Saturday, April 20, 2013

திருமதி தமிழ்! - சுடச்சுட விமர்சனம்!

Posted by பால கணேஷ் Saturday, April 20, 2013
‘மின்னல் வரிகள்’ல சினிமா விமர்சனம்... அதுவும் புதுசா வந்த படத்துக்கு சுடச்சுட விமர்சனமான்னு ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு்க் காரணகர்த்தா நம்ம ‘மெட்ராஸ்பவன்’ சிவகுமார் தாங்க! போன வாரமம் நம்ம சீனு போன் செஞ்சு, ‘‘சனிக்கிழமை மதியம் நீங்க ஃப்ரீயா? நீங்க, நான், ‘கரைசேரா அலை’ அரசன், ‘அஞ்சாசிங்கம்’ செல்வின், ஸ்கூல் பையன், ஆரூர் மூனா செந்தில் எல்லாருமா சேர்ந்து படம் பாக்கலாம்னு ‘மெட்ராஸ் பவன்’ சிவா சொல்றாரு. வர்றீங்களா? டிக்கெட் வாங்கிரட்டுமா?’’ என்றார். நண்பர்களுடன் ஜாலியாகப் படம் பார்க்கும் ஆசையில் ‘‘சரி’’ என்றேன்.

தலைவன் கட்டையால அடிச்சாலும் அசராத சிவா!
சிவகுமாரும், பிலாசபி பிரபாகரனும் ராமராஜனின் ‘மேதை’ படத்தையே முதல் நாளில் படம் பார்த்து விமர்சனம் எழுதிய தைரியசாலிகள். இம்முறை பிலாசபி எதுவும் பேசாமல் பிரபாகரன் வரவில்லை என்றுவிட, சிவா எங்களனைவரையும் ஓரணியில் திரட்டினார். ‘‘படத்துல பெரிசா எதுவும் எதிர்பார்க்காதீங்க. சும்மா ஜாலியா போய் கலாய்ச்சுட்டு வரலாம்’’ என்று முதலிலேயே என்னைத் தயார்படுத்தியிருந்தார். ஆனாலும் படத்தில் நான் கிஞ்சித்தும் எதிர்பாராத விஷயங்கள் நிறைய இருக்கத்தான் செய்தது.

‘‘ஸாரே, என்டே காதலி உங்க வொய்ஃபாயிட்டு வரும். பட்சே, நின்டே வொய்ஃப் என்டே காதலியாயிட்டு வராது’’ என்று அப்பாவி(?) பாக்யராஜ் தெரியாமத்தனமா முன்ன சொல்லிட்டாரு. ‘‘உன் கழுத்துல நூறு பேரு தாலி கட்டினாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ சாருமதி...’’ என்று கோர்ட்டில் அனைவர் முன்பும் ‘டெரர் ஸ்டார்’ ராஜகுமாரன் (ஏன் இந்தப் பட்டம்னு யோசிக்கறீங்களா? படம் பாத்தா நீங்களே கொடுப்பீங்க) பேசும் வசனத்தைக் கேட்காவிட்டால் செவிகள் பெற்ற பாக்கியத்தை அடைய மாட்டீர்கள்!

முகத்தில் அரை லிட்டர் பவுடர் அப்பிக் கொண்டு வரும் ஹீரோ ராஜகுமாரன் காற்றில் பறந்து பறந்து பாடுவதையும், அவரை அரெஸ்ட் செய்ய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஏரோப்ளேன் கட்டாகக் கட்டி மரண அடி அடிப்பதையும், விண்ணில் பறந்து எதிரிகளை அவர் துவம்சம் செய்து(?) காற்றில் பறக்க வைப்பதையும் கண்ணுற்று கண்கள் பெற்றதன் புண்ணியத்தை அடைவீராக!

என்னையும் விட்டு வெக்கலீங்கோ...!
கதாநாயகியின் விருப்பமில்லாமல் அவள் பெற்றோர் திருமணம் நடத்தி வைத்து விட்டார்கள் என்பதற்காக, கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணி, கல்யாணத்துக்கு நாதசுரம் ஊதுபவர், மந்திரம் ஓதிய ஐயர், சமையல்காரர், மைக்செட் கட்டியவர், மெல்லிசைக் குழுவினர், ஏன்... பூ விற்ற பெண்மணியைக் கூட கூண்டில் ஏற்றி, ‘‘பெண்ணின் விருப்பத்தைக் கேட்காம எப்படி நீங்க கல்யாணத்துல வேலை பண்ணினீங்க?’’ என்று லாயர் தேவையாநீ... ஸாரி, தேவயானி குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும் மெயசிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்டு கை தட்டுவதற்கு அல்லாமல் இரண்டு கைகளை நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்?

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாகவும் நடி்த்திருக்கும் ராஜகுமாரனை மிகக் குறைவாக மதிப்பிட்டது என் தவறுதாங்க! ஓப்பனிங் சீன்ல, போலீஸ் அடிக்கிறதையெல்லாம் ஹீரோவா லட்சணமா வாங்கிக்கிட்டு, ‘‘எப்படிறா அடி?’’ன்னு கேட்டதும், ‘‘இது அடியில்ல, இடி’’ன்னு பதிலுக்கு எல்லாரையும் தாக்கி ஒரு ரணகள சுனாமி பண்றாரே... அது ஆச்சரியம் 1! எதிர்வீட்டு மாடியில இருக்கற கதாநாயகிக்காக தோட்டத்துல இருக்கற இரும்புக் கம்பத்தைப் பிடுங்கி, இவர் வீ்டடு பால்கனிக்கும் அவங்க வீட்டு பால்கனிக்கும் நடுவுல பாலம் அமைச்சு, கொட்டற மழையில, கால்ல ‌போட்டிருக்கற ஹீல்ஸ் ஷுவக் கூடக் கழட்டாம, கம்பத்து மேல நடந்து அவளுக்கு சாப்பாடு பார்சலைக் கொடுத்துட்டு, திரும்ப தன் வீட்டுக்கு வர்றார் பாருங்க... சலங்கை ஒலி கமல்லாம் என்னத்தக் கிழிச்சாருன்னு க‌ை தட்ட வெச்சுடுச்சு. (இந்த சீன்லதான் அவர் பேர் டைட்டில் வருது- கைதட்டல் வாங்கற ஆசையில) இது ஆச்சரியம் 2!

விசயம், அலுகை, குலந்தைன்னு கேப்டன் விஜயகாந்தைவிட மோசமாப் பேசி அவரே தேவலைப்பான்னு நினைக்க வெச்சுட்டாரு ராஜகுமாரன்! ஆச்சரியம் 3! இந்த ராமராஜன் முகத்துல பாவமே இல்லாம வசனம் பேசறாருன்னு பாவம்... அப்பாவியான அவரை திட்டிருக்கேன் ஒரு காலத்துல. காதலி பெட்டியோட வீட்டை விட்டு ஓடி வந்துட்ட சீன்ல கூட ‘டீ சாப்டியா?’ங்கற மாதிரி ‘‘பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டியா?’’ன்னு முகத்துல பாவமே இல்லாம (வராததுக்கு அவர் என்ன செய்வார், பாவம!) நடிச்சு ராமராஜனே தேவலைன்னு நினைக்க வெச்சுட்டாரு. ஆச்சரியம் 4! படம் பூரா தான் எழுதின வசனங்களை நல்லாவே ஒப்பிச்சிருககாருங்க ரா.கு.. அப்புறம்... ஹலோ, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்பூடி? படத்தை நீங்களே பாத்துத் தெரிஞ்சுக்கங்க மீதிய!

இடைவேளையில், மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்!
ஹீரோ ராஜகுமாரனை விடுங்கள்... இயக்குனர் ராஜகுமாரன் செமத்தியாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். எல்கேஜி வயசிலிருந்து கல்லூரி வயசு வரை தேவயானியிடம், ‘‘உன் புருஷனைக் கூட்டிட்டு வாம்மா’’ என்று சொல்லும் ராதாரவி, திடீரென்று ராஜகுமாரன் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற ஞானோதயம் வரப்பெற்று, தேவயானியை வேறொருவருக்கு கட்டி வைப்பதன் மூலமாக மனித மனத்தின் நிலையாமைத் தன்மையை பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் செய்வது தப்பு என்ற மெஸேஜை படம் பார்ப்பவர்கள் மண்டையில் ஆணி வைத்து சுத்தியலால் அடி்த்து இறக்காத குறையாகப் புரியவைத்து மெஸேஜ் சொல்லியிருக்கிறார். அதை விடுங்கள்... கிளைக் கதாபாத்திரமான சாருஹாசனுக்கும் வைத்தார் பாருங்கள்... ஒரு சென்டிமென்ட் பேக்ட்ராப்! சான்ஸே இல்ல...! ‘‘நாளைக்கு பத்து மணிக்கு இங்க சந்திக்கிறேன்’’ என்று சொன்ன காதலி வராததால அந்த பஸ் ஸ்டாப்பிலயே தன் வசிப்பிடத்தை(!) அமைச்சுக்கிட்டு நாப்பது வருஷமா அங்கேயே வாழ்ந்து அந்த இடத்துலயே உயிரை விடறாரு சாருஹாசன்! இத்தனைக்கும் அவர் பெரும் பணக்காரராம், சமூகத்தில் மதிப்புக்குரிய பெரிய மனிதராம்! புல்லரிக்குதா...! சரி, கொஞ்சம் சொறிஞ்சுக்கிட்டு வாங்க!

தேவயானி முதல் பாதியில ராஜகுமாரனோட காதலியாகவும், பின் பாதியில அவருக்கு உதவற லாயராகவும் (காதலியி்ன் அக்காவாக இரட்டை வேடம்) வந்து அவங்க பங்கை குறைவின்றி செய்திருக்காங்க. முதல் பாதியில அவங்களை ஸ்கூல் பெண்ணா காட்டறதுக்காக மிகை மேக்கப் போட்டு (நம்மளை) படுத்தியிருக்கறதைத் தான் சகிக்க முடியல! (மறைந்த) மலேசியா வாசுதேவன், ராதாரவி, ரோகிணி, சாருஹாசன் இவங்கல்லாம் (அ)கெளரவ வேடங்கள்ல தலைகாட்டறாங்க.

அஞ்சாத மும்மூர்த்திகள்!
படத்தோட கதைய விரிவாச் சொல்லணும்னா... சரி, எதுக்கு வம்பு? அதைத் தெரிஞ்சுக்கற விரும்பற தைரியசாலிங்க பின்னூட்டத்துல உங்க இமெயில் ஐடி கொடுங்க விரிவாக கொல்றேன், ஸாரி, சொல்றேன். படத்துல ஒரு சீன்ல ரமேஷ்கன்னா, ‘‘இவன் பேர் தமிழரசன். தமிழ்னும் கூப்பிடலாம், அரசன்னும் கூப்பிடலாம்’’ன்னு சொல்ல... நாங்க திரும்பி பக்கத்துல இருந்த அரசனைப் பார்க்க... அவரு ‘‘ஐயோ, நான் இல்லீங்க அந்த அரசன்’’ன்னு அலறினாரு பாருங்க.. அய்யோ, அய்யோ...நல்ல டமாஸு!  படத்தோட இடைவேளை எப்படா வரும்னு காத்துட்டே இருந்து ஆரூர் மூனாவும், அஞ்சாசிங்கம் செல்வினும் (அஞ்சிய சிங்கமாகி) ‌தியேட்டரை விட்டு தெறிச்சு ஓடிட்டாங்க! நானும் அரசனும் ஓடிரலாம்னு நினைச்சாலும் சிவாவோட அன்பு(!)க்கு கட்டுப்பட்டு முழுப் படத்தையும் பாத்து வெச்சோம்.

அடுத்த தடவை இந்த சிவா படம் பாக்கலாமா ஸார்ன்னு கூப்பிடட்டும்... நற! நற! நற! பின்ன என்னங்க... நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் நல்லவனாவே நடிச்சுட்டிருக்கறது? ஹி... ஹி....!

93 comments:

  1. ஹா ஹா ஹா சுட சுட எழுதியாச்சா இதோ நானும் களத்துல குதிக்கிறேன்....

    விமர்சனம் அருமையா எழுதுறீங்க வாத்தியாரே... சீக்கிரம் அணைத்து புதிய உலக சினிமாக்களுக்கும் நீங்களே எங்க வழிகாட்டி நாட்காட்டி ஆட்காட்டி எல்லாம்

    ReplyDelete
    Replies
    1. சினிமா வந்த உடனே பாத்து விமர்சனம் எழுதறதுங்கறது எனக்குப் புதுசு. நீங்க ஆரம்பிச்சு வெச்ச இதை நல்லா எழுதறேன்னு வேற பாராட்டிட்டே. அதுனால இனிமே அப்பப்ப தொடரும்படி பண்றேன் சீனு! உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. இந்த மாதிரி ஒரு படத்த தான் பாக்கணும்னு நான் இத்தன நாளா கெடந்து தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. வாட் எ பிக்சர்?!!!

    ReplyDelete
    Replies
    1. தமிழில் ஒரு மாற்று சினிமா(?) ராம். அவசியம் பார்த்து என்ஜாய்(!) பண்ணுங்க! ஹி... ஹி...!

      Delete
  3. இந்த படத்தின் விமர்சனத்தை பிலாசபியிடமிருந்து எதிர்பார்த்தேன். சற்றும் எதிர்பாரா வண்ணமாக உங்க கிட்டயிருந்து.. காசு கையில் இருந்தா என்ன ரிஸ்க் வேண்ணா எடுக்கலாமா? (அய்யோ, இந்தப் படம் பாக்கப் போன உங்கள சொல்லலே, இப்படி ஒரு படம் எடுத்து நடிச்ச ராசகுமாரன சொன்னேன்)ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. படத்துல ராஜகுமாரன் தந்த அதிர்ச்சியை விட கூடுதலா அதிர்ச்சி தர்றீங்களே ஆவி கமெண்ட்லயே! ஒரு நிமிஸம் அசந்துட்டேன் உங்க ட்விஸ்ட்டுல! ஹி... ஹி...!

      Delete
  4. நேற்றே கேள்விப்பட்டேன்... ஆனால் நீங்கள் இப்படி சுடச்சுட... எதிர்ப்பார்க்கவே இல்லை...

    /// மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்...! ///

    வெள்ளமா...? எங்கே...? இது தான் நல்ல டமாஸு! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... எங்களுக்குப் பின்னால மக்கள் வெள்ளத்தை நீங்க தேடிக் கண்டுபிடிக்கணும்னுதானே அந்த கமெண்ட்டே போட்டேன் D,.D. சிரிச்சீங்களா? ரொம்ப தேங்ஸ்!

      Delete
  5. இன்றைய தேவ கணங்களை என்றுமே மறக்க முடியாது .சார்...
    என்ன ஒரு திரைக்காவியம் ... !!! சிவா வாழ்க ... வாழ்க

    ReplyDelete
    Replies
    1. மிஸ் பண்ணக் கூடாத இந்த ஒலக(!) சினிமாவைப் பாக்க வெச்ச நண்பனுக்கு பலமாவே வாழ்த்தைச் சொல்லுவோம் அரசன்!

      Delete
  6. விமர்சனமும் அருமையாக வருகிறது சார்

    ReplyDelete
    Replies
    1. படம் தந்த உத்வேகம்தான் நண்பா. இனி அவ்வப்போது இப்படி முயற்சிக்கிறேன்- தமிழ் சினிமாவில அப்பப்ப நிஜமான உலக சினிமாவும் வரத்தானே செய்யுது!

      Delete
  7. திருமதி தமிழ் - அமர காவியம் ஒரு பார்வை

    http://comedykummi.blogspot.in/2013/04/thirumathi-thamil-moview-review.html

    ஒரு விளம்பரம் ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ஓ,... அங்க போய் கும்மியிருககியா? வந்து என்ன கும்மியிருக்கேன்னு இப்பவே பாககறேன்!

      Delete
  8. சுட சுட விமர்சனம் அருமை படம் ?

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி...! இத்தனை புகழ்ந்து(?) எழுதியிருக்கேன் படத்தை. முழுசாப் படிச்சுட்டு கே.பி.சுந்தராம்பாளுக்கு கே.எஸ்.ரவிகுமார் சித்தப்பாவான்னு கேக்கறியே? நியாயமாப்பா...?

      Delete
  9. இவை போன்ற படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் வரிக் கணக்குகளை நேர் செய்வதற்காக எடுக்கப்படுபவை. இது போல பல படங்கள் வேண்டுமென்றே இப்படி மொன்னைத்தனமாய் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு இது புரியுதான்னு தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமென்றேவா,..? சொ.செ.சூ? அப்படியா நினைக்கறீங்க? எத்தனை பேர் நேரத்தையும், பணத்தையும் வருமானவரிக் கணக்குக்காக இப்படியா விரயமாக்குவாங்க நண்பா...? விந்தை உலகமடா சாமி!

      Delete
    2. அப்படித்தான் நினைக்கிறேன் பாலகணேஷ். நண்பர்களுடன் இதைப் பற்றிய விரிவான விவாதம் நடந்தது. அதன்பின்னர்தான் கமெண்ட் போட்டேன். ஒருவேளை அப்படி இல்லாமல் உண்மையிலேயே இதை சீரியஸான(!) சினிமாவா கொடுக்கணும்னு நெனச்சி வொர்க் பண்ணியிருந்தாங்கன்னா... அய்யோ அத நினைச்சி பார்க்கவே பயமாருக்கு! எது எப்படியோ பவர் ஸ்டாருக்கு அப்புறமா ஒரு டெரர் ஸ்டார் ரெடியாயிட்டாரு...!!

      Delete
  10. சார்.... எப்படி சொல்ல... என்னான்னு சொல்ல...

    அருமையான தமிழ் படத்துக்கு முதல் முறையா விமர்சனம் எழுதியிருகிங்க... நெனச்சா ரொம்பா பீலிங்கா இருக்க்கு... அவ்வ்வ்வவ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. தம்பீ...! தமிழ்ப்பட விமர்சனம் இதுக்கு முன்னாலயும் எழுதியிருக்கேன். சுடச்சுட படம் பாத்துட்டு உடனே எழுதறது இதான் முதல் தடவை! படம் பாத்து ரசிச்ச(!) எங்களோட ஃபீலிங் உங்களுக்கும் தொத்திக்கிச்சு போலருக்கு...! ஹி... ஹி...!

      Delete
  11. ஹா.... ஹா.... சூப்பரு விமர்சனம்...

    சூடா கொடுத்திருக்கீங்க... ராமராஜனைப் போயி இந்த ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜஜகுமாரனோட கம்பேர் பண்ணிட்டிங்களேண்ணே... இவரு விட்ட உதாறெல்லாம் அய்யோ.... தாங்க முடியலை சாமி...

    ReplyDelete
    Replies
    1. ட்ரெய்லர்ல பாத்தே ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு பலர் போனதாக கேள்விப்பட்டேன். இருந்தாலும் தமிழ்ப் பதிவர்களோட மன தைரியத்தை நிரூபிக்கணுங்கற ஒரே காரணத்துக்காகல்ல படம் பாத்தோம் நாங்க...!

      Delete
  12. படம் பேரே திருமதி தமிழ் தானா?
    சத்தியமா பார்க்க வாய்ப்பில்லே.. உங்க விமரிசனம் படிச்சதும் பாக்கத் தோணுது. (என்ன, விளையாட்டா இருக்குதா? :-)

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா பாக்க வாய்ப்பில்லையா..? போங்க அப்பா ஸார், விளையாடாதீங்க...! மிக விரைவில ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ உங்க வீட்டுக்கே வந்து தரிசனம் தந்து ஒரு வழி பண்ணாம விடுவாரா எங்க டெரர் ஸ்டார்? வெயிட் அண்ட் ஸீ!

      Delete
  13. இடை வேளையில் மக்கள் வெள்ளத்தில் நீங்களா அவ்வ்வ்வ்வ் அண்ணே, உங்க எல்லாருக்கும் இருக்குற பொறுமையையும் சகிப்பு தன்மையையும் எனக்கும் விக்கி அண்ணனுக்கும் ஆண்டவன் தரணும்னு வேண்டிக்கிறேன் அண்ணே...ஹப்பா...

    இப்பவே கண்ணையும் கதையும் கட்டுதே...

    ReplyDelete
    Replies
    1. ‌தமிழில் ஒரு மாற்று சினிமா, நாம அவசியம் பாக்கணும்னு அதை எங்களுக்கு புகட்டினதே மெ.ப.சிவா தாங்க! அவரை பக்கத்தல வெச்சுக்கிட்டீங்கன்னா விக்கிக்கும் உங்களுக்கும் சுலபமா இந்த தைரியம் வந்துரும்ல...! என்னது... கண்ணையும் காதையும் கட்டுதா? படிச்சதுக்கேவா? அப்ப நாங்கல்லாம்...?

      Delete
  14. அண்ணே இனி மெட்ராஸ்பவன் சினிமாவுக்கு கூப்பிட்டா போயிராதீக, அவன் ஒரு சைக்கோ ஹா ஹா ஹா ஹா அப்பிடியே போனாலும் ஒரு பால்டாயில் பாட்டல் வாங்கிட்டு போங்க...மெட்ராஸ்பவன் கொஞ்சம் அசரும்போது வாயில ஊத்திருங்க ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. மெ.ப. பாக்குற மாதிரி எல்லா மொழிப் படங்களையும் பாக்க எனக்கு பொறுமையும் ஆர்வமும் வராது ஸாமி! அசருகிற சமயத்தல எல்லாம் பச்சப் புள்ள மாதிரி முகத்தை வெச்சுக்கறாரா... நீங்க சொல்ற மாதிரி எதையும ஊத்த மனசு வரமாட்டிங்குதுய்யா! ஹா... ஹா...!

      Delete
  15. உங்களது சுவையான விமரிசனத்தைப் படித்தாலே போதும் படத்தைப் பார்க்கத் தேவையில்லை. விமரிசனத்தின் ஒவ்வொரு வரியும் மின்னும் வரிகள்தான்.
    //முகத்துல பாவமே இல்லாம (வராததுக்கு அவர் என்ன செய்வார், பாவம!)// போன்ற வரிகள் உங்களின் ‘டிரேட் மார்க்.’
    படிக்கும்போது இடைவிடாமல் சிரித்தேன். இனி நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு படத்திற்கும் விமரிசனம் எழுத்வெண்டும் என்பது எனது அன்புக் கட்டளை!

    ReplyDelete
    Replies
    1. செய்கிறேன் ஸார்! விமர்சன ஸ்டைலை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  16. ஹா ஹா விமர்சனம் அருமை... உங்களுடைய எழுத்து நடை சூப்பர்... மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்... ஆயிரம் வண்டிகளுக்கு இடையே நம் வண்டிகள்....

    ReplyDelete
    Replies
    1. ஆமுங்கோ...! எழுத்து நடையை ரசிச்சதுக்கும் நேத்து கடைசி வரை இருந்து என்னை மயக்கம் போடாதபடி காப்பாத்தின உங்க பொறுமைக்கு ரொம்ப ரொம்ப டேங்ஸுங்கோ!

      Delete
  17. படம் எப்படிவேண்டுமாலும் இருந்துவிட்டுப்போகட்டும்
    விமர்சனம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை வெகுவாய் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. இன்னும் எதிர்பார்த்தேன் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. இன்ன்ன்னுமா? நான் சொல்ல மறந்த அற்புத விஷயங்களை மெட்ராஸ் பவன்ல சிவகுமார் எழுதுவார். படிச்சு ரசியுங்க நண்பா! கலக்‌கல் என்றதற்கு என் விசேஷ நன்றி!

      Delete
  19. ஏனிந்த கொலைவெறி கணேஷ்.....

    கருத்தாழமிக்க ஒரு படத்தைப் பார்த்தது மட்டுமல்லாது எங்களையும் பார்க்க வைச்சுடுவீங்க போல உங்க விமர்சனத்தினால்! :)

    ஆனா நாங்க யாரு.... நிச்சயம் பார்க்க மாட்டோம்! :)))))

    சுடச் சுட பக்கோடா குடுத்தா சாப்பிடலாம். ஆனா இந்த மாதிரி பாலிடால் [படம்] குடுத்தா என்ன செய்யறது!

    ReplyDelete
    Replies
    1. பாலிடாலா...? இதையெல்லாம் பாக்க் தயங்கினா பின்ன எப்படி உலக சினிமாவையெல்லாம் பாத்து ரசிக்கற பொறுமைய வளர்த்துக்குவீங்களாம்? விமர்சனம் படம் பாக்க இழுக்கும்கற உங்க வார்த்தைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. சினிமா பார்க்கும் ஆவல் இல்லாத எங்களையும் பார்க்கலாமோ என்று எழுதவைச்சிட்டிங்க.

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு தூரம் ரசிச்சுப் படிச்சீங்களா? உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  21. ஆனாலும் உங்களுக்கு தில்லு ஜாஸ்தி:-)))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நண்பர்கள் ஊட்டினதுதான் டீச்சர்! ஹி... ஹி...!

      Delete
  22. மின்னல் வரிகளின்
    மின்னல் விமர்சனம் ...

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. என்னென்ன விருதுகள் எதிர்பார்க்கிறங்க என்ற பட்டியல் வெளிவந்திட்டா??

    ReplyDelete
    Replies
    1. ஒரு கூடை நிறைய விருதுகளை அள்ளும்ல... அதான் யோசிச்சிட்டிருக்காங்களாம்! சீக்கிரத்துல வந்துரும்பா. மிக்க நன்றி!

      Delete
    2. உங்க விமர்சனத்தால தானே படம் பிச்சுகிட்டு போகுது... எப்படியும் உங்கள விருது விழாவுக்கு கூப்பிடுவாங்க அப்போ நான் வாழ்ழ்ழ்ழ்த்துகள் சொன்னதா சொல்லிடுங்க...

      Delete
  24. இந்த வயசிலும் உங்க மன தைரியத்த்தை நான் மனதார பாராட்டுகிறேன்.....


    ReplyDelete
    Replies
    1. அடங்கொய்யாலே...! இந்த வயசிலும்னா நான் என்ன கம்பு ஊனுற கிழவனாலே...! யூ்த்துக்கு ஒரு ஸ்டெப் மேல, ஓல்டேஜ்க்கு ரெண்டு ஸ்டெப் கீழயில்ல இருக்கேன் நானு! இந்த கமெண்ட்டுக்காகவே உம்மை சென்னைக்கு வரவழைச்சு திருமதி தமிழ் படத்தை மூணு ஷோவும் என் செலவுல டிக்கெட் வாங்கித் தந்து பாக்க வெச்சிடுறேன் இரும்...! ஹா... ஹா...!

      Delete
  25. எதிர்பார்த்த விமர்சனம்..ஆனால் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை..விமர்சனம் செய்த உங்களுக்கும் உங்கள் அணிக்கும் எனது வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறீர்கள்..சிறப்பு..

      Delete
    2. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி கவிஞரே!

      Delete
  26. முதல் தடவையாக உங்கள் திரை விமர்சனம் படித்தேன். படம் எப்படியிருந்தாலும் விமர்சனம் அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...! இந்த ஸம்மர் வெயிலுக்கு ஒரு கூடை ஐஸை தலையில கவிழ்த்துக்கிட்ட மாதிரி கூலா இருக்கு உங்க கருத்து தந்த மகிழ்ச்சி! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  27. வாழ்க உங்கள் அணி!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு மனம் நிறைய நன்றி ஐயா!

      Delete
  28. Replies
    1. ஒரே கருத்தை இருமுறை சொன்னால் அது மிக வலுப்பெற்று விடும் என்பார்கள். வலுவாக ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  29. படம் நல்லா இருக்கு, இல்லே அது அப்புறம்.
    ஆனால் உங்கள் விமரிசனம் ஸூப்பர் கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஓ...! என் எழுத்தை ரசித்துப் பாராட்டி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  30. பாவம் தேவயானி - தயாரிப்பாளர்! 6 வருஷ சீரியல் சம்பாத்தியம் காலியா?

    //இந்த கமெண்ட்டுக்காகவே உம்மை சென்னைக்கு வரவழைச்சு திருமதி தமிழ் படத்தை மூணு ஷோவும் என் செலவுல டிக்கெட் வாங்கித் தந்து பாக்க வெச்சிடுறேன் இரும்...! ஹா... ஹா...!// - அப்பா இன்னும் மூணு ஷோ நிச்சயமாக ஓடும் என்கிறீர்!

    நகைச்சுவைப் படம் என்ற ஆரவாரத்தோடு வரும் படங்களைவிட இந்தப் படத்தில் அதிகமாகச் சிரிதிருப்பீர்கள் என்பது என் ஊகம் - உண்டா, இல்லையா!

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. பாவம்தேவயானின்னு ஒரு எண்ணம் என் மனசுலயும் ஓடிச்சு. ‌எழுத வேண்டாம்னு விட்டுட்டேன். அப்புறம்... ஆடியன்ஸ் எத்தனை பேர் வந்தாலும் படத்தை நூறு நாள் ஓட்டுவதாக இயக்குனர் ராஜகுமாரன் அறிவித்திருக்கிறார் ஜெ! அந்த தைரியத்தில்தான் செளந்தருக்கு தண்டனை அறிவிச்சேன். ஹா... ஹா... கடைசில நீங்க சொன்னது மெத்தச் சரி. பல நகைச்சுவைப் படங்களில் சிரிச்சதை விடவும் அதிகமா இந்தப் படத்தை கமெண்ட் அடிச்சுட்டு ரசிச்சு சிரிச்சோம். மிக்க நன்றி!

      Delete
  31. பெயரை பாத்து பார்க்கலாம்போல என்று நினைத்திருந்தால் மின்னல் போல மின்னி கண் மூடி துறக்க வச்சிடீங்க நீங்க ரொம்ப நல்லவரு வல்லவருபின்ன இதுகே இவ்வளவு பெரிய பதிவு

    ReplyDelete
    Replies
    1. என்னை நல்லவேன்னு சொல்லிட்‌டிங்களே பூவிழி...! ரொம்ப ரொம்ப டாங்க்ஸு!

      Delete
  32. 175 நாள் கழிச்சி படத்தோட வெ(ற்)றிவிழாவுக்கு போகணும் சார். கெட் ரெடி.

    ReplyDelete
    Replies
    1. 100 நாள்னுதானே சொல்லிருக்கார் டெரர்ஸ்டார் ராகு! மீதி 75 நாளும் நீங்களே பாக்கப் போறீங்களா சிவா... இல்ல, நம்ம வெளிநாட்டுப் பதிவர்களை கூட்டிட்டு வந்து போட்டுக் காட்டி ஜனத்தொகைய குறைக்கப் போறீங்களோ? சரி, நான் எதுக்கும் ரெடியாயிக்கறேன்பா!

      Delete
  33. //தலைவன் கட்டையால அடிச்சாலும் அசராத சிவா!//

    அண்ணன் மரத்தால அடிச்சா கூட அதே சிரிப்போடதான் நிப்பேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... வாழ்க உம் மனோ தைரியம்!

      Delete
  34. விரைவில் படத்த பார்க்கணும். எப்படி இருக்கீங்க!!! நலம் தானே, அய்யா?

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளாச்சு இல்ல பாத்து? நான் மிக நலமே! தங்கள் வருகை மூலம் தங்களின் நலம் அறிந்து மிகமிக மகிழ்கிறேன். படத்தைப் பாக்கணும்னு நினைக்கறீங்களா? தற்கொலை செய்துக்க வேற எத்தனையோ வழிகள் இருக்குங்க...! ஹி... ஹி...! விட்ருங்க எசமான்!

      Delete
  35. திருமதி “தமிழு“க்கு நடந்த கொடுமையா இது...???

    விமர்சன பகிர்வு அருமை பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. படத்துல தமிழ் மொழியோட சிறப்புகளை பாட்டா வெச்சுட்டு, ஒவ்வொரு வசனத்துலயும் அதைக் கொலையாக் கொன்னு போடறாரு ராகு! என்னத்தச் சொல்ல...? ‘தமிழ்’க்கு மட்டும் நடந்த கொடுமை இல்லீங்க. படம் பாக்க வர்ற தமிழர்களுக்கும் சேர்த்து நடந்த கொடுமை இது! அருமைன்னு சொன்ன உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  36. அன்பின் பாலகணேஷ் - நல்லதொரு விமர்சனம் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா...! உங்களின் ரசிப்பு எனக்குத் தருகிறது மிக்க அகமகிழ்வு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  37. இப்படி பழி வாங்கிட்டாங்களே சார் உங்களை. இதுக்கு ஏதாவது பண்ணியே ஆகணும்

    ReplyDelete
    Replies
    1. விடுங்க முரளி... அடுத்ததா பவர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகறப்ப கூட்டிட்டுப் போயி பழிவாங்கிரலாம். ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  38. ரொம்ப மன தைரியம்....உங்களுக்கு...அதென்ன அரை லிட்டர்..பவுடர்...? படம் பார்த்து உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு...போல...

    ReplyDelete
    Replies
    1. படம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே சுடச்சுட விமர்சனம் எழுதுனேனா... படம் பாத்த மகிழ்வுல(?) அரைகிலோ பவுடர்னு வரவேண்டியது அரை லிட்டர்னு வந்துடுச்சு! ஆனாலும் உங்களுக்கு செம அப்ஸர்வேஷன் மச்சி! நீங்க ஒரு தடவ கோவைல (தில் இருந்தா) படத்தப் பாருங்களேன்.... உங்களுக்கும் என்னென்னமோ ஆகும்! ஹி.. ஹி...!

      Delete
  39. பதிவு சுடுது சார்....

    ReplyDelete
    Replies
    1. படத்தைப் பாத்ததும் எங்களுக்குள்ள எழுந்த சூட்டைத் தணிச்சுக்காம சுடச்சுட விமர்சனம் எழுதினதால அந்தச் சூடு! அடுத்த பதிவுல கூல் பண்ணிர்றேன் உங்களை நண்பா! மிக்க நன்றி!

      Delete
  40. Surprise No.5 Seeing this movie without running away from it half way through (of course, you were not allowed to do so). Surprise No. 6. Your review of this movie - though it is not so interesting like the movie, I read it completely to offer my comments. Surprise No.7 the feedback comments.
    When I was new to Baroda, I told my room mates to take me to a Hindi movie. Instead, they took me to a Gujarati Movie (afterwards I came to know that it was done for the sake of ragging). After entering the cinema hall, I was told that I could not come out of the theatre half way through as the main gates remain closed. Even it was kept opened, I would not have got the courage to come out as at that time I was new to the city and language was a greatest problem. Gujarati movie was so horrible that I fired the room mates left and right still they apologized literally.
    From this, I could guess, that your friends have settled their old score with you.
    DEVAYANI - THEVAIYA NEE - This is your trademark punch in this review.

    ReplyDelete
    Replies
    1. நீங்க உங்க நண்பர்களை லெஃப்ட் ரைட் வாங்கினீங்க. நாங்கல்லாம் அந்த கான்டை பதிவுல காட்டிட்டோம். ஹி... ஹி... மிக்க நன்றி!

      Delete
  41. அது சரி போன பதிவுல கொசுக்கடின்னு அவஸ்தைப்பட்டுட்டு ஈ கூட மொய்க்காத இடமா பார்த்து ஒரு மூணு மணி நேரம் உட்கார்ந்திட்டிங்க போல...!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சூப்பராச் சொன்னீங்க உஷா! ஈயாடாத இடமாத்தான் அது இருந்துச்சு. மிக்க நன்றி!

      Delete
  42. ராசகொமாரின் ரசிக சிகாமணிகளான ஒங்களுக்கெல்லாம் மவுன்ட் ரோட்டுல வெங்கலத்துல செல வைக்கப்போராங்கலாம்.

    ஏன் இப்டி ...? சூசைட் பண்ணிக்குரதுன்னு முடிவு பண்ணுனா...தனியா போயி பன்னுங்கன்னேன் .. ஏன் இப்டி துணைக்கு இளவட்டங்களையும் கூட்டினு போறீங்க . பாவம் வாழவேண்டிய வயசுங்க அவங்களுக்கு .

    மெட்ராஸ் வெயில்ல அதிகமா திரியாதீங்க ...அதான் இப்டி கோக்கு மாக்கா புத்தி போகுது .

    ReplyDelete
    Replies
    1. நானில்ல தம்பி... அந்த இளவட்டங்கதான் என்னை கூட்டிட்டுப் போனாய்ங்க...! மெட்ராஸ்ல வெயில் வறுத்தெடுக்குதுங்கறத இப்படி தெளிவா கண்டுபுடிச்சுட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்! இனி அதிகம் அலையாம உஸாரா இருந்துக்குறேன்! மிக்க நன்றி!

      Delete
  43. உங்களின் ஹாஸ்யத்தை ரசிக்க வந்த என்னை ஏமாத்திப்புட்டீங்களே சார்

    (படம் பொறுமையா பாத்ததுக்கே அவார்ட் தரணும் .இதில் விமர்சனம் வேறு எழுதியிருக்கறீங்க...உங்க பொறுமையை பாராட்டி கோவை வரும்போது பரிசு கொடுக்கறேங்க.)

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை இதுல தென்படலைன்னா இதுக்கு முந்தைய பதிவுக்குப் போயிருக்கலாமே தோழி! நீங்க ஒருத்தர்தான் ஆறுதலா எனக்குப் பரிசு தர்றதா சொல்லியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட என் நன்றி!

      Delete
  44. கோவிச்சுக்காதீங்க,. தேவயானி ஹீரோயின்னால் அவர் வீட்டுக்காரர் ராஜகுமாரன் தானே ராஜகுமாரன்???????

    ReplyDelete
  45. கணேஷ் அண்ணே,

    இனிமே உங்க விமர்சனம் படிக்காம ஒரு படமும் பாகறதாயில்ல இந்த சத்ரியன். இன்னைக்கு ராத்திரிக்கே திருமதிய பாத்துட்டு தான் அடுத்த வேலையே.

    அந்த பாலம் போட்டு நடக்குற ஒரு சீனுக்காகவாவது படத்தை பாக்கறேன்.

    ReplyDelete
  46. ரொம்பப் பொறுமையா உக்காந்து பார்த்திருக்கீங்க :-))

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube