‘‘டாக்டர்... எனக்கு மூச்சு விடறதுல ப்ராப்ளம் டாக்டர். ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்றபடி டாக்டரிடம் வந்தான் ஒருவன். ‘‘நோ ப்ராப்ளம்... நான் கம்ப்ளீட்டா நிறுத்திடறேன் -மூச்சு விடறதை!’’ என்றாராம் டாக்டர். CCTP என்கிற சென்னை போக்குவரத்துக் காவல் துறையும் அந்த டாக்டர் மாதிரிதான் நடந்து கொள்கிறது. அசோக் நகரிலிருந்து வடபழனி கங்கையம்மன் தெருவுக்கு போக வேண்டுமென்றால் நான் அம்பேத்கர் சிலையருகில் வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். இப்படி திரும்புபவர்களால் டிராஃபிக் ஜாம் ஆகிறது, அதை கவனிக்க கஷ்டமாக இருக்கிறது என்று எந்த கான்ஸ்டபிள் புண்ணியவானோ புலம்பியிருக்க வேண்டும்...! ‘நோ ரைட் டர்ன்’ என்று போட்டு, போகிற வழியெல்லாம் இடைவெளிகளில் டூ வீலர் திரும்ப முடியாதபடி கற்களைப் போட்டு (நல்லா இருப்பீங்கடா!) என்னை லக்ஷ்மன் ஸ்ருதி வரைக்கும் கொண்டு போயிட்டாங்க படுபாவிங்க. வேற வழியில்லாம மெயின்ரோடுல வடபழனி போய், சுத்தி வந்தேன். மூணு கிலோமீட்டர் வெட்டி பெட்ரோல் செலவு.
இதுக்கு ஒரு வயித்தெரிச்சலான பின்கதை என்னன்னா... கங்கையம்மன் கோயில் தெருவுல என் வேலைய முடிச்சுக்கிட்டு வர்றப்ப, எந்த இடத்துல வலதுபக்கம் திரும்பக்கூடாதுன்னு என்னை கான்ஸ்டபிள் விரட்டினாரோ அதே இடத்துல நாலஞ்சு மோட்டார் பைக் காரங்க, ஒரே நேரத்துல ‘போடாங்க...’ என்கிற மாதிரி அவர் கண்ணெதிரிலேயே வேகமாக திரும்பிக் கடந்து சென்றார்கள். தனி ஆளா செஞ்சா தப்பு, கும்பலா செஞ்சா தப்பில்லங்கற சென்னைவாசிகளோட மனோபாவம் சரிதான் போலருக்கு!
===============================================
இப்ப ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். தமிழில் சில புகழ்பெற்ற நாவல்களி்ன் பெயர்களை இங்கே குறிப்புகளாகக் கொடுத்திருக்கேன். தலைப்புகள் என்னங்கறதை நீங்க கண்டுபிடியுங்க (இந்த முறை நிச்சயமா விடை நான் சொல்ல மாட்டேன்பா)
1. ஒரு ஆள் அடை அணியாம இருந்தா நிர்வாணம் என்போம். ஒரு சிட்டியே ஆடை அணியாம இருந்தா என்ன சொல்வீங்க? சுஜாதா எழுதிய த்ரில்லர் இது.
2. பெரிய பெண் உருவ விளக்கு அல்லது Explain The Poetry -இந்த வாக்கியத்தை தமிழ்ப்படுத்துங்கள். அகிலன் எழுதிய புகழ்பெற்ற நாவல் இது!
3. மன்னர்கள் அனுப்பும் ஓலைகளில் விஷயங்களை எழுதினதுக்கப்புறம் பதிக்கப்படறது இது. சாண்டில்யன் எழுதிய நாவல்!
4. விமானம் பறக்கறதைப் பாக்கறதே தனி அழகு! இவங்க குறிப்பிடற விமானங்களைப் பாக்கறது இன்னும் ரசனையானது! இந்துமதியின் பெயரை இன்றும் அழுத்தமாய் பதிவு செய்து கொண்டிருக்கும் படைப்பு இது.
5. கொலை பண்றது பாவம்ங்க. ஆனா மருத்துவர்கள் இந்தக் கொலையப் பண்ண அனுமதிக்கணும்னு ஒரு கோரிக்கையும் அதுக்கு மறுப்புகளும் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. சிவசங்கரி எழுதிய மனதைத் தொடும் நூல் இது!
===============================================
இப்ப ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். தமிழில் சில புகழ்பெற்ற நாவல்களி்ன் பெயர்களை இங்கே குறிப்புகளாகக் கொடுத்திருக்கேன். தலைப்புகள் என்னங்கறதை நீங்க கண்டுபிடியுங்க (இந்த முறை நிச்சயமா விடை நான் சொல்ல மாட்டேன்பா)
1. ஒரு ஆள் அடை அணியாம இருந்தா நிர்வாணம் என்போம். ஒரு சிட்டியே ஆடை அணியாம இருந்தா என்ன சொல்வீங்க? சுஜாதா எழுதிய த்ரில்லர் இது.
2. பெரிய பெண் உருவ விளக்கு அல்லது Explain The Poetry -இந்த வாக்கியத்தை தமிழ்ப்படுத்துங்கள். அகிலன் எழுதிய புகழ்பெற்ற நாவல் இது!
3. மன்னர்கள் அனுப்பும் ஓலைகளில் விஷயங்களை எழுதினதுக்கப்புறம் பதிக்கப்படறது இது. சாண்டில்யன் எழுதிய நாவல்!
4. விமானம் பறக்கறதைப் பாக்கறதே தனி அழகு! இவங்க குறிப்பிடற விமானங்களைப் பாக்கறது இன்னும் ரசனையானது! இந்துமதியின் பெயரை இன்றும் அழுத்தமாய் பதிவு செய்து கொண்டிருக்கும் படைப்பு இது.
5. கொலை பண்றது பாவம்ங்க. ஆனா மருத்துவர்கள் இந்தக் கொலையப் பண்ண அனுமதிக்கணும்னு ஒரு கோரிக்கையும் அதுக்கு மறுப்புகளும் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. சிவசங்கரி எழுதிய மனதைத் தொடும் நூல் இது!
சமீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. தமிழ் உணர்வுள்ளவர், போராட்ட குணமுள்ளவர் என்றெல்லாம் அறியப்படும் ஒருவர் எழுதியிருந்த நூல் அது. புத்தகத்தில் அவர் சொல்லவந்த கருத்துகள் தமிழர்களுக்கு எழுச்சியூட்டறதா அமைஞ்சிருந்தது. ஆனா நாலைஞ்சு பக்கங்கள் படிச்சதுமே நான் புக்கைத் தூர எறிஞ்சிட்டேன். காரணம்...? அவர் எழுதியிருந்த் வாக்கியங்கள் - தமிழ்க் கற்றவன் நான் - செய்துக் கொண்டிருந்தேன் - இப்படி எங்க எங்க ஒற்று வரக்கூடாதுன்னு கூடத் தெரியாம ஏராளமா ‘ப்’ ’க்’ போட்டு எழுதியிருந்தார். அடப்பாவிகளா...! இப்படில்லாம் நீங்க ‘வாழ’ வெக்காம இருந்தா தமிழ் தானா வாழ்ந்துரும்டா... இலக்கணத்தைப் படிச்சு, பிழையில்லாம எழுதத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் தமிழ் உணர்வைப் பத்திப் பேசுங்கய்யா...! (எழுத்துப் பிழைகள் யாருக்கும் வரும். அவை மன்னிக்கப்படலாம் என்பதை நான் நன்கறிவேன். இங்க நான் சொல்லியிருக்கறது தமிழை வாழ வைக்கிறேன்னு புலம்பற, கர்ஜிச்சுக்கிட்டிருக்கற சிங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்) முண்டாசுக் கவிஞர் இதையெல்லாம் மனசுல தீர்க்கதரிசனமாப் பாத்துட்டுதான் ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’னு எழுதினாரோ!
===============================================
அப்பாதுரை ஸார் கிட்ட அப்ரெண்டிஸாச் சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தமி்ழ்ப் பாடல்களை ஆங்கிலத்துல என்னமா முழிபெயர்த்து... ஸாரி, மொழிபெயர்த்து சப்-டைட்டில் எழுதறாரு! இங்கே க்ளிக்கி படியுங்க! நானும் ஒன்றிரண்டு ட்ரை பண்ணினேன்...
Why? Why? Why? Went to buy air
Lifting a Bowl - why? bought a poetry
Swimming in many thoughts she asked and bought
Why? Why? Why? what happend to that virgin?
என்ன அப்பா ஸார்... என்னை அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குவீங்கதானே? ஹி... ஹி... ஹி...
===============================================
முன்னணி தமிழ் நாளிதழ்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது. முந்தாநேத்து ஒரு முன்னணி நாளிதழ்ல போஸ்டர் நியூஸ் இப்படி - ‘பெண்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்! அடப்பாவிகளா... மூளை வேலை செய்யாமலா மேரிக்யூரி ரெண்டு நோபல் பரிசு வாங்கினாங்க? விண்வெளில பறந்த கல்பனா சாவ்லாவுல இருந்து கல்வியறிவு இல்லாத மதுரை சின்னப்பொண்ணு வரை எத்தனையெத்தனை பெண்கள் சாதிச்சிருக்காங்க! ‘பெண்களின் மூளை வேலை செய்யும் விதம்- அதிர்ச்சி தகவல்கள்’னு தலைப்பு குடுத்திருந்தா நியாயம்! அதவிட்டுட்டு மணிமேகலை பிரசுர புத்தகத் தலைப்பு மாதிரி இப்படியா வெப்பீங்க?
===============================================
அப்பாதுரை ஸார் கிட்ட அப்ரெண்டிஸாச் சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தமி்ழ்ப் பாடல்களை ஆங்கிலத்துல என்னமா முழிபெயர்த்து... ஸாரி, மொழிபெயர்த்து சப்-டைட்டில் எழுதறாரு! இங்கே க்ளிக்கி படியுங்க! நானும் ஒன்றிரண்டு ட்ரை பண்ணினேன்...
Why? Why? Why? Went to buy air
Lifting a Bowl - why? bought a poetry
Swimming in many thoughts she asked and bought
Why? Why? Why? what happend to that virgin?
என்ன அப்பா ஸார்... என்னை அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குவீங்கதானே? ஹி... ஹி... ஹி...
===============================================
முன்னணி தமிழ் நாளிதழ்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது. முந்தாநேத்து ஒரு முன்னணி நாளிதழ்ல போஸ்டர் நியூஸ் இப்படி - ‘பெண்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்! அடப்பாவிகளா... மூளை வேலை செய்யாமலா மேரிக்யூரி ரெண்டு நோபல் பரிசு வாங்கினாங்க? விண்வெளில பறந்த கல்பனா சாவ்லாவுல இருந்து கல்வியறிவு இல்லாத மதுரை சின்னப்பொண்ணு வரை எத்தனையெத்தனை பெண்கள் சாதிச்சிருக்காங்க! ‘பெண்களின் மூளை வேலை செய்யும் விதம்- அதிர்ச்சி தகவல்கள்’னு தலைப்பு குடுத்திருந்தா நியாயம்! அதவிட்டுட்டு மணிமேகலை பிரசுர புத்தகத் தலைப்பு மாதிரி இப்படியா வெப்பீங்க?
இன்னொரு முன்னணி நாளிதழ்ல இப்படி நியூஸுக்குத் தலைப்பு தந்திருந்தாங்க. ‘மெரீனாவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!’ என்னது...? பாலச்சந்திரன் மெரீனாவுல கொல்லப்பட்டாரா?ன்னு அதிர்ந்து போய் செய்தியப் படிச்சதும்தான் புரிஞ்சது... பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து மெரீனாவில் ஆர்ப்பாட்டம்’னு தலைப்பு வந்திருக்கணும்கறது. என்ன க்வாலிபிகேஷன்ல நிருபரையும், உதவி ஆசிரியரையும் வேலைக்கு வெச்சு இப்டில்லாம் வெளியிடறாங்களோ... என்னமோ போடா மாதவா...!
===============================================
Ohkay! To end with a smile...
* One spelling error or omission of a letter can destroy your life- A husband messaged his wife: "I'm having a wonderful time, Wish you were her"
* The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!
Ha..! Ha..! Ha...! See you, Bye!
===============================================
மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-1
===============================================
===============================================
Ohkay! To end with a smile...
* One spelling error or omission of a letter can destroy your life- A husband messaged his wife: "I'm having a wonderful time, Wish you were her"
* The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!
Ha..! Ha..! Ha...! See you, Bye!
===============================================
மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-1
===============================================