Thursday, October 11, 2012

சிரித்திரபுரம் - 3

Posted by பால கணேஷ் Thursday, October 11, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Tuesday, October 9, 2012

மெல்லப் பேசுங்கள்!

Posted by பால கணேஷ் Tuesday, October 09, 2012

‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அக்கம்பக்கம் யாரும் இல்லையே என்று சோதித்துப் பார்த்துவிட்டு ரகசியங்களைப் பேச வேண்டும், இரவின் இருளில் எவர் மறைந்திருப்பதும் தெரியாது என்பதால் இரவில் பேசக் கூடாது என்றும் கருதிய காலத்திலிருந்த இன்றைய காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரவைப் பகலாக்கும் விளக்குகள் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் உண்டு.

முற்காலங்களில் சாலையில் ஒருவன் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தால், ‘‘ஐயோ, பாவம்’’ என்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். காதில் இயர்போன் செருகியிருக்கிறதா என்பதைத்தான் கவனிப்பார்கள். அலைபேசி என்று அழைக்கப்படும் செல்போனை இடுப்பில் வைத்துக்கொண்டு, வயர்‌லெஸ் இயர்போனை காதில் மாட்டிக் ‌‌கொண்டு, நினைத்த நேரம் பேசிக் கொண்டு அலைகிறார்கள் பலர்.

அதில் குற்றம்காண நான் முற்படவில்லை. ஏனென்றால் ‘செல் இல்லாதவன் அரை மனிதன்’ என்று பழமொழியை மாற்றி எழுத வேண்டிய காலகட்டத்தில் இரு்க்கிறோம். ஆகவே நான் குறிப்பிட விரும்புவது செல்போனில் பேசும் விதத்தைப் பற்றித்தான். முன்பொரு பதிவி்ல் பேருந்தில் ஒரு நபர் தன் மனைவியுடன் உரக்கப் பேசிக் கொண்டு வர, அவர் மனைவியின் பெயர், காத்திருக்கும் இடம் போன்ற அனைத்து விவரங்களும் பஸ் டிரைவரிலிருந்து கடைசி சீட் பயணி வரைக்கும் கேட்டது என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் கண்டதும் இதைப் பற்றி மீண்டும் சொல்ல வேண்டியதாகிறது இங்கே.

லுவலக வேலையாக வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்தில் நழைந்த அவர் படபடப்பாக இருந்தார். வந்ததும் பாட்டிலை எடுத்து அரை டம்ளர் தண்ணீரைக் காலி செய்தார். ‘‘என்னாச்சு... இதோ ‌பக்கத்து தெருவுல இருக்கற பேங்குக்கு போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?’’ என்றேன் நான்.

‘‘நீங்க வேற படு்த்தாதீங்க கணேஷ்! பாங்க்ல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்மேல சந்தேகப்பட்டு கேள்வியா கேட்டு தொளைச்சுட்டார்.என்னை. நல்லவேளை... ஆஃபீஸ் ஐடி கார்டு இருந்ததால காட்டிட்டு தப்பிச்சேன்’’ என்றார்.

‘‘போலீஸா? உன்னை சந்தேகப்பட்டாரா? உன் முகத்தைப் பாத்தாலே லேடீஸ் ஹாஸ்டலையே நம்பி உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு தோணிருமே. இந்தப் பால் வடியற முகத்தையா சந்தேகப்பட்டாரு?’’

‘‘ஆமா, வடியுது.. ஒரு டம்ளர்ல பிடிச்சுட்டுப் போங்க. சும்மா சத்தாயக்காதய்யா.. நான் வழக்கம்போல இயர் போன் மாட்டி செல்லுல பேசினதால வந்த வினை...’’

‘‘அப்படியா? என்ன நடந்துச்சு?’’

‘‘அதை ஏன் கேக்கறீங்க?’’

‘‘சரி, கேக்கலை விடுங்க’’ என்று நான் மானிட்டரிடம் திரும்ப, ‘‘அட, கேளுங்க சார்...’’ என்றார் எரிச்சலாக. ‘‘சொல்லுங்க’’ என்று மீண்டும் அவர் பக்கம் திரும்பினேன்.

‘‘பாங்க்குக்கு போனேனே... அங்க ஒரு வயசான கிழவி சலான் எழுதத் தெரியாம முழிச்சுட்டிருந்துச்சு...’’

‘‘வயசானா தான்யா அது கிழவி!’’

‘‘லொள்ளு பண்ணாம கேளுய்யா. அவங்களுக்கு உதவியா நான் சலான் எழுதிக் கொடுத்துட்டு கேஷ் கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு எதிர்ல இருக்கற சீட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்ப என் செல்லுக்கு ஒரு கால் வந்துச்சு. வழக்கம்போல காதுல இயர்ஃபோன் மாட்டிருக்கறதால நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். (நண்பருக்கு இயல்பாகவே வெண்கலத் தொண்டை, மெதுவாய்ப் பேச வராது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்) சொல்லு ரமணா, இன்னிக்கே போட்டுடறேங்கறியா? ‌நான் நாளைக்கு நீ போட்டாப் போதும்னு நினைச்சிட்டிருந்தேன். ம்ம்.... சரி, பரவாயில்லை, இன்னிக்கே போட்டுறு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். அட, புலம்பாதடா. நீ போட்று, நான் பாத்துக்கறேங்கறேன்ல -அப்படின்னு பேசிட்டு போனை வெச்சேன் கணேஷ்! பக்கத்துல இருந்த ஆசாமி என்னை முறைச்சுப் பாத்துட்டு, ‘மிஸ்டர் நீங்க யாரு? எங்கருந்து வர்றீங்க?’ன்னு கேட்டாரு. ‘நீங்க ஏன் சார் அதைக் கேக்கறீங்க?’ன்னு நான் கேட்டதுக்கு, ‘நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்’ன்னு ‌சொன்னாரு அவரு. ‘நீங்க பேசினதப் பாத்தா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. யார்ட்ட சார் பேசினீங்க?’ன்னு அவர் கேக்கவும், நான் என்ன பேசினேன்ங்கறதை மனசுல ஒரு தடவை ஓடவிட்டுப் பார்த்தேன். பளிச்சுன்னு மண்டையில பல்பு எரிஞ்சுச்சு.’’

‘‘அது ட்யூப்லைட்டுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே...’’

‘‘வெளையாடாதய்யா. நான் சட்னு அவரைப் பார்த்து ‘சார், நீங்க நினைக்கிற மாதிரி ஆளைப் போட்டுத் தள்ள போன்ல பேசற தாதா இல்லைங்க நான். அதுவும் இதுமாதிரி பப்ளிக் ப்ளேஸ் யாராவது பேசுவாங்களா. நான் ....... கம்பெனில ஒர்க் பண்றேங்க’ அப்படின்னு சொல்லி கம்பெனி ஐடி கார்டைக் காட்டினேன். ‘அப்படியா? போன்ல நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?’னு அவர் கேக்கவும், ‘சார்! மதுரைல இருக்கற என் ஃப்ரெண்டோட பையன் சென்னைல ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சுட்டிருக்கான். நாளைக்கு அவனுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட லாஸ்ட் டேட். அதனால என்னோட பேங்க் அக்கவுண்ட்ல இன்னிக்கே பணத்தைப் போட்டுடறேன்னு அவன் சொன்னான். நாளைக்கு போட்டாக்கூட பிரச்னை இல்லடா. நான் பாத்துக்கறேன்னு நான் சொன்னேன். அவ்வளவுதான் ஸார்’ன்னு அவருக்கு விளக்கிப் புரிய வெச்சுட்டு வர்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுச்சுப்பா...’’ என்றான் அவன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... உன் ‌காமெடி பீஸ் மூஞ்சைப் பாத்துட்டுக்கூட ஆளை போட்டு்த் தள்ள ப்ளான் பண்ற தாதான்னு சந்தேகப்பட்டிருக்காரே... அவரை நினைச்சாத்தான் சிரிப்பா வருது.’’ என்று வாய்விட்டுச் சிரித்தேன் நான். முறைத்தான்.

‘‘சரீ... சரீ... அப்படி முறைக்காத. பேசறதை சரியாப் புரிஞ்சுக்கற மாதிரி பேசலைன்னாலும் சரி, தப்பாப் புரிஞ்சுக்கிட்டாலும் சரி, இப்படி்த்தான் பிரச்னை வரும். முன்ன நான் ஒரு நாளிதழ்ல வேலை பார்த்தேன்ல... அப்ப அங்க சீஃப் எடிட்டர், தன் அசிஸ்டெண்ட்டைக் கூப்பிட்டு, ‘வைகோ நியூஸை கமப்யூட்டர் செக்ஷனுக்கு அனுப்பியிருந்தேன். நீ போய் அதை அடிச்சு வாங்கிட்டு வா’ அப்படின்னாரு. அந்தப் பையன் சமீபத்துலதான் டிகிரி முடிச்சுட்டு வந்த கிராமத்துப் பையன். அவர்கிட்ட தொழில் கத்துக்கிட்டிருந்ததாலயும், அவர் நாலெட்ஜ்னாயும் அவர் மேல தேவதா விஸ்வாசம் அவனுக்கு. நேரா எங்க செக்ஷனுக்கு வந்தான். செக்ஷன் இன்சார்ஜ் குனிஞ்சு ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டிருந்தார். அவர் தோள்ல பளார்னு ஒரு அடி வெச்சான். ‘ஹப்பா’ன்னு அலறிட்டு நிமிர்ந்த அவர்கிட்ட ‘வைகோ நியூஸ் ரெடியாயிடுச்சா? சப் எடிட்டர் கேட்டார்’ன்னான். ‘ப்ரூஃப் பாத்துட்டிருக்காங்க. இப்ப வந்துடும். அதக் கேக்க எதுக்குய்யா இப்படி சுளீர்னு அடிச்சே?’ன்னு அவர் கோபமாக் கேக்கவும், ‘சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்’ன்னான் அந்த அப்(படு)பாவி! ‘வெளங்காதவனே! அவர் டைப் அடிச்சு வாங்கிட்டு வரச்சொன்னா, ஆளையே அடிச்சா கேக்கறது?’ன்னு கோபமா திட்டி அவனுககுப் புரிய வெச்சாரு....’’

நான் இப்படிச் சொல்லவும், என் நண்பர் டென்ஷன் நீங்கி வாய்விட்டுச் சிரித்தார். ஆகவே தோழர்களே... தோழியர்களே... நான் சொல்ல விரும்புவது என்னன்னா... வேணாம், எதுக்கு வம்பு? ‘‘நீதியாவேய் சொல்றீரு? படிச்சாப் புரிஞ்சுக்கறதுக்கு எங்களுக்கென்ன ஐ.க்யூ கிடையாதா?’’ன்னு என் தலையில குட்ட, நண்பர் கண்பத் கைய ஓங்கிட்டு ரெடியா நிக்கிறார். அதனால... நீங்களே புரிஞ்சுக்கங்கப்பா...!

Saturday, October 6, 2012

மொறு மொறு மிக்ஸர்-13

Posted by பால கணேஷ் Saturday, October 06, 2012

பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... ‌சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?

===============================================

                                        மும்மத மொழிகள்

துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா? சிலருக்குத்தான் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. பலர் தங்கட்குக் கிடைக்கும் வேலையை விரும்புகிறார்கள். வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு. -நபிகள் நாயகம்

ல்ல மரமானது கெட்ட கனியைத் தராது. அதேபோல கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை. யாரும் முள் செடிகளில் அத்திப் பழங்களைப் பறிக்க எண்ணுவதில்லை. அதேபோல நெருஞ்சி முள் செடியில் திராட்சைப் பழங்களைப் பறிக்கவும் முடியாது. நல்ல பெற்றோரிடமிருந்து நல்ல பிள்ளைகளே பிறப்பார்கள். இதனால் உலகம் நல்ல வழியில் முன்னேறும். வெளியில் வராத மறைபொருள் எதுவுமில்லை. மற்றவர்கள் அறியப்படாத ரகசியமும் இல்லை. நீங்கள் யாரும் அறியாமல் இருளில் பேசுவதாக நினைப்பது வெளிச்சத்தில் மற்றவரால் கேட்கப்படும். ஏனெனில் எல்லா இடத்திலும் ஆண்டவன் இருக்கிறார். -இயேசு கிறிஸ்து.

‘‘கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா?’’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். ‘உண்மையான நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டு தன்னையே காண முயல வேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால் தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். ‘நான்’ என்கிற அகந்தை தான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள். -ஸ்ரீ ரமண மகரிஷி

===============================================

நாட்ல ரெண்டு மூணு பொண்டாட்டியக் கட்டினவன்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு சரிதாவக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. அய்யூய்யய்யய்யோ.... !  அப்படி என்ன பண்ணியிருப்பான்னு தானே யோசிக்கறீங்க? சொல்றேன்...

போன வாரத்துல ஒரு நாள் அவகிட்ட, ‘‘சரி, ஜபல்பூர்ருந்து வந்திருக்கற என் ஃப்ரெண்டோ ஃபாமிலியை ஞாயித்துக்கிழமை லன்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு சொன்னேன்ல... என்ன பண்ணப் போற நீ? நான் என்ன பண்ணனும்?’’ அப்படின்னு கேட்டேன். ‘‘நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும்.. நான் பாத்துக்கறேன். இதோபாருங்க... மெனுவே ப்ளான் பண்ணிட்டேன்’’ன்னு சொல்லி ஒரு சீட்டுல எழுதி வெச்சிருந்‌ததைக் கொடுத்தாள்.

படிச்சதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. ‌என்னத்தை எழுதியிருக்கா இவள்னு புரிஞ்சுக்கவே ரொம்ப நேரம் ஆச்சுது. உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க மக்கா...!

சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.

===============================================

செல்லப்பா : உனக்கு ஒண்ணும் தெரியாதுடா, இது சாதாரணக் காதல் இல்லை, தெய்வீகக் காதல்!

கோபி : மண்ணாங்கட்டி! மூணு மணி நேரம் ட்ராமா பாத்திருக்கே காய்கறிக்காரியா அவ நடிச்சா. Just 3 Hours! அதுக்குள்ள காதலா? ‌ஏதோ நல்லவேளை Social Drama போட்டோம். 3 மணில முடிஞ்சது. சம்பூர்ண ராமாயணம் போட்டிருந்தா நீ கல்யாணத்தையே முடிச்சிருப்பே போலருக்கே....

செல் : கண்டிப்பா.... அவ சீதையா நடிச்சிருப்பா!

கோபி : அப்போ உனக்கு No chance!

செல் : ஏண்டா?

கோபி : சீதைக்கும் அனுமாருக்கும் கல்யாணம் நடக்குமா? கொஞ்ச நேரம் பார்த்ததுமே லவ்? நான்சென்ஸ்!

செல் : காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.

                   -‘மனம் ஒரு குரங்கு’ என்கிற ‘சோ’ எழுதிய நாடகத்திலிருந்து...

===============================================

ன் நண்பர் ஒருவர் மின் மடலில் இரண்டு நண்பர்களின் கதை என்று சொல்லி இதை அனுப்பியிருந்தார். படிச்சதும் எனக்கு என்னாவும்னு அவருககு நல்லாத் தெரிஞ்சதால, அவரே கீழ தீர்வும் கொடுத்திருக்கார் பாருங்க...

2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.

I hope you have head ache now? cool down, no tension. Forward this to others and get relaxed, that is the remedy.

===============================================

லுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச் சொன்னான்: ‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான்!’’ மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன் சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்: ‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று. ஹி... ஹி... ஹி...

‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே!’’ அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற மேதை சொல்லியிருக்காருங்க. அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ? டவுட்டு! ஹி... ஹி... ஹி...

===============================================

ரைட்டு... அடுத்த பதிவுல சந்திக்கலாமா.... என்ன கேக்கறீங்க...? ஆங், மறந்துட்டேன். வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுச் சொல்லலாம்னு வெற்றியோட வீட்டுக்குப் போனா ‘‘அவன் ஊருக்குப் போயிருக்கான்பா, வர்றதுக்கு நாலு நாளாகும்’’னு அவங்கம்மா சொல்றாங்க. நான் என்னங்க பண்ணட்டும்? ஹி.... ஹி....

Thursday, October 4, 2012

சிரித்திரபுரம் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 04, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Wednesday, October 3, 2012

விளக்கைத் தேடும் விட்டில்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, October 03, 2012

ணிப்பொறியும், இன்டர்நெட்டும் பிரபலமாகாத காலத்தில் ‘பேனா நண்பர்கள்’ என்கிற ஒன்று இருந்தது. வேறு வேறு ஊர்களிலிருப்பவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் ரசனைகளைப் பரிமாறிக் கொண்டு, அந்த ஊருக்கு வரும் சந்தர்ப்பத்தில் எழு்த்தில் அறிமுகமான நட்பைச் சந்தித்து உரையாடி, உறவை வளர்த்துக் கொள்வார்கள். இன்றைய தேதியில் அந்த இடத்தை FACEBOOK ‌என்கிற முகநூல் பிடித்து வைத்திருக்கிறது. முகநூலின் மூலம் நிறைய நட்புகள் கிடைக்கின்றன. நமது கருத்தை (சுருககமாகவோ, விரிவாகவோ) உடன் பகிர முடிகிறது. ஸ்டேட்டஸ் பகிர்ந்த அடுத்த நிமிடத்திலேயே நண்பர்களின் கருத்துக்கள் சுடச்சுடக் கிடைககின்றன.

சுரேகா, கேபிள் சங்கர் போன்றவர்கள் ‘கேட்டால் கிடைக்கும்’ என்ற அமைப்பைத் துவங்கி நல்ல விஷயம் செய்கிறார்கள். ஆபரேஷனுக்கு ரத்தம் தேவையென்றாலும், இயலாதவர்களுக்கு மருத்துவத்துக்கு பணம் தேவைப்பட்டாலும் முகநூலில் பகிர்ந்து கொண்டால் உடன் உதவி கிடைக்கிறது. முகநூல் சாட்டிங்கின் மூலம் நண்பர்களின் பதிலை உடனுக்குடன் பெற்று எழுத்து மூலம் உரையாட முடிகிறது.

இப்படி நமக்குப் பயன்தரும் சாதகமான அம்சங்கள் மலிந்து கிடக்கும் இதே முகநூலின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால்தான் திடுக்கிட வேண்டியிருக்கிறது. முகநூலில் அறிமுகமான ஒரு இளைஞனும் இளைஞியும் புகைப்படங்களைப் பரிமாறிக் கொண்டு, பின் நேரில் சந்தித்து, காதலை வளர்த்து, கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் பார்க்க முடிகிறது. அதேசமயம் முகநூலில் அறிமுகமான நண்பனைச் சந்திக்க வந்து கற்பை இழந்த, பணத்தைப் பறிகொடுத்த பெண்களின் கதைகளும் நிறைய காணக் கிடைககின்றன.

ஒரு எழுத்தாளனின் படைப்புகளை, எழுத்தை ஆழ்ந்து படித்தீர்களென்றால் படைப்புகளுக்குள் அந்தப் படைப்பாளியின் குணாதிசயங்களும் அங்கங்கே தென்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக, கதை/கட்டுரையில் இரண்டு பேர் ‌ஹோட்டலில் டிபன் சாப்பிட ஆர்டர் கொடுப்பதாக எழுதியிருந்தால், அந்த இடத்தில் எழுத்தாளர் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களைத்தான் இயல்பாக எழுதியிருப்பார். கதாபாத்திரங்களுக்கு அணிவிக்கும் ஆடையில் எழுதுபவனின் விருப்ப நிறத்தை நாம் அடையாளம் காணலாம். இப்படி என் எழுத்தைப் படித்தால் என் கேரக்டரை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.

ஆனால் ‘சாட்’டில் நிகழ்த்தும் உரையாடலில் இப்படி எதிராளியின் குணாதிசயத்தைப் படித்து விடுதல் முற்றிலும் இயலாத ஒன்று. பரம அ‌யோக்கியனாக இருக்கும் நான், எதிர்முனையிலிருக்கும் பெண்ணைக் கவர, உத்தமனாக என்னை வெளிப்படுத்துக் கொள்ளுவது மிகச் சுலபமாக முடியும். அப்படி வெளிப்படும் முகத்தை நம்பி விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைக் கண்டால் மனம் பதைக்கிறது. அதிலும் ஆண்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எந்தப் பிரச்னையென்றாலும் அதன் வீரியத்தை அதிகம் தாங்க வேண்டியிருப்பது பெண்கள்தான். இப்படி ஏமாறுகிற பெண்களைப் பற்றித்தான் எனக்குள் சிந்தனை அலை புரள்கிறது.

திருமணம் ஆன ஒரு ஆண் தனக்கு அறிமுகமான பெண்ணிடம முதலில் அவள் போட்டோவை அனுப்பச் சொல்ல வேண்டியது, பிறகு ‘டி’ போட்டுப் பேசுதல், அவள் எதிர்ப்புக் காட்டாமலிருந்தால் ‘இரட்டை’ அர்த்தம் வரும் வார்த்தைகளை வீசி, அதற்கும் அவள் இடம் கொடுத்தால் நேரடியாகவே இச்சை வார்த்தைகளை வீசி பெண்களைப் பிடிக்கும் விளையாட்டைக் கண்டால் கொடுங்கோபம் வருகிறது - அதற்கு இடம் கொடுக்கும் பெண்களின் மீது சற்றே அதிகமாக! அதிலும் திருமணமான பெண்கள், குழந்தைகள் உள்ள பெண்கள்கூட இப்படி என்பது தெரியவரும்போது ‘கொலைவெறி’யே வருகிறது. காரணம் கேட்டால் ‘என் கணவன் ரசனையில்லாதவன். இந்த நண்பன் என் படைப்பை என்னமாய் ரசிக்கிறான்’ என்று பதில் வரும்.

அதல்ல விஷயம்... அவன் ரசிப்பது உங்கள் படைப்பையல்ல... .உங்களையே! உங்கள் சிந்தனைகளை, திறமையை வெளிப்படுத்தினால் அவரைப் போல பல நண்பர்கள் ரசிக்கிறோம், பாராட்டுகிறோம் உங்கள் எழுத்தை. அதில் திருப்தியடைய வேண்டியதுதானே நியாயம். கணவன் இல்லாவிட்டால் என்ன, என் திறமையை ரசிக்க இத்தனை பேர் இருக்கிறார்களே என்று நிறைவடைவதை விட்டுவிட்டு, இப்படி இச்சக வார்த்தைகளை வீசும் ஆண்மகனை நம்பி முறைதவறி நடந்தால் பின்விளைவுகள் என்னாகும், தன் குழந்தைகளின் பிற்கால நிலை என்ன என்பதைச் சிறிதுகூட யோசிக்காமல் தன் சுகத்தை மட்டுமே எண்ணுவது ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம்! உங்களை முழுமையாக நம்பி வேலைக்கு அனுப்பும், இணையத்தில் உலாவ அனுமதிக்கும் உங்களின் இல்லறத் துணைக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகமல்லவா இது! இதுபோன்ற மனப்போக்கினால் தான் நிறைய விபரீதஙகள் நிகழ்கின்றன.

கணவனைப் புறக்கணித்து, விவாகரத்து வாங்கிவிட்டு, மனதுக்கு(?)ப் பிடித்தவனுடன் இணைவது இந்நாளில் வெகு சுலபம். அல்லது இணையாமலேயே யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவை வைத்துக் கொள்வது (வைப்பாட்டன்?) கூட சாத்தியம்தான். ஆனால் 50 வயதை நெருங்கினால் காம சிந்தனை தணிந்து உடலும் அதை விரும்பாத காலகட்டத்திலிருந்து இறப்பு வரை துணை வருவது இதுபோன்ற காமத் துணை அல்ல! புனிதமான மாங்கல்யத்தைத் தந்த கணவனும், ரத்தத்தைப் பகிர்ந்து பிறந்திருக்கும் குழந்தைகளும்தான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

‘உனக்கேன் இவ்வளவு அக்கறை? யாருக்குமே இல்லாத அக்கறை?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பே பலரும் முகநூல், கூகிள் டாக் போன்ற விஞ்ஞான விஷயங்களினால் ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சிககல்களை விரிவாக எழுதி அபாய அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். ஒரு ஆண், பெண்ணைக் கவர எப்படியெல்லாம் அஸ்திரங்களைப் பயன்படுத்தக் கூடும் என்பதை இங்கே க்ளிக்கினால் தெளிவாக, விரிவாக எடுத்துரைத்திருப்பதைப் படிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நான் கேள்விப்பட்டவைகளாக மட்டுமே இருந்த இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களை கண்கூடாகப் பார்க்கும் பாக்கியம்(?) வாய்த்தது. ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது. உடனே ந்ட்பு வட்டத்திலிருந்து அதை வெட்டி விட்டேன். அதனாலேயே பெண்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிற ஒருவன் என்கிற காரணத்தினால், பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைச் சங்கை ஊத வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் ஊதிவிட்டேன்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube