட்சேபத்தை பொறுமையாக் கேட்டவாளும், அடுத்த கச்சேரிக்கு அழைப்புக் குடுக்கலாமா இவருக்குன்னு யோசிக்கறவாளும் எந்தக் குறையும் இல்லாம குடும்பம், பிள்ளை குட்டிகளோட க்ஷேமமா இருக்கணும்! இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன். வரட்டுமா....


இனறு வலைச்சரத்தில் உங்களின் மேய்ச்சல் மைதானம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...

 வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கப்ஸி உங்கள் சாய்ஸ்ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்! அதுக்கு டயல் பண்ணிப் பேசறவால்லாம் தவறாம, ‘மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருககீங்க’ன்னுட்டு வழியுவா."

‘‘தெரியும் அத்திம்பேர். அந்த ப்ரொகிராம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்áங்கறான் வாசன். ‘‘அதேதான்... அதுல தன்னோட குரலும் கேக்கணும்னு உங்கக்காக்கு ரொம்பத்தானே ஆசை. பல மாசமா ட்ரை பண்ணிண்டிருந்தா. லைன்ல வெயிட்டிங் போட்டு கட் பண்ணி டெலிபோன் பில்தான் ஏறித்தே தவிர, இவ பேசினபாடில்ல... கடைசில ஒரு நாள் லைன் கிடைச்சிட்டுது. இவ என்ன பேசினா தெரியுமோன்னோ..."ன்னு கப்ஸி ரமா, சரிதா குரல்கள்ல நடிச்சே காட்டறான் நம்ம கதாநாயகன்.

‘‘ஹலோ... கப்ஸி ரமாங்களா...? நீங்களேதானா....? ஹை! எனக்கு லைன் கிடைச்சிருச்சு!"

‘‘சொல்லுங்க மேடம்...! எங்கருந்து பேசறீங்க? உங்க பேர் என்ன?"

‘‘என் பேர் சரிதாங்க. நான் வெஸ்ட் மாம்பலத்துலருந்து பேசறேன்... மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..."

‘‘ஓ...! தாங்க்யூ! சொல்லுங்க சரிதா. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? உங்க ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு? உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?"

‘‘நான் ஹவுஸ் வைஃபா இருக்கேன் மேடம். என் வீட்டுக்காரர் பத்திரிகைத் துறையில இருக்காரு. ரீசன்ட்டாதான் கல்யாணமாச்சு மேடம்! இதுவரைக்கும் குழந்தைங்க இல்லிங்க..."

‘‘ஓ...! சீக்கிரமா கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். அப்புறம் சொல்லுங்க சரிதா... உங்களுக்கு என்ன பாட்டு போடணும்?"

‘‘ஏதோ ஒரு பாட்டு போடுங்க மேடம்..."

‘‘நீங்கதான் டயல் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் கப்ஸி உங்கள் சாய்ஸ்ல போடுவோம் சரிதா. அதனால நீங்களே சொல்லுங்க என்ன பாட்டுப் போடணும்?"

‘‘அதான் சொன்னேனே மேடம்... ஏதோ ஒரு பாட்டு போடுங்கன்னு..."

‘‘எனக்குப் பிடிச்ச ஏதோ ஒரு பாட்டப் போடணும்னு சொல்றீங்களா? இல்லீங்க... இன்னும் நிறைய நேயர்கள் பேசணும்னு காத்திண்டிருக்கா. சீக்கிரம் சொல்லுங்க சரிதா மேடம்...! எந்தப் படத்துலருந்து என்ன பாட்டு போடணும்னு..."

‘‘அதான் சொன்னேனே மேடம்... ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துலருந்து ‘ஏதோ ஒரு பாட்டு' போடுங்கன்னு..."

‘‘அவ்வ்வ்வ்வ்! பாட்டு பேரையா ஏதோ ஒரு பாட்டுன்னு சொன்னீங்க? சரிங்க.. இப்ப நீங்க கேட்ட ஏதோ ஒரு பாட்டு வருது --அப்படின்னு சொல்றப்ப கப்ஸி ரமாவோட முகம் போன போக்கையும், அவங்க மைல்டா அழுததையும் நீ பாத்திருக்கணுமே..."ன்னு சொல்லிட்டு கபகபன்னு சிரிக்கிறான் நம்மாளு. இப்ப இதைக் கேட்டதும் வாசனும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிச்சுடறான். சரிதா முகத்துல எள்ளு + கொள்ளு வெடிக்க... ‘‘சரி... சரி... ரொம்பத்தான்.... பல்லு சுளுக்கிக்கப் போறது. இதோ பாருங்கோ... வர்ற சனிக்கிழமைலருந்து ஷுட்டிங் ஆரம்பிக்கறதா சொல்லி வரச் சொல்லியிருக்காரு டைரக்டர். அதனால சனிக்கிழமை காலம்பற எட்டு மணிக்கெல்லாம் தயாராயிடுங்கோ... நாம போறோம்..."ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போறா சரிதா.

சனிக்கிழமை காலம்பறவே பரபரப்பா தானும் எழுந்து, ஆத்துக்காரனையும் எழுப்பி துள்ளிக் குதிச்சுண்டு தயாராகறா சரிதா. போரூர் தாண்டி ஒரு பங்களால ஷுட்டிங்குங்கறதால எட்டு மணிக்கே கௌம்பி, சரியா பத்து மணிக்கெல்லாம் அங்க போய்ச் சேர்ந்துடறா. அங்க டைரக்டர் சிவகங்கை சிவனாண்டி காத்திண்டிருககார். அவர் டி.வி. சீரியல்ல புரட்சி பண்ணினவார். அதாவது... கண்ணீரும் அழுகையுமா வந்துட்டிருந்த சீரியல்கள்ல 80கள்ல வந்த சினிமா மாதிரி ‘டுஹாய் டுஹாய்'ன்னு கத்திக்கிட்டே பறந்து பறந்து போடற சண்டைகளையும், கார், வேன் சேஸிங்குகளையும் அறிமுகப்படுத்தினவரு. ஆளு பாக்கறதுக்கு பெரிய சைஸ் காராசேவுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி (நன்றி: சந்தானம்) இருக்காரு. அந்த டைரக்டர் இவாளை நல்லவிதமாவே வெல்கம் பண்றார். ‘‘வாங்க மேடம்...! உங்களோட கேரக்டரைப் பத்தி மொதல்ல சொல்லிடறேன். ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா நீங்க வர்றீங்க. சின்ன மருமகள்கள் ரெண்டு பேருக்கும் உங்களுக்கும் ஆகாது. மாமியாரோட கூட்டணி வெச்சுட்டு அவங்களை மெரட்டறீங்க..."

‘‘அப்படியா? அப்புறம் என்ன ஆறது?"

‘‘சரிதான்... இவ்வளவு நேரம் கதை சொன்னதே அதிகம் மேடம்! இதை வெச்சுண்டே நூறு எபிசோட் தாண்டிருவேன். அதுக்கப்புறம் என்ன ஆறதுங்கறதை மெல்ல யோசிச்சுக்கலாம். இப்பவே என்ன அவசரம்?"ன்னு சிரிச்சுட்டு அப்பால போயிடறார் டைரக்டர். அப்புறம் கொஞ்ச நேரத்துல நடிக்கறவாள்ளாம் வந்து சேரச் சேர, கல்யாண வீடு மாதிரி ஆயிடறது அந்த பங்களா. சரிதா, ராமராஜன் மாதிரி ‘லைட்'டா மேக்கப்பிண்டுட்டு தன்னை எப்பக் கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கா. டைரக்டர் கூப்பிடற பாடில்லை. ‘‘ஸார்... என்னை எப்ப நடிக்க வெக்கப் போறீங்க?"ன்னு டைரக்டர் கிட்ட போய் வேற வேற மாடுலேஷன்ல அவ கேக்கறதும், ‘‘கொஞ்சம் பொறுங்க மேடம். நான் கூப்பிடறேன்"ன்னு வேற வேற மாடுலேஷன்ல அவர் சொல்றதும், சரிதா சலிச்சுக்கறதும் பாக்கறப்ப கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடியப் பாக்கற மாதிரி இருக்குது நம்மாளுக்கு. நல்லா சிரிச்சுண்டு ரசிச்சுண்டிருக்கான்.

இதுலயே லன்ச் டைமும் வந்துடறது. சும்மா சொல்லப்படாது... ஐட்டம்லாம் நல்லா இருக்கறதால... அட, சாப்பிடற ஐட்டங்களைச் சொல்றேனாக்கும் நான்... நம்ம ஹீரோ ஒரு பிடி பிடிக்கறான் - சரிதா பாக்காத நேரத்துல அசைவத்தையும்! அவளுக்கானா எப்ப நடிக்கக் கூப்பிடுவாளோங்கற படபடப்புல சாப்பாடே எறங்கலை போங்கோ... கடைசியில ஒரு வழியா ரெண்டு மணிக்கு அவகிட்ட வர்ற டைரக்டர், த்ன்னோட வர்ற அழகான பொண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தறார். ‘‘அடுத்த ஷாட் உங்களோடதுதான் மேடம்! இவங்கதான் ரெண்டாவது மருமகளா நடிக்கப் போறாங்க. இவங்களோட நீங்க சண்டை போடற சீனை முதல்ல எடுக்கப் போறோம்"ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டெண்ட் கிட்ட டயலாக் சொல்லித்தரச் சொல்லிட்டு அப்பால போறாரு.

அந்த அழகான பொண்ணைப் பக்கத்துல பாத்ததும் நம்ம ஹீரோ புள்ளையாண்டான் முகம் பிரகாசமாயிடறது. கண்ணு ரெண்டும் பல்பு மாதிரி மின்னுது. அதைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்கறா சரிதா. அந்தப் பொண்ணோட சண்டை போடற மூடு அப்பவே ஸ்டார்ட்டாயிடுச்சு அவளுக்கு. ஏற்கனவே சரிதாங்கற நெருப்பு எரிய ஆரம்பிச்சுட்டதைத் தெரியாம, அதுல கொஞ்சம் பெட்ரோலையும் ஊத்தறா அந்தப் பொண்ணு.
   

                                                                     அப்புறம் என்ன நடந்ததுன்னு கேக்க
                                                                         நீங்க ரெடியா இருந்தாலும் நேக்கு லேசா
                                                                         வயத்தைக் கலக்கறது. சித்த நாழி
                                                                         பொறுங்கோ... வந்துடறேன்!

 
மின்னல் டிவியில இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் காபி நிறைய இலக்கியம் படிக்க இங்கே க்ளிக்குக!

Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
மப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலா எடுக்கணும் போங்கோ...! இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.

 தௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிட்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க..." அப்படிஙகறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?"ங்கறான்.

‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ'ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்! ‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால.."ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!"ங்கறா கூலா.

நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்' படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே'ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன். அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு"ன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா..." என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.

‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா&ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா..."ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு..."ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா. ‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா..."ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?"ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா' ** புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்குப் போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்.."ங்கறா சரிதா.

‘‘அத்திம்பேர்... அககாவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோ"ன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?"ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சா"ங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க..." அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமாக சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே'ன்னு முழிக்கறான்!

அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா..."ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்..."ன்னு ஆரம்பிச்சு அவ நான் பண்றதைவிடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.

‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?"ன்னு மெதுவா முனகறான. அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல..."ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
 
                                                               அப்படி சரிதா என்னதான் பேசியிருப்பான்னு
                                                                சித்த நீங்களும் யோசிச்சிண்டிருங்கோ...
                                                                 நான் கொஞ்ச நாழில வெத்தல பாக்கு
                                                                 போட்டுண்டு மறுபடி வந்துடறேன்...!

மின்னல் டிவில நான் பங்கேற்ற ‘டீ வித் திவ்யா’ நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!

Saturday, November 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 22

Posted by பால கணேஷ் Saturday, November 23, 2013
னந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே தவிர, எஃபக்ட் ஒண்ணும் தெரியல" என்றேன். ‘‘இந்த முறை அப்படி இல்லிங்க. கண்ணாடியோட பாத்தீங்கன்னா... விளம்பரத்துல சொல்லியிருக்கற மாதிரி அள்ளும்" என்றார். விகடன் வெளியாகி 3டி படங்களை நான் ரசித்த பினனொரு நாளில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘‘இப்ப என்ன நினைக்கறீங்க?’’ என்றார். நான் நினைத்ததைச் சொன்னவுடன், ‘‘பாதகா...!" என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். நான் சொன்னது என்னவாக இருககும்? யூகியுங்க...

==================================

‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.

ஆஸர்கானா நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்க, ஸ்.பை. வந்தார். ‘அம்மா மினி பஸ்'ஸில் சவாரி செய்தே ஆகவேண்டுமென்று பலப்பம் சாப்பிடாத குழந்தையாக சிவா அடம்பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து ஐநது நிமிஷ மினி ட்ரிப் அடித்தோம். மதுரையிலும் கரூரிலும் நான் மினி பஸ் சவாரி செய்ததுண்டு. கசகசவென்று கூட்டம் நிரம்பி வழிய, கன்னாபின்னாவென்று ஏதோ பாட்டைக் கத்தவிட்டுக் கொண்டு, நல்ல அனுபவமாக ஒருநாளும் இருந்திராதது மினி பஸ். சென்னையில் கூட்டமில்லாமல் புதிய பஸ்ஸில் சென்றது வித்தியாசமான நல்ல அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாட்கள் போனால்தான் இந்த பஸ்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன, எப்படி ஓடுகின்றன என்பதை முழுதாக மதிப்பிட முடியும். பார்க்கலாம். வேளச்சேரியில் குருநானக் கல்லூரி தாண்டி சிறிது தூரம் வந்ததும் சிவா குறிப்பிட்ட ‘கோலி’ என்ற பெயர் கொண்ட வடாபாவ் கடை இருந்தது. பனீர் வடாபாவ், சீஸ ஃபிங்கர் வடாபாவ் என்று இரண்டு வெரைட்டி ருசி பார்த்தேன். சிவா இதைப் பற்றி விரிவாக எழுத இருப்பதாக என்னிடம் சொன்னதால் என் ஒருவரி விமர்சனம்: செம்ம டேஸ்ட்! அதன்பின் மூவருமாக ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று ஒரு ரவுண்டு வந்தோம். ஒரு காஃபிக்கு 130 ரூபாயும், கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் கவனித்தது தனியொரு சந்தோஷம். இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!

==================================

‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!

 தீபாவளி மலர்களின் வழக்கம் போல் ஸ்வாமி படங்களுடன் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களும் தந்திருப்பது ரசனை! பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் கதைகளைத் தவிர்த்து, கட்டுரைகளாக வாங்கி வெளியிட்டிருப்பதும் மிக ரசிக்க வைத்தது. சினிமா பற்றி தரப்பட்டிருக்கும் தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும், வாத்தியார் சுஜாதாவின் டாப் சிறுகதையான ‘நகரம்’ வெளியாகியிருப்பதும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆக மொத்தத்தில்... கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு தீபாவளி மலர்!

==================================

ல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!

==================================

நேற்று ‘கிருஷ்ண லீலை' என்ற படம் சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது (பின் பகுதிதான்). குசேலர் கதாபாத்திரத்தை நாகேஷ் செய்திருந்த விதம்...! அரண்மனையில் அலட்சியப்படுத்தும் சேவகர்களின் முன் கிருஷ்ணனே வாசலுககு வந்து அழைத்ததும் காட்டுகிற பந்தா... சேடிகள் கண்ணன் நடக்கும் பாதையில் மலர் இறைக்க, நாகேஷ் மேல் அது பட, அவர் நாணி துள்ளிக் குதிக்கும் அழகு... ஆளுயர மாலையை கண்ணன் போட்டதும் கழுத்து வளைந்து கும்பிடுவதும், ‘‘எத்தனை நேரம் கும்பிடுவாய் குசேலா?’ என கண்ணன் கேட்க, ‘‘கும்பிடலை கண்ணா... நீ போட்ட மாலை நிமிர விடவில்லை’ என்று பன்ச் அடிப்பதும்... கண்ணனின் அன்பில் நனைந்து தனக்கென எதுவம் கேட்காமல் அரண்மனையை விட்டு வெளியே வந்து புலம்புவதும்... எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபாமன்ஸ்! பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு மட்டும் பலர் நடித்திருந்த குசேலர் வேஷத்தை இப்படியொரு காமெடி + சென்டிமென்ட்டுடன் பண்ண நாகேஷால்தான் முடியும். What a legend!

==================================

அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"

Tuesday, November 12, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 9

Posted by பால கணேஷ் Tuesday, November 12, 2013
                              தொட்டால்... தொடரும்!

                                    பட்டுக்கோட்டை பிரபாகர்
 
வெங்கடேஷ் ‘பாலங்கள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். பிரசவத்துக்காக மனைவி ஊருக்குச் சென்றிருக்க, ஒரு மழைநாளின் மாலையில் பாஸ்கர் என்ற இவனது நண்பன், தான் காதலித்த வசந்தி என்ற பெண்ணுடன் மதுரையிலிருந்து ஓடிவந்து இவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெங்கடேஷுக்கு அவர்கள் ஓடிவந்த செயல் பிடிக்காவிட்டாலும் நண்பனுக்கு அடைக்கலம் தருகிறான். ஸ்ரீராம் வெங்கடேஷின் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஒரு ஓவியன். அவன் கனவுகளி்ல் அடிக்கடி குதிரையில் வரும் ஒரு இளவரசியின் முகம் வசந்தியின் முகமாக இருக்கக் கண்டு வியப்பில் ஆழ்கிறான் ஸ்ரீராம்.

வெங்கடேஷ், ‌தனக்குத் தெரிந்த கெளதமன் என்ற தொழிலதிபரிடம் பாஸ்கருக்கு வேலை கேட்க அழைத்துச் செல்கிறான். கெளதமனுடன் பேசும் நேரம் மாடியிலிருந்து அலறல் சத்தம் கேட்க, அவர் எழுந்து விரைகிறார். கெளதமனின் மகள் மஞ்சு சிகிச்சையை ஏற்க மறுத்து கலாட்டா செய்ய, சமாதானம் செய்கிறார். தூசி படிந்த ஓவியமாய் அந்த அறையிலேயே அடைந்து கிடக்கும் அழகான அந்த மஞ்சு, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறாள். கெளதமனின் நண்பர் மகன் நந்தாவுடன் காரில் வெளியில் செல்ல, மூன்று ரவுடிகளால் நந்தா தாக்கப்பட்டு, தான் கற்பழிக்கப்பட்டதை தன்னால் சுலபமாக மறந்துவிட முடியாது என்று சொல்லி அழும் அவளைத் தேற்றுகிறார் கெளதமன்.

டாக்டர், மஞ்சுவுக்குத் திருமணம் செய்து வைப்பது நலலதென்றும், அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை மணப்பவனிடம் மறைக்காமல் இருப்பதே அவளுக்கு நல்லது என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார். ‌கீழே வந்ததும் வெங்கடேஷ், பாஸ்கருடனான பேச்சில் பல விஷயங்களினூடே, கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றமற்றவர்கள், வாழ்வுதர வேண்டும் என்று பாஸ்கர் ஆவேசமாகப் பேச கெளதமன் அவனுக்கு தன் அலுவலகத்தில் வேலை தருகிறார்.

ஸ்ரீராம் பாஸ்கர் - வசந்தியுடன் நட்பாகப் பழகுகிறான். ஸ்ரீராமின் பண்பாடான நடத்தையும், ஓவியத் திறமையும் வசந்தியைக் கவர்கிறது. தன் கம்பெனியில் தற்காலிக டைப்பிஸ்டாக வசந்திக்கு வேலை வாங்கித் தருகிறான் ஸ்ரீராம். பாஸ்கருக்கு மஞ்சுவை கெளதமன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். பாஸ்கரின் விளையாட்டு ஈடுபாடும், கலகல சுபாவமும் மஞ்சுவை சோகத்திலிருந்து மீட்டு வருகிறது. மகிழ்ச்சியடைந்த கெளதமன், பாஸ்கரை தன் பங்களாவின் அவுட் ஹவுஸிலேயே தங்கும்படி கட்டளையிட, வேறு வழியின்றி வசந்தியைப் பிரிந்து அங்கே செல்கிறான் பாஸ்கர்.

கம்பெனியில் ஸ்ரீராமையும், வசந்தியையும் இணைத்து டாய்லெட்டில் யாரோ எழுதி வைத்துவிட, கோபமான ஸ்ரீராம், அதை எழுதிய மாதவ் என்பவனைக் கண்டுபிடித்து, அனைவர் முன்னிலையிலும் அடித்து, வேலையை விட்டு அவனை அனுப்பச் செய்கிறான். ஸ்ரீராமின் அந்த ரோஷமும் காமம் கலக்காத வசந்தியி்ன் மீதான அவன் அன்பும் அவளை பிரமிக்க வைக்கிறது. மஞ்சுவின் அண்மை பாஸ்கரை நிலைதடுமாற வைக்கிறது. வசந்தியின் பிறந்தநாளைக்கூட புறக்கணித்து கெளதமன், மஞ்சுவுடன் திருச்சி செல்கிறான். வேலையாள் மூலம் கேக் அனுப்பி வைக்கிறான். ஸ்ரீராம் இரவு முழுவதும் கண்விழித்து அவளை ஓவியமாக வரைந்து பரிசளிக்கிறான். வசந்தி நெகிழ்கிறாள்.

பாஸ்கர் திரும்பி வந்ததும் வசந்தி அவனிடம் தான் கெளதமனின் பங்களாவுக்கு ‌போன் செய்த விவரத்தைக் கூறி விளக்கம் கேட்க, அவளை எடுத்தெறிந்து கோபமாகப் பேசிவிட்டுப் பிரிகிறான் பாஸ்கர். மறுதினம் மனம் கேட்காமல் வசந்தி போன் செய்ய, அவளிடம் அப்போதும் கடுமையாகப் பேசுகிறான். தன் சொத்து விவரங்களையும், அனைத்தும் மஞ்சுவுக்குத்தான் என்றும், மஞ்சுவின் மீது தான் வைத்திருக்கும் பாசத்தையும் சொல்லி, அவளை மணந்து கொள்ளும்படி பாஸ்கரிடம் கெளதமன் வேண்டுகோள் விடுக்க... தடுமாறுகிறான் பாஸ்கர்.

ஸ்ரீராமின் அப்பா இறந்து விட்டதாக தந்திவர, அப்பாவின்மேல் வெறுப்பிலிருக்கும் அவனுக்கு அறிவுரை கூறி, ஊருக்கு அனுப்பி வைக்கிறாள் வசந்தி. வெங்கடேஷின் அலுவலகம் வரும் பாஸ்கர், தான் முதலாளி மகள் மஞ்சுவை மணக்கத் தீர்மானித்திருப்பாகச் சொல்ல, வெங்கடேஷ் கோபமாகிறான். வசந்தியுடன் திருமணமா நடந்து விட்டது, அவள் தன் ஊருக்கே போகட்டும் என பாஸ்கர் சொல்ல, வெங்கடேஷ் அவனிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி சண்டை பிடிக்கிறான். வசதியான வாழ்வு வரும்போது உதறுவது மடத்தனம் என்றும், ப்ராக்டிகலாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் உறுதியாகச் சொல்லிவிட்டு போகிறான் பாஸ்கர்.

வெங்கடேஷ் கெளதமனைச் சந்தித்து பாஸ்கர்-வசந்தி காதலையும், ஊரை விட்டு ஓடி வந்ததையும் சொல்ல, அவர் தனக்கு ஏற்கனவே தெரியுமென்றும், வசந்திக்கு பணம் தந்து செட்டில் செய்வதாகவும் சொல்கிறார். அவரிடம் நியாயம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான் வெங்கடேஷ். வசந்தியை முகம் பார்த்துப் பேச கஷ்டப்பட்டு, ஸ்ரீராமின் மாடிப் போர்ஷனில் வந்து படுக்கிறான். இரவில் ஸ்ரீராம் வர, அவனிடம் பாஸ்கரின் நடத்தையைப் பற்றிக் கூறி என்ன செய்வது என ஆலோசிக்கிறான். ஸ்ரீராம் கோபமாக நியாயம் கேட்க இப்போதே போகலாம் என்க, வெங்கடேஷ் தடுககிறான். ஸ்ரீராம் மறந்து வைத்துவிட்ட ஸ்டவ்வைக் கொடுக்க வரும் வசந்தி இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டு விடுகிறாள்.

கெளதமன் பிஸினஸ் காரியமாக வைத்திருக்கும் மைக்ரோபோனைப் பார்த்ததும் பாஸ்கருடன் விளையாட நினைக்கும் மஞ்சு, அவன் அறையில் அதை வைத்து விட்டு, தன் தோழியின் வீட்டுக்கு வந்து தோழியிடம் பாஸ்கருக்கு போன் செய்யச் சொல்கிறாள். பாஸ்கர் பேசுவது கேசட்டில் ரெகார்டாகும்படி செய்திருக்கிறாள் மஞ்சு. தோழியிடம் பேசிய பாஸ்கர் நிமிர, வசந்தியைக் கண்டு திடுக்கிடுகிறான். நியாயம் கேட்கும் வசந்தியிடம் அவன் கோபமாகப் பேசி அனுப்புகிறான். ஸ்ரீராமின் அறையில் அவன் டைரியை எதேச்சையாகப் பார்க்கும்படி நேர்கிறது வெங்கடேஷுக்கு. அதில் வசந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலைப் பற்றி ஸ்ரீராம் எழுதியிருப்பதைப் படித்து நெகிழ்கிறான்.

தன் தோழியுடன் பாஸ்கர் பேசிய உரையாடல் டேப்பை போட்டுக காட்டி அவனை கேலி செய்கிறாள மஞ்சு. இங்கே வெங்கடேஷ், ஸ்ரீராமின் காதலைச் சொல்லும் டைரியை வசந்தியிடம் தந்து படிக்கச் சொல்ல, வசந்தி படித்து பிரமிக்கிறாள். மஞ்சுவின் தோழி வீட்டுக்கு வர, அந்த உரையாடல் கேஸட்டை அவளுக்கு போட்டுக் காட்ட, போன் உரையாடலின் தொடர்ச்சியாக வசந்தி - பாஸ்கர் பேசியது முழுவதையும் அப்போதுதான் கேட்கிறாள் மஞ்சு. கடும்கோபத்துடன் கெளதமனையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரிடம் வரும் மஞ்சு, ‘நாளை தன்னைவிட இன்னொரு பெரிய பணக்காரி கிடைத்தால் தன்னையும் விட்டுவிடுவான்தானே’ என்று சீறி, அவனை மணக்க முடியாது என்கிறாள். வசந்தியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் வாழ்வதுதான் சரி என்று பாஸ்ரிடம் பொரிந்து தள்ளி, அவனை உதறிவிட்டுப் போகிறாள்.

வெங்கடேஷ், ஸ்ரீராமை மணந்து கொள்ளும்படி வசந்தியிடம் கேட்க, அவள் யோசிக்க ‌நேரம் கேட்கிறாள். வெங்கடேஷ் இதுபற்றி ஸ்ரீராமுடன் பேசி, அவனையும் கன்வின்ஸ் செய்தபடி வர, ஸ்ரீராமால் வேலையை விட்டு அனுப்பப்பட்ட மாதவ், அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறான். பாஸ்கர், தன் தவறை உணர்ந்து கெளதமனிடம் ராஜினாமாக் கடிதம் தந்து விட்டு, புறப்படுகிறான்.ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை வசந்திக்கு போன் மூலம் வெங்கடேஷ் சொல்ல, பதறி ஓடி வருகிறாள். அவளிடம் ஸ்ரீராம் எழுதிய கடிதத்தை வெங்கடேஷ் தர, அதன் மூலம் ஸ்ரீராமின் உடல் சாராத தூய காதலை தரிசிக்கிறாள் வசந்தி.

அப்போது பாஸ்கர் அங்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டு, வசந்தியின் பதிலை எதிர்பார்த்துக் காத்து நிற்க, ஆபரேஷன் தியேட்டரின் கதவு திறந்து நர்ஸ் வெளிப்பட்டு, ஸ்ரீராமுக்கு ரிஸ்கான ஆபரேஷன் என்பதால் யாராவது கையெழுத்திட வேண்டும் என்க, வசந்தி கையெழுத்திடுகிறாள். ‘ஸ்ரீராமுக்கு நீங்கள் யார்?’ என்று நர்ஸ் கேட்க, வசந்தி, வெங்கடேஷைம் பாஸ்கரையும் பார்த்துவிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்: ‘‘நான் அவரோட மனைவி!’’

காதல் கதைகள் நிறையப் படித்திருப்பீ்ர்கள். இந்தக் கதை - பி.கே.பியின் வார்த்தைகளில் சொன்னால் - ‘காதலைப் பற்றிய கதை!’ நிஜமான காதல் என்ற உணர்வை முப்பரிமாணத்தில் காட்டி, உண்மைக் காதலை உயர்த்திப் பிடிக்கும் கதை. குளிர் மேகங்கள் நிரம்பிய மாலையில் கடற்கரைக் காற்றில் நடக்கும் போது உணரும் இதத்தை இந்தக் கதையில் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் எழுத்து நடையில் உணர்வீர்கள், ரசிப்பீர்கள்; அந்த உணர்வை முழுமையாகப் பெற, இந்த ‘கேப்ஸ்யூல் நாவல்’ படிததால் போதாது. ‘தொட்டால் தொடரும்’ புத்தகத்தை முழுமையாகப் படித்தலே நலம்!

Wednesday, November 6, 2013

துப்பறிய வாங்க...!

Posted by பால கணேஷ் Wednesday, November 06, 2013
ன்று இணையம் நமக்கு மட்டற்ற வசதிகளை வழங்கியிருக்கிறது. இணையதளம் ஒன்றை நமக்கெனத் துவக்கி நமது சிந்தையில் முகிழ்க்கும் கவிதை, கதை, கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி, பல நாடுகளிலிருந்தும் வாசக நட்புகள் அதைப் படித்து உடனுக்குடன் கருத்துச் சொல்லி... பின்னர் அவற்றை புத்தகமாகவும் வெளியிடும் நிலை இன்று சாத்தியம்! என்போன்றோர் கூட ஓரளவு பிரபலமாக இருக்க முடிகிறது! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய வசதி எதுவுமில்லை. ஒரு எழுத்தாளன் பெயர்பெற வேண்டுமானால் பல பத்திரிகைகளில் படைப்புகள் வெளிவந்து பின்னர்தான் புகழ்பெற முடியும். அத்தகைய காலகட்டத்தில் எழுதத் துவங்கி இன்றும் தன்னுடைய புகழ்க் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் தன் எழுத்துலக வாழ்வைத் துவங்கிய விதத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடனே விரைந்து கடைசிப் பாராவுக்குச் செல்லாமல் அவர் யார் என்று கண்டுபிடியுங்கள் (ஆங்காங்ககே க்ளூக்கள் உண்டு) பார்ப்போம்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவரான அந்த இளைஞருக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அப்போது இருக்கவில்லை. ‘தேன்மழை' என்ற இதழில் ஒரு புகைப்படம் பிரசுரித்து அதற்கேற்ற வாசகம் எழுதும் போட்டி வைத்திருந்தார்கள். காவியுடை அணிந்து இடுப்புக்கு மேல் ஆடையணியாமல் ருத்ராட்ச மாலைகள் அணிந்த ஒரு துறவி உட்கார்ந்திருக்க... அவர் அருகில் ஆடையணியாத சேரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் - இதுதான் படம். பார்த்ததும் அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை சுருக்கமாக ‘துறந்த நிலையும், திறந்த நிலையும்' என்று எழுதி அனுப்பினார். அந்த வாசகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு என்றால் பெரிதாக எதுவும் நினைச்சுடாதீங்க. அந்த இதழின் ஒரு வருட சந்தா! அவ்வளவுதான்...! ஆனால் ‘நம்ம கிட்டயும் க்ரியேட்டிவிட்டி இருக்கு போலருக்கே...' என்று அவரை எண்ண வைத்தது அது. (இந்த க்ளூவை வைத்து அவர் யாரென்று கண்டுபிடித்திருந்தால் நீங்க 100 மார்க் வாங்கின உஸ்தாத்!)

அதன்பின் வந்த தீபாவளி சமயம்... தினத்தந்தி நாளிதழில் அப்போது பிரபலமாகியிருந்த கதாநாயகி சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தீபாவளி மலருக்காகக் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். நம்மவர் ‘நீங்கள் நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையினாலா, அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா' என்று ஒரு கேள்வி எழுதி அனுப்பினார். அதைப் பிரசுரித்ததுதான் பிரசுரித்தார்கள்... அவர் எழுதின மாதிரியே போட்டிருக்கலாமில்லையா... இவரின் கேள்வியை இப்படி மாற்றிப் போட்டிருந்தார்கள்... ‘கண்ணே சுஜாதா! நீ நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையாலா அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா?' என்று! சரி, போகட்டும்... கேள்வியை மாற்றியவர்கள் பெயர், முகவரியையும் மாற்றிப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இவரின் பெயர் போட்டு வந்ததால் அந்த ஊரில் பெயர் பெற்ற எஸன்ஸ் டீலரான அவரின் தகப்பனார் அதைப் பார்த்துவிட்டு... வேறு என்ன... சரமாரியாகத் திட்டுதான்! ‘என் தவறில்லை... பத்திரிகைக்காரர்கள் மாற்றி விட்டார்கள்' என்று அப்பாவை சமாதானபபடுத்த பெரும்பாடு பட்டார் அவர். (இந்த க்ளூவை வைத்து அவரைக் கண்டுபிடித்திருந்தால் 75 மார்க் உங்களுக்கு!)

அதன்பின் உஷாவாகி... ஸாரி, உஷாராகி சரியான பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள், கேள்வி பதில் என நிறைய எழுதினார் அவர். ‘டியர் மிஸடர் துக்ளக்' என்ற வாசகர் கடிதம் பகுதி இன்றும் துக்ளக்கில் பிரபலம். அதில் இவரது கடிதங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றன. தன் பெயரைப் பல பத்திரிகைகளில் பார்த்து மகிழ்ந்து உத்வேகம் பெற்ற அவர், ‘அந்த மூன்று நாட்கள்' என்றொரு சிறுகதையை எழுதி ஆவிக்கு அனுப்பினார். (நம்ம நண்பர் ஆவி இல்லீங்க... னந்த விகடன்!) அது விகடனல் பிரசுரமான ஆண்டு 1977. அடுத்து வந்த 1978ல் அலிபாபா, சாவி என்று வேறுபல இதழ்களில் அவரின் நான்கு சிறுகதைகள் பிரசுரமாயின. தொடர்ந்து நல்ல சிறுகதைகள் படைத்ததில் ஆசிரியர் சாவியின் கவனத்தை ஈர்த்தார் நம்மவர். (இங்கே கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 50 மார்க்!)

சாவி அவர்கள் அப்போது ‘மோனா' என்று ஒரு மாதநாவல் நடத்தி வந்தார். அதில் நாவல் எழுதும் வாய்ப்பு நம்மவருக்குக் கிட்டியது. ‘அங்கே இங்கே எங்கே?' என்ற தலைப்பில் தன் முதல் நாவலை எழுதினார். (இப்போது கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 25 மார்க்!) அதன்பின் பல பத்திரிகைகளில் தொடர்கதைகளும் நாவல்களும் எழுதி தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் புகழ் பெற்றார் அவர். ‘சாவி' சார் இளைஞர் படையினரை ஆசிரியர் குழுவாக நியமித்து ‘திசைகள்' என்ற இதழைத் துவக்கினார். அதில் இவர் உதவி ஆசிரியரானார். ‘சாவியின் செல்லப் பிள்ளை' என்று பலர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருங்கியவராகவும், அந்தப் பத்திரிகையில் ஏராளமான படைப்புகளை எழுதியும் குவித்தார். (இதுவரை கண்டுபிடிக்கலைன்னா... உங்களுக்கு மார்க்கே கிடையாதுங்க...!)

சாவி இதழில் ‘மிஸ் கவிதா' என்ற பெயரில் (தங்கை பெயர்) சித்திரக் கதைத் தொடர்கள் இரண்டு எழுதியிருக்கிறார் இவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அச்சமயம் வந்த சாவி இதழ் ஒன்றில் ‘பிரபா' என்ற பெயரில் ‘கறுப்புமெயில்' என்ற இவரின் சிறுகதையும், ‘மிஸ்.கவிதா' என்ற பெயரில் ‘டெவில் டேவிட்' தொடரின் அத்தியாயமும், பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயரில் ‘நீ மட்டும் நிழலோடு' தொடர்கதை அத்தியாயமும், ஒரு பேட்டிக் கட்டுரையில் ஆர்.பிரபாகர் என்று பெயர் போட்டும் ஒரே இதழில் நான்கு படைப்புகள் வெளிவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.

இவ்ளோ விஷயமும் என்னப் பத்தி தாங்க!
அவர் முதல் சில சிறுகதைகளை தன் சொந்தப் பெயரான ‘ஆர்.பிரபாகர்' என்ற பெயரில்தான் எழுதியிருந்தார். அப்போது அவரின் அப்பா, ‘‘பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஊர் பேரை தன் பேரோட சேர்த்தவங்க அவங்களும் பிரபலமாகி, ஊருக்கும் பேர் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால உன் பேரோட ஊரின் பேரைச் சேர்த்து ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ன்னு வெச்சுக்கோ" என்று ஐடியா தந்தார். தந்தையின் வார்த்தையை மதித்த அந்தத் தனயன் அதே பெயரில் பிரபலமாகி இன்று பத்திரிகைகள் கடந்தும் தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இவர் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் (அ) இவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என்றும் நினைத்தாலே இனிக்கும் விஷயம் எனக்கு!

Friday, November 1, 2013

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, November 01, 2013
தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.

தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ! நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.

அதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...!) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்! தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம். அதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா?'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!

தீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்!) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்!) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ஆ ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...!

தீ
பாவளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...!

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.


                                                                       -‘யங் இந்தியா' இதழில் காந்திஜி


Monday, October 28, 2013

மார்ஜியானா - காதல் - நான்!

Posted by பால கணேஷ் Monday, October 28, 2013
து ஒரு மிக இளமைக் காலம். நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அவளும் வேலை செய்தாள். அலுவல் நிமித்தம் நிறையப் பேச வேண்டிய சந்தர்ப்பம். அலுவல் தாண்டியும் பேச வைத்தது. அணிலையும் நேசிக்கும் அவள் உள்ளம் என்னை நேசிக்க வைத்தது; நேசிக்கப்பட்டவனாக்கியது. குடும்பத்தினர் அவளுக்கு வைத்த பெயர் வேறு. நான் வைத்த பெயரான ‘மார்ஜியானா’ என்பது அவளுக்கும் பிடித்தமானதாயிற்று. இப்படிப் பெயரிட்டு அழைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

நீங்க வாத்யார் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்' பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுமதியின் கதாபாத்திரத்தின் பெயர் மார்ஜியானா. அரேபிய பாணியில் ‘பலூன் பேகீஸ்' என்று பேஷனாக அழைக்கப்பட்ட டிரஸ் மாதிரி தொளதொளவென்று ஒரு கால்சராயும், மேலங்கியும் அணிந்திருப்பார் பானுமதி அந்தப் படம் முழுவதிலும். நான் கண்டு ரசித்த மங்கையும் பல நாட்கள் சுடிதாருக்கு லெக்கின்ஸ் அல்லது பேண்ட் அணியாமல் பானுமதி போட்டிருப்பது போல லூஸான சராய் அணிந்து வருவாள். அதனால் வைக்கப்பட்ட காரணப் பெயர் அது. பின்னாட்களில் நான் அசந்து மறந்து அவளது சொந்தப் பேரில் அழைத்தால்கூட, ‘‘ஏன் பேரை மாத்தறே?" என்று அவளே கேட்குமளவுக்கு நான் வைத்த பெயர் பழகிப் போயிற்று.

ப்ளாக்கில் எழுதும்போது பகிர முடியாத பல விஷயங்களை முகநூலில் எளிதாகப் பகிர முடிகிறது. (தங்கைகள் பூரிக்கட்டையைத் தூக்க மாட்டார்கள் என்ற தைரியத்துடன்) அங்கே சற்று சுதந்திரமாக ‘ரெமோ’வாக உலா வரலாம். அப்படி நான் சில சந்தர்ப்பங்களில் என் காதல் தருணங்களை அங்கே பகிர்ந்தேன். அதன் நீட்சியாகத்தான் கவிதையைப் பற்றிய நினைவு வந்ததும் மார்ஜியின் நினைவும் அவளுக்காய் நான் எழுதிய கவிதையும் நினைவு வந்து போன பதிவில் தரப்பட்டது. முகநூலில் நான் பகிர்ந்த மார்ஜியுடனான காதல் துளிகள் இங்கே உங்களுக்காக ரிப்பீட்டேய்...!

============================================

மெலிதான மழைத் தூறல் வெளியில்...! பார்க்கின் ஷெல்ட்டர் ஒன்றினுள் நானும் அவளும் தனித்திருந்தோம். ‘‘என்ன அப்படிப் பாக்கறே?" என்றாள் மார்ஜியானா. ‘‘எனக்கு சூப்பரா கைரேகை பாக்கத் தெரியும்." என்றேன் நான். ‘‘அட... எங்கே, என் கையப் பாத்துச் சொல்லேன்..." என்று கையை நீட்டினாள் விரல் நகத்தைக் கூட தொடவிடாத கள்ளி! கையைப் பற்றினேன். பாலும் டிகாஷனும் ஒன்றிணைந்தது போல (கொடிபறக்குது அமலா - ரஜினி கரம் பற்றுதல் க்ளோஸ் அப்பில் வருவதை கவனத்தில் கொள்க) இரு கரங்களும் இணைந்திருந்தன. கரத்தை என் முகத்தருகில் கொண்டுவந்து பார்த்தேன். கையைத் தடவி சற்று நேரம் ரசித்தேன்.

‘‘என்ன... அப்படிப் பாத்துட்டே இருக்கே... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே...?"

‘‘என்ன சொல்லணும்?"

‘‘கைரேகை பாக்கத் தெரியும்னு சொன்னியே...?"

‘‘எக்ஸாட்லி. அதான் பாத்து, ரசிச்சுட்டிருக்கேனே... பாக்கத் தெரியும்னு சொன்னேனே தவிர, பலன் சொல்லத் தெரியும்னு நான் எப்ப உன்கிட்ட சொன்னேன்?"

‘‘ய்யூ... ராஸ்கல்!" என்றபடி கை கொள்ளுமளவு தண்ணீரைப் பிடித்து என்மேல் எறிந்தாள்.
                                                              -மார்ஜியானாவுடன் ஒரு மழைக்காலத்தில்...!

============================================

‘‘பெண்கள்கிட்ட ஆண்கள் அதிகம் ரசிப்பது என்ன?" திடீரென்று கேட்டாள் மார்ஜி. எக்மோர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் அந்த நடுவெயில் நேரத்தில் பென்ச்சில் அமர்ந்திருந்த எங்களிருவரைத் தவிர அதிக ஜனங்களில்லை. ‘‘கண்கள்...!" என்றேன். ‘‘குட்! அப்புறம்...?" என்றாள். நான் சொன்னேன்: ‘‘வருங்காலக் குழந்தையின் ஆரம்பகால ஃபீடிங் பாட்டில்ஸ்!"

‘‘ச்சீய்...!!! ஸ்டுப்பிட்!!!" என்று தன் கைப்பையால் நிஜமாகவே கோபத்துடன் என்னை மொத்தினாள். பின் கேட்டாள்: ‘‘ஆமா... என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் நீ கணேஷ் மாதிரி புத்திசாலின்னு சொல்றாங்க. ஆனா என்கிட்ட மட்டும் ஏன்டா வஸந்த் மாதிரியே நடந்துக்கறே?"

‘‘அதுவா...? நீ ச்சீய்ன்னு நாலு மாத்திரை அளவுக்கு இழுத்துச் சொல்ற அழகை அடிக்கடி பார்த்து ரசிக்கத்தான்...!"

‘‘அப்ப உன்னைப் பாக்கறப்பல்லாம் ச்சீய்... ச்சீய்...ன்னு சொல்லிட்டே இருக்கட்டுமா?"
 
‘‘வேணாம் தாயி...! அப்புறம் என் பேரை மறந்துட்டு எல்லாம் ச்சீய், ச்சீய்ன்னே என்னக் கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க...!" என்றேன். கை நிறையச் சில்லறைக் காசுகளை மொசைக் ‌தரையில் எறிந்து பாருங்கள்... அது போலக் கலகலவென்று சிரித்தாள்!

                                                           -மார்ஜியானாவோடு ஒரு காதல் காலத்தில்..!

===============================================

நீண்ட நேரம் காக்க வைத்து தாமதமாய் வந்ததற்காய் மார்ஜியைக் கோபித்தேன் நான். கொஞ்சம் கடுமையாகவே பே(ஏ)சி விட்டேன் போலிருக்கிறது. அவள் கண்ணோரம் இரண்டு கண்ணீர் முத்துக்கள் திரண்டு வழிந்தன.

‘‘ஹேய்.... ப்ளீஸ்...! அழாதயேன்... நீ அழுதா என்னால தாங்க முடியாதும்மா..." என்று பதறினேன்.

கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு மென்சிரிப்பை உதிர்த்தாள். ‘‘என் மேல அத்தனை அன்பாடா உனக்கு?"

‘‘அதெல்லாம் இல்லடி. நீ சிரிச்சாலே ரொம்ப சுமாரா இருக்கும். அழுதயின்னா பாக்கச் சகிக்காது. அதான்..."

‘‘ச்சீஈய்ய்ய்! யூ ஸ்டிங்கிங் இடியட்!" என்று கோபமாய் என் வயிற்றில் குத்தினாள். ‘‘அவ்வளவுதானா உன் பிரியம், பாசம்லாம்?"

‘‘சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டியர்...! ஆக்ச்சுவல்லி... நீ சொன்னா பஞ்சமா பாதங்களும்கூட நான் செய்யத் தயார்!"

‘‘ஏய்... இது உளறல்!" என்றாள். ‘‘இல்லை...! இது காதல்!" என்றேன்.

                                         -மார்ஜியானாவுடன் ஒரு மனோகரமான மாலையில்...!

===============================================

மிஸ்டர் ஆவி...! நீங்க சொன்ன மாதிரி பீரியடுக்குப் பொருத்தமான ஃபிகர் படத்தை அட்மாஸ்பியருக்கு வெச்சிட்டேன். இப்ப திருப்தியா? (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...?)

===============================================

Friday, October 25, 2013

ந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.

துக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருககுங்க... னோகரமான ஒரு மாலை நேரம் மார்ஜியானாவுடன் கழிந்து கொண்டிருந்தது. (மார்ஜியானா யாருன்னு கேக்கறவங்களுக்கு அடுத்த பதிவுல விளக்கம் காத்திருக்கு.) அப்பல்லாம் இப்ப மாதிரி ஷாப்பிங் மால் கிடையாதுங்கறதால அது நிகழ்ந்த இடம் (நாங்கள் அடிக்கடி சந்திக்கும்) ஒரு பூங்கா. நிறைய (அவ) பேசிட்டிருந்தப்ப, (நான்) கேட்டுட்டிருந்தப்ப... திடீர்ன்னு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு டீடெய்லாச் சொல்லேன் ப்ளீஸ"ன்னா. ‘‘சொல்றது என்ன... கவிதையாவே எழுதிக் காட்டறேன்" என்று என் கைவசம் எப்போதுமிருக்கும் சிறுகுறிப்புத்தாள் நோட்டில் எழுத ஆரம்பித்தேன். (‘‘உனக்கு கவிதைல்லாம் எழுத வருமா?"ன்னு அவ கேட்டதும், ‘‘கவிதையே பக்கத்துல இருக்கறப்ப கவிதை வராதா?"ன்னு நான் வழிஞ்சதும் இங்க அவுட் ஆஃப் கவரேஜ்ப்பா!) எழுதி முடிச்சுட்டு அவகிட்டக் குடுத்தேன். பொறுமையாப் படிச்சு முடிச்சவ, எழுந்து, என்னை முறைச்சுட்டு, எதுவும் பேசாம டக்குன்னு போயிட்டா... அதுக்கப்புறம் அவளைச் சமாதானப்படுத்த ஒரு வாரம் கடுமையா மெனக்கெட வேண்டியிருந்தது.

அதனால... இந்தக் கவிதை(?)யைப் படிக்கற உங்களுக்கு ஏற்படப் போற ஊசி (பின்) விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல... விபரீதத்துக்கு வித்திட்ட எழில் மேடம்தான் பொறுப்புங்கறதை மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கறேன். (பத்த வெச்சிட்டியே பரட்டை...! ஹி... ஹி... ஹி...!)


                                                   தனிமை விரட்டும் சத்தம்!

கனவில் தினமும் நீந்திடப் பிடிக்கும்! வைகறை
    வானத்தின் சிவப்பு மிகவும் பிடிக்கும்!
மனம் மயக்கும் சங்கீதம் பிடிக்கும்! கொட்டும்
    மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்!


உனது ஓரவிழிப் பார்வை பிடிக்கும்!  ‘ச்சீய்’
    என்னும் சிணுங்கல் கேட்கப் பிடிக்கும்!
எனது பார்வை மேயுங்கால் சீற்றமாய் - நீ
    என்னை அடிப்பதும் பிடிக்கும்! என்றேனும்
சினங்கொண்டு எனை வெறுத்தால் - உனது
    வெறுப்பும் பிடித்தம் தானெனக்கு!



நாங்களும் வெப்போம்ல... கவிதைக்குப் படம்!

படிக்கப் பிடிக்கும்; நிறைய படைக்கப் பிடிக்கும்!
    இருளும் பிடிக்கும்; வெளிச்சமும் பிடிக்கும்!
நடிப்பும் பிடிக்கும்; நங்கையர் சிரிப்பும் பிடிக்கும்!
    மழலையின் முத்தம் மனதுக்குப் பிடிக்கும்!


பண்புடன் ஆடும் பரதம் பிடிக்கும்! உலகம்
    தனை மறந்து உறங்கப் பிடிக்கும்!
அன்பினில் நனைந்து வாழப் பிடிக்கும்! அனல்
    வீசும் எதிரியையும் பிடிக்கு மெனக்கு!


சத்தம் இல்லாத தனிமை பிடிக்கும்! அந்தத்
    தனிமையை விரட்டும் சத்தமும் பிடிக்கும்!
யுத்தம் இல்லாத உலகம் பிடிக்கும்! உன்னில்
    உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!


சிந்தனை பிடிக்கும்! வந்தனை பிடிக்கும்! நான்
    புதிதாய்ப் பிறக்கும் தருணங்கள் பிடிக்கும்!

எத்தனை அழகு பூமிதனில்! நிலவுக்குக் கீழே
    வாழ்ந்திடும் உலகில் எல்லாமும் பிடிக்கும்!

இத்தனைக்கு மேலும் என்கவி தொடர்ந்தால் - கண்ணே...
    நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!


கொஞ்சம் புன்னகையுடன்,

கொஞ்சம் குசுமபுடன்,
(கொஞ்சம் கொலவெறியுடன்)...
பாலகணேஷ்!

Monday, October 21, 2013

மொறு மொறு மிக்ஸர் - 21

Posted by பால கணேஷ் Monday, October 21, 2013
ஸ்ரியாதாசனான கோவை ஆவியிடம், ‘‘சென்னைல நாம ‘ராஜாராணி’ படம் சேர்ந்து பாக்கணும்" என்று முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஏற்கனவே கோவையில் இரண்டு முறை பார்த்திருந்தாலும்கூட எனக்காக மூன்றாம் முறை படம் பார்க்கும் தியாகத்தைச் செய்தார் அவர். படத்தைப் பற்றி வலையில் நிறையப் பேர் வலையில் எழுதித் தள்ளி விட்டார்கள். எனவே, பாயாசத்தில் மிதக்கும் முந்திரிகளாக நான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

* இரவில் குடித்துவிட்டு வீடு திரும்பும் ஆர்யாவுக்காக நயன்தாரா கதவு திறக்க மறுக்க, ஆர்யா அபார்ட்மெண்ட் வாசிகளைத் தூங்க விடாமல் ஒவ்வொரு வீட்டுக் கதவையாகத் தட்டி டார்ச்சர் செய்ய, அனைவரும் ஒன்றுகூடி தத்தமது லாங்வேஜில் நயனிடம் புகார் சொல்லிவிட்டுச் சென்றதும், ப்ளாட் வாசியின் நாய் ஒன்று வந்து அதன் பாஷையில் புலம்பிவிட்டுச் செல்வது. * மப்பில் நஸ்ரியா வீட்டு வாசலில் ஆர்யா மயங்கிவிட, அவரை கேட்டின் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு, தான் அவனைக் காதலித்த தருணங்களை நஸ்ரியா நினைத்துப் பார்க்கையில் வரும் நஸ்ரியாவின் சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன் கட்ஷாட்கள். * கஸ்டமர் கேர் ஜெய்யை நயனின் தோழிகள் கலாய்ப்பது (தொடர்ந்து டயல் செய்தால் நாம் விரும்பும் நபரை கஸ்டமர் கேரில் பிடிக்கறதுங்கறது லேசான விஷயமா என்ன?) * சத்யராஜின் கதாபாத்திரம்.

=========================================

நான்கு பதிவர்கள் சந்தித்தால் உலக க்ஷேமத்துக்காக மழை வேண்டி யாகம் செய்வதைப் பற்றியோ, இந்தியப் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றியோ பேசப் போவதில்லை. நட்புரீதியாக (சிலவேளைகளில் தொழில் ரீதியாகவும்) சந்தித்து உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கம் என்றால் எவரும் புரிந்து கொள்வதாக இல்லை. தமிழின் முன்னணி(?) பத்திரிகையான குமுதம் இதழில் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் புகழ்ந்து எழுதியவர்கள் (அதில் வரும் மரண மொக்கைகளை மட்டுமே இவர்கள் பிரசுரிப்பது வேறு விஷயம்!) ப்ளாக் பற்றிய கட்டுரையில் மட்டும் தங்கள் வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘‘....கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, எட்டு, பதினாறு என வளர்ந்து ‘பதிவர் சந்திப்பு’ என மெரீனா பீச், காந்தி சிலை அருகே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று சந்திப்புகளில் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சந்திப்புகளில் அதுவும் ஒன்றாக இருககக் கூடும்" என்கிறது குமுதம்.

‘‘நமக்கு கதையோ, கட்டுரையோ, ஜோக்கோ... என்ன எழவா இருந்தாலும் எழுதி அனுப்பிட்டு நாம நாலு பேரு அதை செலக்ட் பண்ணி வெளியிடறதுக்காக நாலு மாசம் நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருந்து, அப்புறம் அது நாலாயிரம் பேரை அடையறதுல்ல பெருமை... இவனுங்க எழுதி தானே வெளியிட்டுக்கறாங்க. நாப்பதாயிரம் பேரை ரீச் பண்றாங்க... என்னாங்கடா இது?" ‘‘நம்ம வாசகர் ஒருத்தன் இன்னொரு ஊருக்குப் போறான்னா எவனுக்கும் தெரியாது அது. ஆனா ஒரு ப்ளாக்கர் இன்னொரு ஊருக்குப் போறான்னா, உடனே தகவல் தெரிவிச்சுடறான். அங்க இருக்கறவங்க செமையா உபசரிககிறாங்க. என்ன அநியாயம்?" ‘‘நாம (ஓசியில்) படம் பார்த்து ரெண்டு நாள்ல விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி இவனுங்க (பணம் கொடுத்து) படத்தைப் பாத்துட்டு ராவோட ராவா விமர்சனமா எழுதித் தள்ளிடறானுங்களே..." -என்பன போன்ற குமுதத்தின் ------ எரிச்சல்கள் அந்தக் கட்டுரையில் பிரதிபலிப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒருவரை இமிடேட் பண்ணுதல், மிமிக்ரி பண்ணுதல் ஆகியவை புகழ்ச்சியின் மற்றொரு வழியே என்பார்கள். அதுபோல இணையதளத்தைப் பற்றி குமுதம் எழுதியதை பெரிய பாராட்டாகவே இப்போது எண்ணத் தோன்றுகிறது. மகிழ்வோம்!

=========================================

ந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்துத்தான் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சொல்ல முடியும். அதன்படி பார்த்தால் 2012ல் 45 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு இப்போது 65 ரூபாயைத் தாண்டி விட்டது. 1977ல் மலேசிய ‘ரிங்கிட்'டின் மதிப்பு அதலபாதாளத்துக்குச் சரிந்தபோது அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மூன்றே வருடங்களில் அமெரிக்க டாலருக்கு நிகராகத் தன் ‘ரிங்கிட்'டின் மதிப்பை உயர்த்தியது. * தங்கத்தின் இறக்குமதியை நிறுத்தியது * வெளிநாட்டு வங்கிகளில் ஊழல் அரசியல்வாதிகள் போட்டிருந்த பணத்தை சப்ஜாடாக பறிமுதல் செய்தது * வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியுமா என முயன்று வெற்றி பெற்றது ஆகியவை அந்த நடவடிக்கைகள். ரூபாயின் மதிப்பை உயர்த்த, ‘‘பொதுமக்களே, தங்கம் வாங்காதீங்க" என்கிறார் ஒரு அமைச்சர். ‘‘சொந்த வாகனத்துல பயணிக்காம, பஸ்/ரயில்ல பயணியுங்க"ங்கறார் இன்னொரு அமைச்சர். இப்படி பொதுமக்கள் தியாகம் செஞ்சாப் போதும், நாங்க ஸ்விஸ் பாங்க்குல கோடிகளைக் குவிச்சு வெக்கறதுங்கற விஷயத்தை தியாகம் செய்யவே மாட்டோம்ங்கற தலைவர்களோட தேசப்பற்று புல்லரிக்க வெக்குதில்ல...

சரி விடுங்க... பொருளாதாரத்துல முன்னேறாட்டி என்ன... தொழில்நுட்ப பயன்பாட்டில எங்கயோ போயிட்டிருக்கோம் நாம. இணைய தளத்தைப் பயன்படுத்துவதில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிச்சிருக்குன்னு ‘காம்ஸ்கோர்’ ஆராய்ச்சி நிறுவனப் புள்ளிவிவரம் தெரிவிச்சிருக்கு சமீபத்துல. செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குன்னும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கினறன. இப்படிப் பெருமைப்படறதுக்கு விஷயங்களா நம்மகிட்ட இல்ல... பாரத் மாதா கீ ஜே!

=========================================

‘‘திரும்பத் திரும்ப ஒரே மாதிரி இடத்துல சந்திக்காம புதுசா எங்கயாவது பாக்கலாமா?’’ என்று ஸ.பை.யிடம் கேட்டதற்கு பரங்கி மலையில் ஏறலாம் என்றார் அவர். எனக்கும் நீண்ட நாட்களாகவே அங்கு செல்லும் எண்ணம் இருந்ததால் சீனு + கோவை ஆவி சகிதம் மலையேறினோம். மலையில் ஏறியதுமே ‘தூய ஆவியின் வருகை உங்களை புனிதப்படுத்தும்’ என்று பாதிரியார் மைககில் பேச, ஆவி நம்மை பெருமையாகப் பார்த்தார். மலையைச் சுற்றி சென்னை அழகியின் இயற்கை அழகை ரசித்து, புகைப்படமெடுத்து பேசிக் கொண்டிருக்கையிலேயே மலையில் நல்ல மழை! மழைக்கு ஒதுங்கிய இடத்தில் ஆவியிடம் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி

* ‘‘எதனால ஆவின்னு பேர் வெச்சுக்க முடிவு பண்ணீங்க? ‘‘படிக்கறவங்களுக்கு ஒரு டெரரா இருக்கட்டுமேன்னுதான்..." ‘‘அதுக்கு உங்க ஃபோட்டோவை ப்ளாக்ல போட்டிருந்தாலே போதுமே..." ‘‘ஹி...! ஹி...!" * ‘‘மிஸ்டர் ஆவி! ரொம்ப எளிமையான நடையில எழுதிட்டிருக்கீங்க... எப்ப சீனு மாதிரி இலக்கிய நடையில ஜெயமோகனோட ஜெராக்ஸ் மாதிரி எழுதுவீங்க?" (‘‘வாத்தியாரே... இது அநியாயம்’’ -சீனு!) ‘‘எனக்கு ஜெயமோகன், சாருபாலா (சாருநிவேதிதாவை அவர் சொன்ன அழகு! ஹி... ஹி..!) மாதிரி இலக்கியமா எழுதல்லாம் ஆசை இல்ல ஸார்... எழுதவும் வராது. வர்றதைப் பண்ணுவமே..." * ‘‘நீங்க இயக்குனரானா நஸ்ரியாவைத்தான் ஹீரோயினாப் போடுவீங்கன்னு உலகத்துக்கே தெரியும். ஹீரோவா யாரைப் போடுவீங்க?" ‘‘பெரிய பட்ஜெட் படம்னா சூர்யாவைப் போடுவேன்..." ‘‘சின்ன பட்ஜெட் படம்னா..?" ‘‘நானே நடிச்சிடுவேன்..." ‘‘நீர் நடிச்சாலே அது பிரம்மாண்டப் படமா ஆயிடுமே..." ‘‘ஹி... ஹி...! அப்ப நம்ம சீனுவை ஹீரோவாப் போட்டுடுவேன்" -விக்ரமாதித்தனின் சரியான பதிலால் தெறித்து ஓடிய வேதாளம் மாதிரி ஆவியின் இந்தப் பதிலால் சீனு மென்மழையிலேயே ஓடத் துவங்க, மலையை விட்டு இறங்கினோம் கீழே.

=========================================

ன்றரை ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்குப் பரிச்சயம். நான் எழுதும் பதிவுகளை தவறாமல் படித்து ரசித்த விஷயங்களைச் சொல்லிக் கருத்திட்டுச் செல்வாள். சரி, அவளின் தளத்தில் என்ன எழுதுகிறாள் என்று படிக்கலாம் என்று முயன்றபோதுதான் வலைத்தளமே எழுதாத வாசகி என்பது எனக்குப் புரிந்தது. (இப்படி வலையில் எழுதாத பல வாசகர்கள் கிடைப்பது பாக்கியம்). முதலாம் ஆண்டு பதிவர் திருவிழாவில் சந்தித்தேன் நேரில். ரஞ்சனி அம்மாவும் நானும் தந்த உற்சாகத்தின் பேரில் ஒரு வலைத்தளம் துவங்கி நம்மை நதிக்கரையில் நடைபோடச் செய்தாள் அந்தப் பெண். (இப்பக் கொஞ்ச நாளா நதிக்கரையில எழுதறதில்ல... கல்யாணம் ஆன ராசி நிறைய எழுத வெக்கட்டும்!)

அவளின் பெயர் சமீரா. அதன்பின் பல சந்திப்புகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள். ஒரு மகளைப் போல என்மேல் அன்பைப் பொழிந்து வந்த அந்தப் பெண்ணுக்கு முந்தாநாள் திருமண நிச்சயதார்த்தமும், நேற்று திருமணமும் சிறப்பாக நடந்தேறியது. சென்று வாழ்த்தி வந்த அனுபவம் மிக மகிழ்வானது. விழாவுக்கு என்னுடன் வந்திருந்த மற்றொரு பிரபலத்தை (ஹி.. ஹி...) நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் - படத்தில காண்க.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube